Tuesday, November 24, 2015

தாக்குதலும் படுகொலைகளும்! - பீஷ்ம பர்வம் பகுதி - 057

Attack and Carnage! | Bhishma-Parva-Section-057 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 15)

பதிவின் சுருக்கம் : யுகமுடிவின் அந்தகனைப் போலப் போரிட்ட அர்ஜுனன்; சலிக்காமல் போரிட்ட போர்வீரர்கள்; சிதறி ஓடிய படையணியினர்; குதிரை, யானை, தேர்ப்படைகள் கலந்து போய் ஒன்றையொன்று தாக்கியது; போர்க்களமெங்கும் சிதறிக் கிடந்த ஆயுதங்களும், தளவாடங்களும்; போரால் ஏற்பட்ட புழுதி இரத்தத்தால் நனைந்து தணிந்தது; இரத்தத்தாலும், சதையாலும் சகதியான போர்க்களம்; மூன்றாம் நாளின் போர் தொடக்கத்தின் போது ஏற்பட்ட அமளியின் விவரிப்பு...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உமது படையும், அவர்களது {பாண்டவர்களின்} படையும் அணிவகுத்துப் புறப்பட்ட பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேர்ப்படை வீரர்களைத் தனது கணைகளால் விழச் செய்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தத் தேர்ப்படை அணிகளுக்கு மத்தியில் பெரும் அமளி செய்தான். (இப்படி) யுக முடிவின் அந்தகனைப் போல இருந்த பிருதையின் மகனால் {அர்ஜுனனால்} தார்தராஷ்டிரர்கள் கொல்லப்பட்டாலும் பாண்டவர்களுடன் விடாமல் {சலிக்காமல்} போரிட்டுக் கொண்டிருந்தனர்.


பிரகாசமான புகழை (வெல்ல) விரும்பியும், மரணம் மட்டுமே போரை நிறுத்தும் (நிறுத்துவதற்கான ஒரே வழி) எனக் கொண்டும், வேறு எதிலும் மனத்தைச் செலுத்தாமலும் அவர்கள் {கௌரவப் படையினர்} பாண்டவப் படையணிகளைப் பல இடங்களில் உடைத்து, தாங்களும் உடைந்தனர் {தங்கள் படையணிகளையும் உடைத்துக் கொண்டனர்}. இப்படி உடைந்த பாண்டவ மற்றும் கௌரவத் துருப்புகள் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டு சிதறி ஓடினர். எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. சூரியனையே மறைக்கும் அளவிற்க்கு புழுதி பூமியில் இருந்து எழுந்தது. அங்கே இருந்த எவராலும் திசைகளையோ, துணைத்திசைகளையோ வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.

ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போர் நடந்த இடத்தில் எல்லாம்,  நிறங்கள், ஆளறி சொற்கள் {சங்கேத வார்த்தைகள்}, பெயர்கள் மற்றும் இனத்தின் தனித்தன்மைகள் ஆகிய அறிகுறிகளால் போராளிகள் வழிநடத்தப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கௌரவர்களின் அணிவகுப்பு {கருட வியூகம்}, பரத்வாஜரின் மகனால் {துரோணரால்} பாதுகாக்கப்பட்டதால் உடைக்க முடியாததாக இருந்தது. சவ்யசச்சினாலும் {அர்ஜுனனாலும்}, பீமனாலும் நன்றாகப் பாதுகாக்கப்பட்டதும் வல்லமைமிக்கதுமான பாண்டவ அணிவகுப்பும் உடைக்க முடியாததாகவே இருந்தது.

போரில் ஒன்றோடு ஒன்று எதிர்த்துப் போரிடுகின்ற தேர்களையும், யானைகளையும் கொண்ட இரண்டு படையின் போர்வீரர்களும் படை முகப்பில் இருந்து வெளிப்பட்டு நன்கு போரிட்டனர். அந்தக் கடுமையான போரில் குதிரைப்படை வீரர்களைப் பளபளப்பாக்கப்பட்ட கூரிய வாட்களாலும், நீண்ட வேல்களாலும் {எதிர்ப்படையின்} குதிரைப்படைவீரர்கள் வீழ்த்தினார்கள்.

(அருகில் உள்ள) தேர்வீரர்களை அடைந்த {எதிர்ப்படையின்} தேர்வீரர்கள் தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் அவர்களை வீழ்த்தினர். உமது தரப்பையும், அவர்களது தரப்பையும் சேர்ந்த யானைப்படை வீரர்கள் அருகில் இருந்த {எதிர்ப்படையின்} யானைப் படைவீரர்களை, அகன்ற தலை கொண்ட கணைகளாலும் {நாராசங்களாலும்}, அம்புகளாலும், வேல்களாலும் {தோமரங்களாலும்} பெரும் எண்ணிக்கையில் வீழ்த்தினர். பெரும் அளவிலான காலாட்படையில் ஒருவருக்கொருவர் கோபத்தை வளர்த்து, தங்கள் வர்க்கப் போராளிகளையே குறுங்கணைகளாலும் {பிண்டிபாலங்களாலும்}, போர்க்கோடரிகளாலும் மகிழ்ச்சியாக வீழ்த்தினர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (அருகில் இருந்த) யானை வீரர்களை {கஜபதிகளை} அடைந்த தேர்வீரர்கள்,  யானைகளோடு அந்த மோதலில் அவர்களை வீழ்த்தினார்கள். அதே போல யானை வீரர்களும் தேர்வீரர்களை வீழ்த்தினார்கள். மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, குதிரை வீரன் வேலைக் கொண்டு தேர்வீரனை வீழ்த்தினான். அதே போலத் தேர்வீரனும் குதிரைவீரனை வீழ்த்தினான். காலாட்படை வீரன் தேர்வீரனை வீழ்த்தினான், தேர்வீரன் காலாடபடை வீரர்களைத் தன் கூரிய கணைகளால் வீழ்த்தினான். யானைவீரர்கள் குதிரைவீரர்களை வீழ்த்தினார்கள். குதிரைவீரர்கள் யானைகளின் முதுகில் இருந்த வீரர்களை வீழ்த்தினார்கள். இவை அனைத்தும் மிகவும் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.

