Friday, November 13, 2015

துரோணர் திருஷ்டத்யும்னன் மோதல்! - பீஷ்ம பர்வம் பகுதி - 053

The conflict between Drona and Dhrishtadyumna! | Bhishma-Parva-Section-053 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 11)

பதிவின் சுருக்கம் : துரோணருக்கும் திருஷ்டத்யும்னுக்கும் இடையில் நடைபெற்ற போர்; இடையில் குறுக்கிட்ட பீமன்; பீமனுக்கு எதிராகக் கலிங்கர்களைத் தூண்டிய துரியோதனன்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, சிறந்த முறையில் போரில் முயற்சி செய்பவர்களான பெரும் வில்லாளி துரோணர், பிருஷத குலத்தின் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஆகிய இருவரும் தங்களுக்குள் எப்படிப் போரிட்டுக் கொண்டனர்? சந்தனுவின் மகனான பீஷ்மரால் (கூட) போரில் பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} தப்ப இயலவில்லை எனும்போது, ஓ! சஞ்சயா, முயற்சியை விட விதி மேன்மையானது என்றே நான் கருதுகிறேன். உண்மையில், கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும் பீஷ்மரால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் அழித்து விட முடியும் எனும்போது, ஓ! சஞ்சயா, போரில் தனது ஆற்றலை வெளிப்படுத்தும் அவரால் {பீஷ்மரால்} பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} ஏன் தப்ப இயலவில்லை?" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பயங்கரப் போரைக் குறித்து அமைதியுடன் கேட்பீராக. தேவர்களுடன் கூடிய வாசவனாலும் {இந்திரனாலும்} கூடப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} வெல்ல முடியாது. துரோணர், திருஷ்டத்யும்னனை பல்வேறு வகையான கணைகளால் {பல்லங்களால்} துளைத்து, அவனின் {திருஷ்டத்தும்னனின்} தேரோட்டியைத் தேர் தட்டில் இருந்து விழச் செய்தார். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபம் தூண்டப்பட்ட அந்த வீரர் {துரோணர்}, அற்புதமான தனது நான்கு கணைகளைக் கொண்டு திருஷ்டத்யும்னனின் நான்கு குதிரைகளைத் துன்புறுத்தினார். வீரனான திருஷ்டத்யும்னனும் ஒன்பது {9} கணைகளால் துரோணரைத் துளைத்து, அவரிடம், "நில்லும், நில்லும்" என்று சொன்னான்.

பெரும் ஆற்றல் கொண்டவரும், அளவிலா ஆன்மா கொண்டவருமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, கோபம் நிறைந்த திருஷ்டத்யும்னனைத் தனது கணைகளால் மறைத்தார். பிறகு அவர் {துரோணர்} மரணத்தின் இரண்டாவது கோலைப் போன்றதும், சக்ரனின் {இந்திரனின்} வஜ்ரத்தைப் போன்றதுமான ஒரு பயங்கரக் கணையைப் பிருஷதனின் மகனுடைய {திருஷ்டத்யுன்மனின்} அழிவுக்காக எடுத்தார். பரத்வாஜர் {துரோணர்} அந்தக் கணையைக் கொண்டு குறி பார்ப்பதைக் கண்ட போராளிகளுக்கு மத்தியில் "ஓ" என்றும், "ஐயோ" என்றும் ஓலங்கள் எழுந்தன.

வீரனான திருஷ்டத்யும்னன் அந்தப் போர்க்களத்தில் மலைபோல அசைவற்றுத் தனியாக நின்றான். ஆச்சரியகரமான அவனது ஆற்றலை நாங்கள் அப்போது கண்டோம். தனக்கான மரணத்தைப் போலத் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்ததும், பயங்கரமானதுமான சுடர்விடும் அந்தக் கணையை வெட்டிய அவன் {திருஷ்டத்யும்னன்}, பரத்வாஜரின் மகன் {துரோணரின்} மீது கணைமாரியைப் பொழிந்தான். கடுஞ்சாதனையைச் செய்த அந்தத் திருஷ்டத்யும்னனைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், அப்போது மகிழ்ச்சியால் நிறைந்து பேரொலியுடன் ஆரவாரம் செய்தனர்.

