Friday, July 03, 2015

படைத்தலைவரானார் பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 157

Bhishma became the Commander! | Udyoga Parva - Section 157 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 86) {சைனியநிர்யாண பர்வம் - 7}

பதிவின் சுருக்கம் : பீஷ்மரைத் தனது படைத்தலைவராகும்படி துரியோதனன் வேண்டல்; ஒன்று கர்ணன் முதலில் போரிடட்டும், அல்லது தான் போரிடுவதாகப் பீஷ்மர் நிபந்தனை விதிப்பது; பீஷ்மர் உயிரோடிருக்கும் வரை தான் போரிடப்போவதில்லை எனக் கர்ணன் சொல்வது; பீஷ்மரைத் துரியோதனன் தனது படையின் தலைவராக நியமிப்பது; அதன் பிறகு நேர்ந்த சில சகுனங்கள்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னர்கள் அனைவருடனும் இருந்த திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, சந்தனுவின் மகன் பீஷ்மரிடம், கூப்பிய கரங்களோடு, "வலிமைமிக்க ஒரு பெரும்படை கூடப் படைத்தலைவர் இல்லாதிருந்தால், போர்க்களத்தில் எறும்புக்கூட்டம் போல நிர்மூலமாக்கப்படும். இருவரின் அறிவு எப்போதும் ஏற்புடையதாக இருக்காது. மேலும், வேறுபட்ட படைத்தலைவர்கள், தங்கள் ஆற்றலைக் கருதி ஒருவருக்கொருவர் பொறாமையுடன் இருப்பார்கள். ஓ! பெரும் அறிவு படைத்தவரே {பீஷ்மரே}, (ஒரு காலத்தில்) குசப் புற்கட்டுகளை {குசத்வஜத்தை} {தங்கள் ஆயுதங்களாக} உயர்த்திப் பிடித்த அந்தணர்கள், அளவிலா சக்தி கொண்டவர்களும், ஹேஹய குலத்தைச் சேர்ந்தவர்களுமான க்ஷத்திரியர்களுடன் போரிட்டனர் என்று (நாம்) கேள்விப்படுகிறோம்.


ஓ! பாட்டா {தாத்தா பீஷ்மரே}, வைசியர்களும், சூத்திரர்களும் பிராமணர்களைப் பின்தொடர்ந்து வந்தார்கள். அப்படி மூன்று வகையினர் {வர்ணத்தினர்} ஒருபுறத்திலும், க்ஷத்திரியர்களில் காளையர் தனியாக ஒரு புறத்திலும் இருந்தார்கள். எனினும், நடைபெற்ற அந்தப் போரில், அந்த மூன்று வகையினரும் மீண்டும் மீண்டும் உடைந்து போனதால், க்ஷத்திரியர்கள் தனியர்களாக இருந்தாலும், தங்களை எதிர்த்த அந்தப் பெரிய படையை வீழ்த்தினார்கள். பிறகு, அந்தணர்களில் சிறந்தவர்கள் (அதன் காரணத்தைக்) குறித்து க்ஷத்திரியர்களிடமே விசாரித்தனர்.

ஓ! பாட்டா {தாத்தா பீஷ்மரே}, க்ஷத்திரியர்களில் அறம்சார்ந்து இருந்தவர்கள், தங்களிடம் விசாரிப்பவர்களிடம் உண்மையான பதிலைச் சொன்னார்கள். அவர்கள், "போரில் நாங்கள், பெரும் அறிவுடைய ஒருவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம். நீங்களோ ஒருவருக்குள் ஒருவர் ஒற்றுமையின்றி, ஒவ்வொருவரின் தனிப்புரிதலின் படி செயல்படுகிறீர்கள்" என்றனர். பிறகு அந்த அந்தணர்கள், தங்களில் வீரமானவரும், கொள்கைகளின் {நீதியின்} வழிகளை நன்கு அறிந்தவருமான ஒருவரைப் படைத் தலைவராக நியமித்தனர். பிறகு அவர்கள் {அந்தணர்கள்} க்ஷத்திரியர்களை வீழ்த்துவதில் வென்றனர். தனக்குக் கீழிருக்கும் படைகளின் நன்மையைக் கருதுபவனும், திறன் வாய்ந்தவனும், வீரமிக்கவனுமான பாவமற்ற ஒரு படைத்தலைவனை நியமிக்கும் மக்களே போரில் தங்கள் எதிரிகளை வெல்கின்றனர்.

