Tuesday, October 13, 2015

பாட்டனையும் ஆசானையும் வணங்கிய யுதிஷ்டிரன் - பீஷ்ம பர்வம் பகுதி - 043ஆ

Yudhishthira saluted the Grandsire and his Preceptor | Bhishma-Parva-Section-043b | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 02)

பதிவின் சுருக்கம் : தன் தேரைவிட்டு இறங்கி கைகூப்பிய படி சென்ற யுதிஷ்டிரன் நேரே பீஷ்மரிடம் சென்று அனுமதி கோருவது; வரமும் கேட்பது; பிறகு துரோணரிடம் சென்று அனுமதி கோருவது; வரமும் கேட்பது...

(அதே வேளையில்), அம்புகளும் வேல்களும் நிறைந்த எதிரிப்படையைத் ஊடுருவிச் சென்ற மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகள் சூழ பீஷ்மரை நோக்கி முன்னேறினான். அவரது {பீஷ்மரின்} பாதங்களைத் தன் இரு கைகளாலும் பற்றிய அந்தப் பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, போருக்குத் தயாராக இருந்த சந்தனுவின் மகனிடம் {பீஷ்மரிடம்} (இவ்வார்த்தைகளைப்) பேசினான்.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! வெல்லப்பட முடியாதவரே {பீஷ்மரே}, நான் உம்மை வணங்குகிறேன். உம்முடன் நாங்கள் போரிடப் போகிறோம். இக்காரியத்தில் (எங்களுக்கு) உமது அனுமதியை அருள்வீராக. (உமது) ஆசியையும் (எங்களுக்கு) அளிப்பீராக" என்றான் {யுதிஷ்டிரன்}.


அதற்குப் பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பூமியின் தலைவா, ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, இந்தப் போரில் இப்படி என்னிடம் நீ வராமல் இருந்திருந்தால், ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நீ தோல்வி அடையவே நான் உன்னைச் சபித்திருப்பேன். ஓ! மகனே {யுதிஷ்டிரா}, நான் (உன்னிடம்) மனம் நிறைந்தேன். போரிட்டு வெற்றியை அடைவாயாக. ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, போரில் நீ வேறு எதை விரும்புவாயோ அவற்றையும் அடைவாயாக. ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, எங்களிடம் நீ விரும்பும் வரத்தையும் கேட்பாயாக. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, இது {இந்தக் காரியம்} இப்படி நடந்திருப்பதால் தோல்வி உனதாகாது. மனிதன் செல்வத்திற்கு அடிமையானவன். ஆனால் செல்வம் எவனுக்கும் அடிமையில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதுவே உண்மை. நான் கௌரவர்களின் செல்வத்தால் கட்டப்பட்டு இருக்கிறேன். ஓ! குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இதன் காரணமாகவே, ஓர் அலியைப் போல, "கௌரவர்களின் செல்வத்தால் நான் கட்டப்பட்டிருக்கிறேன்" என்ற இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன். போரைத் தவிர்த்து, நீ வேறு எதை விரும்புகிறாய்?" என்று கேட்டார் {பீஷ்மர்} [1].

