Friday, November 06, 2015

பாண்டவர்களின் கிரௌஞ்ச வியூகம் - பீஷ்ம பர்வம் பகுதி - 051

The Second day's commence! | Bhishma-Parva-Section-051 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 09)

பதிவின் சுருக்கம் : இரண்டாம் நாள் போர் துவங்குவதற்காகக் கௌரவர்களும் பாண்டவர்களும் செய்த ஏற்பாடுகள்; சங்கு முழக்கங்கள்; சிங்க முழக்கங்கள்...

துரோணர் மற்றும் துச்சாசனன் முதலிய
கௌரவப் படையினருடன்
பேசும் துரியோதனன்
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அளவிலா சக்தி கொண்ட பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} அமைக்கப்பட்டதும், வலிமையானதும், பயங்கரமானதும், கிரௌஞ்சம் என்று அழைக்கப்பட்டதுமான அந்த அணிவகுப்பை {கிரௌஞ்ச வியூகத்தைக்} கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஆசான் {துரோணர்}, கிருபர், சல்லியன், சோமதத்தனின் மகன் {பூரிஸ்வரவஸ்}, விகர்ணன், அஸ்வத்தாமன், துச்சாசனன் தலைமையிலான தனது தம்பிகள் மற்றும் {தன் தரப்பில்} போருக்காகத் திரண்டிருந்த எண்ணிலடங்கா வீரர்களை அணுகி, அவர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் நேரத்திற்குத் தகுந்த வார்த்தைகளைச் சொன்னான். அவன் {துரியோதனன்}, "பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்திருக்கும் நீங்கள் அனைவரும் சாத்திரங்களை அறிந்தவர்களாக இருக்கிறீர்கள். வலிமைமிக்கத் தேர்வீரர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் பாண்டு மகன்களையும் அவர்களது துருப்புகளையும் தனியாகவே கொல்லத் தகுந்தவர்களாக இருக்கிறீர்கள். அப்படியிருக்கையில், ஒன்றாகத் திரண்டிருக்கும் நீங்கள் அனைவரும் சேர்ந்து எவ்வளவு அதிகம் செய்ய முடியும்? {என்பதை நினைத்துப் பாருங்கள்}.


எனவே, பீஷ்மரால் பாதுகாக்கப்படும் நமது படை அளவிட முடியாததாக இருக்கிறது. அதே வேளையில், பீமனால் பாதுகாக்கப்படும் அவர்களது {பாண்டவர்களின்} படை அளவிடக்கூடியதாகவே இருக்கிறது [1]. சம்ஸ்தானர்கள், சூரசேனர்கள், வேணிகர்கள் {வேத்ரிகர்கள்} [2], குகுரர்கள், ரேசகர்கள் {ஆரோசகர்கள்}, திரிகார்த்தர்கள், மத்ரகர்கள், யவனர்கள், சத்ருஞ்சயன், துச்சாசனன், அற்புத வீரனான விகர்ணன், நந்தன், உபநந்தகன், சித்திரசேனன், மணிபத்ரகர்கள் {பாரிபத்ரகர்கள்} ஆகியோர் தங்கள் (அவரவர்) துருப்புகளோடு பீஷ்மரைப் பாதுகாக்கட்டும்" என்றான் {துரியோதனன்}

[1] இதே போன்ற வரி பகவத் கீதையின் முதல் பகுதியில் (இந்தப் பர்வத்தின் {பீஷ்ம பர்வத்தின்} பகுதி 25ல் 10ம் பத்தியில் {சுலோகத்தில்) வருகிறது. அங்கே விரிவுரையாளர்களை, அதிலும் குறிப்பாக ஸ்ரீதரரைப் பின்பற்றியிருக்கும் நான் Aparyaptam மற்றும் Paryaptam ஆகியவற்றைப் போதுமானதற்குக் குறைந்த மற்றும் போதுமான என்று விளக்கியிருக்கிறேன். எனினும், அது தவறாக இருக்கக்கூடும் என்றும் இங்கே தோன்றுகிறது", என இங்கே விளக்குகிறார் கங்குலி.

[2] { } இந்த வகை அடைப்புக்குறிக்குள் இருக்கும் பெயர்கள் வேறு பதிப்பில் கண்டவை

பிறகு, பீஷ்மர், துரோணர், உமது மகன்கள் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பார்த்தர்களுடையதை {பாண்டவர்களின் வியூகத்தை} தாக்குப்பிடிக்கும் வண்ணம் வலிமைமிக்க ஓர் அணிவகுப்பை {வியூகத்தை} {??} வகுத்தார்கள். அதிக அளவிலான துருப்புகளால் சூழப்பட்ட பீஷ்மர், தேவர்களின் தலைவனைப் போலவே, ஒரு வலிமைமிக்கப் படைக்குத் தலைமை தாங்கி முன்னேறினார். பெரும் சக்தி கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தலர்கள், தசார்ணர்கள், மகதர்கள் {மாகதர்கள்}, விதர்ப்பர்கள், மேலகர்கள் {மேகலர்கள்}, கர்ணர்கள், பிராவரணர்கள் {கர்ணப்பிராவரணர்கள்} ஆகியோரோடு அவரை {பீஷ்மரைப்} பின்தொடர்ந்தார். காந்தாரர்கள், சிந்துசௌவீரர்கள், சிபிக்கள், வசாதிகள், போர்க்களத்தின் ரத்தினமான பீஷ்மரைப் பின்தொடர்ந்தார்கள். தனது துருப்புகள் அனைத்துடனும் சேர்ந்த சகுனி பரத்வாஜரின் மகனைப் {துரோணரைப்} பாதுகாத்தான்.

