Saturday, May 09, 2015

குதிரைகளும் யானைகளும் மலஜலங்கழித்தன! - உத்யோக பர்வம் பகுதி 83ஆ

Steeds and elephants passed urine and excreta! | Udyoga Parva - Section 83b | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –12)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன், பிற பாண்டவர்கள் மற்றும் மன்னர்கள் ஆகியோர் ஹஸ்தினாபுரம் செல்லும் கிருஷ்ணனைத் தொடர்ந்து செல்வது; யுதிஷ்டிரன் தனது தாய் குந்தி குறித்து வருந்தியது; அவளைத் தன் சார்பாக நலன்விசாரித்து ஆலிங்கணம் செய்யுமாறு கிருஷ்ணனிடம் யுதிஷ்டிரன் சொன்னது; முடிந்தவரை சமாதானம் பேசும்படியும், கௌரவர்கள் அதற்கு இணங்க மறுத்தால் க்ஷத்திரிய குலமே தன்னால் அழியும் என்றும் அர்ஜுனன் சொன்னது; அர்ஜுனனின் பேச்சைக் கேட்ட பீமன் பயங்கரமாகக் கர்ஜித்தது; பிறகு கிருஷ்ணனின் அனுமதியுடன் அவர்கள் அனைவரும் திரும்பியது; கிருஷ்ணன் பயணப்பட்ட வழியில் முனிவர்கள் அவனைச் சந்திப்பது; பரசுராமர் முனிவர்க்கூட்டத்தின் நோக்கத்தைக் கிருஷ்ணனிடம் சொல்வது....

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அப்படிக் கிருஷ்ணன் சென்றபோது, குந்தியின் மகனான யுதிஷ்டிரரும், பீமன், அர்ஜுனன், மாத்ரியின் இரட்டை மகன்களான   அந்த மற்ற பாண்டவர்களும் {நகுல சகாதேவர்களும்} அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றனர். வீரமிக்கச் சேகிதானன், சேதிகளின் ஆட்சியாளனான திருஷ்டகேது, துருபதன், காசி மன்னன், பெரும் வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, திருஷ்டத்யும்னன், தனது மகன்களோடு கூடிய விராடன், கேகய இளவரசர்கள் ஆகிய இந்த க்ஷத்திரியர்கள் அனைவரும். அவனை {கிருஷ்ணனை} மதிக்கும் வகையில், அந்த க்ஷத்திரியக் குலத்துக் காளையைப் {யுதிஷ்டிரனைப்} பின் தொடர்ந்து சென்றார்கள்.


ஒப்பற்ற மன்னனும் நீதிமானுமான யுதிஷ்டிரன், சிறிது தூரத்திற்குக் கோவிந்தனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்று, அந்த மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும் பேசினான். ஆசையினாலோ, கோபத்தினாலோ, அச்சத்தினாலோ, லாப நோக்கத்தாலோ சிறிய தவறைக் கூட இழைக்காதவனும், என்றும் உறுதியான மனம் படைத்தவனும், பேராசைக்கு அந்நியனும், அறநெறிகளை அறிந்தவனும், பெரும் புத்திக்கூர்மை மற்றும் ஞானத்தைக் கொண்டவனும், அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் அறிந்தவனும், அனைவருக்கும் தலைவனும், தேவர்களுக்குத் தேவனும், நித்தியமாக நிலைத்திருப்பவனும், அனைத்து அறங்களைக் கொண்டவனும், தனது மார்பில் மங்கலக்குறியைக் கொண்டவனுமான அந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனை {கிருஷ்ணனை} குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} அணைத்துக் கொண்டான். அவனை {கிருஷ்ணனை} அணைத்தவாறே, அவன் {கிருஷ்ணன்} என்ன செய்ய வேண்டும் என்பதை மன்னன் {யுதிஷ்டிரன்} குறிப்பிடத் தொடங்கினான்.

