Wednesday, April 08, 2015

ஊசி முனை அளவு நிலம்கூடத் தரமாட்டேன்! - உத்யோக பர்வம் பகுதி 58

I won’t give even a land covered by a needle point! | Udyoga Parva - Section 58 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 18) {யானசந்தி பர்வம் - 12}

பதிவின் சுருக்கம் : கௌரவர்கள் யாரும் போரை விரும்பவில்லை, போரைத் தானும் விரும்பவில்லை என்று திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொன்னது; கௌரவர்களில் யாருடைய துணையுமின்றி, தான் பாண்டவர்களைக் கொல்லப் போவதாகத் துரியோதனன் சொன்னது; அப்படிச் சொன்ன துரியோதனனை திருதராஷ்டிரன் நிந்தித்தது...

திருதராஷ்டிரன்{துரியோதனனிடம்} சொன்னான், “பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன் க்ஷத்திரிய சக்தியைக் கொண்டு, தன் இளமைக்காலத்தில் இருந்தே பிரம்மச்சரிய வாழ்வு முறையை மேற்கொள்கிறான். ஐயோ, இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கும் என்னைப் புறக்கணித்து, எனது மூட மகன்கள், அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} போரிட விரும்புகின்றனரே. ஓ! துரியோதனா, ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, பகைமையில் இருந்து விலகும்படி நான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, எந்தச் சூழ்நிலையிலும் போர் மெச்சத் தகுந்ததல்ல. உன்னையும், உனது தொண்டர்களையும் பரமாரித்துக் கொள்ளப் பாதிப் பூமியே போதுமானது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, பாண்டுவின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, அவர்களுக்குரிய பங்கைத் திருப்பிக் கொடுப்பாயாக. உயர் ஆன்ம பாண்டவர்களிடம் சமாதானம் ஏற்படுத்திக் கொள்வதே நீதியின் பாற்பட்டது எனக் கௌரவர்கள் அனைவரும் கருதுகிறார்கள். ஓ! மகனே {துரியோதனா}, இப்படி நினைத்துப் பார். இந்த உனது படை, உனது மரணத்தின் உருவமே என்பதைக் காண்பாய்.

நீ கொண்டிருக்கும் மடமையின் காரணமாக, உன்னால் இதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. நானோ, பாஹ்லீகனோ, பீஷ்மரோ, துரோணரோ, அஸ்வத்தாமனோ, சஞ்சயனோ, சோமதத்தனோ, சல்யனோ, சத்தியவிரதனோ, புருமித்ரனோ, பூரிஸ்ரவசோ போரை விரும்பவில்லை. உண்மையில், இவர்களில் யாருமே போரை விரும்பவில்லை. உண்மையில்,  எதிரிகளால் தாங்கள் பாதிக்கப்படும்போது, கௌரவர்கள் யாரைச் சார்ந்த இருப்பார்களோ, அவர்கள் அனைவரும் போரை அங்கீகரிக்கவில்லை. ஓ! குழந்தாய் {துரியோதனா}, அதுவே {அக்கருத்தே} உனக்கும் ஏற்புடையதாக இருக்கட்டும். ஐயோ, நீ உனது சொந்த விருப்பத்தின் பேரில் இதை மேற்கொள்ளவில்லை. கர்ணன், தீய மனம் கொண்ட துச்சாசனன், சுபலனின் மகனான சகுனி ஆகியோரே உன்னை அதற்கு {அம்முடிவிற்கு} வழிநடத்துகிறார்கள்.” {என்றான் திருதராஷ்டிரன்}.

அதற்குத் துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}, “உம்மையோ, துரோணரையோ, அஸ்வத்தாமரையோ, சஞ்சயரையோ, விகர்ணனையோ, காம்போஜனையோ, கிருபரையோ, பாஹ்லீகனையோ, சத்தியவிரதனையோ, புருமித்ரனையோ, பூரிஸ்ரவசையோ, உமது கட்சியைச் சேர்ந்த எவரையும் சார்ந்திராமலே போரிடும்படிக்கு நான் பாண்டவர்களுக்கு அறைகூவல் விடுகிறேன். ஆனால், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, நானும், கர்ணனும் மட்டுமே இருந்து, யுதிஷ்டிரனைப் பலியாக {வேள்வி விலங்காக} வைத்து, ஓ! தந்தையே, தேவையான அனைத்துச் சடங்குகளுடன், போரெனும் வேள்வியைத் தனியாகக் கொண்டாடத் தயாராக இருக்கிறோம்.

