Monday, October 05, 2015

பரம நிலை அடைதலின் அறம் - புருஷோத்தம யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 039

Religion by Attaining the Supreme - Purusottama yoga! | Bhishma-Parva-Section-039 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 27) {பகவத் கீதை - பகுதி 15}

பதிவின் சுருக்கம் : வேர்களை வானில் கொண்டு கிளைகளை மண்ணில் கொண்ட மரத்தின் உருவகத்தைக் கிருஷ்ணன் விளக்குவது; பற்று விலக்கல் என்ற கோடரியைக் கொண்டு அந்த மரத்தை வெட்டினால்தான் ஒருவன் இவ்வுலகத்தைக் கடந்து பரமடைய முடியும் என்று கிருஷ்ணன் விளக்குவது; எல்லாம் வல்ல தன்மை, அனைத்தும் அறிந்த தன்மை, எங்கும் நிறைந்த தன்மை ஆகியவையே கடவுளின் ஆழ்நிலை பண்புகள் எனக் கிருஷ்ணன் குறிப்பிடுவது....

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "வேர்களை மேலே கொண்டு, அதன் கிளைகளைக் கீழே கொண்ட நித்தியமான அஸ்வத்தம் {அரச மரம்} என்று ஆத்ம அறிவைச் சொல்கிறார்கள். அதன் இலைகள் சந்தங்களாகும். அதை அறிந்தவன் எவனோ, அவனே வேதங்களை அறிந்தவனாவான் [1]. 15:1


[1] "அஸ்வத்தம் Aswattha" என்பது இவ்வுலக வாழ்வின் பாதையை உருவகமாகக் காட்டும் ஒரு புனிதமான அரசமரமாகும். அதன் வேர்கள் மேலே இருக்கின்றன; ஏனெனில் அந்த வேர்களே பரமாத்மாவாகும். அதன் கிளைகள் கீழே இருக்கின்றன. அவை சிறு தெய்வங்களாகும். அதன் இலைகள் வேதங்களின் புனிதப் பாடல்களாகும் {சந்தங்களாகும்}. இலைகள் அந்த மரத்தை உயிருடன் நிலைக்கச் செய்து அதன் பழங்களையும் உண்டாக்குவது போலவே, வேதங்கள், பரமாத்மாவை வேராகக் கொண்ட அந்த மரத்தை ஆதரித்து முக்திக்கு வழிவகுக்கின்றன என்பதே இங்குப் பொருள் என்கிறார் கங்குலி.

கீழ்நோக்கியும், மேல்நோக்கியும் நீண்டிருக்கும் அதன் கிளைகள், குணங்களால் வளர்கின்றன; அதன் முளைகளே {தளிர்களே} புலன்நுகர் பொருட்களாகும். அதன் வேருக்குக் கீழே {கீழ்நோக்கிச் செல்லும் வேர்கள்}, செயல்களுக்கு வழிவகுக்கும் மனிதர்களின் உலகம் {நரவுலகம்} வரை நீடித்திருக்கிறது [2]. 15:2

[2] "கீழ்நோக்கியும், மேல்நோக்கியும்" என்பது படைக்கப்பட்ட பொருட்களில் உயர்ந்ததில் இருந்து தாழ்ந்தது வரை என்பதாகும். "குணங்களால் பெருகுவது" என்பது உடலாகவும், புலன்களாகவும், இன்னும் பலவாகவும் தோன்றும் குணங்களாகும். முளைகள் என்பன புலன்நுகர் பொருட்களாகும். கிளைகளில் முளைகள் எப்படிப் பற்றியிருக்கின்றனவோ அப்படி அவை {புலன்நுகர் பொருட்கள்} புலன்களைப் பற்றியிருக்கின்றன என்பது இங்கே பொருள். கீழ்நோக்கி நீண்டிருக்கும் வேர்கள் என்பன பல்வேறு விதமான கேளிக்கைகளில் கொண்ட ஆசைகளாகும் என்று டெலங்க் சொல்வதாக இங்கே விளக்குகிறார் கங்குலி.

இங்கே (கீழே {இந்த உலகத்தில்}) அதன் {அந்த மரத்தின்} வடிவமோ, (அதன்) முடிவோ, (அதன்) தொடக்கமோ, (அதன்) ஆதரவோ இப்படி அறியப்படுவதில்லை. உறுதியாக நிலைத்திருக்கும் இந்த அஸ்வத்தா {அரச மரத்தின்} வேர்களை, "எவனில் இருந்து இந்தப் பழைமையான வழியின் (உலகியல்) வாழ்வு தொடர்கிறதோ, அந்தப் பழங்காலத் தந்தையின் {ஆதி புருஷனின்} பாதுகாப்பை நான் நாடுவேன்" என்று நினைத்து, கடும் ஆயுதம் கொண்டு, கவலையில்லாமல் அதை வெட்டி, எங்குச் சென்றால், ஒருவன் மீண்டும் திரும்ப வேண்டாமோ அந்த இடத்திற்குச் செல்ல அவன் முயல வேண்டும். 15:3-4