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "குழந்தையாக இருந்ததில் இருந்து எங்களை வளர்த்தவளும்; உண்மைகளிலும், துறவு நோன்புகளிலும், தீயனத் தணிக்கும் சடங்குகளிலும் எப்போதும் ஈடுபடுபவளும்; தேவர்களையும், விருந்தினர்களையும் வணங்குவதில் அர்ப்பணிப்பு கொண்டவளும்; தனது மகன்களிடம் அன்போடிருக்கும் பெரியவர்களுக்காக எப்போதும் காத்திருப்பவளும்; தனது மகன்களிடம் எல்லையில்லா பாசம் கொண்டவளும், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எங்களால் எப்போதும் அன்போடு விரும்பப்படுபவளும்; ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே {கிருஷ்ணா}, உடைந்த கப்பலில் இருக்கும் பயணிகளைப் பயங்கரக் கடலில் இருந்து காக்கும் படகைப் போல, துரியோதனனின் வலைகளில் இருந்து எங்களை எப்போதும் காத்தவளும், ஓ! மாதவா {கிருஷ்ணா}, துன்புறத்தகாதவளும், எங்களின் நிமித்தமாக எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தவளுமான அந்த மங்கையிடம் {குந்தியாகிய எங்கள் தாயிடம்} நலன்விசாரித்து, அவளை {குந்தியை} வணங்கித் தழுவி கொண்டு, மகன்களின் நிமித்தமான அவளது துயரத்தில் இருந்து அவளுக்கு ஆறுதல் அளிப்பதற்காகப் பாண்டவர்களைக் குறித்து மீண்டும் மீண்டும் அவளிடம் {குந்தியிடம்} பேசுவாயாக.

என்னதான் அவள் {குந்தி} துன்ப துயரத்தை அடையத் தகாதவள் என்றாலும், தனக்குத் திருமணம் ஆனது முதலே, தனது மாமனாரின் நடத்தையால் {griefs due to the conduct of her father-in-law} {மாமனார் விசித்திரவீரியன் வீட்டில்} அவற்றுக்குப் {துன்ப துயரங்களுக்குப்} பலியாகி வருகிறாள். பாடு என்பதே  {கஷ்டப்படுதலே} அவளது நிலையாக இருக்கிறது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, எனது துயரங்கள் அனைத்தும் தீர்ந்து, துன்பமிக்க என் தாயை மகிழ்வுறச் செய்யும் நேரத்தை நான் காண்பேனா? {காண மாட்டேனா?} நாங்கள் நாடுகடத்தப்பட்ட போது {வனவாசம் அனுப்பப்பட்ட போது}, தன் பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தால் கசந்து அழுது, துயரத்தால் எங்கள் பின்னே ஓடி வந்தாள். ஆனால், அவளை {குந்தியை} விட்டுவிட்டு, நாங்கள் காட்டுக்குச் சென்றோம். துயரம் அவளைக் கொன்றிருக்காது {என நம்புகிறேன்}. எனவே, தன் மகன்களின் நிமித்தமாகத் துயரத்தில் இருந்தாலும், ஆனர்த்தர்களால் உற்சாகப்படுத்தப்படும் அவள் உயிரோடு இருக்கச் சாத்தியம் இருக்கிறது.

ஓ! மகிமைமிக்கக் கிருஷ்ணா, அவளையும் {குந்தியையும்}, மன்னன் திருதராஷ்டிரரையும், எங்கள் வயதைவிட முதிர்ந்த ஏகாதிபதிகள் அனைவரையும், பீஷ்மர், துரோணர், கிருபர், மன்னன் பாஹ்லீகர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, சோமதத்தர், உண்மையில் பாரதக் குலத்தவர் அனைவரையும், குருக்களின் ஆலோசகரும் {அமைச்சரும்}, ஆழ்ந்த அறிவு கொண்டவரும், அறநெறிகளை நுண்மையாக அறிந்தவரும், பெரும் ஞானம் கொண்டவருமான விதுரரையும் என்சார்பாக நீ வணங்கி, ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா} அவர்கள் அனைவரையும் தழுவுவாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.

