Wednesday, October 07, 2015

தெய்வ-அசுரத் தனித்தன்மைகள் - தெய்வாசுர சம்பத் விபாக யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 040

The Separateness of the Divine and Undivine - Daivasura–Sampad–Vibhaga yoga! | Bhishma-Parva-Section-040 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 28) {பகவத் கீதை - பகுதி 16}

பதிவின் சுருக்கம் : மனிதனின் பண்புகளில் காணப்படும் தெய்வீக மற்றும் அசுரத் தன்மைகளைக் கிருஷ்ணன் விளக்குவது; கைவிட வேண்டிய அனைத்தையும் கைவிட்டு பரமபதத்தை அடைவது எப்படி என்று கிருஷ்ணன் ஆலோசனை கூறுவது...

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "அச்சமின்மை, இதயத் தூய்மை, அறிவில் (அறிவை அடையும் நோக்கில்) விடாமுயற்சி, யோகத் தியானம், கொடைகள் {ஈகை}, தற்கட்டுப்பாடு, வேள்வி, வேத கல்வி, தவ நோன்புகள், நேர்மை {1} [1], தீங்கிழையாமை, வாய்மை, கோபத்தில் இருந்து விடுதலை, துறவு, மன அமைதி, பிறர் குறை சொல்லாமை, அனைத்து உயிர்களிடத்தும் கருணை, பொருளாசையின்மை, மென்மை, பணிவு, அமைதியின்மையில் இருந்து விடுதலை,{2} வீரம், மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உறுதி, தூய்மை, சண்டித்தனமின்மை {துரோகமின்மை}, செருக்கின்மை ஆகியவை ஓ! பாரதா {அர்ஜுனா}, தெய்வீகத் தன்மைகளைக் கொண்டோரைச் சார்ந்தனவாகும் {3}. 1-3

[1] இங்குச் சங்கரரின் விளக்கத்தை ஏற்றே தான் பெயர்த்திருப்பதாகவும், ஸ்ரீதரர் இங்கு வேறு பொருள் கொள்கிறார் எனவும் இங்கே விளக்குகிறார் கங்குலி.


ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, பாசாங்கு, செருக்கு, அகந்தை, கடுங்கோபம், முரட்டுத்தனம் மற்றும் அறியாமை ஆகியவை அசுரத் தன்மை கொண்டோரைச் சார்ந்தனவாகும். 16:4

இருவகை மனிதர்கள்
தெய்வீகத்தன்மைகள் விடுதலைக்காவன எனக் கருதப்படுகின்றன; அசுரத்தன்மைகளோ பற்றை ஏற்படுத்துவனவாகும். ஓ! பாண்டுவின் மகனே வருந்தாதே, நீ தெய்வீகத்தன்மைகளுடனேயே பிறந்திருக்கிறாய். 16:5

இவ்வுலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள், தெய்வீகத் தன்மை, அசுரத் தன்மை என இரு வகைகளிலேயே இருக்கின்றன. தெய்வத்தன்மை விரிவாக விளக்கப்பட்டது. {எனவே}, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அசுரத்தன்மை குறித்து இப்போது என்னிடம் கேட்பாயாக. 16:6

அசுர இயல்பு கொண்டோர் நாட்டத்தையோ {பற்றையோ}, நாட்டமின்மையையோ {பற்றின்மையையோ} [2] அறியமாட்டார்கள். தூய்மையோ, நன்னடத்தையோ, வாய்மையோ அவர்களிடம் {அசுரத்தன்மை கொண்டோரிடத்தில்} இருப்பதில்லை. 16:7

[2] "ப்ரவ்ருத்திம் Prabritti" என்பதை நாட்டம் என்றும், "நிவ்ருத்திம் Nivritti" என்பதை நாட்டமின்மை என்றும் தான் கொள்வதாகவும். நாட்டம் என்பதை நீதிமிக்கச் செயல்கள் என்றும், நாட்டமின்மை என்பதை நீதியற்ற செயல்கள் என்றும் விரிவுரையாளர்கள் அனைவரும் சொல்கிறார்கள் என்றும், K.T.டெலங்க் இதை "செயல்" மற்றும் "செயலின்மை" என விளக்குகிறார் என்றும், பர்னாஃப்-ன் பிரஞ்சு மொழி பதிப்பைப் பின்தொடரும் திரு.டேவீசோ "படைப்பு மற்றும் அதன் முடிவு" என அவற்றைக் கொள்கிறார் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

உண்மை {சத்தியம்}, வழிநடத்தும் கொள்கை {அறம்}, ஆட்சியாளன் {ஈஸ்வரன்} ஆகியவை அற்றதே இந்த அண்டம் எனவும், காமத்தினால் (ஆணும் பெண்ணும்) ஒன்றோடு ஒன்று கலந்து அது {இந்த அண்டம்} உண்டானது; வேறில்லை என்றும் அவர்கள் {அசுரத் தன்மை கொண்டோர்} சொல்கிறார்கள். 16:8

இந்தப் பார்வையிலேயே தங்களை {ஆத்மாவை} இழந்தவர்களான இந்த {அசுரத்தன்மை கொண்ட} மனிதர்கள், சிறுமதிபடைத்தவர்களும், கொடுஞ்செயல்கள் புரிபவர்களுமான இந்த (உலகத்தின்) எதிரிகள், அண்டத்தின் அழிவுக்காகவே பிறந்திருக்கிறார்கள். 16:9

