Friday, July 10, 2015

துரியோதனன் சொன்ன பூனைக்கதை! - உத்யோக பர்வம் பகுதி 161அ

A cat story told by Duryodhana! | Udyoga Parva - Section 161a | Mahabharata In Tamil

(உலூகதூதாகமன பர்வம் – 1)

பதிவின் சுருக்கம் : கர்ணன், துச்சாசனன், சகுனி ஆகியோருடன் ஆலோசித்த துரியோதனன், சூதாடியின் மகனான உலூகனை வரவழைத்து, பாண்டவர்களிடம் செல்லுமாறு அவனைப் பணித்தது; யுதிஷ்டிரனிடம் சொல்ல வேண்டியசவற்றை உலூகனிடம் துரியோதனன் சொன்னது; யுதிஷ்டிரனிடம் சொல்லுமாறு ஒரு பூனைக் கதையை உலூகனிடம் சொன்னது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஹிரண்யவதியின் {ஆற்றின்} அருகில் உயர் ஆன்ம பாண்டவர்கள் முகாமிட்டதும், கௌரவர்களும் தங்கள் முகாம்களை நிறுவிக் கொண்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னன் துரியோதனன், தனது துருப்புகளைப் பலமாக நிறுத்தினான். (தன் தரப்பில் இருந்த) மன்னர்கள் அனைவருக்கும் உரிய மரியாதைகளைச் செலுத்தினான். போர் வீரர்களின் பாதுகாப்புக்காகக் காவல் படைகளையும், சோதனைச் சாவடிகளையும் அமைத்தான். பிறகு, மனிதர்களின் ஆட்சியாளர்களான கர்ணன், துச்சாசனன் மற்றும் சுபலனின் மகன் சகுனி ஆகியோரை அங்கே வரவழைத்து, அவர்களுடன் ஆலோசிக்க ஆரம்பித்தான்.


ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (முதலில்) கர்ணனிடம் ஆலோசித்த மன்னன் துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (அடுத்ததாக) கர்ணனுடன் சேர்த்து, தனது தம்பி துச்சாசனன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} ஆகியோருடனும் கூட்டாக ஆலோசித்தான். பிறகு, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, உலூகனைத் தனது முன்னிலையில் தனிமையில் அழைத்து அவனிடம் {உலூகனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னான். அவன் {துரியோதனன் உலூகனிடம்}, "ஓ! உலூகா, சூதாடியின் மகனே {கைதவ்யா} {உலூகா}, பாண்டவர்களிடமும், சோமகர்களிடமும் நீ செல்வாயாக. அங்கே சென்று, வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையில், (யுதிஷ்டிரனிடம்) இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக.

{யுதிஷ்டிரனிடம் சொல்லுமாறு உலூகனிடம் துரியோதனன்} "குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} பாண்டவர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அந்தப் பயங்கரப் போர், இறுதியில் வந்தேவிட்டது. வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் உனது தம்பிகளுடன் கூடிய நீ ஆழ்ந்த கர்ஜனையுடன் உச்சரித்தவையும் {சொன்னவையும்}, குருக்களுக்கு மத்தியில் சஞ்சயன் என்னிடம் கொண்டு வந்தவையுமான அந்தச் செருக்கு நிறைந்த வார்த்தைகளுக்கு, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நல்லது செய்யும் நேரம் இறுதியாக வந்தேவிட்டது. எனவே, நீங்கள் அனைவரும் சாதிக்கப்போவதாக உறுதியேற்ற அனைத்தையும் சாதிப்பீராக", என்று சொல்.