மன்னர்களின் முன்னிலையில் இந்த வார்த்தைகளைக் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} சொன்ன யுதிஷ்டிரன், கிருஷ்ணனின் அனுமதியுடன், அவனை {கிருஷ்ணனை} வலம் வந்து திரும்பினான். பிறகு, சில எட்டுகளை எடுத்து வைத்த அர்ஜுனன், தனது நண்பனும், மனிதர்களில் காளையும், எதிரி வீரர்களைக் கொல்பவனும், தாசார்ஹ குலத்தின் ஒப்பற்ற வீரனுமானவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! ஒப்பற்ற கோவிந்தா {கிருஷ்ணா}, ஆலோசனையின் போது, எங்கள் நாடு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்க்கப்பட்டதை மன்னர்கள் அனைவரும் அறிவார்கள். எங்களை அவமதிக்காமல், உன்னை மதித்து, நாங்கள் கோருவதை, நேர்மையாக அவர்கள் {கௌரவர்கள்} கொடுத்தார்களானால், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, எனக்கு மனநிறைவைக் கொடுத்து, பயங்கர ஆபத்தில் இருந்து அவர்கள் தப்புவார்கள். எனினும், எப்போதும் முறையற்ற வழிகளையே பின்பற்றும் திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்}, வேறுவிதமாக நடந்து கொண்டானேயானால், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பின்பு நான் க்ஷத்தரிய குலத்தையே அழிப்பேன் என்பது நிச்சயம்" என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அர்ஜுனன் இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, விருகோதரன் {பீமன்} மகிழ்ச்சியால் நிறைந்தான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தொடர்ந்து கோபத்தால் நடுங்கினான், மேலும் மேலும் அவன் கோபத்தால் நடுங்கிக் கொண்டிருந்தாலும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வார்த்தைகள், தனது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பியதால் பயங்கரமாகக் கர்ஜனை செய்தான். அவனது கர்ஜனையைக் கேட்ட வில்லாளிகள் அனைவரும் அச்சத்தால் நடுங்கினர். குதிரைகளும், யானைகளும் மலமும் சிறுநீரும் கழித்தன.

கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} தனது தீர்மானத்தைக் குறித்துச் சொன்ன பிறகு, ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} தழுவி கொண்ட அர்ஜுனன், அவனது {கிருஷ்ணனின்} அனுமதியின் பேரில் திரும்பினான். மன்னர்கள் அனைவரும் அவனைத் {கிருஷ்ணனைத்} தொடர்வதை நிறுத்திய பின், சைப்யம், சுக்ரீவம் மற்றும் பிறவற்றால் இழுக்கப்பட்ட தேரில், உற்சாகம் நிறைந்த இதயத்துடன் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} புறப்பட்டான். {கிருஷ்ணனின் தேரோட்டியான} தாருகனால் உந்தப்பட்ட வாசுதேவனின் அந்தக் குதிரைகள், வானத்தை விழுங்கி, சாலையைக்  குடித்தபடி தொடர்ந்து சென்றன.{And those steeds of Vasudeva, urged by Daruka, coursed onwards, devouring the sky and drinking the road.}

அப்படி வலிமை நிறைந்த கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} சென்று கொண்டிருந்த வழியில், சாலையின் இரு மருங்கிலும் அந்தணக் காந்தியுடன் சுடர்விட்டுக் கொண்டிருந்த முனிவர்களைக் கண்டான். விரைந்து தனது தேரைவிட்டு இறங்கிய ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அவர்களை மரியாதையுடன் வணங்கினான். அவர்களை முறையாக வழிபட்ட அவன் {கிருஷ்ணன்}, அவர்களிடம் {பிராமணர்களிடம்}, "உலகம் அனைத்திலும் அமைதி இருக்கிறதா? அறம் முறையாகப் பயிலப்படுகிறதா? பிற மூவகையினரும் அந்தணர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்களா?" என்று கேட்டான். பிறகு அவர்களை முறையாக வழிபட்ட அந்த மதுவைக் கொன்றவன் {மதுசூதனன்}, மீண்டும் அவர்களிடம் {பிராமணர்களிடம்}, "வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டீர்களா? எங்கே எந்த நோக்கத்திற்காகச் செல்கிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? எது உங்களைப் பூமிக்குக் கொண்டு வந்தது?" என்று கேட்டான் {கிருஷ்ணன்}.

