Monday, February 23, 2015

குலம் கண்டறியும் முறை! - உத்யோக பர்வம் பகுதி 39அ

Testing one’s lineage!| Udyoga Parva - Section 39a | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 39) {விதுர நீதி - 14}
பதிவின் சுருக்கம் : பிறருக்கு ஏற்புடையவனாக மனிதன் எவ்வாறு ஆக முடியும்? எது ஆதாயம்? எது இழப்பு?  பணிவுடன் இருப்பவன் என்ன செய்வான்? அனைத்திலும் குறை சொல்பவர்கள் என்ன செய்வார்கள்? நட்பை எப்படி ஏற்க வேண்டும்? யார் நட்பைத் தவிர்க்க வேண்டும்? உறவினர்களால் என்ன செய்ய முடியும்? என்பன போன்றவற்றைச் சொல்லி பாண்டவர்களுக்குச் சில கிராமங்களையாவது கொடுக்கும்படி திருதராஷ்டிரனிடம் விதுரன் வேண்டுதல்; அறநெறிகளுக்கு எதிரான செயல்களைச் செய்யாதவர்கள் எவரும் உண்டா? எவன் புகழை இழப்பதில்லை?  எவன் செழிப்பில் எப்போதும் வளர்கிறான்? நேராமல் காக்க வேண்டிய ஆறு விஷயங்கள் என்ன? அறம், பொருளை யார் அறியமாட்டார்கள்? ஆசை எப்படிப்பட்டது? ஒருவனது குலத்தைக் கண்டுபிடிக்கும் முறைகள் போன்றவற்றையும் விதுரன் சொல்வது...

திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான் “செழிப்புக்கோ, வறுமைக்கோ மனிதன் காரணமானவன் அல்ல. அவன், நூலால் அசைக்கப்படும் மரப்பாவை {பொம்மையைப்} போன்றவனே. உண்மையில், படைப்பாளனே {பிரம்மனே} மனிதனை விதிக்கு ஆட்படுத்துகிறான். நீ சொல்வதைக் கவனமாகக் கேட்டு வருகிறேன். மேலும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.


{ஏற்புடையவனாதல்}


பிருஹஸ்பதியே ஆனாலும், காலம் தவறி பேசுபவன், நிந்தனையையும், அறியாமையுடையவன் என்ற குற்றச்சாட்டையும் அடைகிறான். ஒருவன் தானத்தால் ஏற்புடையவன் {இனிமையானவன்} ஆவான், இன்னொருவன் இனிய சொற்களால் ஏற்புடையவன் ஆவான். மூன்றாமவன், மந்திர ஆற்றல் மற்றும் மருந்துகளின் சக்தியால் ஏற்புடையவன் ஆவான். எனினும் இயல்பாகவே ஏற்புடையவனாக இருப்பவன் அப்படியே நீடித்து வருவான். ஒருவனால் வெறுக்கப்படும் மற்றவன், அவனால் {வெறுப்பவனால்} நேர்மையானவனாகவோ, புத்திசாலியாகவோ, அறிவாளியாகவோ  எப்போதுமே கருதப்படமாட்டான். தனக்கு நன்மை செய்யும் அனைத்தையும் ஒருவன் விரும்புகிறான்; {தனக்கு} தீமை செய்யும் அனைத்தையும் அவன் வெறுக்கிறான்.

{ஆதாயமும் இழப்பும்}


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன் பிறந்ததும், “இந்த ஒரு மகனை நீர் புறக்கணிக்க வேண்டும். அவனை {துரியோதனனைப்} புறக்கணித்தால் மற்ற நூறு மகன்களும் வளமையை அடைவார்கள். அவனை {துரியோதனனை உம்மிடமே} வைத்துக் கொண்டால், உமது நூறு மகன்களுக்கு அழிவு ஏற்படும்” என்றும் நான் உமக்குச் சொன்னேன்.

