Friday, July 03, 2015

துரியோதனனின் படைப்பிரிவுகள் - உத்யோக பர்வம் பகுதி 156

Divisions of Duyodhana's army! | Udyoga Parva - Section 156 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 85) {சைனியநிர்யாண பர்வம் - 6}

பதிவின் சுருக்கம் : தனது படையில், திறன்மிக்கவர்களையும், நடுத்தரமானவர்களையும், தாழ்ந்தவர்களையும் பிரித்த துரியோதனன்; துரியோதனன் படையின் தளவாடங்களைக் குறித்த வைசம்பாயனரின் வர்ணனை; படைப்பிரிவுகள் மற்றும் அதன் வகைகள் குறித்த வர்ணனை; தனது பதினோரு அக்ஷௌஹிணி படைகளுக்கும் பதினோரு தலைவர்களைத் தேர்ந்தெடுத்த துரியோதனன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இரவு கடந்ததும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன், பதினோரு {11} அக்ஷௌஹிணிகள் கொண்ட தனது துருப்புகளைப் (முறையான வரிசையில்) பிரித்தான். *மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை உயர்ந்தவர்கள், நடுத்தரமானவர்கள், தாழ்ந்தவர்கள் என மூன்று வகைகளாக வரிசைப் படுத்தி, (படையின் முன்னணி, நடு, பின் படை என நிறுத்தி) அவர்களை அந்தந்த வகைகளாகப் பிரித்து நிறுத்தினான்.


போரின் அழுத்தத்தைத் தாக்குப்பிடித்துச் சேதமடையும் தேர்களைச் சீரமைப்பதற்கு மரங்கள் மற்றும் பலகைகளோடும், பெரும் அம்பறாத்தூணிகளைத் தாங்கிய தேர்களோடும், புலித்தோலாலும் பிற உறுதியான தோல்களாலும் மூடப்பட்ட பக்கங்கள் கொண்ட தேர்களோடும், கையால் வீசப்படும் முள் ஈட்டிகளோடும் {முள் தோமரங்களோடும்}, குதிரைகளாலும், யானைகளாலும் முதுகில் தாங்கப்படும் அம்பறாத்தூணிகளோடும், நீண்ட கைப்பிடி கொண்ட இரும்பு ஈட்டிகள் {சக்திகள்} மற்றும் ஏவுகணைகளோடும், கனமான மரங்களைக் கொண்டு காலாட்படை வீரர்களால் முதுகில் தாங்கப்படும் அம்பறாத்தூணிகளோடும், கொடிக் கம்பங்கள் மற்றும் கொடிகளோடும், வில்லில் இருந்து அடிக்கப்படும் நீண்ட கனமான கணைகளோடும் {தோமரங்களோடும்}, {அருகில் இருப்பவர்களைக் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்க} பல்வேறு விதமான சுருக்குக்கயிறுகள் மற்றும் சாட்டைகளோடும், பல்வேறு விதமான கவசங்களோடும், கூரிய முனை கொண்ட மரத்தாலான பரிகங்களோடும், {காய்ச்சப்பட்ட [அ] வேகவைக்கப்பட்ட} எண்ணெய், பாகு, மணல் ஆகியவற்றோடும், நஞ்சுமிக்கப் பாம்புகள் நிறைந்த மண்குடங்களோடும், {எளிதில் தீப்பற்றக்கூடிய} தூளாக்கப்பட்ட அரக்கு மற்றும் எரியும் தன்மையுள்ள பிற பொருட்களோடும், கிண்கிணி மணிகள் பொருத்தப்பட்ட குறு ஈட்டிகளோடும், சூடான பாகு, நீர் மற்றும் கற்களை வீசுவதற்கான இயந்திரங்கள் மற்றும் பல்வேறு இரும்பு ஆயுதங்களோடும், ஒலியெழுப்பும் மரத்தாலான ஆயுதங்களோடும் {பிண்டிபாலங்களோடும்}, மெழுகு மற்றும் கனரக உலக்கைகளோடும், இரும்பு முட்களைக் கொண்ட கழிகளோடும், கலப்பைகள் மற்றும் நஞ்சு பூசப்பட்ட தோமரங்களோடும், சூடான பாகை ஊற்றவல்ல செலுத்திகளோடும் {ஊசிகளோடும் = Syringes} [1], பிரம்பு பலகைகளோடும் {பெட்டிகளோடும்}, போர்க்கோடரிகள் மற்றும் வளைந்த முனை கொண்ட ஈட்டிகளோடும் {இலந்தை முள் போன்ற முள் உடைய அங்குச தோமரங்களோடும்}, முள் பொருந்திய கையுறைகோடும் {கீல்கவசங்களோடும்}, கோடரிகள் {வாய்ச்சிகள்} மற்றும் கூரிய முனை கொண்ட இரும்பு முட்களோடும் {உளி ஆகிவற்றோடும்}, புலி மற்றும் சிறுத்தைகளின் தோல் போர்த்திய தேர்களோடும், கூரிய முனை கொண்ட வட்ட வடிவ மரப் பலகைகளோடும் {தடிக்கழிகளோடும்}, கொம்புகள், ஈட்டிகள் மற்றும் தாக்குதலுக்குண்டான பல்வேறு பிற ஆயுதங்களோடும், குதராவகைக் கோடரிகள் {குந்தாலி} மற்றும் மண்வெட்டிகளோடும், எண்ணெய் மற்றும் தெளிந்த நெய் ஆகியவற்றில் தோய்க்கப்பட்ட {நனைக்கப்பட்ட} துணிகளோடும், தங்க சித்திர வேலைப்பாடுகள் கொண்ட பளபளக்கும் ஆடைகளோடும், இருந்த துரியோதனனின் படை வீரர்கள், ரத்தினங்கள் கற்கள் மற்றும் பல்வேறு ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டு நெருப்பைப் போலச் சுடர்விட்டபடி அழகாகப் பிரகாசித்தனர்.

