Monday, November 23, 2015

கருடார்த்தச்சந்திர வியூகங்கள்! - பீஷ்ம பர்வம் பகுதி - 056

Garuda and Halfmoon battle-arrays! | Bhishma-Parva-Section-056 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 14)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர் கருட வியூகத்தை அமைத்தது; அர்ஜுனனும், திருஷ்டத்யும்னனும் அர்த்தச்சந்திர வியூகத்தை அமைத்தது; இரு படைகளிலும் முக்கியப் பகுதிகளில் நின்ற வீரர்களின் பட்டியல்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த {இரண்டாம் நாள்} இரவு கடந்து {மூன்றாம் நாள்} பொழுது விடிந்ததும், எதிரிகளைத் தண்டிப்பவரான சந்தனுவின் மகன் பீஷ்மர், போருக்குத் தயாராகுமாறு (குரு) படைக்கு உத்தரவிட்டார். சந்தனுவின் மகனும் முதிர்ந்தவருமான குரு பாட்டன் {பீஷ்மர்}, உமது மகன்களுக்கு வெற்றியை விரும்பி, கருடனின் பெயரால் அழைக்கப்படும் வலிமைமிக்க அணிவகுப்பை {கருட வியூகத்தை} அமைத்தார்.


அந்தக் கருடனின் அலகில் உமது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்} நின்றார். அதன் இரு கண்களில் பரத்வாஜர் மகனும் {துரோணரும்}, சாத்வத குலத்தின் கிருதவர்மனும் நின்றனர். திரிகார்த்தர்கள், மத்ஸ்யர்கள் [1], கேகயர்கள், வாடதானர்கள் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டவர்களும், புகழ்பெற்ற போர் வீரர்களுமான அஸ்வத்தாமன், கிருபர் ஆகியோர் அதன் {கருட} வியூகத்தின் தலையில் நின்றார்கள். பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன் மற்றும் பகதத்தன் ஆகியோரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதனுடன் சேர்ந்த மத்ரகர்கள், சிந்து-சௌவீரர்கள், பஞ்சநதர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் ஆகியோரும் அதன் {கருட வியூகத்தின்} கழுத்தில் நின்றார்கள்.

[1] இங்கே ஏதோ பிழை ஏற்பட்டிருக்க வேண்டும். மத்ஸ்யம் என்பது விராட நாடாகும். மத்ஸ்யர்கள் பாண்டவர்களை ஆதரித்தவர்கள். ஒருவேளை இவர்கள் மத்ஸ்யத்தில் இருந்த கீசகர்களை ஆதரித்தவர்களாக இருக்கலாம். குரு நாட்டின் தெற்கே அமைந்த மத்ஸ்ய நாட்டைத் தவிர ஆறு மத்ஸ்ய நாடுகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை இவற்றில் ஏதேனும் ஒன்றாகவும் இருக்கலாம். வேறு பதிப்புகளில் இந்த இடத்தில் மத்ஸ்ய நாட்டவர் குறிப்பிடப்படவில்லை. இங்கே கங்குலியும் விளக்கமேதும் அளிக்கவில்லை.

அதன் {கருட வியூகத்தின்} முதுகில் மன்னன் துரியோதனனும் அவனது தொண்டர்களும் நின்றார்கள். ஓ! ஐயா, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்கள், சகர்கள், சூரசேனர்கள் ஆகியோர் அதன் {கருட வியூகத்தின்} வால் பகுதியில் நின்றார்கள். கவசம் பூண்டவர்களான மகதர்கள், கலிங்கர்கள், தாசேரகர்கள் ஆகியோர் அந்த {கருட வியூக} அணிவகுப்பின் வலது சிறகாக அமைந்தார்கள். பிருஹத்பலனோடு சேர்ந்த கரூஷர்கள் [2], விகுஞ்சர்கள், முண்டர்கள், குண்டீவிருஷர்கள் ஆகியோர் அதன் {கருட வியூகத்தின்} இடது சிறகில் நின்றார்கள்.

