Wednesday, April 29, 2015

"செல்வமற்றவன் இறந்தவனே" யுதிஷ்டிரன்! - உத்யோக பர்வம் பகுதி 72அ

Yudhisthira said "A man without weath is dead" | Udyoga Parva - Section 72a | Mahabharata In Tamil

 (பகவத்யாந பர்வம் –1) 

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களிடம் இருந்து சஞ்சயன் சென்ற பிறகு, அந்தப் பாண்டவர்கள் என்ன செய்தார்கள் என்று ஜனமேஜயன் வைசம்பாயனரிடம் கேட்பது; யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் பேசிய செய்தியை வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொல்வது; ஐந்து கிராமங்களைக் கூடத் திருதராஷ்டிரர் கொடுக்கவில்லையே என யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் வருந்துவது; கிருஷ்ணனின் பாதுகாப்பை யுதிஷ்டிரன் நாடுவது; செல்வமற்றவன் உயிரோடு இருந்தாலும் இறந்தவனே என்றும், தான் அந்த நிலையிலேயே இருப்பதாக யுதிஷ்டிரன் சொல்வது...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், "(பாண்டவர் இடத்தை விட்டு அகன்ற) நல்ல சஞ்சயன் குருக்களிடம் {கௌரவர்களிடம்} சென்ற போது, எனது பாட்டன்களான பாண்டுவின் மகன்கள் என்ன செய்தார்கள்? ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, இவை அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன். எனவே, இவற்றை எனக்குச் சொல்வீராக" என்றான் {ஜனமேஜயன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "சஞ்சயன் சென்ற பிறகு, நீதிமானான யுதிஷ்டிரன், சாத்வதர்கள் அனைவரின் தலைவனும், தாசார்ஹ குலத்தவனுமான கிருஷ்ணனிடம், "ஓ! நண்பர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனே {கிருஷ்ணா}, நண்பர்கள் தங்கள் நட்பைக் காட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தத் துயர் நிறைந்த காலத்தில் எங்களைக் காப்பதற்கு உன்னைத் தவிர வேறு எவரையும் நான் காணவில்லை. ஓ! மாதவா {கிருஷ்ணா}, அளவற்ற கர்வத்தால் நிறைந்திருக்கும் துரியோதனன் மற்றும் அவனது ஆலோசகர்களிடம் எங்களுக்குரிய பங்கை உன்னை நம்பியே நாங்கள் அச்சமற்றுத் திரும்பக் கேட்டிருக்கிருக்கிறோம். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, விருஷ்ணிகளின் துயரங்கள் அனைத்திலும் நீயே அவர்களைக் காக்கிறாய். இப்போது பெரும் ஆபத்தில் இருக்கும் பாண்டவர்களையும் காப்பாயாக. அவர்களும் {பாண்டவர்களும்} உனது பாதுகாப்பைப் பெறத் தகுந்தவர்களே" என்றான் {யுதிஷ்டிரன்}.

தெய்வீகமான கிருஷ்ணன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிய கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, இதோ நான் இருக்கிறேன். நீர் சொல்ல விரும்புவதை என்னிடம் சொல்லும். ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, நீர் எதையெல்லாம் சொல்வீரோ அவற்றை நான் செய்வேன்" என்றான்.

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "திருதராஷ்டிரர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் நோக்கம் என்ன என்பதை நீ கேட்டாய். ஓ! கிருஷ்ணா, சஞ்சயன் சொன்ன யாவும், திருதராஷ்டிரரின் வார்த்தைகள் என்பது உறுதி. திருதராஷ்டிரரின் ஆன்மா போன்ற சஞ்சயன், அவரது {திருதராஷ்டிரரின்} மனதில் இருப்பதையே பேசினார். தனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளையே ஒரு தூதன் பேச முடியும், ஏனெனில் மாறாகப் பேசினால் அவன் கொல்லப்படத் தகுந்தவனாகிவிடுவான். தன்னுடையவை அனைத்தையும் சமமாகப் பாராமல், பேராசையால் உந்தப்பட்ட தீய இதயம் கொண்ட திருதராஷ்டிரர், எங்கள் நாட்டைத் திரும்பக் கொடுக்காமலேயே எங்களிடம் சமாதானம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்.