உம்மைப் பொருத்தவரை, நீர் உசனசுக்கு {சுக்கிரனுக்கு} இணையானவரும் எனது நன்மையை எப்போதும் நாடுபவராகவும் இருக்கிறீர். கொல்லப்பட இயலாத நீர் அறத்திற்கு உம்மை அர்ப்பணித்தவராகவும் இருக்கிறீர். எனவே, நீரே எங்கள் படைத்தலைவர் ஆவீராக. ஒளிர்வனவற்றுள் சூரியனைப் போலவும், இனிமையான மூலிகைகள் அனைத்திற்கும் சந்திரனைப் போலவும், யக்ஷர்கள் மத்தியில் குபேரனைப் போலவும், தேவர்களுக்கு மத்தியில் வாசவனைப் {இந்திரனைப்} போலவும், மலைகளுக்கு மத்தியில் மேருவைப் போலவும், பறவைகளுக்கு மத்தியில் சுபர்ணனைப் {கருடனைப்} போலவும், தேவர்களுக்கு மத்தியில் குமரனைப் {முருகனைப்} போலவும், வசுக்களுக்கு மத்தியில் ஹவ்யவாகனனைப் {அக்னியைப்} போலவும் எங்களுக்கு மத்தியில் நீரே இருக்கிறீர். சக்ரனால் {இந்திரனால்} பாதுகாக்கப்படும் தேவர்களைப் போலவே, உம்மால் பாதுகாக்கப்படும் நாங்கள், அந்தத் தேவர்களைப் போலவே வெல்லப்பட முடியாதவர்கள் ஆவோம் என்பது நிச்சயம். அக்னியின் மகன் (குமரன்) {முருகன்} தேவர்களுக்குத் தலைமையில் இருப்பதைப் போல, *எங்களுக்குத் தலைமையில் நீர் அணிவகுப்பீராக. பெருங்காளையைப் பின்தொடரும் கன்றுகளைப் போல நாங்கள் உம்மைப் பின்தொடர்வோம்" என்றான் {துரியோதனன்}.

அதற்குப் பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பாரதா {துரியோதனா}, நீ சொல்வது போலவே ஆகட்டும். ஆனால் உன்னைப் போலவே, பாண்டவர்களும் எனது அன்புக்குரியவர்கள். எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, (முன்பே) உனக்கு நான் கொடுத்திருக்கும் உறுதிமொழியின்படி, என்னதான் நான் உனக்ககாகப் போரிட்டாலும், நான் அவர்களது நன்மையையும் நிச்சயம் நாட வேண்டும். மனிதர்களில் புலியான குந்தியின் மகன் தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தவிர, எனக்கு இணையாக இவ்வுலகில் வேறு எந்த வீரனையும் நான் காணவில்லை. பெரும் அறிவு படைத்த அவன் {அர்ஜுனன்}, எண்ணிலடங்கா தெய்வீக ஆயுதங்களை அறிந்தவன் ஆவான்.

எனினும், பாண்டுவின் அந்த மகன் {அர்ஜுனன்}, வெளிப்படையாக என்னுடன் போரிட மாட்டான். எனது ஆயுதங்களின் சக்தியால், தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் மற்றும் மனிதர்கள் அடங்கிய இந்த அண்டத்தை ஒரு நொடிப்பொழுதில் என்னால் அழித்துவிட முடியும். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்கள், என்னால் அழிக்க முடியாதவர்களகாக இருக்கிறார்கள். எனவே, நான் தினமும் பத்தாயிரம் {10,000} வீரர்களைக் கொல்வேன். உண்மையில், முதலில் அவர்கள் என்னைக் கொல்லாதிருந்தால், அவர்களது படையை நான் இப்படியே படுகொலை செய்வதைத் தொடர்வேன். மற்றொரு புரிந்துணர்வின் {பிரதிஜ்ஞையும்} அடிப்படையில், நான் விருப்பத்துடன் உனது படைகளின் தலைவனாவதற்கும் வழியுண்டு. {எனது பிரதிஜ்ஞையை நீ ஏற்றால் நான் விருப்பத்துடன் உனது சேனாதிபதியாவேன்}. அதை நீ கேட்பதே உனக்குத் தகும். ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, ஒன்று கர்ணன் முதலில் போரிடட்டும், அல்லது நான் முதலில் போரிடுகிறேன். அந்தச் சூதமகன் {கர்ணன்}, போரில் தனது ஆற்றலை என்னுடன் ஒப்பிட்டுக் கொண்டு தற்பெருமையாகப் பேசுகிறான்" என்றார் {பீஷ்மர்}.