இழப்புக்கு வழிவகுக்கும் எந்த ஆதாயத்தையும் உயர்வாகக் கருதக்கூடாது. மறுபுறம், இழப்பேயானாலும் ஆதாயத்தைக் கொண்டு வரும் அந்த இழப்பை உயர்வாகவே கருத வேண்டும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆதாயத்தைக் கொண்டு வரும் அது இழப்பாகாது. எனினும், இன்னும் பெரிய இழப்பைக் கொண்டு வரப்போவதை இழப்பு என்றே கருத வேண்டும். [1]

[1] போர் என்ற இழப்புக்கு வழிவகுக்கும் துரியோதனனை, ஆதாயம் என்று நினைத்து உயர்வாகக் கருதக்கூடாது. துரியோதனனைப் புறக்கணித்து பாண்டவர்களை மீண்டும் கொண்டுவருவதால் உண்டாகப் போவது இழப்பாகாது. அதுவே பெரும் ஆதாயம். ஆனால், பாண்டவர்களைப் புறக்கணிப்பதால் ஏற்படப் போகும் போரால், துரியோதனனையும் இழந்து, பலரையும் இழக்கப் போவது பெரும் இழப்பே என்று பொருள்.

சிலர் நல்ல குணங்களின் விளைவாகச் சிறந்தவர்களாகிறார்கள்; பிறர் செல்வத்தின் விளைவால் அப்படி {சிறந்தவர்கள்} ஆகிறார்கள். ஓ! திருதராஷ்டிரரே, செல்வம் நிறைந்திருந்தாலும், நல்ல குணங்களற்று இருப்பவர்களைத் தவிர்ப்பீராக” என்றான் {விதுரன்}.

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “நீ சொன்ன அனைத்தும் ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டதும், எனது எதிர்கால நன்மைக்கும் ஆனதே. எனினும், நான் எனது மகனை {துரியோதனனைப்} புறக்கணிக்கத் துணியேன். எங்கே நீதி இருக்கிறதோ அங்கே வெற்றி இருக்கிறது என்பது நன்கு அறியப்பட்டதே {எனக்கு நன்றாகத் தெரியும்}” என்றான் {திருதராஷ்டிரன்}.

விதுரன், “அனைத்து அறங்களும் அருளப்பட்டு, பணிவுடன் இருப்பவன், வாழும் உயிரினங்களுக்கு ஏற்படும் சிறு பாதிப்புகளையும் பாரபட்சமின்றி எப்போதும் பார்ப்பான். எனினும், பிறரை எப்போதும் குறை சொல்வதில் ஈடுபடுபவர்கள், அனைத்து விஷயங்களிலும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடவும், அடுத்தவருக்கு வலியைத் தரவுமே எப்போதும் முயல்கிறார்கள்.

{நட்பு ஏற்றல்}


யாரைப் பார்த்தாலே கெடுதல் உண்டாகுமோ, யாருடைய தோழமை ஆபத்து நிறைந்ததோ அவர்களுக்குத் தானமளிப்பதாலோ, அவர்களிடம் தானத்தைப் பெறுவதாலோ பாவம் ஏற்படுகிறது. சண்டைக்காரர்கள் {சண்டையிடுவதையே வழக்கமாகக் கொண்டவன் {அ} பிரிவை ஏற்படுத்துபவன்}, பேராசைக்காரர்கள், வெட்கமற்றவர்கள், ஏமாற்றுக்காரர்கள், அநீதியானவர்களாக அறியப்பட்டவர்கள் ஆகியோரது தோழமை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதே போன்ற குறைகளுடன், கொடும் இயல்பும் கொண்ட மனிதர்களையும் தவிர்க்க வேண்டும். நட்புக்குக் காரணமான நிகழ்வு முடிந்ததும், இழிந்தவர்களின் நட்பும் முடிந்துவிடுகிறது. அந்தத் தொடர்பால் ஏற்பட்ட நல்ல விளைவுகளும், அதனால் உண்டான மகிழ்ச்சி ஆகிய அத்தனையும் முடிவுக்கு வந்துவிடும். பின்னர் அவர்கள் {அந்த இழிந்த மனிதர்கள்}, தங்கள் (முன்னாள்} நண்பனை நிந்தித்து, அவனுக்கு இழப்பேற்படுத்த முயல்கிறார்கள். தாங்கள் அடைந்த இழப்பு மிகச் சிறியதாக இருப்பினும், தற்கட்டுப்பாடு {சுயக்கட்டுப்பாடு} இல்லாமையால், அமைதியை அனுபவிக்கத் தவறிவிடுகின்றனர். கற்றவனொருவன், இவை அனைத்தையும் கவனமாகப் பரிசோதித்து, நன்றாக ஆலோசித்து, கீழ்த்தரமானவர்கள் மற்றும் தீய மனம் கொண்டவர்களின் இது போன்ற நட்புகளைத் தூரத்தில் இருந்தே தவிர்த்துவிட வேண்டும்.