[2] மூன்றாம் நாளின் கௌரவப் படையில் கருட வியூகத்தின் இடது சிறகில் கரூசர்கள் நிற்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. பாண்டவப்படையில் பீமன், விராடன், துருபதன், நீலன் ஆகியோருக்கு அடுத்ததாகக் கரூஷர்கள் நின்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது. கரூஷ நாடு சேதி நாட்டின் தெற்கே அமைந்த நாடாகும். கரூஷ மன்னன், சேதி மன்னன் சிசுபாலனுடன் பிணக்குக் கொண்டிருந்தான் என்ற குறிப்புச் சபாபர்வம் பகுதி 44ல் காணக்கிடைக்கிறது. கரூஷர்களிலும் இரண்டு தரப்பு இருந்ததா? என்பது தெரியவில்லை. இந்த இதிகாசத்தின் பல இடங்களில் கரூஷர்கள் பாண்டவத் தரப்பிலேயே பட்டியலிடப்பட்டிருக்கிறார்கள்

அப்போது, எதிரிகளைக் கொல்பவனான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, அந்தப் படையின் போர் அணிவகுப்பைக் கண்டு, திருஷ்டத்யும்னன் துணையுடன், தனது துருப்புகளின் எதிர் அணுவகுப்பை அமைத்தான். உமது அணிவகுப்புக்கு {கருட வியூகத்திற்கு}  எதிராக அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பாதி நிலவின் {அர்த்தசந்திர} வடிவிலான கடும் அணிவகுப்பை அமைத்தான். பற்பல ஆயுதங்களை அபரிமிதமாகத் தரித்தவர்களும், பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்களுமான மன்னர்களால் சூழ அதன் {அர்த்தச் சந்திர வியூகத்தின்} வலது கொம்பில் பீமசேனன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.

அவனுக்கு அடுத்ததாக வலிமைமிக்கத் தேர்வீரர்களான விராடன், துருபதன் ஆகியோரும்; விஷமேற்றப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட நீலன் அவர்களுக்கு அடுத்ததாகவும் நின்று கொண்டிருந்தான். நீலனுக்கு அடுத்துச் சேதிகள், காசிகள், கரூஷர்கள், பௌரவர்கள் ஆகியோரால் சூழப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான {சிசுபாலனின் மகன்} திருஷ்டகேது நின்றான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், சிகண்டியும் பாஞ்சாலர்கள், பிரபத்ரகர்கள் மற்றும் பிற துருப்புகளால் ஆதரிக்கப்பட்டு, போருக்காக அதன் {அந்த வியூகத்தின்} மத்தியில் நின்றார்கள். தன் யானைப்படையால் சூழப்பட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனும் அங்கேதான் இருந்தான்.

அவனுக்கு அடுத்ததாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்யகியும், திரௌபதியின் ஐந்து மகன்களும் நின்றார்கள். அவர்களுக்கு அடுத்து இராவான் {அரவான்} நின்றான். அவனுக்கு அடுத்து பீமசேனனின் மகனும் (கடோத்கஜனும்), வலிமைமிக்கத் தேர்வீரர்களான கேகயர்களும் [3] நின்றார்கள். அதற்கு அடுத்து (அந்த அணிவகுப்பின் {அர்த்தச் சந்திர வியூகத்தின்}) இடது கொம்பில் அண்டம் முழுமையையும் பாதுகாப்பவனான ஜனார்த்தனனைத் தனது பாதுகாவலனாகக் கொண்டவனான மனிதர்களில் சிறந்தவன் {அர்ஜுனன்} நின்றான். இப்படியே உமது மகன்கள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களின் அழிவுக்காகப் பாண்டவர்கள் தங்கள் வலிமைமிக்க எதிரணிவகுப்பை அமைத்தார்கள்.

[3] கேகயர்கள் கௌரவப்படையின் கருட வியூகத்தின் தலையிலும் நிற்கிறார்கள், பாண்டவப்படையின் அர்த்தச்சந்திர வியூகத்தில் அரவான் மற்றும் கடோத்கஜனுக்கு அடுத்ததாகவும் அவ்வியூகத்தின் இடக்கொம்பின் அருகில் நிற்கிறார்கள்.

அதன் பிறகு, ஒருவரை ஒருவர் தாக்கியபடி உமது துருப்புகளுக்கும், எதிரி துருப்புகளுக்கும் இடையேயான போர் தொடங்கியது. அந்த மோதலில் தேர்களும், யானைகளும் ஒன்று கலந்தன. பெரும் எண்ணிக்கையிலான யானைகளும், தேர்க்கூட்டங்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஒருவரை ஒருவர் கொல்லும் நோக்கோடு விரைந்து வருவது எங்கும் காணப்பட்டது. (சண்டையில் கலந்து கொள்வதற்காக) விரைந்த எண்ணிலடங்கா தேர்களின் சடசடப்பொலியும், பேரிகைகளின் ஒலியும் ஒன்றாகக் கலந்து உரத்த ஆரவாரத்தை அங்கே எழுப்பின. அந்தக் கடும் மோதலில் ஒருவரை ஒருவர் கொன்றவர்களான, உமது படையையும், அவர்களது படையையும் சேர்ந்த வீரப் போராளிகளின் முழக்கங்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சொர்க்கத்தையே எட்டின" {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்