Tuesday, October 13, 2015

"யுதிஷ்டிரன் இழிந்தவன்" என்ற வீரர்கள்! - பீஷ்ம பர்வம் பகுதி - 043அ

"Yudhishthira is an infamous wretch" said the warriors! | Bhishma-Parva-Section-043 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் - 1)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் மீண்டும் வில்லை எடுத்ததும் பாண்டவர் தரப்பு ஆரவாரம் செய்ந்தது; அனைவரும் போருக்குத் தயாரான போது யுதிஷ்டிரன் தனது கவசத்தையும் ஆயுதங்களையும் துறந்து எதிரிப்படையை நோக்கி நடந்து சென்றது; கௌரவப் படை வீரர்கள் யுதிஷ்டிரனை நிந்தித்தது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தனஞ்சயன் {அர்ஜுனன்} மீண்டும் (தனது) கணைகளையும், காண்டீவத்தையும் எடுத்ததைக் கண்ட (பாண்டவத் தரப்பில் உள்ள) வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உரத்த குரலில் ஆர்ப்பரித்தனர். பாண்டவர்களும், சோமகர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்களும், மகிழ்ச்சியால் நிறைந்து, கடலில் பிறந்தவைகளான தங்களது சங்குகளை முழங்கினர். பேரிகைகள், காகளங்கள், ஜயமங்களைகள், மாட்டுக் கொம்புகள் ஆகியன ஒன்றாக அடிக்கப்பட்டும், ஊதப்பட்டும் அங்கே எழுந்த முழக்கமானது, பெரும் ஒலியுடையதாக இருந்தது.


பிறகு, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, அங்கே கந்தர்வர்கள், பித்ருக்கள், சித்தர் மற்றும் சாரணர்களின் கூட்டங்கள் ஆகியவற்றுடன் கூடிய தேவர்கள், (அக்காட்சியைச்) சாட்சியாகக் காணும் விருப்பத்தில் அங்கே வந்தனர். உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்களும், அந்தப் பெரும் படுகொலையைக் காண்பதற்காக, நூறுவேள்விகளைச் செய்தவனின் {இந்திரனின்} தலைமையிலான அந்தக் கூட்டத்துடன் அங்கே வந்தனர்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரு கடல்களைப் போல இருந்த அந்த இரு படைகளும் மோதலுக்குத் தயாராகவும், தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டும் இருப்பதைக் கண்ட நீதிமானான வீர மன்னன் யுதிஷ்டிரன், தனது கவசத்தைக் கழற்றி, தனது அற்புத ஆயுதத்தை ஒரு புறமாக வைத்துவிட்டு, கூப்பிய கரங்களுடன் தனது தேரில் இருந்து விரைவாக இறங்கி, கட்டுப்படுத்தப்பட்ட பேச்சுடன் {மௌனமாக}, பாட்டனைப் {பீஷ்மரைப்} பார்த்துக் கொண்டே, எதிரிப்படை (நின்று கொண்டு) இருந்த திசையை நோக்கி, கிழக்கு முகமாகக் கால்நடையாகச் சென்றான்.

(இப்படி) அவன் {யுதிஷ்டிரன்} செல்வதைக் கண்ட குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, விரைவாகத் தனது தேரில் இருந்து இறங்கி, தனது (பிற) சகோதரர்களுடன் அவனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து சென்றான். தலைவன் வாசுதேவனும் {கிருஷ்ணனும்} அவனுக்குப் பின்னே பின்தொடர்ந்து சென்றான். இதனால் பதட்டம் நிறைந்த (அவனது {யுதிஷ்டிரனின்} படையில் இருந்த) முக்கியமான மன்னர்களும், அதே பாதையில் பின்தொடர்ந்து சென்றார்கள்.

அப்போது அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உமது தம்பிகளைக் கைவிட்டு, கால்நடையாக, கிழக்கு முகம் நோக்கி, எதிரிக்கூட்டத்திடம் செல்லும் உமது செயல் யாது?" என்று கேட்டான் {அர்ஜுனன்}.

பீமசேனன் {யுதிஷ்ட்ரனிடம்}, "ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, உமது கவத்தையும் ஆயுதங்களையும் கைவிட்டு, கவசம் தரித்திருக்கும் எதிரி வீரர்களை நோக்கி, ஓ! பூமியின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, உமது தம்பிகளையும் விட்டுவிட்டு எங்கே செல்கிறீர்?" என்று கேட்டான் {பீமன்}.