{உறவினர்கள் 2}


ஏழைகள், இழிந்தவர்கள், ஆதரவற்ற உறவினர்கள் ஆகியோருக்கு உதவும் ஒருவன், பிள்ளைகள், விலங்குகள் {கால்நடைச் செல்வம்} ஆகியவற்றை அடைந்து, முடிவிலாத செழிப்பை அனுபவிக்கிறான். தங்கள் நன்மையை விரும்புபவர்கள், எப்போதும் தங்கள் உறவினர்களுக்கு உதவ வேண்டும். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது குலத்தை வளர்க்க முயல்வீராக. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீர் உமது உறவினர்களிடம் நன்றாக நடந்து கொண்டால், செழிப்பு உமதாகும். நற்குணங்களற்ற உறவினர்களும் {ஒருவனால்} பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்து அறங்களையும் கொண்டு, உமது உதவிகளைப் பணிவுடன் எதிர்நோக்குபவர்களை {பாண்டவர்களை} எந்த அளவுக்குப் பாதுகாக்க வேண்டும்?

பாண்டுவின் வீர மகன்களுக்கு உதவி செய்வீராக, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்களின் பராமரிப்பில் சில கிராமங்களைக் கொடுப்பீராக. இப்படிச் செய்வதால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் புகழ் உமதாகும். நீர் முதிர்ந்தவராக இருக்கிறீர்; எனவே, உமது மகன்களை நீர் கட்டுப்படுத்த வேண்டும். உமக்கு எது நன்மையோ, அதையே நான் சொல்ல வேண்டும். நீர் நலமாக இருக்க விரும்புபவர்களில் நானும் ஒருவன் என்பதை அறிவீராக. ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, தனது நன்மையை விரும்பும் ஒருவன் தனது உறவினர்களுடன் சண்டையிடவே கூடாது.

இவ்வுலகில், உறவினர்களே ஒருவனை மீட்கிறார்கள் {காக்கிறார்கள்}. மேலும், உறவினர்களே {உறவினர்களை} அழிக்கவும் செய்கிறார்கள். நீதிமிக்கவர்கள் மத்தியில் இருப்பவர்கள் {ஆபத்துகளில்} காக்கிறார்கள்; அதே வேளையில் அநீதிமிக்கவர்கள் மத்தியில் இருப்பவர்கள் (தங்கள் சகோதரர்களை) {ஆபத்தில்) மூழ்கடிக்கிறார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! மரியாதைகளைக் கொடுப்பவரே, பாண்டுவின் மகன்களிடம் நீதியோடு நடப்பீராக. அவர்களால் சூழப்பட்டிருக்கும் நீர், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவராக இருப்பீர்.

கையில் கணைகளுடன் இருக்கும் வேடனைக் கண்ட மான் போல, செழிப்புடன் இருக்கும் ஒரு உறவினரின் முன்னிலையில் மற்றொரு உறவினன் {செழிப்பில்} சுருங்கிப் போனால் {வறுமை நிலை அடைந்தால்}, அவனது {அந்த வறியவனின்} பாவங்கள் அனைத்தையும் செழிப்புடன் இருக்கும் அந்த உறவினனே ஏற்றுக் கொள்ள வேண்டிவரும்.

ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, (தற்போதைய உமது செயல்பாடின்மையால்), எதிர்காலத்தில் பாண்டவர்களின் அல்லது உமது மகன்களின் இறப்பைக் கேள்விப்பட்டு, நீரே வருந்த வேண்டியிருக்கும். ஓ!, இவை யாவையும் சிந்திப்பீராக. வாழ்வே நிலையற்றதாக இருக்கும்போது, எதன் {எந்த செயலின் அல்லது செயலின்மையின்} விளைவால் ஒருவன் சோக அறைக்குள் நுழைந்து வருத்தத்தில் ஈடுபட வேண்டிவருமோ, அதை ஆரம்பத்திலேயே அவன் தவிர்த்துவிட வேண்டும்.

அறநெறிகளின் அறிவியலுக்கு {நீதி சாத்திரத்திற்கு} ஆசிரியரான பார்கவரைத் [2] {சுக்ராச்சாரியரைத்} தவிர, அறநெறிகளுக்கு எதிரான செயல்களை மேற்கொள்ளாதவர்கள் வேறு யாருமில்லை என்பதே உண்மை. {அறநெறிகளுக்கு எதிராகச் செயல்படாதவர்கள் யாருமே இல்லை என்பதே உண்மை}. எனினும், {நல்ல} விளைவுகளை உண்டாக்கும் நீதி மிக்கக் கருத்துகள், புத்திக்கூர்மையுள்ள அனைத்து மனிதர்களிடமும் இருக்கிறது என்பதும் காணப்படுகிறது.

[2] பார்கவர் என்றால் பிருகு முனிவரின் பரம்பரையில் வந்தவர் என்று பொருள் (http://en.wikipedia.org/wiki/Bhargava). சுக்ராச்சாரியார் பிருகுவின் மகன். சுக்ராச்சாரியார் பீஷ்மரின் குருக்களில் ஒருவர் ஆவார். பரசுராமருக்கும் பார்கவர் என்ற பெயருண்டு. ஆனால் இங்கே குறிப்பிடப்படுவது சுக்ராச்சாரியராகத்தான் இருக்க வேண்டும்.


நீர் குரு குலத்தின் கொழுந்துகளில் {குரு வம்சத்தவரில்} முதிர்ந்தவராவீர். துரியோதனன், பாண்டு மகன்களுக்கு இத்தீமைகளைச் செய்தால், ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, அவை அனைத்தையும் நிவர்த்திச் செய்வது {தடுப்பது} உமது கடமையாகும். அவர்களை {பாண்டவர்களை}, மீண்டும் அவர்களது பொறுப்புகளில் அமர்த்தி, இவ்வுலகில் நீர் செய்த அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களைப் போல வழிபடத்தகுந்தவர் ஆவீராக.

ஞானிகள் கண்ட விளைவுகள் படி அவர்களால் சொல்லப்பட்ட நல்ல வார்த்தைகளை நினைவில் கொண்டு, எவன் செயலில் ஈடுபடுகிறானோ, அவன் தனது புகழை இழப்பதில்லை. கல்வியும், திறமையும் கொண்ட மனிதர்களால் சொல்லப்படும் வார்த்தைகள் கூட ஞானமற்றவையாக {அறிவற்றவையாக} இருக்கின்றன. ஏனெனில், சொல்லப்பட்டவையைத் தவறாகப் புரிந்து கொண்டு, {மனதில் ஆழப்} பதிய வைக்கப்படுகிறது. அல்லது, புரிந்து கொள்ளப்பட்டாலும், நடைமுறையில் அவை {கற்றோரால் சொல்லப்படும் வார்த்தைகள்} சாதிக்கப்படுவதில்லை. பாவம், துன்பம் ஆகியவற்றை விளைவிக்கும் எக்காரியத்தையும் எப்போதுமே செய்யாத கற்ற மனிதன், எப்போதும் (செழிப்பில்) வளர்கிறான். எனினும், தீய ஆன்மா கொண்ட மனிதன், தனது மூடத்தனத்தால், பாவ வழியில் தொடர்ந்து செல்ல ஆரம்பித்து, சேறு நிரம்பிய ஆழமான பள்ளத்தில் விழுகிறான்.

