Thursday, April 30, 2015

"குருக்களிடம் செல்வேன்" என்றான் கிருஷ்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 72இ

"I will go to the Kurus" said Krishna! | Udyoga Parva - Section 72c | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –1)

பதிவின் சுருக்கம் : பகை நிறைந்தவன் புகழ்கேட்டை அடைகிறான்; ஒரு தரப்பு முற்றாக அழிந்தால்தான் பகை ஒழியும்; முற்றாக ஒரு தரப்பை அழிக்கும் செயல் கொடூரமானது; நாட்டைத் துறந்து அடையப்படும் அமைதி மரணத்திற்கு ஒப்பானது; நாயின் சண்டையோடு மனிதர்களின் சண்டையை ஒப்பிட்டுக் கிருஷ்ணனிடம் சொல்லும் யுதிஷ்டிரன், தான் திருதராஷ்டிரனை மதிப்பதாகவும், ஆனால் அவன் தன் மகன் மீது கொண்ட பாசத்தால் தனது வணக்கத்தை ஏற்கமாட்டான் என்றும் சொல்வது; கிருஷ்ணனே தங்களுக்கு உற்ற தோழன் என்றும் சொல்வது; இவற்றையெல்லாம் கேட்ட கிருஷ்ணன் தானே கௌரவர்களிடம் தூது செல்வதாகச் சொல்வது; அதில் தனக்கு விருப்பம் இல்லை என்று யுதிஷ்டிரன் சொல்வது; நோக்கம் நிறைவேறாவிட்டாலும், தான் செல்வது எவ்வகையிலும் நன்மையையே விளைவிக்கும் என்று கிருஷ்ணன் சொல்வது; யுதிஷ்டிரன் சம்மதிப்பது...

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தான், "அமைதி நிறைந்தவன், வெற்றி மற்றும் தோல்வி குறித்த எண்ணங்களையெல்லாம் துறந்து மகிழ்ச்சியாக உறங்குகிறான். அதேவேளையில், பகையால் தூண்டப்பட்டவனோ, பாம்புடன் ஒரே அறையில் உறங்குவதைப் போல, கவலை நிறைந்த இதயத்துடன் எப்போதும் துக்கத்துடனேயே உறங்குகிறான். அழிப்பவன் மிக அரிதாகவே புகழை வெல்கிறான். மறுபுறம், அத்தகு மனிதன், அனைவரின் மதிப்பீட்டின்படி நிலைத்த புகழ் கேட்டை {அபகீர்த்தியை} அடைகிறான். நீண்டகாலம் பாராட்டப்படும் பகைமை ஒழிவதில்லை; ஏனெனில், எதிரியின் குடும்பத்தில் ஒருவன் உயிரோடு இருந்தாலும், அவனுக்குக் கடந்த காலத்தை விவரிக்க உரை நிகழ்த்துபவர்கள் {கதைசொல்லிகள்} எப்போதும் தேவையில்லை.


ஓ! கேசவா {கிருஷ்ணா}, பகையைப் பகையால் சமன் செய்ய எப்போதும் முடியாது; மறுபுறம், தெளிந்த நெய்யால் தூண்டப்படும் நெருப்பு போல, பகை தூண்டிவிடப்படுகிறது. எனவே, ஒரு தரப்பு நிர்மூலமடையாமல் சமாதானத்தை எட்ட முடியாது {அமைதி ஏற்படாது}. ஏனெனில், ஒரு தரப்பு மற்றொரு தரப்பின் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கான {அந்த மற்றொரு தரப்பின்} குறைகளை எப்போதும் கண்டுபிடிக்கும். குறைகாண்பதில் ஈடுபடுபவர்கள் இந்தத் தீயொழுக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். {குறை காண்பது தீயொழுக்கமே}.

தன் சொந்த ஆற்றல் குறித்த ஒருவனின் தன்னம்பிக்கை அவனது இதயத்தின் ஆழத்தில் குணப்படுத்த முடியாத நோயாக இருந்து தொல்லை கொடுக்கிறது. அதை உடனே கைவிடவில்லை என்றாலோ, {அம்மனிதனுக்கு} மரணம் ஏற்படவில்லை என்றாலோ, அங்கே அமைதி ஏற்பட முடியாது.

ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, பகைவரை அவர்களது வேர் வரை அழிப்பது, பெரும் செழிப்பெனும் வடிவில் நல்ல விளைவுக்கு வழிவகுத்தாலும், அத்தகு செயல் மிகவும் கொடூரமானதே. நாங்கள் நாட்டைத் துறப்பதால் அடையப்படும் அமைதி, மரணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எதிரியின் வடிவமைப்பு மற்றும் எங்களது அப்பட்டமான அழிவு ஆகியவற்றின் விளைவால் ஏற்படும் அந்த நாடு இழப்பு, எங்கள் மரணத்தையே குறிக்கிறது. நாங்கள் எங்கள் நாட்டையும் கொடுக்க விருப்பவில்லை, எங்கள் குலம் அழிவதைக் காணவும் விரும்பவில்லை.

எனவே, இந்தச் சூழ்நிலையில், அவமானத்தின் மூலம் கூட முன்னதாகவே பெறப்படும் சமாதானம் சிறந்ததாகவே இருக்கும். போரை விரும்பாமல், அனைத்து வழிகளிலும் சமாதான முயற்சிகளை மேற்கொள்ளும் இவர்களின் சமரசங்கள் தோல்வியில் முடிந்தால், போர் தவிர்க்க முடியாததாக ஆகும். அதன் பிறகு வீரத்தை வெளிப்படுத்தும் நேரம் வரும். உண்மையில், சமரசம் தோற்றால், பயங்கர விளைவுகளே பின்தொடரும்.

கற்றோர், இவையனைத்தையும் நாய்ச்சண்டையில் கவனித்திருக்கின்றனர். முதலில், வாலாட்டுதல், பிறகு குரைத்தல், பிறகு பதிலுக்குக் குரைத்தல், பிறகு வலம் வருதல், பிறகு பற்களைக் காட்டுதல், பிறகு திரும்பத் திரும்ப உறுமுதல், கடைசியாகச் சண்டையிடுதல். ஓ! கிருஷ்ணா, அத்தகு சண்டையில், தனது எதிரியை வீழ்த்தும் வலிய நாய், பின்னதன் {வீழ்ந்த நாயின்} இறைச்சியை எடுத்துக் கொள்ளும். சரியாக மனிதர்களின் வழக்கிலும் இதே தான் நடக்கிறது. எந்தவித வித்தியாசமும் இல்லை. சக்திவாய்ந்தவர்கள், எப்போதும் பணிந்து நிற்கும் பலவீனர்களிடம் சச்சரவுகளைத் தவிர்த்து, அவற்றை அலட்சியம் செய்ய வேண்டும். தந்தை, மன்னன், வயது முதிர்ச்சியால் மதிக்கத்தக்கவர்கள் ஆகியோர் எப்போதும் மரியாதைக்குகந்தவர்கள் ஆவர். எனவே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர், எங்கள் மரியாதைக்கும் வழிபாட்டுக்கும் தகுந்தவரே. ஆனால், ஓ! மாதவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர் தனது மகன் மீது கொண்ட பாசம் பெரிதாக இருக்கிறது. தனது மகனுக்குக் {துரியோதனனுக்குக்} கீழ்ப்படியும் அவர் {திருதராஷ்டிரர்}, நமது வணக்கத்தை மறுதலிப்பார். ஓ! கிருஷ்ணா, இச்சந்தர்ப்பத்தில் எது சிறந்ததென நீ நினைக்கிறாய்?

ஓ! மாதவா, எங்கள் பொருள் மற்றும் அறம் ஆகிய இரண்டையும் நாங்கள் எவ்வாறு பாதுகாக்க முடியும்? ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, மனிதர்களில் முதன்மையானவனே, இக்கடினமான விவகாரத்தை உன்னைத் தவிர வேறு யாருடன் நாங்கள் ஆலோசிக்க முடியும்? ஓ! கிருஷ்ணா, எங்களிடம் அன்பாகவும், எங்கள் நன்மைக்கு முயல்பவனாகவும், அனைத்து செயல்படுவழிகளையும் அறிந்தவனாகவும், உண்மையை {சத்தியத்தை} நன்கு அறிந்தவனாகவும் உன்னைப்போல வேறு எந்த நண்பன் எங்களுக்கு இருக்கிறான்?" என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, நீதிமானான யுதிஷ்டிரனிடம், "உங்கள் இருவருக்காகவும் {பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்காவும்}, நான் குருக்களின் {கௌரவர்களின்} சபைக்குச் செல்வேன். உங்கள் விருப்பங்களைத் தியாகம் செய்யாமல் என்னால் அமைதியை எட்ட முடியுமென்றால், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பெரும் பலன்களைத் தரவல்ல தகுதியுடைய ஒரு பெரும் அறச்செயல் எனதாகும். குருக்கள் {கௌரவர்கள்}, கோபத்தால் எரிந்து கொண்டிருக்கும் ஸ்ருஞ்சயர்கள், பாண்டவர்கள், திருதராஷ்டிரர்கள், ஏன், உண்மையில் இந்த முழு உலகையும் கூட மரண வலையில் இருந்து காத்தவனாவேன்" என்று பதிலுரைத்தான் {கிருஷ்ணன்}.