துரோணரைக் கொல்ல விரும்பியவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்த இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தங்கம் மற்றும் வைடூரியம் ஆகியவறால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டி ஒன்றை துரோணரின் மீது ஏவினான். சிரித்து நின்ற பரத்வாஜரின் மகன் {துரோணர்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருப்பதுமான அந்த ஈட்டியை மூன்று துண்டுகளாகத் துண்டித்தார். இப்படித் தனது ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் மேல் கணைகளை மழையெனப் பொழிந்தான்.

அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், அந்தக் கணை மாரியைக் கலங்கடித்தபடி, வாய்ப்புக் கிடைத்த சமயத்தில், துருபதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனுடைய} வில்லை ஒடித்தார். (இப்படி) அந்த மோதலில் தனது வில் ஒடிக்கப்பட்டவனும், பெரும் புகழ் கொண்டவனுமான வலிமைமிக்க வீரன் {திருஷ்டத்யும்னன்}, மலை போன்ற பலம் நிறைந்த ஒரு கனமான கதாயுதத்தைத் துரோணர் மீது விசினான். அவனது {திருஷ்டத்யும்னனின்} கரங்களில் இருந்து வீசப்பட்ட அந்தக் கதாயுதம் துரோணரின் அழிவுக்காகக் காற்றில் நகர்ந்து சென்றது.

அதன் பிறகு நாங்கள் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} அதிசயம் நிறைந்த ஆற்றலைக் கண்டோம். (தனது தேரின்) வேகத்தால், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கதாயுதத்தைக் கலங்கடித்த அவர் {துரோணர்}, கூரிய முனைகள் கொண்டதும், நன்கு கடினமாக்கப்பட்டதும், தங்க இறகுகள் படைத்ததும், சாணைக்கல்லில் கூர் தீட்டப்பட்டதுமான பல கணைகளைப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி அடித்தார். பிருஷதனின் {திருஷ்டத்யும்னனின்} கவசத்தைக் கடந்த அவை, அந்தப் போரில் அவனது இரத்தத்தைக் குடித்தன.

பலாச மரம் (Palash Tree)
Botanical Name: Butea monosperma tree
உயர் ஆன்மா கொண்ட திருஷ்டத்யும்னன் அப்போது, அந்த மோதலில் தனது ஆற்றலை வெளிப்படுத்தி, வேறு ஒரு வில்லை எடுத்துக் கொண்டு, ஐந்து {5} கணைகளால் துரோணரைத் துளைத்தான். பிறகு, இரத்தத்தில் நனைந்த அந்த மனிதர்களில் காளைகளான அவ்விருவரும், வசந்த காலத்தில் மலர்ந்திருக்கும் பலாச மரங்களைப் போலத் தோன்றினார்கள். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டுத் தனது ஆற்றலை வெளிப்படுத்தியவரும், தனது படைப்பிரிவின் தலைமையில் இருந்தவருமான துரோணர், துருபதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனின்} வில்லை மீண்டும் ஒரு முறை ஒடித்தார்.

வில் ஒடிந்தவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்த வீரனை {திருஷ்டத்யும்னனை} மலையில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல எண்ணிலா நேர்க் கணைகளால் அவர் {துரோணர்} மூடினார். மேலும், அவர் {துரோணர்} தனது எதிரியின் {திருஷ்டத்யும்னனின்} தேரோட்டியைத் தேர்த் தட்டில் இருந்து {மீண்டும்} விழச் செய்தார். நான்கு கணைகளால் குதிரைகளையும் விழச்செய்த அந்தத் துரோணர் சிம்ம கர்ஜனை புரிந்தார். மேலும் அவர் {துரோணர்}, மற்றொரு கணையால், திருஷ்டத்யும்னன் கரங்களை மூடியிருந்த தோலுறைகளையும் அறுத்தார். வில் ஒடிக்கப்பட்டு, தேரிழந்து, தனது குதிரைகள் கொல்லப்பட்டு, தேரோட்டி வீழ்த்தப்பட்ட அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, கைகளில் கதாயுதத்துடன் தனது தேரில் இருந்து இறங்கி பெரும் ஆற்றலை வெளிப்படுத்தினான்.