செருக்கு மற்றும் மயக்கத்தில் இருந்து விடுபட்டோர், தீய பற்றுகளை அடக்கியோர், தனிப்பட்ட தனக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள உறவை தியானிப்பதில் உறுதியாக இருப்போர், ஆசை விலகியோர், இன்பம் மற்றும் துன்பம் (போன்ற) முரண்பட்ட இரட்டைகளில் இருந்து விடுபட்டு, மயக்கமில்லாதிருப்போரே அந்த நிலைத்த நிலையை {பரமபதத்தை} அடைகின்றனர். 15:5

அதை {பரமபதத்தை} சூரியனோ, சந்திரனோ, நெருப்போ ஒளியூட்டுவதில்லை. எங்கே சென்றால் எவரும் திரும்புவதில்லையோ, அதுவே எனது உயர்ந்த நிலையாகும் {பரமபதமாகும்}. 15:6

என்னில் நித்திய பகுதி ஒன்றே இவ்வுலக வாழ்வில் தனிப்பட்ட ஆத்மாவாகி, இயற்கையைச் சார்ந்திருக்கும் (ஐந்து) புலன்களும், ஆறாவதாக மனத்தையும் சேர்த்து தன்னுள் கவர்கிறது. 15:7

காற்றானது தங்கள் நிலைகளில் இருந்து நறுமணங்களை எடுத்துச் செல்வது போல, (இந்த உடல் எனும் சட்டகத்தின்) ஆட்சியாளன் {ஆத்மா} (ஓர்) உடலை அடைந்தாலோ, துறந்தாலோ இவற்றையெல்லாம் {புலன்களை} எடுத்துச் செல்கிறான் {செல்கிறது}. 15:8

காது, கண், தீண்டல் - சுவை - மணம் ஆகியவற்றின் உறுப்புகள், மற்றும் மனம் ஆகியவற்றில் ஆளுமை செலுத்தி அவன் {ஆத்மா}, புலன் நுகர் பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான் {அனுபவிக்கிறது}. 15:9

(உடலை) விட்டு வெளியேறும்போதோ, அதைத் தரிக்கும்போதோ, அனுபவிக்கும்போதோ, குணங்களில் ஒன்றியிருக்கும்போதோ மயக்கமுற்றிருப்போர் (அவனைக்) {ஆத்மாவைக்} காண்பதில்லை. (எனினும்) அறிவுக்கண் கொண்டோரே அவனைக் காண்கின்றனர் [3]. 15:10

[3] குணங்களில் ஒன்றியிருப்பது என்பது புலன்நுகர் பொருட்களை உணர்வதோ அல்லது இன்ப துன்பங்களை அனுபவிப்பதோ ஆகும் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

(அந்த எல்லை நோக்கி) முயலும் அர்ப்பணிப்பாளர்கள் {பக்தர்கள்}, அவன் {ஆத்மா} தங்களில் வசிப்பதைக் காண்கின்றனர். (எனினும்), அறிவற்றவர்கள், தங்கள் மனதைக் கட்டுப்படுத்தாதோர் ஆகியோர் (தாங்களே) முயன்றாலும் அவனைக் {ஆத்மாவைக்} காண்பதில்லை. 15:11

சூரியனில் குடிகொண்டிருக்கும் எந்த ஒளியானது இந்தப் பரந்த அண்டத்துக்கே ஒளியூட்டுகிறதோ, (எது) சந்திரனிலும், (எது) நெருப்பிலும் உள்ளதோ, அந்த ஒளி எனதே என்பதை அறிவாயாக. 15:12

பூமிக்குள் நுழைந்து எனது சக்தியால் நான் உயிரினங்களைத் தாங்குகிறேன்; சாறு நிறைந்த நிலவாகி நானே அனைத்துப் பயிர்களையும் விளைவிக்கிறேன் [4]. 15:13

[4] இங்கே சொல்லப்படும் சோமா என்பது சந்திரனையே குறிக்கும், வேள்விகளில் குடிக்கப்படும் சோமச்சாற்றைக் குறிக்காது என்பதில் கேள்வியே எழ முடியாது. நிலவே அனைத்துப் பயிர்களையும் விளைவிக்கிறது. இந்து புனித இலக்கியத்தில் இருந்து எண்ணற்ற வாக்கியங்களை இதற்கு ஆதரவாகக் காட்ட முடியும். எனவே, திரு.டேவீஸ் சோமனை சோமச்சாறு என்று விளக்குவது தவறென்பது தெளிவு என இங்கே விளக்குகிறார் கங்குலி.

