Sunday, May 10, 2015

விருகஸ்தலத்தில் நின்ற கிருஷ்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 84

Krishna stayed at Vrikasthala! | Udyoga Parva - Section 84 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –13)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனைத் தொடர்ந்து சென்று படைகளையும்; ஹஸ்தினாபுரத்திற்கு நேரிட்ட தீய சகுனங்களையும், கிருஷ்ணன் கடந்து சென்ற இடங்களில் நேர்ந்த இனிமையான அனுபவங்களையும் வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொல்வது; விருகஸ்தலத்தை அடைந்த கிருஷ்ணன்; கிருஷ்ணனை உபசரித்த அந்தணர்கள்; அந்தணர்களுக்கு உணவளித்து இரவை மகிழ்ச்சியாகக் கழித்த கிருஷ்ணன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! எதிரிகளை அடிப்பவனே {ஜனமேஜயா}, வலிய கரங்களைக் கொண்ட அந்தத் தேவகியின் மகன் {கிருஷ்ணன்} (ஹஸ்தினாபுரத்திற்குப்) புறப்பட்டபோது, எதிரி வீரர்களைக் கொல்லவல்லவர்களும் பலமிக்கவர்களுமான பத்துத் தேர்வீரர்கள் அவனை {கிருஷ்ணனைத்} தொடர்ந்து சென்றனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஆயிரம் {1000} காலாட்படை வீரர்களும், ஆயிரம் {1000} குதிரைவீரர்களும், நூற்றுக்கணக்கான பணியாட்களும் அபரிமிதமான உணவுப்பொருட்களுடன் அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "தாசார்ஹ குலத்தவனான அந்த ஒப்பற்ற மதுவைக்கொன்றவன் {மதுசூதனன்}, தனது பயணத்தை எப்படிச் செய்தான்? அந்த வீரன் {கிருஷ்ணன்} புறப்பட்ட போது என்னென்ன சகுனங்கள் காணப்பட்டன?" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அந்த ஒப்பற்ற கிருஷ்ணன் (ஹஸ்தினாபுரத்திற்குக்) கிளம்பியபோது காணப்பட்ட இயல்பான மற்றும் இயல்புக்கு மாறான சகுனங்களை நான் உரைக்கும்போதே கேட்பாயாக. வானம் மேகமற்று இருந்தாலும், மின்னல்கீற்றுகளுடன் கூடிய இடி உருளும் ஒலி கேட்டது. தெளிந்த வானில் {கண்களுக்குத் தெரியாதபடி} வரிசையாக வந்த மேகங்கள் இடைவிடாமல் பின்புறத்தில் மழையைப் பொழிந்து கொண்டிருந்தன. கிழக்கு நோக்கிப் பாயும் சிந்து நதி உட்பட்ட ஏழு பெரிய ஆறுகள் எதிர் திசை {மேற்கு} நோக்கிப் பாய்ந்தன. எதையும் வேறுபடுத்திப் பார்க்க இயலாவண்ணம் எல்லாத் திசைகளும் எதிர்மறையானதைப் போலத் தோன்றின.

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா} எங்கும் நெருப்புகள் சுடர்விட்டு எழுந்தன, பூமி மீண்டும் மீண்டும் நடுங்கியது. நூற்றுக்கணக்கான கிணறுகள் மற்றும் நீர் பாத்திரங்கள் {நீர்} பெருகி வழிந்தோடின. மொத்த அண்டமே இருளில் மூழ்கியது. புழுதி நிறைந்த சுற்றுச்சூழலில், அடிவானத்தின் திக்குகளையும், மூலத்திசைகளையும் வேறுபடுத்திப் பார்க்க இயலவில்லை. வானத்தில் இருந்து பெரும் கர்ஜனைகள் கேட்கப்பட்டன, ஆனால் எந்த உருவமும் தென்படவில்லை.

ஓ! மன்னா {ஜனமேஜயா} அற்புதம் நிறைந்த இந்த நிகழ்வு நாடு முழுவதும் காணப்பட்டது. கடுமையான இடியைப் போன்ற ஒலியுடன் வீசிய தெற்மேற்கு காற்று, ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்து, ஹஸ்தினாபுர நகரத்தை நசுக்கியது.

எனினும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்த விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்} கடந்த சென்ற இடங்களில் இனிமையான தென்றல் வீசியது, அனைத்தும் மங்கலகரமாக ஆனது. தாமரைகள் மற்றும் நறுமணமிக்க மலர்கள் அங்கே பொழிந்தன. கூரிய புற்களும் முட்களும் அற்றிருந்த அந்தச் சாலை இனிமையானதாக இருந்தது. அவன் {கிருஷ்ணன்} தங்கிய இடங்களில் எல்லாம், ஆயிரக்கணக்கான பிராமணர்கள் வந்து செல்வத்தைத் தானமளிக்கும் அவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்து, தயிர், நெய், தேன் போன்ற உணவுகள் மற்றும் செல்வங்கள் ஆகியவற்றைக் கொடுத்து அவனை {கிருஷ்ணனை} வழிபட்டனர்.