ஆனால், தனது தேரில் இருந்து அவன் {திருஷ்டத்யும்னன்} இறங்குவதற்கு முன்பே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணர், தனது கணைகளால் அந்தக் கதாயுதத்தைச் சுக்குநூறாக வெட்டினார். இந்தச் சாதனை எங்களுக்குப் பெரிதாகத் தெரிந்தது. அதன் பிறகு, பலமிக்கக் கரங்களைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய, பெரிய கேடயத்தையும், அழகிய வாள் ஒன்றையும் எடுத்துக் கொண்டு, சினமிக்க யானையை நோக்கி விரையும் பசிமிகுந்த சிங்கத்தைப் போலத் துரோணரைக் கொல்ல விரும்பி விரைந்தான்.

அதன் பிறகு, நாங்கள் கண்ட பரத்வாஜர் மகனின் {துரோணரின்} ஆற்றலும், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அவரது (கரங்களின்) வேகமும், அவரது கரங்களின் பலமும் அற்புதம் நிறைந்தனவாக இருந்ததன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தனியாகவே அவர் {துரோணர்}, தனது கணை மாரியால் பிருஷதனின் மகனைத் {திருஷ்டத்யும்னனைத்} தடுத்தார். போரில் பெரும் பலத்தைக் கொண்டிருந்தாலும், அவனால் {திருஷ்டத்யும்னனால்} மேலும் முன்னேற முடியாமல் போனது. தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு, அந்தக் கணை மேகங்களைத் தனது கரங்களின் வேகத்தைப் பயன்படுத்திக் கேடயத்தால் விலக்கிக் கொண்டு இருந்த வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னனை நாங்கள் கண்டோம்.

பிறகு, அந்த உயர் ஆன்ம பிருஷதன் மகனுக்கு {திருஷ்டத்யும்னனுக்கு} உதவ விரும்பியவனும் வலிமைமிக்கக் கரங்களும், பெரும் பலம் கொண்டவனுமான பீமன், அங்கே விரைந்து வந்தான். கூரிய ஏழு கணைகளால் துரோணரைத் துளைத்த அவன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விரைவாகப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} மற்றொரு தேரில் ஏற்றச் செய்தான்.

பிறகு, மன்னன் துரியோதனன், பெரும் படைப்பிரிவால் ஆதரிக்கப்பட்ட கலிங்கர்களின் ஆட்சியாளனிடம் பரத்வாஜர் மகனைப் {துரோணரைப்} பாதுகாக்கத் தூண்டினான். பயங்கரமானதும், வலிமைமிக்கதுமான கலிங்கர்களின் படைப்பிரிவு, உமது மகனின் {துரியோதனனின்} உத்தரவின் பேரில் பீமனுக்கு எதிராக விரைந்தது. அப்போது, தேர்வீரர்களில் முதன்மையான துரோணர், பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} கைவிட்டு விட்டு, விராடனுடனும், துருபதனுடனும் ஒரே சமயத்தில் மோதினார்.

போரில் மன்னன் யுதிஷ்டிரனை ஆதரிக்கத் திருஷ்டத்யும்னனும் முன்னேறினான். அப்போது, பயங்கரமானதும், மயிர் கூச்சத்தை ஏற்படுத்துவதும், உலகை அழிப்பதுமான அச்சம் நிறைந்த அந்தப் போர் கலிங்கர்களுக்கும், உயர் ஆன்ம பீமனுக்கும் இடையில் நடைபெற்றது.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்