Sunday, June 07, 2015

யயாதியை மறந்த தேவர்கள்! - உத்யோக பர்வம் பகுதி 120

Celestials forgot Yayati ! | Udyoga Parva - Section 120 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –49)

பதிவின் சுருக்கம் : யயாதி தன் மகள் மாதவிக்கு மீண்டும் சுயம்வரம் நடத்திய ; காட்டைத் தனது கணவனாகத் தேர்ந்தெடுத்த மாதவி, மான் போன்ற வாழ்வு முறையைத் தேர்ந்தெடுத்து கடும் நோன்பைப் பயில்வது; சொர்க்கத்தை அடைந்த யயாதி, அனைவரையும் அவமதித்தது; தேவர்கள் அனைவரும் யயாதியை மறந்து போனது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "மன்னன் யயாதி, தனது மகளை {மாதவியை} மீண்டும் சுயம்வரத்தில் கொடுக்க விரும்பி, மலர்மாலைகளால் மேனி அலங்கரிக்கப்பட்ட தனது மகள் மாதவியைத் தேரில் அழைத்துக் கொண்டு, கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் உள்ள ஒரு துறவில்லத்திற்குச் {ஆசிரமத்திற்குச்} சென்றான். புரு, யது ஆகிய இருவரும் தங்கள் தங்கையைத் {மாதவியைத்} தொடர்ந்து அந்தப் புனிதமான ஆசிரமத்திற்கு வந்தனர். அந்த இடத்தில், நாகர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியோரும், மலைகள், மரங்கள் மற்றும் காடுகளில் வசிப்போரும், குறிப்பிட்ட மாகாணத்தின் பல மக்களும் அந்த இடத்தின் பரந்த சபையில் கூடினர்.


அந்தத் துறவில்லத்தைச் சுற்றி இருந்த காடுகள் அனைத்தும் பிரம்மனை ஒத்திருக்கும் எண்ணற்ற முனிவர்களால் நிறைந்தது. கணவனைத் தேர்ந்தெடுக்கும் தருணம் வந்தபோது, அழகிய நிறம்படைத்த அந்தக் காரிகை {மாதவி}, அங்கே கூடியிருந்த மணமகன்கள் அனைவரையும் தாண்டிச் சென்று, காட்டையே தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்தாள். தனது தேரில் இருந்து இறங்கி, தன் நண்பர்கள் அனைவரையும் வணங்கிய யயாதியின் மகள் மாதவி, எப்போதும் புனிதமாக இருக்கும் காட்டுக்குள் நுழைந்து, தவத் துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள்.

பல்வேறு வகையான உண்ணா நோன்புகள் வழியாகவும், அறச் சடங்குகள் மற்றும் கடும் நோன்புகளாலும் தனது உடலை மெலியச் செய்த அவள் {மாதவி}, மானின் வாழ்வு முறையை ஏற்றுக் கொண்டாள். வைடூரியத்தின் முளைகளுக்கு ஒப்பானவைகளும், மெலிதானவையும், பசுமை நிறம் கொண்டவையும், துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவையைக் கொண்டவையும், மெதுவானவையுமான புற்களை உண்டும், இனிமையான, தூய்மையான, குளிர்ந்த, தெளிந்த, மிக மேன்மையான புனித மலைகளில் உள்ள ஓடைகளின் நீரைப் பருகி வாழ்ந்து, சிங்கங்களும், புலிகளுமற்ற காடுகளில் மான்களுடன் உலாவி, காட்டுத் தீயற்ற பாலைவனங்களிலும், அடர்த்தியான காடுகளிலும் அலைந்த அந்தக் கன்னிகை {மாதவி}, ஒரு காட்டு மானின் வாழ்வை மேற்கொண்டு, பிரம்மச்சரிய தவங்களைப் பயின்று, பெரும் அறத் தகுதிகளை ஈட்டினாள்.

(அதே வேளையில்), பல்லாயிரம் வருடங்கள் வாழ்ந்த மன்னன் யயாதி, தனக்கு முன் இருந்த மன்னர்களின் நடைமுறைகளின் படி, காலத்தின் தாக்கத்திற்கு உட்பட்டான் {இறந்தான்}. மனிதர்களில் முதன்மையானவர்களான புரு மற்றும் யது ஆகிய அவனது இரு மகன்களின் சந்ததிகள் பல்கிப் பெருகின. அதன் விளைவாக அந்த நகுஷனின் மகன் {யயாதி}, இவ்வுலகிலும் மறுவுலகிலும் பெரும் மரியாதையை வென்றான்.

ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, பெரும் முனிவரை ஒத்திருந்த மன்னன் யயாதி, சொர்க்கத்தில் வசித்து, பெரும் மதிப்புக்குரியவனாகி, அந்தப் பகுதிகளின் உயர்ந்த கனிகளை {பலன்களை} அனுபவித்தான். இப்படியே பெரும் மகிழ்ச்சியுடன் பல்லாயிரம் வருடங்கள் கடந்த பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில், பெரும் முனிவர்களுடனும், ஒப்பற்ற அரசமுனிகளுடன் மன்னன் யயாதி அமர்ந்திருந்த போது, மூடத்தனத்தாலும், அறியாமையாலும், செருக்காலும் தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரையும், மற்றும் மனிதர்கள் அனைவரையும் அவன் {யயாதி} அவமதித்தான்.

வலனைக் கொன்றவனும், தெய்வீகமானவனுமான சக்ரன் {இந்திரன்} உடனடியாக அவனது {யயாதியின்} இதயத்தைப் படித்துவிட்டான். அந்த அரச முனிகள் அவனிடம், "சீ, சீச்சீ" என்று சொன்னார்கள். நகுஷனின் மகனைக் {யயாதியைக்} கண்டவர்கள், "யார் இவன்? எந்த மன்னனின் மகன் இவன்? இவன் ஏன் சொர்க்கத்தில் இருக்கிறான்? எந்தச் செயல்களின் மூலம் இவன் வெற்றியை அடைந்தான்? தவத் தகுதியை இவன் எங்கே ஈட்டினான்? இவன் எதற்காக இங்கே {சொர்க்கத்தில்} அறியப்படுகிறான்? இவனை அறிந்தவர் யார்?" என்ற கேள்விகளைக் கேட்டனர்.

அந்த ஏகாதிபதியைக் {யயாதியைக்} குறித்து இவ்வாறு பேசிய அந்தச் சொர்க்கவாசிகள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் மனிதர்களின் ஆட்சியாளனான யயாதியைக் குறித்த இந்தக் கேள்விகளைக் கேட்டனர். நூற்றுக்கணக்கான தெய்வீகத் தேரோட்டிகளும், தேவலோகத்தின் நூற்றுக்கணக்கான வாயில்காப்போரும், சொர்க்கத்தின் இருக்கைகளுக்குப் பொறுப்பானவர்களும் என அனைவரும் இப்படிக் கேட்கப்பட்ட போது, "இவனை நாங்கள் அறியோம்" என்றே சொன்னார்கள். அவர்கள் அனைவரின் மனங்களும் தற்காலிகமாக மறைக்கப்பட்டது. அதனால் யாராலும் அந்த மன்னனை {யயாதியை} அடையாளம் காண முடியவில்லை. பிறகு அந்த மன்னன் விரைவில் தனது சிறப்புகள் அனைத்தையும் இழந்து தன் பிரகாசத்தைத் தொலைத்தான்" என்றார் {நாரதர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்