பெண்களே கூட, வெளியே சாலைக்கு வந்து, அனைத்து உயிர்களின் நன்மைக்கும் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த ஒப்பற்ற வீரனின் {கிருஷ்ணனின்} மேனியில் நறுமணமிக்கக் காட்டு மலர்களைத் தூவினர். பிறகு அவன், இதயத்துக்கு இனிமையைத் தரவல்லவையும், கண்களுக்கு இனிய காட்சிகளைக் கொண்டவையும், வண்டுகள் நிறைந்தவையுமான பல்வேறு கிராமங்களைக் கடந்தும், பல்வேறு நாடுகள் மற்றும் அரசுகளைக் கடந்தும், புனிதமானதும், அழகுள்ளதும், அனைத்து வகைப் பயிர்கள் நிரம்பியதும், இனிமையானதுமான சாலிபவனம் என்கிற இடத்தை அடைந்தான்.

எப்போதும் உற்சாகம் கொண்டவர்களும், நல்ல இதயம் படைத்தவர்களும், பாரதர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டவர்களும், அதன்காரணமாகப் படையெடுப்பாளர்கள் குறித்த அச்சங்களில் இருந்து விடுபட்டவர்களும், எந்தவித துயரத்தையும் அறியாதவர்களுமான உபப்லாவ்யத்துக் குடிமக்களில் பலர், தங்கள் நகரத்தை விட்டு வெளியே வந்து, கிருஷ்ணனைக் காணும் விருப்பத்தில் ஒன்றிணைந்து {அங்கே சாலிபவனத்தின் சாலை} வழியில் நின்றார்கள். சுடர்மிக்க நெருப்பைப் போன்ற அந்த ஒப்பற்றவன் {கிருஷ்ணன்} அந்த இடத்திற்கு {சாலிபவனத்திற்கு} வந்ததைக் கண்டதும், தங்கள் வழிபாட்டுக்குகந்த அவனை {கிருஷ்ணனை}, தங்கள் இல்லத்திற்கு வந்த ஒரு விருந்தினரை உபசரிப்பதைப் போல மரியாதையுடன் வழிபட்டார்கள்.

கடைசியாக அந்த எதிரிவீரர்களைக் கொல்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, விருகஸ்தலத்தை அடைந்த போது, இங்குமங்குமாய்ச் பிரிந்த சூரியக்கதிர்கள் வானத்தைச் சிவப்பாக்கியதாகத் தோன்றியது. தனது தேரில் இருந்து இறங்கிய அவன் {கிருஷ்ணன்}, தான் வழக்கமாகச் செய்யும் சுத்திகரிப்புச் சடங்குகளை முறையாகச் செய்து, குதிரைகளுக்குச் சேணம் அகற்றச் சொல்லி உத்தரவிட்டு, தனது மாலைநேரத் துதிகளைச் சொல்ல தன்னைத் தயாரித்துக் கொண்டான். {தேரோட்டி} தாருகனும், குதிரைகளை விடுவித்து, குதிரை அறிவியல் விதிகளின்படி அவற்றை மேய்த்து, நுகங்களையும், தடயங்களையும் அகற்றி அவற்றுக்கு விடுதலை கொடுத்தான். இது செய்து முடிக்கப்பட்டதும் மதுவைக் கொன்றவன் {மதுசூதனன்}, "யுதிஷ்டிரரின் தூதுக்காக நாம் இந்த இரவை இங்கே கழிக்க வேண்டும்" என்றான். அவனது {கிருஷ்ணனின்} நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்ட அவனது பணியாட்கள், விரைவாக ஒரு தற்காலிகக் குடிலை அமைத்து, அருமையான உணவையும் பானங்களையும் விரைந்து தயாரித்தனர்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கிராமத்தில் வசித்த பிராமணர்களில் உன்னதமானவர்கள், உயர்ந்த வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், பணிவானவர்கள், வேதங்களின் கூற்றுக்குக் கீழ்ப்படிந்து தங்கள் நடத்தையை அமைத்துக் கொண்டவர்கள் ஆகியோர், எதிரிகளைத் தண்டிப்பவர்களில் ஒப்பற்றவனான ரிஷிகேசனை {கிருஷ்ணனை} அணுகி, தங்கள் அருளாசிகள் மற்றும் மங்கலகரமான பேச்சுகளால் அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை செலுத்தினார்கள். அனைவரின் மரியாதைக்கும் தகுதிவாய்ந்த அந்தத் தாசார்ஹ குலத்தவனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை செலுத்திய பிறகு, செல்வங்கள் நிறைந்த தங்கள் இல்லங்களை, அந்த ஒப்பற்ற மனிதனின் {கிருஷ்ணனின்} ஆளுகைக்குள் வைத்தனர்.

அவர்களிடம் "போதும்" என்று சொன்ன அந்த ஒப்பற்ற கிருஷ்ணன், அவர்களுக்கு, அவரவர் தகுதிக்கேற்ப முறையான மரியாதையைச் செலுத்தி, அவரவர் வீடுகளுக்கு அவரவர்களுடன் சென்று, பிறகு அவர்களின் துணையுடனே தனது கூடாரத்திற்குத் திரும்பினான். அந்தணர்கள் அனைவருக்கும் இனிய இறைச்சியை உண்ணக் கொடுத்து, அவர்களுடன் சேர்ந்து தனது உணவை எடுத்துக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, அந்த இரவை மகிழ்ச்சியாக அங்கே கழித்தான்" என்றார் {வைசம்பாயனர்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்