நகுலன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, எனது மூத்த அண்ணனான நீர் இந்த வழியில் செல்வது (கண்டு) எனது நெஞ்சம் கலங்குகிறது. (எங்களுக்குச்) சொல்லும், எங்கே செல்கிறீர்?" என்று கேட்டான் {நகுலன்}.

சகாதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "எண்ணற்றவர்களாகவும், பயங்கரமாகவும் இருக்கும் இந்த எதிரிப் படைப்பிரிவுகள் நம்மிடம் போரிடவே இங்கு வந்திருக்கின்றன. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நமது எதிரிகளின் திசையில் நீர் எங்கே செல்கிறீர்?" என்று கேட்டான் {சகாதேவன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "தனது தம்பிகள் இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தாலும், ஓ! குருகுலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, மௌனத்துடன் எதுவும் சொல்லாமல் தொடர்ந்து சென்றான்.

பெரும் அறிவும், உயர் ஆன்மாவும் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, புன்னகைத்தபடியே அவர்களிடம், (அப்போது), "இவரது நோக்கத்தை நான் அறிவேன். தனக்கு மேன்மையான பீஷ்மர், துரோணர், கிருபர், சல்லியன் (போன்றவர்களுக்கு) தனது மரியாதைகளைச் செலுத்திய பிறகு, எதிரியுடன் இவர் போரிடப் போகிறார். தனது ஆசான்கள், வயதில் மூத்த மரியாதைக்குரியவர்கள், தனது சொந்தங்கள் ஆகியோருக்கு விதிப்படி தனது மரியாதைகளைச் செலுத்திய பிறகு, தனக்கு மேன்மையானவர்களுடன் எவன் போரிடுவானோ, அவன், போரில் நிச்சயமாக வெற்றிபெறுவான் என்பது பழங்கால வரலாறுகளில் இருந்து கேள்விப்படப்படுகிறது. இதுவே என் எண்ணமும் கூட" என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணன் இதைச் சொல்லிக் கொண்டிருந்த போது, திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} படைப்பிரிவின் மத்தியில் "ஐயோ" என்றும் "ஓ" என்றும் பெருத்த ஆரவாரம் எழுந்தது. ஆனால் (படையில் இருந்த) பிறரோ அமைதியாக இருந்தனர். யுதிஷ்டிரனைக் கண்ட திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} போர்வீர்கள் தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர், "இவன் தனது குலத்தின் இழிந்தவன். இந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அச்சத்தால் பீஷ்மரை நோக்கி வருகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது. தனது தம்பிகளுடன் கூடிய யுதிஷ்டிரன் (பீஷ்மரின்) பாதுகாப்பை நாடுபவன் ஆகிவிட்டான். தனஞ்சயன் {அர்ஜுனன்}, பாண்டு மகனான விருகோதரன் {பீமன்}, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரின் பாதுகாப்பைக் கொண்ட இந்தப் பாண்டுவின் (மூத்த) மகன் {யுதிஷ்டிரனே} ஏன் அஞ்சுகிறான்? இந்த உலகத்தால் கொண்டாடப்பட்டாலும் கூட, இவன் பலமற்றவனாகவும், போரில் நெஞ்சம் நிறைந்த அச்சம் கொண்டவனாகவும் இருப்பதால், ஒரு போதும் இவன் க்ஷத்திரிய வகையில் பிறந்திருக்க முடியாது" என்று பேசிக் கொண்டனர். பிறகு அந்த வீரர்கள் அனைவரும் கௌரவர்களைப் புகழ்ந்தனர். பிறகு இன்புற்ற அவர்கள் அனைவரும், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் தங்களது ஆடைகளை அசைத்தவண்ணம் இருந்தார்கள்.

மேலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே (அப்போது) தனது தம்பிகள் அனைவரோடும், கேசவனோடும் {கிருஷ்ணனோடும்} கூடிய யுதிஷ்டிரனை அந்த வீரர்கள் அனைவரும் நிந்தித்தனர். இப்படி யுதிஷ்டிரனை நிந்தித்த அந்தக் கௌரவப் படையினர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விரைவில் மீண்டும் அமைதியடைந்தனர். "இந்த மன்னன் என்ன சொல்வான்? பீஷ்மர் என்ன பதில் சொல்வார்? தன் பலத்தில் தற்பெருமை நிறைந்த பீமன் என்ன சொல்வான், கிருஷ்ணனும் அர்ஜுனனும் என்ன சொல்வார்கள்? உண்மையில் யுதிஷ்டிரனுக்குச் சொல்ல வேண்டியது என்ன?" என்று யுதிஷ்டரனைக் குறித்த ஆர்வம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இரு படைகளிலும் பெரிதாக இருந்தது.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்