Monday, May 18, 2015

மாதலியின் மகள் குணகேசி! - உத்யோக பர்வம் பகுதி 97

Gunakesi, the daughter of Matali! | Udyoga Parva - Section 97 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –26)

பதிவின் சுருக்கம் : இந்திரனின் தேரோட்டியான மாதலி, தனது மகள் குணகேசிக்காக வரன் தேட நாகலோகம் புறப்பட்ட கதையைத் துரியோதனனிடம் கண்வர் சொல்ல ஆரம்பித்தது ...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஜமதக்னேயரின் {பரசுராமரின்} வார்த்தைகளைக் கேட்ட ஒப்பற்ற முனிவரான கண்வர், குருக்களின் அந்தச் சபையில் துரியோதனனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.


கண்வர் {துரியோதனனிடம்}, "அண்டத்தின் பெரும்பாட்டனான பிரம்மன், அழிவற்றவனும் நித்தியமானவனும் ஆவான். அந்த ஒப்பற்ற முனிவர்களான நரனும் நாராயாணனும் அதே போன்றவர்களாவர். *அதிதியின் மகன்கள் அனைவரிலும் விஷ்ணு மட்டுமே நித்தியமானவனாவான். அவனே வெல்லப்பட முடியாதவனும், அழிவில்லாதவனும், எப்போதும் நிலைத்திருப்பவனும், அனைத்திற்கும் தலைவனும், தெய்வீக பண்புகளைக் கொண்டவனும் ஆவான். சூரியன், சந்திரன், பூமி, காற்று, நெருப்பு, ஆகாயம், கோள்கள் {கிரகங்கள்}, விண்மீன்கள் {நட்சத்திரங்கள்} ஆகிய பிற அனைத்தும் அழிவுக்குகந்தவையே. அண்டத்தின் முடிவு வரும்போது, இவையெல்லாம் மூவுலகில் இருந்தும் விடுபடும். அவை அழிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் படைக்கப்படும். மனிதர்கள், விலங்குகள், பறவைகள், உயிர்வாழும் பிற வகை உயிரினங்கள் ஆகிய பிற அனைத்தும், உண்மையில் மனிதர்களில் உலகில் அசைவுள்ள அனைத்தும் குறுகிய வாழ்வு கொண்டவையே.

மன்னர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவரும் பெரும் செழிப்பை அனுபவித்து, இறுதியில் அழிவு காலத்தை அடைந்து, {இப்பிறவியின்} நற்செயல் மற்றும் தீச்செயல்களின் கனிகளை மீண்டும் பிறந்து அனுபவிக்கிறார்கள். நீ யுதிஷ்டிரனிடம் சமாதானம் கொள்வதே உனக்குத் தகும். பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இருவரும் இந்த உலகத்தை ஆளட்டும். ஓ! சுயோதனா {துரியோதனா}, "நானே பலவான்" என்று ஒருவன் சிந்திக்கக்கூடாது. எனெனில், ஓ! மனிதர்களில் காளையே, பொதுவாகப் பலவானாகக் கருதப்படும் மனிதர்களை விடப் பலம் நிறைந்தவர்களும் காணப்படுகிறார்களே. ஓ! குரு குலத்தின் மகனே {துரியோதனா}, உண்மையாகவே பலவானாக இருப்பவர்களால், உடல்வலிமை, அரிதாகவே பலமாகக் கருதப்படுகிறது. பாண்டவர்களைப் பொறுத்தவரை, தேவர்களுக்கு நிகரான ஆற்றல் நிறைந்த அவர்கள் அனைவரும் பலவான்களாகவே கருதப்படுகறார்கள்.

இதன் தொடர்ச்சியாக, தன் மகளுக்கு {குணகேசிக்கு} மணமகன் தேடிய மாதலியின் கதை உதாரணமாகச் சொல்லப்படுகிறது. மூவுலகங்களின் மன்னனுக்கு (இந்திரனுக்கு) மாதலி என்ற பெயரில் அவனது அன்புக்குரிய ஒரு தேரோட்டி இருந்தான். அவனுக்கு {மாதலிக்கு} அழகுக்காக உலகத்தால் கொண்டாடப்படும் ஒரு மகள் {குணகேசி} பிறந்தாள். தெய்வீக அழகுடன் இருந்த அந்த மாதலியின் குழந்தை குணகேசி என்ற பெயரால் அறியப்பட்டாள். உண்மையில், அன்பிலும், கட்டுடலிலும் மாதலியின் மகள் {குணகேசி}, மற்ற பெண்களை எல்லாம் விஞ்சியிருந்தாள். அவளை {குணகேசியை} மணமுடித்துக் கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று அறிந்த மாதலியும் அவனது மனைவியும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, தன் கணவன் {மாதலி} அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று கவலைக்குள்ளானான்.

அவன் {மாதலி} தனக்குள்ளேயே, "ஐயோ, நன்னடத்தை, உயர்ந்த மரபு, புகழ் மற்றும் பணிவு கொண்ட குடும்பங்களில் ஒரு மகளின் பிறப்பு, எப்போதும் தீமையையே விளைவிக்கிறது. மரியாதைக்குரிய குடும்பங்களில் மகள்கள் பிறக்கும்போது, தாய்வழி, தந்தை வழி மற்றும் திருமணத்தால் பந்தப்படும் மூன்று குடும்பங்களின் பெருமையும் எப்போதும் ஆபத்துக்குள்ளாகிறது. எனது மனக்கண்ணால், தேவர்கள் மற்றும் மனிதர்களின் உலகில் தேடிப் பார்த்ததில், {எனது மகளுக்கு} தகுதியுடைய எந்த மணமகனையும் நான் காணவில்லை" என்று நினைத்தான்.

{முனிவர்} கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "தேவர்களிலும், தைத்தியர்களிலும், கந்தர்வர்களிலும், மனிதர்களிலும், எண்ணற்ற முனிவர்களிலும், தனது மகளுக்குத் தகுந்த கணவனாக யாரையும் மாதலி கருதவில்லை. இரவில், தனது மனைவியான சுதர்மையிடம் ஆலோசித்து, நாகர்களின் உலகத்திற்குப் பயணம் மேற்கொள்வதில் தனது இதயத்தை நிலைநிறுத்தினான். பிறகு அவன் {மாதலி} தனக்குள்ளேயே, "தேவர்களிலோ, மனிதர்களிலோ எனது குணகேசிக்குத் தகுந்த அழகனை நான் காணவில்லை. நாகர்கள் மத்தியில் எவனாவது நிச்சயம் இருப்பான்" என்று சொல்லிக் கொண்டான். இப்படிச் சொன்ன அவன் {மாதலி}, தனது மனைவியிடம் விடைபெற்றான். தனது மகளின் {குணகேசியின்} உச்சிமுகர்ந்த மாதலி, பாதாள உலகத்திற்குள் நுழைந்தான்.
..........................................................................................................................................................
*அதிதியின் மகன்கள் அனைவரிலும் விஷ்ணு மட்டுமே நித்தியமானவனாவான்.
மேலும் விபரங்களுக்கு:
அனைத்துயிர்களின் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 65

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்