அவ்வேள்வியில் எனது தேரே வேள்விப்பீடம்; நீர்க்காணிக்கைகள் செலுத்த எனது வாளே சிறு கரண்டி, கதாயுதம் பெரிய கரண்டி; எனது கவசமே பார்வையாளர்கள் கூட்டம்; எனது குதிரைகள் நான்கும் அவ்வேள்வியைச் செய்யும் புரோகிதர்கள்; எனது கணைகளே குசப் புற்கள் {தர்ப்பை}; புகழே தெளிந்த நெய். [1]

[1] ரதம் வேதி, கத்தி ஸருவம், கதை ஸருக்கு; கவசம் மான்தோல், எனது குதிரைகள் நான்கு ஹோதாக்கள், பாணங்கள் தர்ப்பைகள், புகழானது ஹவிஸ் என்றும் சொல்லப்படுகிறது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யமனுக்கு மரியாதை செலுத்தி, எங்கள் பொருட்களை மட்டுமே கொண்டு இத்தகு போரெனும் வேள்வியைச் செய்யப் போகும் நாங்கள், பகைவர்களைக் கொன்ற பிறகு, புகழோடு கூடிய வெற்றியுடன் திரும்புவோம். ஓ! தந்தையே, நான், கர்ணன் மற்றும் என் தம்பி துச்சாசனன் ஆகிய மூவரும் சேர்ந்து, போர்க்களத்தில் பாண்டவர்களைக் கொல்வோம்.

ஒன்று பாண்டவர்களைக் கொல்லும் நான், இப்பூமியை ஆள்வேன், அல்லது என்னைக் கொன்ற பிறகு, பாண்டவர்கள் இந்தப் பூமியை அனுபவிக்கட்டும். ஓ! மன்னா, ஓ! மங்காப் புகழ் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, உயிர், நாடு, செல்வம், ஏன் அனைத்தையும் நான் தியாகம் செய்வேன், ஆனால் பாண்டவர்களுடன் அருகருகே வாழ்வதென்பது என்னால் இயலாது. ஓ! மதிப்பிற்குரியவரே {திருதராஷ்டிரரே}, ஊசியின் கூரிய முனை மூடும் அளவிலான நிலத்தைக்கூட  நான் பாண்டவர்களுக்குத் திருப்பித் தர மாட்டேன்” என்றான் {துரியோதனன்}.

திருதராஷ்டிரன், நான் இப்போது, துரியோதனனை என்றென்றைக்கும் கைவிடுகிறேன். மன்னர்களே, இந்த மூடனைப் {துரியோதனனைப்} பின்தொடர்ந்து யமனுலகு செல்லப் போகும் உங்கள் அனைவருக்காகவும் நான் வருந்துகிறேன். மான்கூட்டத்திற்கு மத்தியில் இருக்கும் புலிகளைப் போல, அடிப்பவர்களில் முதன்மையான அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, போர்க்களத்தில் கூடியிருக்கும் உங்கள் முக்கியத் தலைவர்களை அடித்து வீழ்த்துவார்கள்.

நீண்ட கரங்கள் கொண்ட யுயுதானனால் {சாத்யகியால்} நசுக்கி தூர வீசப்படும் போது, பாரதப் படை ஆதரவற்ற பெண்ணைப் போல இருக்கும் என நான் நினைக்கிறேன். சாத்யகி இல்லாமலேயே, ஏற்கனவே போதுமானதாக இருந்த யுதிஷ்டிரனின் படைக்கு கூடுதல் பலமாக,  அந்தச் சினியின் மகன் {சாத்யகி}, போர்க்களத்தில் தனது நிலையை உறுதி செய்து, உழுத நிலத்தில் வீசப்படும் விதைகளைப் போலத் தன் கணைகளைச் சிதறுவான்.

எதிரிகளுடைய அந்தப் படையின் முன்னணியில், தனது நிலையைப் பீமசேனன் ஏற்பான். அச்சமற்ற அவனது வீரர்கள் அனைவரும் அவனுக்குப் பின்னால் அரணாக இருப்பார்கள். ஓ! துரியோதனா, பெரும் மலைகளைப் போன்ற யானைகள், தங்கள் தந்தந்தங்கள் ஒடிந்து, தலை நசுக்கப்பட்டு, உடல்களில் ஆகோரமாகச் சாயம் ஏற்றப்பட்டு,  பிளக்கப்பட்ட மலைகளைப் போல போர்க்களத்தின் தரையில் கிடப்பதைக் கண்டு, உண்மையில், அவனுடன் {பீமனுடன்} மோதுவதற்கு எப்போது நீ அஞ்சுவாயோ, அப்போது, எனது இந்த வார்த்தைகளை நீ நினைவுகூர்வாய்.

தேர்கள், குதிரைகள், ஆகியவற்றைக் கொண்ட உனது படை, பீமசேனனால் எரிக்கப்பட்டு, வெறும் காட்டுத் தீயாக பரந்து விரிந்து இருப்பதை எப்போது நீ காண்பாயோ, அப்போது, இந்த எனது வார்த்தைகளை நீ நினைவுகூர்வாய்.

பாண்டவர்களிடம் நீ சமாதானம் கொள்ளவில்லையென்றால், பேரிடர் உனதாகும். பீமசேனனின் கதாயுதத்தால் கொல்லப்பட்ட பிறகு, நீ அமைதியாக ஓய்வாய். உண்மையில், பெரும் கானகம் ஒன்று வேரோடு சாய்க்கப்பட்டதைப் போல, முழு கௌரவப்படையையும் எப்போது அவன் {பீமன்} தரையோடு தரையாக்குவானோ, அப்போது நீ எனது இந்த வார்த்தைகளை நினைவுகூர்வாய்” என்றான் {திருதராஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பூமியின் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இதைச் சொன்ன அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, மீண்டும் சஞ்சயனிடம் பின்வருமாறு கேட்டான்.”

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்