Monday, July 27, 2015

பெண்ணாகப் பிறந்த சிகண்டி! - உத்யோக பர்வம் பகுதி 191

Sikhandin was born as a girl! | Udyoga Parva - Section 191 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 18)

பதிவின் சுருக்கம் : சிகண்டியின் பிறப்பு குறித்துத் துரியோதனன் பீஷ்மரிடம் கேட்பது; பீஷ்மர் சொல்வது; துருபதன் பிள்ளையில்லாதிருந்தது; பீஷ்மரை அழிக்கும்பொருட்டு ஒரு மகன் வேண்டுமெனச் சிவனை நோக்கி தவமிருந்த துருபதன்; சிவன் ஆணும் பெண்ணுமான ஒரு குழந்தை துருபதனுக்குப் பிறக்கும் என்று சொன்னது; துருபதனின் மனைவி ஒரு மகனைப் பெற்றெடுத்து மகன் பிறந்ததாக வெளியிட்டது; துருபதனும் உண்மையை மறைத்து அக்குழந்தைக்கு மகனுக்கு உரிய சடங்குகளையே செய்து சிகண்டி என்று பெயரிட்டது...

துரியோதனன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! கங்கையின் மகனே, ஓ! போர்வீரர்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, மகளாக முன்னர்ப் பிறந்த சிகண்டி, பின்னர் ஆணாக ஆனது எப்படி என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, மன்னன் துருபதனின் அன்பிற்குரிய மூத்த ராணி, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, (முதலில்) குழந்தையற்றவளாக இருந்தாள். அந்த ஆண்டுகளில், மன்னன் துருபதன், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, என் அழிவுக்காகத் தன் மனதில் ஆலோசித்தும், சந்ததியின் பொருட்டும், தேவன் சங்கரனுக்குத் {சிவனுக்கு} தனது துதியைச் செலுத்தி, தவத்துறவை பயின்றுவந்தான். அவன் {துருபதன்} மகாதேவனிடம் {சிவனிடம்}, "மகளன்றி ஒரு மகனே எனக்குப் பிறக்கட்டும். ஓ தேவா {சிவனே}, பீஷ்மனைப் பழிதீர்க்கும் ஒரு மகனையே நான் விரும்புகிறேன்" என்று இரந்து வேண்டினான்.


அதன்பேரில் அந்தத் தேவர்களுக்குத் தேவன் {சிவன்} அவனிடம் {துருபதனிடம்}, "பெண்ணாகவும், ஆணாகவும் உள்ள குழந்தையையே நீ பெறுவாய். ஓ! மன்னா {துருபதா}, {தவத்தில் இருந்து} விலகுவாயாக; அது {ஒருபோதும்} வேறாகாது" என்று சொன்னான். பிறகு தனது தலைநகருக்குத் திரும்பிய அவன் {துருபதன்}, தனது மனைவியிடம், "ஓ! பெரும் தேவியே, என்னால் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தவத்துறவுகளில் ஈடுபட்டு, நான் சிவனைத் துதித்தேன். (முதலில்) பெண்ணாக இருக்கும் என் குழந்தை அதன் தொடர்ச்சியாக ஆணாக மாறுவாள் என்று அந்தச் சம்புவால் {சிவனால்} சொல்லப்பட்டது. நான் அவனை {சிவனை} மீண்டும் மீண்டும் வேண்டிய போது, "இதுவே விதியால் விதிக்கப்பட்டது" என்றான் அவன் {அந்தச் சிவன்}. இது வேறாகாது. விதிக்கப்பட்டது நடந்தே தீரும்", என்றான் {துருபதன் தன் மனைவியிடம்}.

பிறகு, பெரும் சக்தி படைத்த பெண்ணான மன்னன் துருபதனின் ராணி, தனது பருவ காலத்தில் {ருது காலத்தில்} (தூய்மை குறித்த) கட்டுப்பாடுகள் அனைத்தையும் நோற்று {நியமத்துடன் இருந்து} துருபதனை அணுகினாள். குறித்த காலத்தில் பிருஷதனின் {துருபதனின்} அந்த மனைவியானவள் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் கருத்தரித்தாள். இது குறித்து, ஓ! மன்னா {துரியோதனா}, நாரதர் எனக்குச் சொன்னார்.

தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண்மணி, தனது கருவறையில் அந்தக் கருவைச் சுமக்க ஆரம்பித்தாள். மேலும், ஓ! குருகுலத்தின் மகனே {துரியோதனா}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மன்னன் துருபதன், {பிறக்கப் போகும் குழந்தையின் மீது தான் கொண்ட} தந்தை பாசத்தால், தன்னுயிர் மனைவிக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தான். மேலும், ஓ! கௌரவ்யா {துரியோதனா}, குழந்தையற்றவளும், பூமியின் தலைவனான அந்த அரசன் துருபதனின் மனைவியுமான அவள் {அந்த ராணி} தனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறப் பெற்றாள். குறித்த நேரத்தில், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, துருபதனின் ராணியான அந்தத் தேவி {goddess}, பெரும் அழகுடன் கூடிய ஒரு மகளை ஈன்றெடுத்தாள்.

அப்போது, மனோபலம் கொண்ட அந்த மன்னனின் {துருபதனின்} மனைவி, குழந்தையற்ற துருபதனிடம், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, தான் ஈன்றெடுத்த குழந்தை ஒரு மகன் என்று வெளியிட்டாள். ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {துரியோதனா}, பிறகு, மன்னன் துருபதன், தவறாகப் பொருள்கொள்ளப்பட்ட தன் மகளுக்கு, ஏதோ அவள் ஒரு மகனைப் போல, ஓர் ஆண் குழந்தைக்குக் கடமையாகச் சொல்லப்பட்ட சடங்குகள் அனைத்தையும் செய்வித்தான். அந்தக் குழந்தை ஒரு மகனே என்று சொன்ன துருபதனின் மனைவி தனது ஆலோசனைகளை மிகக் கவனமாகப் பாதுகாத்தாள்.

பிருஷதனைத் {துருபதனைத்} தவிர, அந்நகரில் உள்ள வேறு எந்த மனிதனும், அக்குழந்தையின் பாலினத்தை அறிந்திருக்கவில்லை. மங்கா சக்தி கொண்ட அந்தத் தெய்வத்தின் {சிவனின்} இந்த வார்த்தைகளை நம்பிய அவனும் {துருபதனும்}, "அவள் ஒரு மகன்" என்று சொல்லி தனது குழந்தையின் உண்மையான பாலினத்தை மறைத்தான். மேலும், ஓ! மன்னா {துரியோதனா}, குழந்தைக்குச் செய்யப்படும் அனைத்துச் சடங்குகளையும் ஒரு மகனுக்குப் உரிய வகையில் அந்தக் குழந்தைக்குச் செய்த அவன் {துருபதன்}, அவளுக்குச் சிகண்டி என்ற பெயரைச் சூட்டினான். என் ஒற்றர்கள் மூலமாகவும், நாரதரின் வார்த்தைகளில் இருந்தும் நான் மட்டுமே இந்த உண்மையை அறிந்தேன். ஏற்கனவே நான் தேவனின் {சிவனின்} வார்த்தைகளையும், அம்பையின் தவத்துறவுகளையும் குறித்த தகவல்களையும் அறிந்தே இருந்தேன்" என்றார் {பீஷ்மர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்