Friday, April 03, 2015

யுதிஷ்டிரனின் கோபம் அச்சுறுத்துகிறது! - உத்யோக பர்வம் பகுதி 53

The wrath of Yudhishthira threatens! | Udyoga Parva - Section 53 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 13) {யானசந்தி பர்வம் - 7}


பதிவின் சுருக்கம் : பாஞ்சாலர்கள், கேகயர்கள், மத்ஸ்யர்கள், மகதர்கள், கிருஷ்ணன், சாத்யகி, திருஷ்டத்யும்னன்,  ஆகியோரது துணை பாண்டவர்களுக்கு வலிமை சேர்க்கிறது என்றும், யுதிஷ்டிரனின் கோபம் மற்றும் பிற பாண்டவர்களின் ஆற்றல் தனக்கு அச்சமூட்டுகிறது என்றும் திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் சொல்வது; பாண்டவர்களுடன் அமைதியேற்படுத்திக் கொள்ளுமாறு கௌரவர்களுக்குச் சொல்வது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பெரும் ஆற்றலும், வெற்றியில் ஆர்வமும் கொண்ட பாண்டுவின் மகன்களைப் {பாண்டவர்களைப்} போலவே, அவர்களது தொண்டர்களும், தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தீர்மானித்து, வெற்றியை வென்றெடுப்பதில் குறியாக இருக்கிறார்கள். ஓ! மகனே {சஞ்சயா}, பாஞ்சாலர்கள், கேகயர்கள், மத்ஸ்யர்கள், மகதர்கள் ஆகியோரின் பெரும்பலமிக்க மன்னர்கள் எனது எதிரிகளாவர் என்று நீயே சொல்லியிருக்கிறாய்.


மேலும், தான் விரும்பினால், இந்திரனின் தலைமையைக் கொண்ட மூவுலகங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் எவனால் கொண்டுவரமுடியுமோ, இந்த அண்டத்தையே எவன் படைத்தானோ, அந்தப் பெரும்பலமிக்கக் கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு வெற்றியளிக்க உறுதியுடன் இருக்கிறான்.

சாத்யகியைப் பொறுத்தவரை, அவன் அர்ஜுனனிடம் இருந்து முழு ஆயுத அறிவியலையும் விரைவில் அடைந்தவனாவான். அந்தச் சினி குலக் கொழுந்து, விதைகளை விதைக்கும் உழவனைப் போல, தனது கணைகளை அடித்தபடி போர்க்களத்தில் நிற்பான்.

கருணையற்ற செயல்கள் புரியும் வலிமைமிக்கத் தேர்வீரனும், மேன்மையான அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனும், பாஞ்சால இளவரசனுமான திருஷ்டத்யும்னன் எனது படையுடன் போரிடுவான்.

ஓ! குழந்தாய் {சஞ்சயா}, யுதிஷ்டிரனின் கோபம், அர்ஜுனன், இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்} மற்றும் பீமசேனனின் ஆற்றல் ஆகியவற்றால் நான் கொள்ளும் அச்சம் பெரிதாக இருக்கிறது. அந்த மனிதர்களின் தலைவர்கள், மனிதசக்திக்கு அப்பாற்பட்ட தங்கள் கணைவலையை எனது படைக்கு மத்தியில் விரிக்கும்போது, அதிலிருந்து எனது துருப்புகள் மீளாது என்றே நான் அஞ்சுகிறேன். ஓ! சஞ்சயா, இதற்காகவே நான் அழுகிறேன்.

பாண்டுவின் மகனான அந்த யுதிஷ்டிரன், அழகானவனாகவும், பெரும் சக்தி படைத்தவனாகவும், உயர்ந்த அருள், பிரம்ம சக்தி, புத்திக்கூர்மை, பெரும் அறிவு {ஞானம்}, அறம்சார்ந்த ஆன்மா ஆகியவற்றைக் கொண்டவனாகவும் இருக்கிறான்.

கூட்டாளிகள் மற்றும் ஆலோசகர்களோடும், போருக்குத் தயாராக இருக்கும் நபர்களுடன் ஒன்றிணைந்தும், வீரர்களாக இருக்கும் தம்பிகள், மாமனார் ஆகியோரைக் கொண்டும் இருக்கும் மனிதர்களில் புலியான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, பொறுமைசாலியாக, தனது ஆலோசனைகளைக் கமுக்கமாக {இரகசியமாக} வைத்திருக்கும் திறன் கொண்டவனாக, கருணை மற்றும் பணிவு கொண்டவனாக, கலங்கடிக்கப்பட முடியாத சக்திகளைக் கொண்டவனாக, பெரும் கல்வி கொண்டவனாக, முறையான கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஆன்மா கொண்டவனாக, எப்போதும் வயது முதிர்ந்தோருக்குக் காத்திருப்பவனாக {பணிவிடை செய்பவனாக}, புலன்களை அடக்கியவனாக, என இப்படி அனைத்து சாதனைகளையும் கொண்ட அவன் {யுதிஷ்டிரன்} எரியும் நெருப்பு போலல்லவா இருக்கிறான். அழிவுக்கு விதிக்கப்பட்டு, அறிவை இழந்து, தடுக்கப்பட முடியாததும், எரிந்து கொண்டிருப்பதுமான அந்தப் பாண்டவ நெருப்பில் விட்டில் பூச்சியைப் போல எந்த மூடன் விழுவான்.

ஐயோ, நான் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} வஞ்சகமாக நடந்து கொண்டேனே. உயர்ந்து எரியும் நெருப்பைப் போல, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, போர்க்களத்தில், எனது மூட மகன்கள் அனைவரில் ஒருவனையும் உயிரோடு விடாமல் அழித்துவிடுவான். எனவே, அவர்களுடன் போரிடுவது சரியல்ல என்றே நான் நினைக்கிறேன்.

கௌரவர்களே, நீங்களும் அதே மனம் கொள்ளுங்கள் {அதை அறிந்து கொள்ளுங்கள்}. பகைமை பாராட்டினால், குருக்களின் {கௌரவர்களின்} இனம் முற்றாக அழியும் என்பதில் ஐயமில்லை. இஃது எனக்குத் தெரிவாகத் தோன்றுகிறது. இதன்படி நாம் செயல்பட்டால், எனது மனம் அமைதியடையும். அவர்களுடன் போரிடுவது உங்களுக்கு நன்மையாகத் தெரியவில்லை என்றால், நாம் அமைதியை நிலைநாட்டுவதற்குப் பாடுபடுவோம். நாம் துன்பப்பட்டால் யுதிஷ்டிரன் அலட்சியம் செய்ய மாட்டான். ஏனெனில், அவன் {யுதிஷ்டிரன்} இந்த அநீதியான போருக்கு {திருதராஷ்டிரனான} நான்தான் காரணம் என்றே கண்டித்துவருகிறான்” என்றான் {திருதராஷ்டிரன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்