குந்தியின் மூத்த மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, எனது வார்த்தைகளாகப் பின்வருவனவற்றைச் சொல்வாயாக. "அறம்சார்ந்தவனான நீ, உனது தம்பிகளுடனும், சோமகர்களுடனும், கேகயர்களுடனும் சேர்ந்து எப்படி உனது இதயத்தை அநீதியில் நிலைநிறுத்தலாம்? அனைத்து உயிர்களின் அச்சங்களையும் விலக்கவல்லவனாக நீ இருக்க வேண்டும் என நான் நினைக்கையில், அண்டத்தையே அழிக்க நீ எப்படி விரும்பலாம்? ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில், தேவர்கள் பிரகலாதனின் அரசை அவனிடம் {பிரகலாதனிடம்} இருந்து பறித்த போது, அவன் {பிரகலாதன் தேவர்களிடம்}, "தேவர்களே, எவனுடைய நீதியின் கொடிக்கம்பம் {தர்மத்துவஜம்} எப்போதும் {வெளிப்படையாக} உயர்ந்து, அவனது பாவங்கள் எப்போதும் மறைந்திருக்கிறதோ, அவன், (கதைகளில் சொல்லப்படும்) பூனையின் நடத்தையைக் கொண்டவனாவான்", என்ற {பொருள்படும்} செய்யுளைப் {சுலோகத்தைப்} பாடியதாக நாம் கேள்விப்படுகிறோம். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எனது தந்தைக்கு {திருதராஷ்டிரருக்கு} நாரதர் உரைத்த இந்த அற்புதக் கதையை நான் உனக்கு மீண்டும் சொல்கிறேன்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில், ஒரு பொல்லாத பூனை, தன் வேலைகளை அனைத்தையும் கைவிட்டு, (பக்தன் ஒருவனின் முறைமையின்படி), தனது கரங்களை உயர்த்திக் கொண்டு, கங்கைக்கரையில் தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டது. தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டதைப் போல நடித்து, அனைத்து உயிரினங்களின் நம்பிக்கையையும் பெறும்படி அவற்றிடம் "நான் இப்போது அறம் பயில்கிறேன்" என்று சொன்னது {சொல்லி வந்தது அந்தப் பூனை}.ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நீண்ட காலத்திற்குப் பிறகு, பறவைகள் அனைத்தும் அதனிடம் {பூனையிடம்} நம்பிக்கை வைத்தன. ஒன்றாகச் சென்ற அவை {பறவைகள்}, அந்தப் பூனையைப் பாராட்டின. பறவைகளை உண்ணும் அது {அந்தப் பூனை}, அவை {பறவைகள்} அனைத்தாலும் வழிபடப்பட்டு, தன் காரியம் நிறைவேறியதாகவும், தனது தவத்தின் பயன் தனக்குக் கிடைத்துவிட்டதாகவும் கருதியது. மேலும் சில காலத்திற்குப் பிறகு, எலிகள் அந்த இடத்திற்குச் சென்றன. பெருஞ்செயலில் பெருமையுடன் உழைத்து, நோன்புகள் நோற்பதில் ஈடுபடும் ஓர் அறம் சார்ந்த உயிரினமாகவே அவை அனைத்தும் {எலிகளனைத்தும்} அதைக் {பூனையைக்} கண்டன.

அந்தத் தீர்மானமான நம்பிக்கை அடைந்த அவை {எலிகள்}, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, "நமக்கு நிறைய எதிரிகள் இருக்கின்றனர். எனவே, இவர் {இந்தப் பூனை} நமது தாய்மாமனாகட்டும். மேலும் இவர் நமது குலத்தின் முதியவர்களையும் சிறுவர்களையும் எப்போதும் பாதுகாக்கட்டும்" என்று விரும்பின. இறுதியாக அந்தப் பூனையிடம் சென்ற அவை {எலிகள்} அனைத்தும், "உமது அருளால், நாங்கள் இன்பமாகத் திரிய விரும்புகிறோம். எங்களது அருள்நிறைந்த புகலிடம் நீரே, எங்களது பெரும் நண்பர் நீரே. இதன் காரணமாக, நாங்கள் எங்கள் அனைவரையும் உமது பாதுகாப்பின் கீழ் வைக்கிறோம். அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர் நீர், அறத்தை ஈட்டுவதிலேயே எப்போதும் ஈடுபடுபவர் நீர். எனவே, ஓ! பெரும் அறிவாளியே {பூனையாரே}, தேவர்களைக் காக்கும் இடிதாங்கியைப் {இந்திரனைப்} போல எங்களைப் பாதுகாப்பீராக" என்றன {எலிகள்}.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அனைத்து எலிகளாலும் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பூனை, அவற்றிடம் {அந்த எலிகளிடம்}, "துறவை தொடர்வது, (நான் அருள வேண்டும் என்று அழைக்கப்பட்டு) பாதுகாப்பு தருவது ஆகிய இவை இரண்டும் ஒன்றாக நிலைத்திருப்பதை நான் காணவில்லை. எனினும், உங்கள் வேண்டுகோளுக்கு ஏற்புடைய வகையில் உங்களுக்கு நன்மை செய்வதை என்னால் தவிர்க்க முடியாது. அதே வேளையில், நீங்கள் அனைவரும் எப்போதும் எனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். கடும் நோன்மை நோற்பதில் நிலைத்திருக்கும் நான், எனது தவப்பயிற்சிகளால் பலவீனமாக இருக்கிறேன். எனவே, ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லும் வழியை என்னால் காண முடியவில்லை. எனவே, நீங்கள் அனைவரும் தினமும் என்னை ஆற்றங்கரைக்குச் சுமந்து செல்ல வேண்டும்" என்றது {பூனை}. "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன எலிகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, தங்களில் முதியவை மற்றும் இளையவை ஆகியவற்றை அந்தப் பூனையிடம் ஒப்புவித்தன.

தீய ஆன்மா கொண்டதும், பாவியுமான அது {அந்தப் பூனை}, எலிகளை உண்டு, படிப்படியாகப் பருக்கவும், நல்ல நிறம் அடையவும், வலுவான உடல் உறுப்புகளைப் பெறவும் செய்தது. இப்படியே, எலிகள் எண்ணிக்கையில் குறைய ஆரம்பித்த வேளையில், அந்தப்பூனை, ஆற்றலிலும் பலத்திலும் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. பிறகு, எலிகளனைத்தும் கூடி, தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும், "நமது மாமன் {பூனையார்}, தினமும் தடித்து வளர்கிறார். நாமோ தினமும் (எண்ணிக்கையில்) குறைந்து வருகிறோம்" என்று பேசிக்கொண்டன.