{நேராமல் காக்க வேண்டிய ஆறு}


{செய்யப்படும்} ஆலோசனைகளைப் பகிரங்கப்படுத்தும் (பின்வரும்) ஆறு குழாய்களை {வழிகளை}, அறிவுள்ள ஒருவன் எப்போதும் பார்வையில் {கவனத்தில்} வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றியையும், நீண்ட மரபையும் விரும்பும் ஒருவன் இந்த ஆறில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். {1} மயக்கம் {குடி}, {2} உறக்கம், {3} ஒற்றர்களைக் கவனியாமை, {4} தன் இதயச் செயல்பாட்டைச் சார்ந்து, ஒன்றின் மேல் ஒன்றை வைக்கும் அணுகுமுறை {தன்னிடம் உண்டாகும் குறிப்பு}, {5} தீய ஆலோசகரிடம் வைக்கப்படும் நம்பிக்கை, {6} திறமையற்ற தூதர்கள் ஆகியவையே அவை {அந்த ஆறும்}.

{ஆலோசனைகள் மறைத்தல்}


அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடைவதில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் ஒருவன், (ஆலோசனைகளைப் பகிரங்கமாக்கும்) இந்த ஆறு வாயில்களை {துவாரங்களை} அறிந்து, அவற்றைத் தவிர்ப்பதால் {செய்யப்படும் ஆலோசனைகளை அதன் மூலம் மறைப்பதால்}, எதிரிகளை அடக்குவதில் வெல்கிறான்.

சாத்திரங்கள் எதையும் அறியாமல், பெரியோருக்காகக் காத்திராமல் {பணிவிடை செய்யாமல்} இருக்கும் ஒருவன், பிருஹஸ்பதியின் அறிவையே பெற்றிருந்தாலும், அறத்தையோ, பொருளையோ அறியமாட்டான்.

கடலிலிட்ட பொருள் தொலைந்து போகும்; கேட்காதவனிடம் பேசப்படும் வார்த்தைகள் தொலைந்து போகும்; ஆன்மாவைக் கட்டுக்குள் வைக்காத ஒருவனிடம் சாத்திரங்கள் {சாத்திர அறிவு} தொலைந்து போகும்; அணைந்த நெருப்பால் விடப்பட்ட சாம்பலில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யும் தொலைந்து போகும்.

புத்திசாலி ஒருவன், தனது புத்தியைப் பயன்படுத்தியும், தனது காதுகள், கண்கள் மூலம் {பிறர் மூலம் கேட்டும், தானே பார்த்தும்}. ஒரு தீர்மானத்தை எட்டி அறிவாளிகளுடன் {ஞானிகளுடன்} நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடக்கம், காதுகள் கேட்கும் அவதூறையும்; ஆற்றல், தோல்வியையும் அகற்றும். மன்னிக்கும் தன்மை {பொறுமை}, கோபத்தை வெல்லும். மேலும், மங்களச் சடங்குகள் {ஆசாரங்கள்} தீய அறிகுறிகள் அனைத்தையும் அழிக்கும்.

ஒருவனது குலம், ஓ! மன்னா {திருதராஷ்டரரே}, இன்பத்தைக் கொடுக்கும் பொருள், பிறந்த இடம், வீடு, நடத்தை, உணவு, ஆடை ஆகியவற்றைக் கொண்டு சோதிக்கப்படுகிறது {அவற்றால் ஒருவனது குலம் அறியப்படுகிறது}. 

இன்பத்தைக் கொடுக்கும் பொருள் கிடைக்கும்போது, துறவை {விடுதலையை} அடைந்த ஒருவன் கூட, அதை அனுபவிக்க விரும்பாமல் இருப்பதில்லை {அதை அனுபவிக்கவே விரும்புகிறான்}. அப்படியிருக்கும்போது,  ஆசைகளால் பிணைக்கப்பட்டிருக்கும் ஒருவனைக் குறித்து என்ன சொல்ல முடியும்? {ஆசையைத் துறந்த ஒருவனே காமத்தில் வீழும்போது, காமத்தில் ஆசை கொண்டவனைப் பற்றி என்ன சொல்ல முடியும்?}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்