[1] இங்கே பீஷ்மர் சொல்வது இதுதான்: நான் கௌரவர்களால் கட்டப்பட்டிருக்கிறேன். எனவே என்னால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. உனக்கு எதிராகப் போரிட நான் கடமைப்பட்டுள்ளேன். எனினும், "என்னிடம் நீ என்ன கேட்பாய்?" என்று, கேட்பதைக் கொடுக்க முடிந்தவன் போலப் பேசுகிறேன். எனவே, அலிகளைப் போல, எனது வார்த்தைகளும் பொருளற்றவையாகவும், வீணானவையாகவும் இருக்கின்றன. Klivavat {ஆண் தன்மையற்ற நபர்} என்பதை நீலகண்டர் Kataravat {பிழையுள்ளவன்} என்று விளக்குகிறார். அப்படியே இருந்தாலும் கூட, இரண்டின் பொருளும் ஒன்றுதான் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பெரும் அறிவைக் கொண்டவரே {பீஷ்மரே}, நீர் கௌரவர்களுக்காகப் போரிடுவீராக. எனினும், நாளுக்கு நாள் எனது நன்மையையும் விரும்பி, எனது நலன்களையும் ஆலோசிப்பீராக. எப்போதும் இதுவே (உம்மிடம்) எனது வேண்டுதலாகும்" என்றான் {யுதிஷ்டிரனிடம்}.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, ஓ! குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இதில் என்னால் உனக்கு என்ன உதவ முடியும்? நிச்சயமாக, நான் (உனது) எதிரிகளுக்காகவே {துரோனாதிபதிகளுக்காகவே} போரிடுவேன். நீ சொல்ல வேண்டியதை என்னிடம் சொல்வாயாக" என்றார் {பீஷ்மர்}.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஐயா, ஓ! பாட்டா {பீஷ்மரே}, வெல்லப்பட முடியாத உம்மை நாங்கள் எவ்வாறு போரில் வீழ்த்துவது? எனது நன்மைக்கான இதில், நீர் ஏதாவது நன்மையைக் கண்டால், உண்மையில் இஃதை எனக்குச் சொல்வீராக" என்றான் {யுதிஷ்டிரன்}.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, தேவர்களின் தலைவனாகவே {இந்திரனாகவே} எவனும் இருந்தாலும் கூட, நான் போரிடும்போது, என்னைப் போரில் வீழ்த்துபவன் எவனையும் நான் காணவில்லை" என்றார் {பீஷ்மர்}.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா {பீஷ்மரே}, எனது வணக்கங்கள் உமதாகட்டும். எனவே, (இதை) நான் உம்மிடம் கேட்கிறேன். போரில் எதிரிகளால் உமது மரணத்தைப் எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக" என்று கேட்டான் {யுதிஷ்டிரனிடம்}.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, போரில் என்னை வீழ்த்த வல்ல ஒருவனையும் நான் காணவில்லை. எனது மரணத்திற்கான நேரமும் இன்னும் வரவில்லை. என்னிடம் மீண்டும் வருவாயாக" என்றார் {பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடன்} தொடர்ந்தான், "பிறகு, ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, மீண்டும் பீஷ்மருக்குத் தலை வணங்கிய யுதிஷ்டிரன், அவரது வார்த்தைகளை ஏற்றான். பிறகு அந்த வலிய கரங்களைக் கொண்டவன் {யுதிஷ்டிரன்}, தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த வீரர்கள் அனைவருக்கும் மத்தியில், தன் தம்பிகள் துணையுடன் ஆசானின் (துரோணரின்) தேரை நோக்கி முன்னேறினான். துரோணரை வணங்கி அவரை வலம் வந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது நன்மைக்கான வார்த்தைகளை அந்த வெல்லப்பட முடியாத வீரரிடம் {துரோணரிடம்} பேசினான்.

யுதிஷ்டிரன் {துரோணரிடம்}, "ஓ! வெல்லப்பட முடியாதவரே, ஓ மறுபிறப்பாளரே {பிராமணரே_துரோணரே}, உமது அனுமதியுடன், எனது எதிரிகள் அனைவரையும் வீழ்த்தும் வண்ணம், பாவமீட்டாமல் நான் போரிடுவது எவ்வாறு? [2]" என்று கேட்டான்.

