Saturday, April 04, 2015

சஞ்சயன் நிந்தனை! - உத்யோக பர்வம் பகுதி 54

The censure of Sanjaya! | Udyoga Parva - Section 54 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 14) {யானசந்தி பர்வம் - 8}

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் ஏன் வெல்வார்கள் என்றும்; துரியோதனன் ஏன் தோற்பான் என்றும் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது; பகடையாட்டத்தின் போது திருதராஷ்டிரன் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டதாகச் சஞ்சயன் திருதராஷ்டிரனை நிந்திப்பது; துரியோதனன் தடுக்கப்படாவிட்டால், கௌரவர்களின் அழிவு நிச்சயம் என்று சஞ்சயன் எச்சரிப்பது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பெரும் மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் சொல்வது போலத்தான் இஃது இருக்கிறது. போர் நிகழும்போது, காண்டீவத்தால் க்ஷத்திரியர்களின் அழிவு நிச்சயம் ஏற்படும். எனினும், எப்போதும் ஞானியாக இருக்கும் உம்மால், குறிப்பாகச் சவ்யசச்சினுடைய {அர்ஜுனனுடைய} ஆற்றலை அறிந்த உம்மால் எப்படி உமது மகன்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற முடிகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.


ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஆரம்பத்திலிருந்தே காயமேற்படுத்தி, உண்மையில், அப்பாவத்தை மீண்டும் மீண்டும் செய்த பின்பு, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, (இப்படி வருந்துவதற்கு) இது நேரமில்லை.

தந்தை அல்லது நண்பன் என்ற நிலையை அடைந்த ஒருவன், எப்போதும் கண்காணிப்புடனும், நல்ல இதயத்துடனும் இருந்தால், (தன் பிள்ளைகளுக்கு) நன்மையை நாடுவான்; ஆனால் காயமேற்படுத்துபவனைத் தந்தை என்று அழைக்கலாகாது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகடையில் பாண்டவர்களின் தோல்வியைக் கேட்டு “இது வெல்லப்பட்டது, இஃது அடையப்பட்டது” என்று சிறுபிள்ளையைப் போல நீர் சிரித்தீர். பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} நோக்கி கடுஞ்சொல் பேசப்பட்டபோதோ, உம் மகன்கள் முழு நாட்டையும் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மகிழ்ந்தீர். எனினும், உமக்கு முன்னால் இருந்த தவிர்க்கப்பட முடியாத வீழ்ச்சியை நீர் காணவில்லை.

ஜாங்கலம் என்று அழைக்கப்படும் பகுதியோடு கூடிய குருக்களின் நாடே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தந்தைவழி நாடாகும். எனினும், அவ்வீரர்களால் {பாண்டவர்களால்} முழுப் பூமியையும் நீர் அடைந்தீர். தங்கள் கரங்களின் வலிமையால் வென்ற பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, இந்த விரிந்த பேரரசை உமக்காகச் செய்தார்கள் {உம்மிடம் ஒப்படைத்தார்கள்}. எனினும், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இவை யாவும் உம்மால் அடையப்பட்டது என்று நீர் நினைத்துக் கொள்கிறீர்.

கந்தர்வர்களால் உமது மகன்கள் பிடித்துச் செல்லப்பட்ட போது, கரைகளற்ற கடலில், தங்களைக் காக்க ஒரு படகு கூட இல்லாமல் மூழ்கும் நிலையில் இருந்தவர்களை {உமது மகன்களை}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனே {அர்ஜுனனே} மீட்டு அழைத்து வந்தான்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீரோ, பகடையில் பாண்டவர்கள் தோற்று வனவாசம் சென்ற போது சிறுபிள்ளையைப் போல திரும்பத் திரும்பச் சிரித்தீர். முனைப்புள்ள கணைகளை அர்ஜுனன் மாரியாகப் பொழிகையில், கடல்களே கூட வற்றிவிடும் எனும்போது சதையும் இரத்தமும் எம்மாத்திரம்.

அடிப்பவர்கள் அனைவரிலும் பல்குனனே {அர்ஜுனனே} முதன்மையானவன்; விற்கள் அனைத்திலும் காண்டீவமே முதன்மையானது; அனைத்து உயிரினங்களிலும் கேசவனே {கிருஷ்ணனே} முதன்மையானவன்; ஆயுதங்கள் அனைத்திலும் சுதர்சனமே முதன்மையானது; தேர்களில், சுடர்மிகும் குரங்குக் {அனுமன்} கொடி கொண்ட அந்தத் தேரே முதன்மையானது. இவை யாவையும் தன்னில் கொண்டு, வெண்குதிரைகளால் இழுக்கப்படும் அவனது {அர்ஜுனனின்} தேர், உயர்ந்த காலச்சக்கரம் போலப் போரில் நம் அனைவரையும் எரித்துவிடும்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தனக்காகப் போரிட, பீமனையும், அர்ஜுனனையும் கொண்டவனுக்குத்தான் இந்த முழுப் பூமி இப்போதும் சொந்தம். அவனே {பீமனையும் அர்ஜுனனையும் கொண்டவனே = யுதிஷ்டிரனே} மன்னர்கள் அனைவரிலும் முதன்மையானவன். பீமனால் தாக்கப்படும்போது, நம்பிக்கையிழந்து மூழ்கும் துரியோதனன் தலைமையிலான படையால் வெற்றியை அடைய இயலாது.

மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், சால்வர்கள், சூரசேனர்கள் ஆகிய அனைவரும் உம்மை மதிக்காமல் இப்போது அவமதிக்கிறார்கள். எனினும், அந்த அறிவுள்ள மன்னனின் {யுதிஷ்டிரனின்} சக்தியை அறிந்த அவர்கள் அனைவரும், அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனுடன் {யுதிஷ்டிரனுடன்} சேர்ந்துள்ளனர். அவனிடம் தாங்கள் கொண்ட அர்ப்பணிப்பின் காரணமாக எப்போதும் உமது மகன்களை அவர்கள் எதிர்த்து வருகின்றனர்.

அறம்சார்ந்தவர்களும், அழியத்தகாதவர்களுமான பாண்டுவின் மகன்களைத் தன் தீச்செயல்களால் துன்புறுத்தியவனும், அவர்களை {பாண்டவர்களை} இப்போதும் கூட வெறுப்பவனுமான அந்தப் பாவி, வேறு யாருமல்ல உமது மகனைத்தான் {துரியோதனனைத்தான்} சொல்கிறேன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனும் {துரியோதனனும்}, அவனைப் பின்பற்றுபவர்களும் எல்லாவகையிலும் தடுக்கப்பட {அடக்கப்பட} வேண்டும்.

இந்தச் சோர்வான நேரத்தில் {இந்த அழுத்தத்தில்} நீர் புலம்பியழுவது உமக்குத் தகாது. பகடையாட்டம் நடைபெற்ற நேரத்திலேயே ஞானியான விதுரராலும், என்னாலும் இதுவே {கௌரவர்கள் அடக்கப்பட வேண்டும் என்று} சொல்லப்பட்டது. ஏதோ நீர் ஓர் ஆதரவற்ற நபர் போல, பாண்டவர்கள் தொடர்பாகச் செய்யும் இந்த உமது புலம்பல்கள் அனைத்தும் பயனற்றவையே” என்றான் {சஞ்சயன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்