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "நீ துரியோதனனுக்கு நல்லதை அறிவுறுத்தினாலும், உனது வார்த்தைகளுக்கு ஏற்ப அவன் செயல்படவே மாட்டான். குருக்களிடம் {கௌரவர்களிடம்} நீ செல்வதை நான் விரும்பவில்லை. துரியோதனனின் ஆணைக்குக் கீழ்ப்படியும் இவ்வுலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவரும் அங்கே கூடியிருக்கிறார்கள். ஓ! கிருஷ்ணா, நீ அவர்களுக்கு மத்தியில் செல்வதை நான் விரும்பவில்லை. உனக்கு ஏதாவது குறைவு {அங்கே} உண்டாகுமானால், ஓ! மாதவா {கிருஷ்ணா}, இன்பம் என்ன? அதன்மூலமாகக் {உனக்கு ஏற்படும் குறைவால் எங்களுக்குக்} கிடைக்கும் தெய்வீகத்தன்மையும், தேவர்களின் அரசுரிமையும் கூட எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காது" என்றான் {யுதிஷ்டிரன்}.

அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, திருதராஷ்டிர மகனின் {துரியோதனனின்} பாவம் நிறைந்த தன்மையை நான் அறிவேன். ஆனால், அங்கே செல்வதால், பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரின் பழிச்சொல்லிலிருந்தும் நாம் தப்புவோம். சிங்கத்தின் முன்னிலையில் பிற விலங்குகளைப் போல, பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரும் கூடி வந்தாலும் கூட, கோபத்தில் இருக்கும் என்னிடம் போரில் நிலைத்து நிற்க முடியாது. அவர்கள் எனக்கு ஏதாவது தீங்கைச் செய்தார்களெனில், நான் குருக்கள் அனைவரையும் எரித்துவிடுவேன். இதுவே எனது நோக்கம். ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, அங்கே நான் செல்வது கனியற்றதாகாது. ஏனெனில், நமது நோக்கம் நிறைவேறவில்லை என்றாலும் கூட, நாம் அனைத்துப் பழிகளில் இருந்தும் தப்பலாம்" என்றான் {கிருஷ்ணன்}.

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "ஓ! கிருஷ்ணா, நீ விரும்புவதைச் செய். நீ அருளப்பட்டிரு. குருக்களிடம் {கௌரவர்களிடம்} செல். வெற்றியோடும், செழிப்போடும் நீ திரும்பவதைக் காண்பேன் என நான் நம்புகிறேன். ஓ! தலைவா {கிருஷ்ணா}, பரதனின் மகன்கள் அனைவரும் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடனும், மனநிறைவுடனும் ஒன்றாகச் சேர்ந்து வாழும்படிக்குக் குருக்களிடம் சென்று அமைதியை நிலைநாட்டுவாயாக. நீ எங்களுக்குச் சகோதரனும், நண்பனுமாவாய். பீபத்சுவைப் {அர்ஜுனனைப்} போல, நீ எனது அன்புக்குரியவனுமாவாய். உன்னிடம் இருக்கும் எங்களுக்கான ஆர்வத்தைப் புறக்கணிக்க மாட்டோம். உன்னிடம் நாங்கள் அவ்வளவு நெருக்கத்தைக் கொண்டுள்ளோம்.

நீ எங்களையும் அறிவாய், எங்கள் பகைவரையும் அறிவாய். எங்கள் காரியங்கள் என்ன என்பதை நீ அறிவாய், என்ன பேச வேண்டும் என்பதையும் நீ அறிவாய். ஓ! கிருஷ்ணா, எங்களுக்கு நன்மை தரக்கூடிய வார்த்தைகளை நீ சுயோதனனிடம் {துரியோதனனிடம்} பேசுவாயாக. (வெளிப்படையான) பாவத்தாலோ, வேறு எந்தப் பிற வழிகளிலோ அமைதி நிறுவப்பட்டாலும், ஓ! கேசவா {கிருஷ்ணா}, நமது நன்மைக்கு வழிகோலும் வார்த்தைகளையே பேசுவாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்