அங்கேயும், இங்கேயும் காலாட்படை வீரர்கள், யானை வீரர்களில் முதன்மையானோரால் வீழ்த்தப்பட்டனர். காலாட்படை வீரர்களால் யானை வீரர்கள் வீழ்த்தப்படுவதையும் காண முடிந்தது. நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலுமான காலாட்படை கூட்டம் குதிரை வீரர்களை வீழ்த்துவதையும், குதிரைவீரர்கள் காலாட்படை வீரர்களை வீழ்த்துவதையும் காண முடிந்தது. உடைந்த கொடிக்கம்பங்கள், விற்கள், வேல்கள், யானை மேலுள்ள கூடுகள், விலைமதிப்புமிக்கக் கம்பளங்கள், தோமரங்கள், கதாயுதங்கள், பரிகங்கள் {முள் பதித்த தண்டங்கள்}, கம்பனங்கள், ஈட்டிகள், விதவிதமான கவசங்கள், கணபங்கள், அங்குசங்கள், பட்டாக்கத்திகள், தங்கச் சிறகுகள் கொண்ட கணைகள் எனக் களத்தில் சிதறிக் கிடந்த இவை, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, மலர் படுக்கைகளைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தன.

சதை மற்றும் இரத்தத்துடன் கூடிய சேறாக மாறிய பூமி, அந்தப் பயங்கரமான போரில் கொல்லப்பட்ட மனிதர்கள், குதிரைகள், யானைகளின் சடலங்களால் கடக்க முடியாததாகியது. மனித இரத்தத்தால் நனைந்த பூமியின் புழுதி மறைந்து போனது {தணிந்தது}. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சுற்றிலும் இருந்த திசைப்புள்ளிகள் முற்றாகத் தெளிவடைந்தது. சுற்றிலும் தலையற்ற உடல்கள் எழுந்து நின்று, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பூமியின் அழிவைக் குறிப்பிட்டன. பயங்கரமானதும், அச்சம் நிறைந்ததுமான அந்தப் போரில், தேர்வீரர்கள் அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடுவது தெரிந்தது.

அப்போது, போரில் ஒப்பற்றவர்களும், சிங்கத்தைப் போன்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான பீஷ்மர், துரோணர், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், புருமித்ரன், விகர்ணன், சுபலனின் மகன் சகுனி, சல்லியன் ஆகியோர் போரில் நிலைத்தபடி பாண்டவர்களின் படையணிகளை உடைத்தனர். அதே போல, (தங்கள் தரப்பு) மன்னர்கள் அனைவராலும் ஆதரிக்கப்பட்ட பீமசேனன், ராட்சசன் கடோத்கஜன், சாத்யகி, சேகிதானன், திரௌபதின் மகன்கள் ஆகியோர் தானவர்களைக் கலங்கடிக்கும் தேவர்கள் போல, உமது துருப்புகளையும், உமது மகன்களையும் கலங்கடிக்கத் தொடங்கினர்.

க்ஷத்திரியர்களில் காளையரான அவர்கள் அந்தப் போரில் ஒருவரை ஒருவர் தாக்கிக் காண்பதற்குப் பயங்கரர்களாக மாறி, இரத்தத்தால் நனைந்து புரச மரங்களைப் போலப் பிரகாசித்தனர். இருபடைகளையும் சேர்ந்த வீரர்களில் முதன்மையானோர், தங்கள் எதிரிகளை வீழ்த்தியபடி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் உள்ள ஒளிக்கோள்களைப் போலத் தோன்றினர்.

ஆயிரம் தேர்களால் ஆதரிக்கப்பட்ட உமது மகன் துரியோதனன், பாண்டவர்களுடனும், ராட்சசனுடனும் {கடோத்கசனுடனும்} போரிட விரைந்து வந்தான். பெரும் அளவிலான போராளிகளுடன் இருந்த பாண்டவர்கள் அனைவரும், எதிரிகளைத் தண்டிப்பவர்களான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய வீரர்களை எதிர்த்துப் போரிட விரைந்தார்கள். சினம் தூண்டப்பட்ட கிரீடம் தரித்தவனும் (அர்ஜுனனும்) மன்னர்களில் முதன்மையானோரை எதிர்த்து விரைந்தான். அர்ஜுனனின் மகன் (அபிமன்யு) மற்றும் சாத்யகி ஆகியோர், சுபலனின் மகனுடைய {சகுனியின்} படைகளை எதிர்த்து முன்னேறிச் சென்றனர். அப்போது, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம், ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பிய உமது துருப்புகளுக்கும் எதிரிகளின் துருப்புகளுக்கும் இடையே அச்சம் நிறைந்த போர் மீண்டும் தொடங்கியது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்