[1] இதை முறம் என்கிறது வேறொரு பதிப்பு.

கவசம் பூண்டவர்களும், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களும், குதிரை மரபுகளை நன்கு அறிந்தவர்களுமான நற்குடியில் பிறந்தவர்கள் {துரியோதனனின் படையில்} தேரோட்டிகளாகப் பணியமர்த்தப்பட்டனர். தேர்கள் அனைத்தும், பல்வேறு விதமான மருந்துகளோடும், தலையில் மணிகள் மற்றும் முத்துகளாலான சரங்கள் பொருத்தப்பட்ட குதிரைகளோடும், கொடிகள் மற்றும் கொடிக்கம்பங்களோடும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, அருளோடிருந்த கோபுரங்கள் மற்றும் சிறுகோபுரங்களோடும், கேடயங்கள், வாட்கள், வேல்கள், எறிஈட்டிகள் மற்றும் முள்பதித்த கதாயுதங்களோடும் இருந்தன.

அந்தத் தேர்கள் ஒவ்வொன்றிலும் உயர்ந்த சாதிக் குதிரைகள் நான்கு பூட்டப்பட்டிருந்தன. அவற்றில் {அந்தத் தேர்களில்} ஒவ்வொன்றிலும் நூறு {100} கணைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தத் தேர்கள் ஒவ்வொன்றும், ஒரு தேரோட்டி, முன்னால் கட்டப்பட்ட இரு குதிரைகள், தேர்ச்சக்கரங்களில் பூட்டப்பட்டிருந்த இரு குதிரைகளுக்குப் பொறுப்பான இரு தேரோட்டிகள் ஆகியவற்றோடு இருந்தன. குதிரைகளைச் செலுத்தும் தேர்வீரன் {தேரோட்டி} திறன்மிக்கவனாக இருந்தாலும், பின்னர்க் குறிப்பிடப்பட்ட இரு தேரோட்டிகளும் திறன்வாய்ந்த தேர்வீரர்களாகவே இருந்தனர். இப்படி அமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தேர்களும், அரண்களால் காக்கப்பட்ட நகரங்களைப் போலவும், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவையாகவும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு அனைத்துப் புறங்களிலும் நின்று கொண்டிருந்தன.