உண்மையில், திருதராஷ்டிரர் கட்டளையின் பேரில் நாங்கள் காட்டில் பன்னிரெண்டு {12} வருடங்களையும், மேலும் ஒரு வருடத்தைத் தலைமறைவாகவும், ஓ! தலைவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர் எங்கள் உறுதிமொழியில் உறுதியாக இருப்பார் என்ற நம்பிக்கையிலேயே கழித்தோம். எங்களது உறுதிமொழியில் இருந்து நாங்கள் பிறழவில்லை என்பதை எங்களோடு இருந்த அந்தணர்கள் நன்கு அறிவார்கள்.

பேராசை கொண்ட மன்னர் திருதராஷ்டிரர் க்ஷத்திரிய அறங்களை நோற்க இப்போது விரும்பவில்லை. தன் மகன் {துரியோதனன்} மீது கொண்ட பாசத்தின் காரணமாக, அவர் தீய மனிதர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். சுயோதனனின் {துரியோதனனின்} ஆலோசனைகளுக்குக் கட்டுப்படும் மன்னர் {திருதராஷ்டிரர்}, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பேராசையால் இயக்கப்பட்டு, தனது நன்மையை மட்டும் நாடி, எங்களிடம் உண்மையற்று நடந்து கொள்கிறார்.

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது தாயையும், நண்பர்களையும் பராமரிக்க இயலாதவனாக நான் இருப்பதைவிட எது துயர்நிறைந்ததாக இருக்க முடியும்?

ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, காசி, பாஞ்சாலம், சேதி, மத்ஸ்ய நாட்டவர்களை எனது கூட்டாளிகளாகவும், {கிருஷ்ணனான} உன்னை எனது பாதுகாவலனாகவும் கொண்டிருக்கும் நான், அவிஸ்தலம், விருகஸ்தலம், மாகந்தீ, வாரணாவதம், மேலும் ஏதாவது ஒன்றை ஐந்தாவதாகவும் என ஐந்து கிராமங்களை மட்டுமே வேண்டினேன். "ஓ! ஐயா, நாங்கள் பாரதர்களின் அழிவை விரும்பவில்லை. நாங்கள் ஒற்றுமையாக வசிக்கத்தக்க வகையில் எங்களுக்கு ஐந்து கிராமங்களையாவது நகரங்களையாவது கொடும்" என்றே கேட்டேன். எனினும், தீய மனம் படைத்த திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, உலகத்தின் தலைமைத்தன்மையைக் கருதி அதைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். இதை விட வேறு எது துயர் நிறைந்ததாக இருக்கக்கூடும்?

ஒரு மதிப்புமிக்கக் குடும்பத்தில் பிறந்து, அங்கேயே வளர்க்கப்பட்ட ஒரு மனிதன், பிறரின் உடைமைகளைக் கவர்ந்தால், அந்தப் பேராசையே அவனது புத்திக்கூர்மையை அழிக்கும்; புத்திக்கூர்மை அழிந்தால், நாணம் தொலைந்து போகும்; வெட்கமற்றுப் போனால் அறம் குறைய வழிவகுக்கும்; அறத்தின் இழப்பு, செழிப்பின் இழப்பைக் கொண்டுவரும்; செல்வத்தின் அழிவு ஒரு மனிதனை நிர்மூலமாக்கும். ஏனெனில், வறுமையே ஒரு மனிதனின் மரணமாகும். மலர்களோ, கனிகளோ அற்ற மரத்தைப் பறவைகள் தவிர்ப்பது போல, உறவினர்களும், நண்பர்களும், அந்தணர்களும் ஒரு ஏழையைத் தவிர்க்கிறார்கள்.

இறந்த உடலைவிட்டு விலகும் உயிர்மூச்சைப் போல, என்னை விழுந்தவனாகக் கருதி இப்படி உறவினர்கள் என்னை ஒதுக்குவதும் என்னுடைய மரணத்தைப் போன்றதே. "இன்று எனக்கு இறைச்சி இல்லை, நாளை எனக்கு என்ன கிடைக்கும்?" என்ற எண்ணத்துடனேயே எப்போதும் துயர்த்தில் இருக்கும் ஒருவனின் வாழ்நிலையைவிடத் துயர்மிகுந்தது எதுவும் இல்லை என்று சம்பரன் சொன்னான். செல்வமே உயர்ந்த அறம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அனைத்தும் செல்வத்தைச் சார்ந்தே உள்ளது. செல்வமுள்ளவரே உயிரோடு இருப்பவராவர். அதேவேளையில் செல்வமற்றவர்களோ உயிரோடிருப்பினும் இறந்தவர்களே ஆவர்" என்றான் {யுதிஷ்டிரன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்