Friday, August 07, 2015

பூமியில் உள்ள உயிரின வகைகள்! - பீஷ்ம பர்வம் பகுதி - 004

The species in the world! | Bhishma-Parva-Section-004 | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 4)

பதிவின் சுருக்கம் : குருஜாங்கலத்தில் கூடியிருக்கும் மன்னர்களின் நாடுகள் மற்றும் நகரங்களின் துல்லியமான விபரங்களைச் சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் கேட்பது; சஞ்சயன் முதலில் பூமியின் சிறப்புகளைச் சொல்வது; பூமியில் வாழும் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் குறித்த குறிப்புகளைச் சொல்வது; அசைவன மற்றும் அசையாதனவற்றில் உள்ள வகைகளைச் சொன்னது; பூமிக்காக மன்னர்கள் அனைவரும் ஒருவருக்குள் ஒருவர் அடித்துக் கொள்ளும் காரணத்தைச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது....

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரனை நோக்கி இந்த வார்த்தைகளைச் சொன்ன வியாசர் அங்கிருந்து புறப்பட்டார். இந்த வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், அமைதியாகச் சிந்திக்கத் தொடங்கினான். சிறிது நேரம் {ஒரு முகூர்த்த காலம்} இப்படிச் சிந்தித்த அவன் மீண்டும் மீண்டும் பெருமூச்சு விடத் தொடங்கினான். விரைவில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, புகழத்தக்க ஆன்மாவைக் கொண்ட சஞ்சயனிடம், "ஓ! சஞ்சயா, இந்த மன்னர்கள், இந்தப் பூமியின் தலைவர்கள், இவ்வளவு வீரமிக்கவர்கள், போரில் மகிழ்ந்து, பல்வேறு ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, பூமியின் நிமித்தமாகத் தங்கள் உயிரையே விடத் தயாராக இருக்கிறார்களே. தடுக்கப்பட முடியாத அவர்கள், உண்மையில், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு, யமனின் ஆட்சிப்பகுதியில் இருப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போகின்றனர்.


பூமியை உடைமையாகக் கொள்வது சம்பந்தமான செழிப்பை அவர்கள் விரும்புவதால், ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளாதிருக்கிறார்கள். எனவே, பூமி பல பண்புகளைக் {குணங்களைக்} கொண்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஓ! சஞ்சயா, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. வீரர்கள், பல ஆயிரங்களிலும், பத்து லட்சங்களிலும், கோடிகளிலும், ஆயிரம் கோடிகளிலும் ஒன்றுசேர்ந்து குருஜாங்கலத்திற்கு வந்திருக்கிறார்கள். ஓ! சஞ்சயா, இவர்கள் எங்கிருந்து வந்தார்களோ, அந்த நாடுகள் மற்றும் நகரங்களின் பரிமாணங்களையும், அவற்றின் நிலைமைகளையும் துல்லியமான விபரங்களுடன் நான் கேட்க விரும்புகிறேன். அளவிடமுடியா சக்தி படைத்த அந்த மறுபிறப்பாள {பிராமண} முனிவர் வியாசரின் ஆற்றலால், தெய்வீக உணர்வு என்ற விளக்கின் ஒளியையும், அறிவுக்கண்ணையும் பெற்றவனாக நீ இருக்கிறாய்" என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் அறிவு கொண்டவரே {திருதராஷ்டிரரே}, நான் எனது அறிவின்படி பூமியின் சிறப்புகளை உமக்கு எடுத்துரைப்பேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நான் உம்மை வணங்குகிறேன். இவ்வுலகில் உள்ள உயிரினங்கள், அசைவன {ஜங்கமங்கள்} மற்றும் அசையாதன {ஸ்தாவரங்கள்} என்று இருவகைகளில் உள்ளன. அசையும் உயிரினங்கள், முட்டையிடுதல் {Oviparous}, ஈன்றெடுத்தல் {Viviparous}, வெப்பம் மற்றும் ஈரப்பதத்தால் {புழுக்கத்தால் உண்டாகும் வேர்வையில்} உண்டாகுதல் [*] என்று மூன்று வகையில் தங்கள் பிறப்பை அடைகின்றன.

[*] உதாரணம்: ஈறு, பேன், நாய்குடை, காளான்...

அசையும் உயிரினங்களில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஈன்றெடுப்பவையே {Viviparous} {ஜராயுஜங்களே} நிச்சயம் முதன்மையானவையாக இருக்கின்றன. ஈன்றெடுக்கும் உயிரினங்களில் மனிதர்களும் விலங்குகளுமே முதன்மையானவையாக இருக்கின்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்வேறு வடிவங்களில் இருக்கும் விலங்குகளின் இனவகைகள் பதினான்காக {14} இருக்கின்றன. அவற்றில் ஏழு{7} இனங்கள் காடுகளில் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டிருக்கின்றன {ஆரண்யவாசிகளாக இருக்கின்றன}. ஏழு{7} இனங்கள் வீட்டில் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டிருக்கின்றன {கிராமவாசிகளாக இருக்கின்றன}. சிங்கங்கள், புலிகள், பன்றிகள், எருமைகள், யானைகள், கரடிகள் மற்றும் குரங்குகள் ஆகியன, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வனவிலங்குகளாகக் கருதப்படுகின்றன. பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், மனிதர்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகிய இந்த ஏழும் வீட்டுவிலங்குகளாகக் கற்றோரால் கருத்தப்படுகின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பதினான்கே {14} வீட்டு மற்றும் வன விலங்குகளின் முழு எண்ணிக்கையாக வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. இவற்றையே வேள்விகளும் சார்ந்திருக்கின்றன. வீட்டு உயிரினங்களில் மனிதனே முதன்மையானவன், அதே போல வன உயிரினங்களில் சிங்கமே முதன்மையானதாகும். அனைத்து உயிரினங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றன.

