Friday, July 10, 2015

துரியோதனனைக் குற்றஞ்சாட்டாதீர்! - உத்யோக பர்வம் பகுதி 160

Don't impute fault to Duryodhana! | Udyoga Parva - Section 160 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 89) {சைனியநிர்யாண பர்வம் - 10}

பதிவின் சுருக்கம் : கௌரவ மற்றும் பாண்டவப் படைகளைக் குறித்துச் சொல்லும்படி சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் வேண்டிக் கேட்டு, தனது குறையையும் சொல்வது; நேர்ந்து வரும் தீமைக்குத் துரியோதனன் மட்டுமே பொறுப்பாளி அல்ல என்று சஞ்சயன் சொல்வது...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், "படைவீரர்கள் இப்படிப் போருக்காக (குருக்ஷேத்திரக் களத்தில்) அணிவகுத்த பிறகு, ஓ! அந்தணர்களில் காளையே {வைசம்பாயனரே}, விதியால் உந்தப்பட்ட {காலனால் ஏவப்பட்ட} கௌரவர்கள் என்ன செய்தார்கள்?"


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, படைவீரர்கள் இப்படிப் போருக்காக அணிவகுத்த பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்."

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "வா, ஓ! சஞ்சயா, குரு {கௌரவ} மற்றும் பாண்டவத் துருப்புகளின் முகாம்களில் நடந்த நிகழ்வுகள் அனைத்தின் முழு விபரங்களையும் எனக்குச் சொல்வாயாக. போரின் தீய விளைவுகள் அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். எனினும், *சூதாட்டத்தில் மகிழ்ந்து, வஞ்சகத்தை அறிவாகக் கருதும் எனது மகனை {துரியோதனனை} என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, விதியே உயர்ந்தது என்றும், முயற்சி {உழைப்பு} பயனில்லாதது என்றும் கருதுகிறேன். அனைத்தையும் அறிகிறேன். எனினும், எனது சொந்த நலனைக் கூட இன்னும் என்னால் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. ஓ! சூதா {சஞ்சயா}, (நடவடிக்கைகளின்) குறைபாடுகளைக் காணும் திறன் எனது புரிதலுக்கு {அறிவுக்கு} இருக்கிறது. எனினும், நான் துரியோதனனை அணுகும்போது, அந்தப் புரிதல் (சரியான அந்தப் பாதையில்) இருந்து நழுவி விடுகிறது. நிலைமை இப்படி இருக்கையில், ஓ! சஞ்சயா, எது நடக்க வேண்டுமோ, அதுவே நடக்கும். உண்மையில், போரில் தனது உடலைத் தியாகம் செய்வது, க்ஷத்திரியர் ஒவ்வொருவருக்கும் பாராட்டத்தக்க கடமையே ஆகும்" என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் கேட்கும் இந்தக் கேள்வி உண்மையில் உமக்குத் தகுந்ததே. எனினும், துரியோதனன் மேல் மட்டுமே முழுத் தவறும் இருப்பதாக நீர் குற்றம் சாட்டுவது உமக்குத் தகாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இது குறித்து நான் விரிவாகப் பேசுகையில் என்னைக் {நான் சொல்வதைக்} கேட்பீராக. தனது தன்னடத்தையில் {சுய நடத்தையில்} உள்ள தவறின் விளைவாகத் தீமையை அடையும் ஒரு மனிதன், அந்தத் தவறுக்காக, காலத்தையோ, தேவர்களையோ எப்போதும் குற்றம் சாட்டக்கூடாது.

ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, தீய செயல்கள் அனைத்தையும் நிகழ்த்தும் மனிதர்களில் ஒருவன், அச்செயல்களை நிகழ்த்தியதன் விளைவால் கொல்லப்படத் தகுந்தவனாகிறான். எனினும், பகடை ஆட்டத்தின் விளைவால் தீங்கை அனுபவித்த பாண்டுவின் மகன்கள், அமைதியாக அத்தீங்குகள் அத்தனையையும் தங்கள் ஆலோசகர்கள் அனைவருடனும் தாங்கிக் கொண்டு, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடைபெறயிருக்கும் போரில் குதிரைகள், யானைகள், அளவிலா சக்தி கொண்ட மன்னர்கள் ஆகியோரின் படுகொலைகளைக் குறித்து என்னிடம் முழுமையாகக் கேளும். ஓ! பெரும் அறிவைக் கொண்டவரே, இப்படிக் {வலிந்து} கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தக் கடும் போரால் ஏற்படப்போகும் உலக அழிவைப் பொறுமையாகக் கேட்ட பிறகு, சரியான அல்லது தவறான தனது செயல்பாடுகளுக்கு மனிதன் ஒருபோதும் பொறுப்பாக முடியாது என்பதைத் தவிர வேறு எதையும் தீர்மானிக்காதிருப்பீராக.

உண்மையில், மரப்பாவை {மரப் பொம்மை} போன்ற மனிதன், (தான் செய்யும் அனைத்துக்கும்) பொறுப்பாளியல்ல. இந்த வகையில், மூன்று கருத்துகள் சொல்லப்படுகிறது; அனைத்தும் கடவுளால் விதிக்கப்படுகிறது என்று சிலர் சொல்கின்றனர்; நமது தன்னிச்சையின் {சுய விருப்பத்தின்} விளைவே நமது செயல்கள் என்று சிலர் சொல்கின்றனர்; பிறரோ, நமது கடந்த கால வாழ்வுகளின் {முற்பிறவியில் நாம் செய்த செயல்களின்} விளைவே நமது செயல்கள் என்றும் சொல்கின்றனர். எனவே, நமக்கு நேர்ந்திருக்கும் தீமையைப் பொறுமையாகக் கேட்பீராக" என்றான் {சஞ்சயன்}.

*********பகவத்யாந பர்வம் முற்றும்*********
{*********சைனியநிர்யாண பர்வம் முற்றும்*********}
*சூதாட்டத்தில் மகிழ்ந்து, வஞ்சகத்தை அறிவாகக் கருதும் எனது மகனை {துரியோதனனை} என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, விதியே உயர்ந்தது என்றும், முயற்சி {உழைப்பு} பயனில்லாதது என்றும் கருதுகிறேன்...

திருக்குறள்/ பால்: அறத்துபால்/ இயல்: ஊழியல்/ அதிகாரம்: ஊழ்/ குறள்: 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
தமிழில் விளக்கவுரை-சாலமன் பாப்பையா உரை:
விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்