Monday, July 27, 2015

சிகண்டியின் திருமணம்! - உத்யோக பர்வம் பகுதி 192

Sikhandin's Marriage! | Udyoga Parva - Section 192 | Mahabharata In Tamil

(அம்போபாக்யான பர்வம் – 19)

பதிவின் சுருக்கம் : சிகண்டி தொடர்பான அனைத்திலும் துருபதன் பெரும் கவனம் செலுத்தியது; சிகண்டி துரோணரின் சீடனானது; மனைவியின் வற்புறுத்தலால் துருபதன் சிகண்டிக்குப் பெண் பார்த்தது; தசார்ணகர்களின் மன்னன் ஹிரண்யவர்மனின் மகளைச் சிகண்டிக்கு மனைவியாகத் தேர்ந்தெடுத்தது; சிகண்டியின் திருமணம் முடிந்து சில நாட்களில் ஹிரண்யவர்மன் மகள் தனது கணவன் ஆணில்லை என்பதைக் காண்பது; இதை அறிந்த ஹிரண்யவர்மன், பெருங்கோபத்துடன் துருபதனிடம் தூதனை அனுப்பியது; தூதன் தான் கொண்டு வந்த செய்தியைத் துருபதனிடம் தெரிவித்தது...

1962ல் வெளிவந்த "பீஷ்மா" என்ற
தெலுங்கு திரைப்படத்தில்
சிகண்டியாக நடிகை அஞ்சலிதேவி
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, எழுத்தறிவித்தல், ஓவியம் மற்றும் பிற கலைகள் அனைத்திலும், தனது மகள் {சிகண்டி} தொடர்பான அனைத்திலும் துருபதன் பெரும் கவனம் செலுத்தினான். கணைகளிலும், ஆயுதங்களிலும் அந்தப் பிள்ளை துரோணரின் சீடனாக ஆனாள். மேன்மையான நிறம் கொண்ட அந்தப் பிள்ளையின் தாய், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அவளை {சிகண்டியை} மகனாகவே கருதி, (தனது கணவனான) மன்னனிடம் {துருபதனிடம்}, அவளுக்கு மனைவியைத் தேட வற்புறுத்தினாள். பிறகு தனது மகள் {சிகண்டி} முழுமையாக இளமையை அடைந்திருப்பதைக் கண்டு, அவளது {சிகண்டியின்} பாலினத்தையும் உறுதி செய்து கொண்ட பிருஷதன் {துருபதன்} தனது ராணியுடன் ஆலோசிக்க ஆரம்பித்தான்.


துருபதன் {தன் மனைவியிடம்}, "எனது துன்பத்தை அதிகரிக்கும் இந்த எனது மகள் {சிகண்டி}, தனது இளமையை அடைந்திருக்கிறாள். திரிசூலம் தரித்த தெய்வத்தின் {சிவனின்} வார்த்தைகளின் படியே என்னால் அவள் {சிகண்டி} இதுவரை மறைக்கப்பட்டாள்" என்றான். அதற்கு அந்த ராணி {துருபதனிடம்}, "ஓ! பெரும் மன்னா {துருபதரே}, அது பொய்யாக முடியாது! உண்மையில், நிகழ முடியாத ஒன்றை மூவுலகங்களின் தலைவன் {சிவன்} எப்படிச் சொல்வான்? ஓ! மன்னா {துருபதரே}, நீர் விரும்பினால் நான் பேசுவேன். எனது வார்த்தைகளைக் கேட்ட பிறகு, ஓ! பிருஷத குலத்தவரே {துருபதரே}, உமக்குத் தோன்றுவதைச் செய்யும். ஒரு மனைவியுடனான இந்தப் பிள்ளையின் {சிகண்டியின்} திருமணம் மிகக் கவனமாகச் செய்யப்படட்டும். அந்தத் தேவனின் {சிவனின்} வார்த்தைகள் உண்மையாகும். இதுவே எனது உறுதியான நம்பிக்கையாகும்" என்றாள் {ராணி}.

பிறகு அந்த அரச தம்பதியினர், அக்காரியம் குறித்துத் தாங்கள் ஒரு தீர்மானத்தை அடைந்து, தசார்ணகர்களின் மன்னனுடைய மகளைத் தங்கள் மகனின் மனைவியாகத் தேர்ந்தெடுத்தனர். அதன் பிறகு, மன்னர்களில் சிங்கமான அரசன் துருபதன், பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரிடமும் அக்குலத்தின் தூய்மையைக் குறித்து விசாரித்து, அந்தத் தசார்ணகர்கள் மன்னனின் மகளைச் சிகண்டிக்கு மனைவியாகத் தேர்ந்தெடுத்தான். தசார்ணகர்களின் மன்னனாக அழைக்கப்பட்டவன் ஹிரண்யவர்மன் என்ற பெயரைக் கொண்டவனாவான்; அவன் தனது மகளைச் சிகண்டிக்குக் கொடுத்தான்.

