Tuesday, June 09, 2015

தௌஹித்ரர்களுடன் யயாதி! - உத்யோக பர்வம் பகுதி 121

Yayati with his daughters sons ! | Udyoga Parva - Section 121 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –50)

பதிவின் சுருக்கம் : தேவ தூதன் ஒருவன் யயாதியை சொர்க்கத்தில் இருந்து தள்ளவிட வருவது; கீழே விழுந்த யயாதி தங்கள் மகள் வழி பேரர்களுக்கு மத்தியில் விழுவது; பேரர்களும், மகளும், காலவரும் தங்கள் புண்ணியங்களை யயாதிக்குக் கொடுக்க முன் வந்தது ...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "தனது இடத்தில் இருந்து அகற்றப்பட்டு, தனது இருக்கையில் இருந்து தள்ளப்பட்டு, அச்சத்தால் இதயம் நடுங்கி, வருத்தத்தால் எரிந்து, தனது மாலைகளின் ஒளி மங்கி, அறிவு மறைக்கப்பட்டு, மணிமுடியும் {கிரீடமும்} தோள்வளைகளும் நழுவி, தலைச்சுற்றலுடன், ஆபரணங்களும் அங்கிகளும் இழந்து, அங்கங்கள் அனைத்தும் தளர்ந்து, அடையாளம் காணமுடியாதபடி மாறினான் யயாதி. சில நேரங்களில் மற்ற சொர்க்கவாசிகளைக் காணாது, விரக்தியில் நிரம்பி, புத்தி சூன்யமாகிப் போன மன்னன் யயாதி, பூமியை நோக்கித் தலைகீழாக விழுந்து கொண்டிருந்தான்.


அந்த மன்னன் {யயாதி} விழுவதற்கு முன்னர், அவன் தனக்குள், "நான் ஊக்கப்படுத்திய எந்த மங்கலமற்ற, பாவம் நிறைந்த எண்ணத்தின் விளைவாக, இப்படி என் இடத்தில் இருந்து நான் வீசி எறியப்படுகிறேன்?" என்று நினைத்தான். அங்கே இருந்த மன்னர்கள், சித்தர்கள் மற்றும் அப்சரஸ்கள் அனைவரும் யயாதி தனது நிலையை இழந்து கீழே விழுவதைக் கண்டு சிரித்தனர். ஓ! மன்னா {துரியோதனா}, விரைவில், தகுதி இழந்தவர்களை வீசுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவன் தேவர்கள் மன்னனின் {இந்திரனின்} கட்டளையின் பேரில் அங்கே வந்தான்.

அங்கே வந்த அவன் யயாதியிடம், "செருக்கால் அதீதமாகப் போதையுண்டிருக்கும் உன்னால் அலட்சியம் செய்யப்படாதவர்கள் யாரும் இல்லை. இந்த உனது செருக்கின் விளைவால், சொர்க்கத்தில் இனியும் உனக்கு இடமில்லை. ஓ! மன்னனின் மகனே {நகுஷனின் மகனே யயாதி}, இங்கே வசிக்க நீ தகுந்தவனில்லை. நீ இங்கே அங்கீகரிக்கப்பட்டவன் இல்லை. போய்க் கீழே விழுவாயாக" என்றான். தேவ தூதன் இப்படிச் சொன்னதும், அந்த நகுஷனின் மகன் மூன்று முறை மீண்டும் மீண்டும், "விழுந்தால், நீதிமான்கள் மத்தியில் நான் விழக்கடவேன்" என்று கேட்டுக் கொண்டான். இதைச் சொன்னவனும், தங்கள் செயல்களால் உயர்ந்த பகுதிகளை வென்ற மனிதர்களில் முதன்மையானவனுமான அவன் {யயாதி}, எந்தக் குறிப்பிட்ட பகுதியில் விழுவது என்பது குறித்து நினைக்கத் தொடங்கினான்.

அதே வேளையில், வலிமைமிக்க நான்கு மன்னர்களான பிரதர்த்தனன், வசுமனஸ், உசீநரனின் மகனான சிபி மற்றும் அஷ்டகன் ஆகியோர் நைமிஷ வனத்தில் கூடியிருப்பதைக் கண்டு, அவர்களுக்கு மத்தியில் அந்த மன்னன் {யயாதி} விழுந்தான்., தேவர்கள் தலைவனை {இந்திரனை} மனநிறைவு கொள்ளச் செய்யும் வகையில், வாஜபேயம் என்ற பெயரில் அறியப்படும் வேள்வி ஒன்றைச் செய்வதில் அந்த ஏகாதிபதிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வேள்விப்பீடத்தில் இருந்து எழும் புகை சொர்க்கத்தின் வாயில்களையே எட்டின. அப்படி எழுந்த புகையானது, பூமியையும் சொர்க்கத்தையும் இணைக்கும் ஒரு நதியைப் போலத் தெரிந்தது. மேலும் அது வானத்தில் இருந்து பூமியை நோக்கி இறங்கும் புனித ஓடையான கங்கையைப் போல இருந்தது. அந்தப் புகையை நுகர்ந்தபடி, அதை வழிகாட்டியாகக் கொண்டு, அண்டத்தின் தலைவனான அந்த யயாதி, பூமிக்கு இறங்கி வந்தான். பெரும் அழகு படைத்தவர்களும், வேள்வி செய்வோரில் முதன்மையானவர்களும், உண்மையில் தனது சொந்த உறவினர்களும், நான்கு திசைகளில் லோகபாலகர்கள் போல இருந்தவர்களும், நான்கு பெரும் வேள்வி நெருப்புகள் போல இருந்தவர்களுமான ஆட்சியாளர்களில் சிம்மங்கள் போன்ற அந்த நால்வருக்கு மத்தியில் அந்த மன்னன் {யயாதி} விழுந்தான். தனது தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் இழந்ததன் விளைவாக அந்த அரசமுனியான யயாதி அவர்களுக்கு மத்தியில் இப்படியே விழுந்தான்.