தனது தம்பிகள் அனைவருடனும், அஸ்வாதகர்கள், விகர்ணர்கள், அம்பஷ்டர்கள், கோசலர்கள், தரதர்கள், சகர்கள் க்ஷுத்ரகர்கள், மாலவர்கள் ஆகியோருடனும் கூடிய மன்னன் துரியோதனன், பாண்டவப் படைக்கு எதிராக உற்சாகமாக முன்னேறினான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பூரிஸ்ரவஸ், சலர், சல்லியன், பகதத்தன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் {பீஷ்மரின்} இடது பக்கத்தைப் பாதுகாத்தனர். சோமதத்தன், சுசர்மன், காம்போஜ ஆட்சியாளன் சுதக்ஷிணன், சதயு மற்றும் சுருதயு ஆகியோர் வலது பக்கத்தைப் பாதுகாத்தனர். அஸ்வத்தாமன், கிருபர், சத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் பெரும் பிரிவுகளிலான துருப்புகளுடன் படையின் பின்புறத்தில் நின்றனர். அவர்களுக்கும் பின்னால், கேதுமான், வசுதானன், காசி மன்னனின் பலமிக்க மகன் {அபிபூ} ஆகியோர் இருந்தனர்.

ஓ! பாரதரே, போருக்காக உற்சாகமாகக் காத்திருந்த உமது துருப்புகள் அனைத்தும் பெரும் மகிழ்ச்சியுடன் தங்கள் சங்குகளை ஊதி, சிங்க முழக்கம் செய்தார்கள். அந்தப் (போராளிகளின்) ஒலிகளைக் கேட்டு மகிழ்ச்சியால் நிறைந்தவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவரும் மரியாதைக்குரியவருமான குரு {கௌரவ} பாட்டன் {பீஷ்மர்}, சிங்க முழக்கம் முழங்கி தனது சங்கை எடுத்து ஊதினார். அதன்பேரில், பிறரும் தங்கள் சங்குகள், பேரிகைகள், பல விதங்களிலான காகளங்கள், ஆனகங்கள் ஆகியவற்றை முழங்கினார்கள். அந்த ஒலி ஆரவாரமிக்கப் பேரொலியாக இருந்தது.

வெண்குதிரைகள் பூட்டப்பட்ட பெருந்தேரில் நின்றிருந்த மாதவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், தங்கத்தால் ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கள் அற்புத சங்குகளை முழங்கினார்கள். ரிஷிகேசன் {கிருஷ்ணன்} பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்பட்ட சங்கை ஊதினான். அர்ஜுனன் தேவதத்தையும், பயங்கரச் செயல்களைப் புரியும் விருகோதரன் {பீமன்}, பௌண்ட்ரத்தையும் முழங்கினார்கள். குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் அனந்தவிஜயம் என்ற அழைக்கப்பட்ட சங்கை ஊதினான். அதே வேளையில், நகுலனும் சகாதேவனும் சுகோஷம், மணிபுஷ்பகம் என்று அழைக்கப்பட்ட சங்குகளை எடுத்து முழங்கினார்கள் [3].

[3] இது {போர் ஆரம்பித்தல்} சம்பந்தமாகப் பீஷ்ம பர்வம் பகுதி 25ல் 13 முதல் 20ம் ஸ்லோகம் வரை பார்க்கலாம் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

காசி ஆட்சியாளன் [4], சைப்யன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, பெரும் வில்லாளியான பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்}, திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகியோர் அவரவர் சங்குகள் எடுத்து ஊதி சிங்க முழக்கம் செய்தார்கள். அந்த வீரர்களால் எழுப்பப்பட்ட ஆரவாரமிக்கப் பேரொலி பூமியிலும் வானத்தில் உரக்க எதிரொலித்தது. இப்படியே, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியில் நிறைந்திருந்த குருக்களும் பாண்டவர்களும் மீண்டும் போரிட்டு ஒருவரை ஒருவரை அழிக்க விரைந்து முன்னேறினார்கள்." {என்றான் சஞ்சயன்}.

[4] இதே பகுதியில் காசியின் இளவரசன் கௌரவத் தரப்பில் இருந்து போரிடுவதாகக் குறிப்பு இருக்கிறது. காசியின் மன்னனோ பாண்டவர் தரப்பில் இருந்து போரிடுகிறான்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்