பிறகு, டிண்டிகன் என்ற பெயருடைய ஒரு குறிப்பிட்ட புத்திசாலி எலி, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கூடியிருந்த எலிகளின் பெரும் கூட்டத்திற்கிடையே இந்த வார்த்தைகளைச் சொன்னது. அது {டிண்டிகன் என்ற எலி} "நீங்கள் அனைவரும் ஆற்றங்கரைக்கு ஒன்றாகச் செல்லுங்கள். நான் நமது மாமனுடன் {பூனையாருடன்} உங்களைப் பின்தொடர்ந்து வருகிறேன்" என்றது. அதற்கு அவை {அந்த எலிக்கூட்டம்}, "அற்புதம், அற்புதம்" என்று சொல்லி, தங்கள் எண்ணிக்கையில் ஒன்றை {டிண்டிகனைப்} பாராட்டின. டிண்டிகன் குறிப்பிட்டுப் பேசிய பயனுள்ள வார்த்தைகள் அனைத்தையும் அவை {அந்த எலிகள்} அப்படியே செய்தன. எனினும், இதை அறியாத அந்தப் பூனை டிண்டிகனை அன்று உண்டது. அதிக நேரத்தைக் கடத்தாத அந்த எலிகள் அனைத்தும், தங்களுக்குள் ஒன்றுக்குள் ஒன்று ஆலோசிக்கத் தொடங்கின.

பிறகு, கிலிகன் {கோலிகன்} என்ற பெயர் கொண்ட ஒரு மிக முதிர்ந்த எலி, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தனது இரத்த உறவுகளின் முன்னிலையில், நீதிமிக்க இவ்வார்த்தைகளைச் சொன்னது. அது {கிலிகன் எலிக் கூட்டத்திடம்}, "நமது அம்மான் {தாய்மாமன்}, அறம் ஈட்டுவதை உண்மையில் விரும்பவில்லை. உண்மையில் அவன் {அந்தப் பூனை} நமது எதிரியாக இருந்தாலும், கபடக்காரனைப் போல நமது நண்பனாக மாறியிருக்கிறான். உண்மையில், பழங்களையும், கிழங்குகளையும் உண்டு வாழும் ஓர் உயிரினத்தின் மலம், மயிருடன் {எலிகளின் முடிகளுடன்} இருக்காது. மேலும், அவனது {பூனையாரின்} உறுப்புகள் வளர்கின்றன. நாமோ எண்ணிக்கையில் நசிந்து வருகிறோம். அது தவிர, இந்த எட்டு நாட்களாக டிண்டிகன் காணப்படவில்லை" என்றது {கிலிகன் என்ற அந்த முதிர்ந்த எலி}. இவ்வார்த்தைகளைக் கேட்ட எலிகள் அனைத்தும் திசைகள் அனைத்திலும் சிதறி ஓடின. தீய ஆன்மா கொண்ட அந்தப் பூனையும், தான் எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பிச் சென்றது" {என்றான் துரியோதனன்}.
*****************************************************************************
நைமிசாரண்யத்தில் சூதரான சௌதி > சௌனகரின் 12 வருட யாகத்தில் பங்கு கொண்ட ஆன்மீகவாதிகளின் முன்னிலையில் இந்த மகாபாரதக் கதையைச் சொல்கிறார்.

சூதரான சௌதி இந்த மகாபாரதக் கதையினை இதற்கு முன் மன்னன் ஜனமேஜயன் நடத்திய நாகவேள்வியின் இடையில் வியாசரின் சீடர் வைசம்பாயனர் என்பவர் மன்னன் ஜனமேஜயனிடம் சொல்லும் போது தான் கேட்டதாகச் சொல்கிறார். {ஜனமேஜயன் அர்ஜுனனின் மகனான அபிமன்யுவின் பேரனும் பரிட்க்ஷித்தின் மகனும் ஆவார்.} {அர்ஜுனன் > அபிமன்யு > பரீட்க்ஷித் > ஜனமேஜயன்}

வைசம்பாயனர் > ஜனமேஜயனிடம் சொல்லும் கதையில்
சஞ்சயன் > திருதராஷ்டிரனிடம் சொல்லும் கதைக்குள்
துரியோதனன் > உலூகனிடம் சொல்லும் கதைக்குள்
நாரதர் > திருதராஷ்டிரனிடம் சொல்லிய பூனைகதைக்குள்
பூனை > எலி கூட்டத்திடம் சொன்ன சொல்தான், “ நான் இப்போது அறம் பயில்கிறேன் ” என்பதாகும்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்