சுடர்மிகும் அழகுடன் இருந்த அவனைக் {யயாதியைக்} கண்ட அந்த மன்னர்கள் அவனிடம் {யயாதியிடம்}, "நீர் யார்? எந்த இனம், நாடு அல்லது நகரத்தைச் சேர்ந்தவர் நீர்? நீர் ஒரு யக்ஷரா? தேவரா? கந்தர்வரா? அல்லது ஒரு ராட்சசரா? உம்மைக் காண மனிதனைப் போல இல்லையே. நீர் கருத்தில் கொண்டுள்ள நோக்கம் என்ன?" என்று கேட்டனர். இப்படிக் கேட்கப்பட்ட யயாதி, "நான் அரச முனியான யயாதி ஆவேன். புண்ணியம் தீர்ந்ததன் விளைவாகச் சொர்க்கத்தில் இருந்து விழுந்தேன். நீதிமான்களுக்கு மத்தியில் நான் விழ விரும்பியதால், உங்களுக்கு மத்தியில் விழுகிறேன்" என்றான் {யயாதி}.

அதற்கு அந்த மன்னர்கள் {யயாதியிடம்}, "ஓ! அனைவரிலும் முதன்மையானவரே, உமது அந்த விருப்பம் நிறைவேறட்டும். எங்கள் அனைவரின் புண்ணியங்களையும், நாங்கள் செய்த வேள்விகள் அனைத்தின் கனிகளையும் நீர் ஏற்றுக் கொள்ளும்" என்றனர். அதற்கு யயாதி, “நான், தானத்தை ஏற்கத் தகுந்த பிராமணன் அல்ல. மறுபுறம், நான் ஒரு க்ஷத்திரியனாவேன். பிறர் புண்ணியங்களைக் குறைக்கும் நோக்கம் எனது இதயத்துக்கு இல்லை" என்றான்.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இந்த நேரத்தில், {விலங்கினம் போல} நோக்கமற்ற தனது உலவல்களின் போது அங்கே மாதவி வர நேர்ந்தது. அவளை {மாதவியைக்} கண்ட அந்த ஏகாதிபதிகள் அவளை வணங்கி, அவளிடம், "நீ இங்கே வந்த நோக்கம் என்ன? உனது எந்தக் கட்டளைக்கு நாங்கள் கீழ்ப்படிய வேண்டும்? ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவளே, நாங்கள் அனைவரும் உனது மகன்கள் ஆதலால், எங்களுக்குக் கட்டளையிடுவதே உனக்குத் தகும்" என்றனர்.

அவர்களது வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சியில் நிறைந்த மாதவி, தனது தந்தையான யயாதியை அணுகி, அவனை மரியாதையாக வணங்கினாள். தவத்துறவுகளில் ஈடுபட்டு வந்த அந்த மங்கை {மாதவி}, தனது மகன்கள் அனைவரின் தலைகளையும் தொட்டபடி, தனது தந்தையிடம் {யயாதியிடம்}, "இவர்கள் அனைவரும் எனது மகன்களானதால், ஓ! மன்னர்களின் மன்னா {யயாதியே}, இவர்கள் உமது மகளின் மகன்களாவர் {தௌஹித்ரர்கள் ஆவார்கள்}. இவர்கள் உமக்கு அந்நியரில்லை. இவர்கள் உம்மைக் காப்பார்கள். இந்த நடைமுறை புதியதல்ல, இதன் தோற்றம் பழங்காலத்திற்குச் சொந்தமானது. ஓ! மன்னா, மானின் நடத்தையைக் கைக்கொண்டு வனத்தில் வாழும் நான் உமது மகளான மாதவி ஆவேன். நானும் புண்ணியம் ஈட்டியிருக்கிறேன். நீர் ஒரு பங்கை எடுத்துக் கொள்ளும். ஓ! மன்னா, தங்கள் வாரிசுகளால் ஈட்டப்பட்ட தகுதிகளின் {புண்ணியங்களின்} ஒரு பகுதியை அனுபவிக்க மனிதர்கள் அனைவருக்கும் உரிமை உள்ளதாலேயே, அவர்கள் தங்கள் மகள்கள் மகனைப் பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். ஓ! மன்னா, இதுவே உமது வழக்கிலும் (காலவரிடம் நீர் என்னைக் கொடுக்கும்போது) நடந்தது" என்றாள் {மாதவி}.

தங்கள் தாயின் {தாய் மாதவியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த ஏகாதிபதிகள் அவளை வணங்கி, தங்கள் தாய்வழி பாட்டனையும் வணங்கி, அதே வார்த்தைகளைச் சத்தமாக, ஒப்பற்ற வகையில், இனிய குரலில் உரைத்தனர். சொர்க்கத்தில் இருந்து விழுந்த தங்கள் தாய்வழி பாட்டனைக் காக்க அவர்கள் உரைத்த வார்த்தைகள் உலகம் முழுதும் எதிரொலித்தன. அந்நேரத்தில் அங்கே வந்து, காலவரும் யயாதியிடம், "எனது தவத்துறவின் {புண்ணியத்தில்} எட்டில் ஒரு பங்கை ஏற்று, சொர்க்கத்திற்கு நீ உயர்வாயாக" என்றார் {காலவர்}. 


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்