மணிகள், முத்துச் சரங்கள்,  மற்றும் பல்வேறு விதமான ஆபரணங்களால் யானைகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த விலங்குகள் {யானைகள்} ஒவ்வொன்றின் முதுகிலும் ஏழு {7} வீரர்கள் ஏறியிருந்தனர். இப்படி அலங்கரிக்கப்பட்டிருந்ததன் விளைவாக அந்த விலங்குகள் {யானைகள்} ரத்தினங்களால் நிறைந்த மலைகளைப் போல இருந்தன. {யானையின் மேலிருந்த} அந்த எழுவரில், இருவர் ஈட்டியைக் கொண்டு போரிடுபவராகவும், இருவர் சிறந்த வில்லாளிகளாகவும், இருவர் முதல் தர வாள் வீரர்களாகவும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒருவர் வேலையும் {சக்தி ஆயுதத்தையும்} மற்றும் முத்தலச்சூலத்தையும் {திரிசூலத்தையும்} தாங்கியவர்களாக இருந்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கள் முதுகில் நிறைய ஆயுதங்களையும், கணைகள் நிரம்பிய அம்பறாத்தூணிகளையும் சுமந்து வந்த எண்ணிலடங்கா மதங்கொண்ட யானைகளால் அந்த ஒப்பற்ற குரு மன்னனின் {துரியோதனனின்} படை நிரம்பியிருந்தது.

கொடிகளுடனும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்த கவசந்தரித்த வீரமிக்கப் போர் வீரர்களால் செலுத்தப்படும் ஆயிரக்கணக்கான குதிரைகளும் அங்கிருந்தன. எண்ணிக்கையில் நூறுகளாகவும், ஆயிரங்களாகவும் {பல லட்சங்களாக} இருந்த அந்தக் குதிரைகள் அனைத்தும், தங்கள் முன்னங்கால்களின் குளம்புகளைக் கொண்டு தரையைச் சிராய்க்கும் பழக்கம் நீங்கியவையாக இருந்தன [2]. {கடிவாளம் பிடித்து இழுக்கப்படாதவையாக அவை இருந்தன}. நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையாகவும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படவையாகவும், தங்களைச் செலுத்துபவர்களுக்கு மிகவும் கீழ்ப்படிந்து நடப்பவையாகவும் அவை {அக்குதிரைகள்} இருந்தன.

[2] இங்கே "அஸ்க்ரஹா" என்பது மூலச்சொல்லென்றும். அதன் பொருள், கனைத்துக் கொண்டே முன்னங்கால்களைத் தூக்கி நிற்கும் தீய குணத்தில் இருந்து விடுபட்டவை என்றும் வேறு ஒரு பதிப்புச் சொல்கிறது.

காலாட்படை வீரர்களில், பல்வேறு முகத் தோற்றம் கொண்டவர்களும், பல்வேறு வகையான கவசங்கள் தரித்தவர்களும், வித்தியாசமான வகை ஆயுதங்களைக் கொண்டவர்களும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமாக நூறாயிரம் பேர் இருந்தனர்.

ஒவ்வொரு தேருக்கும் பத்து {10} யானைகளும், ஒவ்வொரு யானைக்கும் பத்து குதிரைகளும்{10}, ஒவ்வொரு குதிரைக்கும் பத்துக் {10} காலாட்படை வீரர்களும் பாதுகாவலர்களாக இருந்தனர். மேலும், அணிவகுப்புச் சிதறுகையில், அதை ஒன்றிணைக்கும் வகையில், {துரியோதனனின்} துருப்புகளில் ஒரு பெரும்பகுதி ஒதுக்கி வைக்கப்பட்டது. {இப்படி ஒதுக்கி வைக்கப்பட்ட} இந்த அதிகப்படியான படையில் ஒவ்வொரு தேரிலும் ஐம்பது யானைகளும், ஒவ்வொரு யானைக்கும் நூறு குதிரைகளும், ஒவ்வொரு குதிரைக்கும் ஏழு காலாட்படை வீரர்களும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