[2] vigatakalmashas {களங்கமற்ற; நேர்மையான; தூய} என்பது துரோணரைக் குறிக்கிறது என்று நீலகண்டர் நினைக்கிறார். "தூய இதயத்துடன் எனக்குச் சொல்வீராக" என்பது போல ஒரு பொருளை அவர் பரிந்துரைக்கிறார். நீலகண்டர் சொல்வது சரியல்ல என நான் நினைக்கிறேன் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

துரோணர் {யுதிஷ்டிரனிடம்}, "போரிடத் தீர்மானித்து, (இப்படி) நீ என்னிடம் வராது இருந்திருந்தால், உனது முழுமையான வீழ்ச்சிக்கு நான் உன்னைச் சபித்திருப்பேன். எனினும், ஓ! பாவமற்றவனே, ஓ! யுதிஷ்டிரா, உன்னிடம் மனநிறைவையும், மதிப்பையும் {கௌரவத்தையும்} அடைந்தேன். நான் உன்னை அனுமதிக்கிறேன், போரிடு, வெற்றியை அடைவாயாக. நான் உனது விருப்பத்தையும் நிறைவேற்றுவேன். நீ என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல். இந்தச் சூழ்நிலையில், போரைத் தவிர்த்து, நீ என்ன விரும்புகிறாய்? மனிதன் செல்வத்திற்கு அடிமையாக இருக்கிறான். ஆனால் செல்வம் எவனுக்கும் அடிமையில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இஃது உண்மையே. நான் கௌரவர்களின் செல்வத்தால் கட்டப்பட்டு இருக்கிறேன். இதன் காரணமாகவே, ஓர் அலியைப் போல நான் கௌரவர்களுக்காகப் போரிட வேண்டியிருக்கிறது. மேலும், இதன் காரணமாகவே, ஓர் அலியைப் போல, "போரைத் தவிர்த்து, நீ வேறு எதை விரும்புகிறாய்?" என்ற இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன். நான் கௌரவர்களுக்காகப் போரிடுவேன். ஆனால் உனது வெற்றிக்காகவே வேண்டுவேன்" என்றார் {துரோணர்}.

யுதிஷ்டிரன் {துரோணரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே {துரோணரே}, எனது வெற்றிக்காக வேண்டி, எனது நன்மைக்காக ஆலோசிப்பீராக. எனினும், கௌரவர்களுக்காகப் போரிடுவீராக. இதையே நான் உம்மிடம் வரமாகக் கேட்கிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.

துரோணர் {யுதிஷ்டிரனிடம்}, "நான் எதுவரை போரிடுவேனோ, அதுவரை வெற்றி உனதாக முடியாது. (எனவே), ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, என்னை விரைவாகக் கொல்ல உனது தம்பிகளுடன் முயல்வாயாக" என்றார் {துரோணர்}.

யுதிஷ்டிரன் {துரோணரிடம்}, "இதற்கு ஐயோ, ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {துரோணரே}, உமது மரணத்திற்கான வழிமுறைகளை (எங்களுக்குச்) சொல்லும். ஓ! ஆசானே {துரோணரே}, நெடுஞ்சாண் கிடையாக என்னைக் கிடத்திக் கொண்டு நான் உம்மிடம் இதைக் கேட்கிறேன். உமக்கு (எனது) வணக்கங்கள்" என்றான்.

துரோணர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, "கோபம் தூண்டப்பட்ட நிலையில் போரில் ஈடுபட்டு, தொடர்ச்சியாக அம்புகளைப் பொழிந்து கொண்டு களத்தில் நிற்கும் என்னைக் கொல்லத்தக்க எதிரி எவனையும் நான் காணவில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எப்போது நான் என் ஆயுதங்களைக் கைவிட்டு, சுற்றுப்புறத்தில் இருந்து விடுபட்டு (யோகத் தியானத்தில்) இருக்கிறேனோ, அப்போது தவிர என்னைக் கொல்ல எவனாலும் முடியாது. நான் இதை உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். நம்பத்தகுந்த பேச்சுக் கொண்டவனிடம் இருந்து முற்றிலும் ஏற்கத்தகாத {இனிமையற்ற} எதையாவது கேட்டால், போரில் நான் எனது ஆயுதங்களைக் கைவிடுவேன் என்பதையும் நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்" என்றார் {துரோணர்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்