இப்படிச் சொல்லப்பட்டவரும், ஜமதக்னியின் மகனும், தேவர்கள் மற்றும் அசுரர்களுக்குத் தலைவனுமான பிரம்மனின் நண்பர் {பரசுராமர்}, மதுவைக் கொன்றவனான கோவிந்தரை அணுகி, அவனைத் தழுவி கொண்டு, "தேவர்கள் மற்றும் அசுரர்களின் முந்தைய செயல்களை அறிந்தவர்களான நற்செயல்கள் புரியும் தெய்வீக முனிவர்களும், சாத்திரங்களைப் பரந்த அளவில் அறிந்த அந்தணர்களும், அரச முனிவர்களும் [1], ஓ! தாசர்ஹா, ஓ! ஒப்பற்றவனே, அனைத்துப் புறங்களில் இருந்தும் ஓரிடத்தில் கூடும் பூமியின் க்ஷத்திரியர்களையும், சபையில் அமர்ந்திருக்கும் ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்}, மன்னர்களையும், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உண்மையின் உருவமான உன்னையும் காண விரும்புகிறார்கள். ஓ! கேசவா {கிருஷ்ணா}, அந்தப் பிரம்மாண்ட காட்சியைக் காண நாங்கள் அங்கே வருவோம்.

[1] இந்த முனிவர்கள் கூட்டத்தில், அதஸ்சிரஸ், சர்ப்பமாலீ, பெரும் முனிவரான தேவலர், அர்வாவசு, சுஜானு, மைத்திரேயர், சனகர், பலி, பகர், தாலப்யர், ஸ்தூலசிரஸ், கிருஷ்ணத்வைபாயனர் {வியாசர்}, ஆபோத்தௌமியர், தௌமியர், ஆணிமாண்டவ்யர், கௌசிகர் {விஸ்வாமித்ரர்}, தர்மோஷணீஷர், பர்ணாதர், கடஜானுகர், மௌஞ்சாயனர், வாயுபக்ஷர், பாராசர்யர், சாலிகர், சீலவான், அசனி, தாதா, சூனியபாலர், அக்ருதவரணர், ஸ்வேதகேது, கஹோளர், பரசுராமர், நாரதர் ஆகியோர் இருந்ததாக ஒரு பதிப்பில் இருக்கிறது.

ஓ! மாதவா, மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும், குருக்களிடம் நீ பேசப் போகும் அறம் மற்றும் பொருள் நிறைந்த பேச்சைக் கேட்க நாங்கள் ஆவலாக உள்ளோம். உண்மையில், பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரோடு ஒப்பற்ற விதுரன், மற்றும் யாதவர்களில் புலியான நீ ஆகிய அனைவரும் ஒன்றாகச் சபையில் கூடப் போகிறீர்கள். ஓ! மாதவா {கிருஷ்ணா}, கேட்பதற்கு அருமையானதும், உண்மை நிறைந்ததும் நன்மைக்கு வழிவகுப்பதுமான உனது பேச்சையும், ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அவர்கள் பேசும் பேச்சையும் கேட்க நாங்கள் விரும்புகிறோம். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, எங்கள் நோக்கத்தை இப்போது உன்னிடம் தெரிவித்து விட்டோம். உன்னை நாங்கள் மீண்டும் சந்திக்கிறோம். ஓ! வீரா {கிருஷ்ணா}, நீ அங்கே பாதுகாப்பாகச் செல்வாயாக. உனது ஆற்றல், வலிமை ஆகியவற்றைச் சேகரித்து, சபைக்கு மத்தியில் அற்புதமான இருக்கையில் அமர்ந்திருக்கும் உன்னைக் காண்போம் என நாங்கள் நம்புகிறோம்" என்றார் {பரசுராமர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்