காய்கறிகளே {Vegetables} {உத்பிஜ்ஜங்களே} அசையாதனவாகச் {ஸ்தாவரங்களாகச்} சொல்லப்படுகின்றன. அவற்றில் நான்கு வகைகளாக மரங்கள், புதர்ச்செடி [1], கொடிகள் [2], படர்ந்து வளரும் செடிகள் [3] என்று இருக்கின்றன. புல்வகையைச் சார்ந்த தண்டற்ற செடிவகைகள் [4] ஐந்தாவதாக வகையாக இருக்கின்றன [5].

[1] குல்மங்கள் = நாணல் போன்றவை என்று வேறு பதிப்புகளில் இருக்கின்றன.

[2] லதைகள் = மரங்களில் ஏறிப் படர்பவை என்று வேறு பதிப்புகளில் இருக்கின்றன.

[3] வல்லிகள் = தரையில் படரும் பறங்கி, பூசணி முதலியவை என்று வேறு பதிப்புகளில் இருக்கின்றன.

[4] திருணங்கள் = மூங்கில் முதலியவை என்று வேறு பதிப்புகளில் இருக்கின்றன.

[5] இங்கே கங்குலி, "இந்த ஐந்து இனவகைகளை நீலகண்டர் இவ்வாறு விளக்குகிறார்: அரசமரத்தைப் {Peepul} போன்ற மரங்கள்; குசப் அடர்த்தியான மரங்கள் மற்றும் செடிகளுக்கு அடியில் வளரும் பற்களைப் போன்ற குல்மங்கள் {Gulma} (புதர்); செடிகள் அனைத்தையும் போலவே மண்மீது வளர்ந்து, சுற்றிக் கொள்வதற்கு ஓர் ஆதரவு தேவைப்படும் கொடிகள் {லதைகள்}; ஓர் ஆண்டு மட்டுமே வாழ்ந்து பூமியில் படரும் பூசணி, சுரைக்காய் போன்ற வள்ளிகள்; இறுதியாக, பட்டைகள் மற்றும் இலைகளை மட்டுமே கொண்டு தண்டற்று வாழும் புல் போன்ற தாவரங்களான திருணங்கள்" என்கிறார்.

அசையும் {மனிதன், விலங்கு} மற்றும் அசையாத {தாவர} உயிரினங்களில் இப்படியே பத்தொன்பது {19} வகை இருக்கின்றன. அவற்றின் உலகளாவிய தொகுதிகளைப் {பூதங்களைப்} பொறுத்தவரை அவை ஐந்தாக {பஞ்சபூதங்களாக} உள்ளன. இப்படியே மொத்தமாக இருபத்துநான்கான {2} இவை அனைவராலும் நன்கு அறியப்பட்டபடி காயத்ரி (பிரம்மம்) என்று விளக்கப்படுகின்றன [6].

[6] "காயத்ரியோ, பிரம்மமோ, அண்டமோ குறிப்பிடப்படும்போது இந்த இருபத்து நான்கும் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றில் ஐந்து சுயமாக நிலைத்திருக்கின்றன. எஞ்சிய பத்தொன்பதும் அந்த ஐந்தும் பல்வேறு விகிதாச்சாரங்களில் கலந்தவையாக இருக்கின்றன" என்கிறார் கங்குலி.

ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இதையே அனைத்து அறங்களையும் கொண்ட புனிதமான காயத்ரியாக உண்மையாக அறிந்து கொள்பவன்,  உலக அழிவுக்குக் காரணமாக மாட்டான். அனைத்தும் பூமியில் இருந்தே எழுகின்றன {பூமியிலேயே உற்பத்தியாகின்றன}. அழிவடையும்போது அனைத்தும் பூமியிலேயே கலந்து விடுகின்றன. இந்தப் பூமி அனைத்து உயிரினங்களுக்குமான வசிப்பிடமாகவும், புகலிடமாகவும் இருக்கிறது. பூமி நித்தியமானது. எவன் பூமியைக் கொண்டிருக்கிறானோ, அவன் அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்ட முழு அண்டத்தையும் கொண்டிருக்கிறான். இதன் காரணமாகவே பூமிக்காக (அதை உடைமையாக அடைய) காத்திருக்கும் மன்னர்கள் ஒருவரை ஒருவர் கொல்கின்றனர்" என்றான் {சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்