கர்ணன் {துரியோதனனிடம்}, "கங்கையின் மகன் {பீஷ்மர்} உயிரோடுள்ளவரை, ஓ! மன்னா {துரியோதனா}, நான் போரிடவே மாட்டேன். பீஷ்மர் கொல்லப்பட்ட பிறகே, நான் காண்டீவதாரியிடம் {அர்ஜுனனிடம்} போரிடுவேன்" என்றான்.

வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} தொடர்ந்தார், "அதன்பிறகு, அந்தத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பெரும் கொடைகளைப் பிரித்தளித்து, பீஷ்மரை முறையாகத் தனது படைகளின் தலைவராக்கினான். அவர் {பீஷ்மர்} அதிகாரத்தில் நிறுவப்பட்டதும், அழகில் சுடர்விட்டுப் பிரகாசித்தார். ராஜாவின் உத்தரவின் பேரில், இசைக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மகிழ்ச்சியாகப் பேரிகைகளை இசைத்து, சங்குகளை ஊதினர். எண்ணற்ற சிம்ம கர்ஜனைகள் செய்யப்பட்டன, அம்முகாமில் இருந்த விலங்குகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒன்றாகக் கூக்குரலிட்டன.

என்னதான் வானம் மேகமற்று இருந்தாலும், இரத்த மழை பொழிந்து, பூமி சேறானது. கடும் சுழற்காற்றும், பூகம்பங்களும், யானைகளின் பிளிறல்களும் வீரர்கள் அனைவரின் இதயத்தையும் உற்சாகமிழக்கச் செய்தன. உருவமற்ற குரல்களும் {அசரீரிகளும்}, எரிகற்களின் மின்னல்கீற்றுகளும் வானத்தில் கேட்கப்படவும், பார்க்கப்படவும் செய்தன. நரிகள் தங்கள் கடும் ஊளையால், வரப்போகும் பெரும் பேரிடரை முன்னறிவித்தன. ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் {துரியோதனன்}, கங்கையின் மகனை {பீஷ்மரைத்} தனது துருப்புகளின் தலைவராக நிறுவிய போது, மேற்கண்ட பயங்கரக் காட்சிகள் தோன்றின.

பகைவர் படையை வாட்டும் பீஷ்மரைப் படைத்தலைவராகச் {சேனாதிபதியாகச்} செய்த போது, பசுக்களையும் தங்கத்தையும் தனக்கு ஆசி கூறிய பிராமணர்களுக்கு அபரிமிதமாக அளித்து, அந்த ஆசிகளால் வளர்ந்து, தனது துருப்புகளால் சூழப்பட்டு, கங்கையின் மகனை {பீஷ்மரைத்} தனது படையின் முன்னணியில் கொண்டு, தனது தம்பிகளோடு இருந்த துரியோதனன், குருக்ஷேத்திரத்திற்குத் தனது பெரும்படையுடன் அணிவகுத்தான். அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, கர்ணனுடன் களத்தை {குருக்ஷேத்திரத்தைச்} சுற்றி, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சமமான ஒரு பகுதியில் தனது பாசறையை அமைத்தான். இனிமையானதும், வளமானதும், புற்கள் மற்றும் விறகு நிறைந்ததுமான பகுதியில் அமைக்கப்பட்ட அந்தப் பாசறை, ஹஸ்தினாபுரத்தைப் போலவே ஒளிர்ந்தது."
*********************************************************************************
*எங்களுக்குத் தலைமையில் நீர் அணிவகுப்பீராக. பெருங்காளையைப் பின்தொடரும் கன்றுகளைப் போல நாங்கள் உம்மைப் பின்தொடர்வோம்" என்றான் {துரியோதனன் பீஷ்மரிடம்.}...
திருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்-படைச்செருக்கு/ குறள்:770.

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை 
தலைமக்கள் இல்வழி இல்.

தமிழ் விளக்கவுரை-சாலமன் பாப்பையா உரை: 
சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்