தசார்ணகர்களின் மன்னனான ஹிரண்யவர்மன் ஒரு வலிமைமிக்க ஏகாதிபதியாகவும், எளிதில் வீழ்த்தப்பட இயலாதவனாகவும் இருந்தான். தடுக்க இயலாதவனான அந்த உயர் ஆன்ம ஏகாதிபதி {ஹிரண்யவர்மன்} ஒரு பெரும்படையைக் கொண்டிருந்தான். திருமணம் முடிந்து சில காலத்திற்குப் பிறகு, ஹிரண்யவர்மனின் மகள், ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, தனது இளமையை அடைந்தாள்; அதே வேளையில் துருபதனின் மகளும் {சிகண்டினியும்} தனது இளமையை அடைந்தாள். திருமணத்திற்குப் பிறகு சிகண்டி {தன் பாஞ்சால நாட்டின் தலைநகரான} காம்பில்யத்திற்குத் திரும்பி வந்தான். முன்னவளோ {ஹிரண்யவர்மனின் மகளோ}, பின்னவள் {துருபதன் மகளான சிகண்டினியை} தன்னைப் போன்ற ஒரு பெண்ணே என்பதை விரைவில் அறிந்தாள். மேலும் அந்த ஹிரண்யவர்மன் மகள், சிகண்டி உண்மையிலேயே ஒரு பெண்தான் என்பதை உறுதி செய்து கொண்டு, அந்தப் பாஞ்சாலர்களின் மன்னனுடைய மகனாக {சிகண்டியாக} அழைக்கப்பட்டவளைக் {அழைக்கப்பட்ட சிகண்டினியைக்} குறித்த அனைத்தையும் தனது செவிலிகளிடமும், தோழிகளிடமும் நாணத்துடன் தெரிவித்தாள்.

பிறகு, ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனா}, தசார்ணகர்கள் நாட்டைச் சேர்ந்த அந்தச் செவிலிகள் பெருந்துன்பத்தை அடைந்து, தங்கள் மன்னனிடம் {ஹிரண்யவர்மனிடம்} தாதிகளை அனுப்பினார்கள். அந்தத் தாதிகள், தசார்ணகர்களின் மன்னனிடம் நடந்த வஞ்சனைகள் அனைத்தையும் தெரிவித்தார்கள். அதன் பேரில், தசார்ணகர்களின் மன்னன் கோபத்தால் நிறைந்தான். [1] உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, சில நாட்கள் கழித்தே இச்செய்தியை அறிந்த ஹிரண்யவர்மன் கோபத்தால் மிகவும் துன்புற்றான்.

[1] இந்த இடத்தில் முந்தைய வரிக்கும், பிந்தைய வரிக்கும் இடையில் இடைவெளியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த இடத்தில் வேறு ஒரு பதிப்பில் இன்னும் ஒரு செய்தி இருக்கிறது. அது பின்வருமாறு: அப்பொழுது, அரண்மனையில் இருந்த சிகண்டி, பெண் தன்மையில் சிறிதும் விருப்பம் இல்லாமலே ஆண்மகனைப் போலவே மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தான். சில நாட்கள் கழித்து இதைக் கேட்ட ஹிரண்யவர்மன் கோபத்தால் வருத்தமடைந்தான் என்ற இச்செய்தி கங்குலியின் பதிப்பில் இல்லை.

கடுங்கோபத்தில் நிறைந்த தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} துருபதனின் இல்லத்திற்குத்  தனது தூதன் ஒருவனை அனுப்பினான். மன்னன் ஹிரண்யவர்மனின் அந்தத் தூதன், தனியாகத் துருபதனை அணுகி, அவனை ஒரு புறமாக அழைத்துச் சென்று, அவனிடம் {துருபதனிடம்} தனிமையில், "ஓ! ஏகாதிபதி, ஓ! பாவமற்றவரே {துருபதரே}, தசார்ணகர்களின் மன்னன், {ஹிரண்யவர்மன்} உம்மால் ஏமாற்றப்பட்டு, அவமதிக்கப்பட்ட கோபத்துடன், {உமக்கான செய்தியாக} "நீ என்னை அவமதித்துவிட்டாய்! உனது செயல் அறிவற்றதே என்பதில் ஐயமில்லை! மூடத்தனத்தால், நீ உன் மகளுக்காக எனது மகளைக் கேட்டிருக்கிறாய்! ஓ தீயவனே, அந்த வஞ்சகச் செயலின் விளைவை நீ அறுவடை செய்வாய்! உறவினர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவருடனும் கூடிய உன்னை இதோ நான் கொல்வேன். சற்றே காத்திரு! [2]" என்ற இவ்வார்த்தைகளை உமக்குச் சொல்லி அனுப்பினார்" என்றான் {தூதன்}."

[2] வேறொரு பதிப்பில், அந்தச் செய்தி இந்த இடத்தில் நிறைவடையவில்லை. இன்னும் தொடர்கிறது. அது பின்வருமாறு: என்னுடைய வீரத்தையும், குலத்தையும், நல்ல நடத்தையையும் அவமதிக்கும் வகையில், இதுவரை மனிதர்கள் எவரும் செய்திராத வஞ்சனையை நீ எனக்குச் செய்திருக்கிறாய். காரியங்கள் அனைத்தையும் செய்து கொள். சிறந்த இன்பங்களை அனுபவித்துக் கொள். உனது சுற்றத்துடன் உன்னைக் கொல்வதற்காக விரைவில் நான் படையெடுக்கப் போகிறேன்" என்று அந்தத் தூதன் சொன்ன செய்தி முடிவடைகிறது. இச்செய்தி கங்குலியின் பதிப்பில் இல்லை.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்