தணியாத ஆசைகளில் இன்புற்று, பாசாங்குத்தனம், இறுமாப்பு, மடமை ஆகியவற்றுடன் இருந்து, மாயையால் தவறான கருத்துகளை ஏற்று, புனிதமற்ற நடைமுறைகளில் அவர்கள் {அசுரத் தன்மை கொண்டோர்} ஈடுபடுகின்றனர். 16:10

மரணத்தால் (மட்டுமே) {முடிவை} ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு எண்ணற்ற எண்ணங்களை {கவலைகளை} வளர்த்து, (தங்கள்) ஆசைகளை அனுபவிப்பதே உயர்ந்த எல்லை எனக் கருதும் அவர்கள் {அசுரத்தன்மை கொண்டோர்}, அதுவே அனைத்தும் என நம்புகின்றனர். 16:11

நம்பிக்கையின் நூறு கயிறுகளால் கட்டப்பட்டு, காமத்திற்கும், கோபத்திற்கும் அடிமையாகும் அவர்கள் {அசுரத் தன்மை கொண்டோர்} இன்று இந்தச் செல்வத்தை அடையவே விரும்புகிறார்கள். 16:12

அசுரத்தன்மைகள்
"இதை நான் பின்பு அடைவேன், இந்தச் செல்வத்தை நான் கொண்டுள்ளேன், இஃது (இந்தச் செல்வம்) எனக்குக் கூடுதலாகக் கிடைத்ததாகும் {13}. இந்த எதிரி என்னால் கொல்லப்பட்டான். நான் இன்னும் பிறரையும் கொல்வேன். நானே தலைவன் {ஆள்பவன்}, நானே அனுபவிப்பவன் {போகி}, நானே வெற்றியாளன் {சித்தன்}, சக்தி நிறைந்தவன் {பலவான்}, மகிழ்ச்சியானவன் {சுகி} {14}, நான் செல்வந்தன், நான் உன்னதப் பிறப்பைக் கொண்டவன். என்னைப் போல் வேறு எவன் இருக்கிறான்? நான் வேள்வி செய்வேன், நான் கொடைகள் அளிப்பேன், நான் இன்பமாக இருப்பேன்" {15} என இப்படி அறியாமையில் மயங்கி எண்ணற்ற எண்ணங்களால் {கவலைகளால்} கலங்கி, மாய வலைகளில் சிக்கி, ஆசைக்குகந்த பொருட்களை அனுபவிப்பதில் பற்றுதல் கொண்ட அவர்கள் {அசுரத் தன்மை கொண்டோர்} தூய்மையற்ற நரகத்தில் மூழ்கிப் போகிறார்கள் {16}. 16:13-16

தற்பெருமை, பிடிவாதம், செருக்கு, செல்வத்தில் போதை ஆகியவற்றைக் கொண்ட அவர்கள் {அசுரத்தன்மை கொண்டோர்}, பாசாங்குத் தனத்துடனும், (பரிந்துரைக்கப்பட்ட) விதிகளுக்கு எதிராகவும், பெயரளவில் மட்டுமே வேள்விகளைச் செய்வார்கள். 6:17

பகட்டு, சக்தி, செருக்கு, காமம், கோபம் ஆகியவற்றைக் கொண்ட இந்த வசைபாடுவோர் {அசுரத் தன்மை கொண்டோர்}, தங்கள் சொந்த உடல்களிலும் பிறரின் உடல்களிலும் இருக்கும் என்னை வெறுக்கிறார்கள். 16:18

(என்னை) வெறுக்கும் இவர்கள், கொடூரர்களாகவும், மனிதர்களில் பயங்கரமானவர்களாகவும், புனிதமற்றவர்களாகவும் இருக்கிறார்கள். நான் {அசுரத் தன்மை கொண்ட} அவர்களைத் தொடர்ச்சியாக அசுரத் தன்மை கொண்ட கருவறைகளில் வீசி எறிகிறேன். 16:19

அசுரத்தன்மை கொண்ட கருவறைகளை அடைந்து, அடுத்தடுத்த பிறவிகளிலும் மயக்கமடையும் அவர்கள் {அசுரத்தன்மை கொண்டோர்}, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா} என்னை அடையாமலேயே இழிந்த நிலைக்கு வீழ்ச்சியடைகிறார்கள். 16:20

காமம், கோபம், பேராசை ஆகியவையே தனக்கு {ஆத்மாவுக்கு} அழிவைத் தரும் நரகத்தின் மூன்று வகை வழிகளாகும். எனவே, இம்மூன்றையும் ஒருவன் துறக்க வேண்டும். 16:21

இருளின் இந்த மூன்று வாயில்களில் {காமம், கோபம், பேராசை ஆகியவற்றில்} இருந்து விடுபட்ட மனிதன், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, தனக்கான சொந்த நலனைத் தேடிக் கொண்டு, பிறகு, தனது உயர்ந்த இலக்கை {பரகதியை} அடைகிறான். 16:22

சாத்திரங்களின் விதிகளைத் துறந்து {மீறி}, ஆசையின் உந்துதல்களால் மட்டுமே செயல்படுபவன் எவனோ, அவன் முழுமையையோ, இன்பத்தையோ, உயர்ந்த இலக்கையோ {பரகதியையோ} ஒருபோதும் அடைவதில்லை. 16:23

எனவே, எது செய்யப்பட வேண்டும்? எது செய்யப்படக்கூடாது? என்பதைத் தீர்மானிக்க உனக்குச் சாத்திரங்களே அதிகாரம் கொண்டதாக இருக்கட்டும். சாத்திரங்களின் விதிகளால் தீர்மானிக்கப்பட்டவற்றை உறுதி செய்த பிறகு செயல்புரிவதே உனக்குத் தகும்" என்றான் {கிருஷ்ணன்}. 16:24


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்