ஐநூறு {500} தேர்களும், அதற்குத் தக்க {அதே அளவு ஐநூறு} யானைகளும் (ஆயிரத்து ஐநூறு 1500} குதிரைகளும், இரண்டாயிரத்து ஐநூறு {2500} காலாட்படை வீரர்களும்) சேர்ந்து ஒரு சேனையாகும். பத்துச் {10} சேனைகள் சேர்ந்தது ஒரு பிருத்னையாகும். பத்துப் பிருத்னைகள் கொண்டது ஒரு வாஹினியாகும், எனினும் பொதுவான மொழிப்பாணியில் {In common Parlance} சேனை, வாஹினி, பிருத்னை, துவஜினீ, சமூ, அக்ஷௌஹிணி, வரூதினீ என்ற சொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படியே புத்திமானான அந்தக் கௌரவன் {துரியோதனன்} தனது படையை அணிவகுத்தான். இரு தரப்பும் சேர்த்து எண்ணிக்கையில் மொத்தமாகப் பதினெட்டு {18} அக்ஷௌஹிணிகள் இருந்தன. அதில் பாண்டவப் படை ஏழு {7} அக்ஷெஹிணிகளையும், கௌரவப் படை பதினோரு {11} அக்ஷௌஹிணிகளையும் கொண்டிருந்தன.

ஐம்பதில் ஐந்து மடங்கு {இருநூற்றைம்பது} மனிதர்களால் ஆனது ஒரு பட்டியாகும் {Five times fifty men constitute a Patti.} [3]. மூன்று பட்டிகள் சேர்ந்தது ஒரு சேனாமுகம், அல்லது குல்மம் என்று அழைக்கப்படுகிறது. மூன்று குல்மங்கள் சேர்ந்தது ஒரு கணமாகும். (எதிரிகளை) அடிக்கவல்லவர்களும், போருக்காக ஏங்குபவர்களுமான போர்வீரர்கள் அடங்கிய அத்தகு கணங்கள், துரியோதனனின் அந்தப் படையில் ஆயிரக்கணக்கிலும் நூற்றுக் கணக்கிலும் {பதினாயிரக்கணக்கில்} இருந்தன.

[3] ஐம்பத்தைந்து மனிதர்களைக் கொண்டது ஒரு பத்தி என்று ஒரு வேறொரு பதிப்பில் காணப்படுகிறது.

வலிய கரங்களைக் கொண்ட மன்னன் துரியோதனன், வீரர்கள் மற்றும் புத்திசாலிப் போர்வீரர்களில் இருந்து தனது துருப்புகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுத்தான். மனிதர்களில் சிறந்தோரான கிருபர், துரோணர், சல்லியன், சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன், காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன், கிருதவர்மன், துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), கர்ணன், பூரிஸ்ரவஸ், சுபலனின் மகன் சகுனி, வலிமைமிக்க மன்னனான பாஹ்லீகர் ஆகியோர் ஒவ்வொருவரின் கீழும் ஓர் அக்ஷௌஹிணி படையை {துரியோதனன்} வைத்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, தினமும் அவர்களைத் தன்னெதிரே கொண்டு வரச் செய்து, அவர்களிடம் மணிக்கணக்காகப் பேசினான். தன் கண் எதிரிலேயே மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வழிபாட்டைக் காணிக்கையாக்கினான். தங்கள் தொண்டர்கள் அனைவரோடும் இப்படியே நியமிக்கப்பட்ட போர்வீரர்கள் அனைவரும், அந்த மன்னனுக்கு {துரியோதனனுக்கு} மிகவும் ஏற்புடையதைச் செய்ய வேண்டுமென விரும்பத் தொடங்கினர்.

*********************************************************************************
*மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை உயர்ந்தவர்கள், நடுத்தரமானவர்கள், தாழ்ந்தவர்கள் என மூன்று வகைகளாக வரிசைப் படுத்தி, (படையின் முன்னணி, நடு, பின் படை என நிறுத்தி) அவர்களை அந்தந்த வகைகளாகப் பிரித்து நிறுத்தினான்.

திருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்-படைமாட்சி/ குறள்:768
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை            
படைத்தகையால் பாடு பெறும்.

தமிழ் விளக்கவுரை_சாலமன் பாப்பையா :
பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது {படை} தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்