நானே உயிர்வெப்பமாகி (வைசுவாநரனாகி), சுவாசிக்கும் உயிரினங்களின் உடல்களில் வசித்து, (மேலும்) மேல்நோக்கு {பிராணன்}, கீழ்நோக்கு {அபானன்} உயிர்மூச்சுகளில் {வாயுக்களுடன்} கலந்து, நால் வகை உணவுகளையும் நானே செரிக்கிறேன் [5]. 15:14

[5] இங்கே நால்வகை உணவுகள் என்பன: மென்று உண்பன, உறிஞ்சி உண்பன, நக்கி உண்பன, விழுங்கிக் குடிப்பன என்பனவாகும்.

நான் அனைத்தின் இதயங்களிலும் அமர்ந்திருக்கிறேன். நினைவு, அறிவு, இவை இரண்டையும் இழந்த நிலை ஆகியவை என்னிடம் இருந்தே உண்டாகின்றன. வேதங்கள் அனைத்தாலும் (அவற்றின் துணை கொண்டு) அறியப்படும் அறிவின் பொருள்கள் நானே. வேதாந்தங்களின் ஆசிரியன் நானே, நான் மட்டுமே வேதங்களை அறிவேன் [6]. 15:15

[6] "அபோஹநம் Apohanam" என்பது இழத்தல் அல்லது நீக்கல் என்ற பொருளைத் தரும். இது நன்கு அறியப்பட்ட வார்த்தையாகும். இங்கே அதன் பயன்பாடும் மிக இயல்பாக இருக்கிறது. "நானே நினைவும் அறிவும் ஆவேன்" என்பது அவற்றை நற்செயலுக்குப் பயன்படுத்துவோரைக் குறித்ததாகும். "இவற்றை இழக்கும் நிலையும் நானே" என்பது அவற்றைத் தீச்செயலுக்குப் பயன்படுத்துவோரைக் குறித்ததாகும். திரு.டேவீஸ் இதைத் தவறான முறையில் "அறிவின் சக்தி" என்று சொல்கிறார் என இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி.

மாறக்கூடியன {க்ஷர புருஷன்}, மாற்றமுடியாதன {அக்ஷர புருஷன்} என்ற இரண்டு {உயிர்} பொருட்கள் இவ்வுலகில் இருக்கின்றன. மாறக்கூடியன {க்ஷர புருஷன்} என்பன (இந்த) உயிரினங்கள் அனைத்துமாகும். மாறாத ஒன்றே {கூடஸ்த} மாற்ற முடியாதது {அக்ஷர புருஷன்} என்று அழைக்கப்படுகிறது {அழைக்கப்படுகிறான்} [7]. 15:16

[7] "கூடஸ்த Kutashtha" என்பது K.T.டெலங்கால் "கவலையற்றவன்" என்று உரைக்கப்படுகிறது. திரு.டேவீஸ் "உயர்ந்த தலைவன்" என்று கொள்கிறார். தானோ "சமமானவன், மாற்றமில்லாதவன்" என்று அறிஞர்களால் சொல்லப்படுவதை ஏற்பதாக இங்கே சொல்கிறார் கங்குலி.

ஆனால், நித்தியமானவனும், மூன்று உலகங்களிலும் படர்ந்தூடுருவி இருப்பவனும், (அவற்றைத்) தாங்குபவனும் பரமாத்மா என்று அழைக்கப்படுபவனுமான இன்னுமொரு சிறந்தவன் இருக்கிறான். (மேலும்) மாறக்கூடியனவற்றுக்கு {க்ஷர புருஷனுக்கு} மேம்பட்டவனாகவும், மாற்றமுடியாதவனை {அக்ஷர புருஷனை} விட உயர்ந்தவனாகவும் நான் இருக்கிறேன்; இதன் காரணமாகவே, (மனிதர்களின்) உலகிலும், வேதத்திலும் புருஷோத்தமன் (உயர்ந்தவன்) என்று நான் கொண்டாடப்படுகிறேன். 15:17-18

மயக்கமடையாமல் எவன் என்னை இந்த உயர்ந்தவனாக {புருஷோத்தமனாக} அறிகிறானோ, ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைத்தையும் அறிந்த அவன், {என்னையே அனைத்தின் ஆன்மாவாக நினைத்து} என்னையே அனைத்து வழியிலும் வழிபடுகிறான். 15:19

ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இப்படியே,  பெரும் புதிர்களைக் கொண்ட இந்த அறிவானது என்னால் (உனக்கு) அறிவிக்கப்படுகிறது. ஓ! பாரதா {அர்ஜுனா}, இதையறிந்து, அறிவைக் கொடையாகக் கொள்ளும் ஒருவன், செய்யப்பட வேண்டிய தேவைகள் அனைத்தையும் செய்திருப்பான்" என்றான் {கிருஷ்ணன்}. 15:20


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்