Saturday, November 28, 2015

பாண்டவப் படையைச் சூறையாடிய பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 059ஆ

Bhishma causing a havoc in Pandava's host! | Bhishma-Parva-Section-059b | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 17)

பதிவின் சுருக்கம் : போரிடுவதற்காகப் பீஷ்மரை அணுகிய அர்ஜுனன்; பீஷ்மரின் வில்லை இரு முறை அறுத்த அர்ஜுனன்; கோபம் மூண்ட பீஷ்மர் பாண்டவப் படையைச் சூறையாடியது; தலைதெறிக்க ஓடிய பாண்டவப் படை; போரின் நிலை குறித்துக் கிருஷ்ணன் கவலை கொள்வது...

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது மாதவன் {கிருஷ்ணன்},  சூரியனைப் போன்றதும், காணக் கண் கூசுவதுமான பீஷ்மரின் தேரை நோக்கி, அந்த வெள்ளி நிறக் குதிரைகளைச் செலுத்தினான். பீஷ்மருடன் மோத விரையும் வலிய கரங்களைக் கொண்ட பார்த்தனைக் {அர்ஜுனனைக்} கண்ட, யுதிஷ்டிரனின் வலிமையான படை மீண்டும் அணிதிரண்டது.

சிங்கம் போலத் தொடர்ச்சியாக முழங்கியவரும், குரு போர்வீரர்களில் முதன்மையானவருமான பீஷ்மர், தனது கணை மாரியால் விரைவாகத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரை மறைத்தார். அந்தக் கணத்தில், கொடிமரம் மற்றும் தேரோட்டியோடு கூடிய அவனது {அர்ஜுனனின்} தேர், அந்தக் கணை மாரியால் மறைந்தது. எனினும், பெரும் வல்லமை படைத்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, பீஷ்மரின் கணைகளால் சிதைக்கப்பட்ட அந்தக் குதிரைகளைப் பொறுமையுடனும், அச்சமில்லாமலும் வழிநடத்திச் சென்றான். அப்போது, மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலி கொண்ட தெய்வீக வில்லை எடுத்த பார்த்தன் {அர்ஜுனன்}, தன் கூரிய கணைகளால் பீஷ்மரின் வில்லை அறுத்துக் கீழே தள்ளினான்.

தனது வில் அறுபட்டதைக் கண்ட குரு வீரரான உமது தந்தை {பீஷ்மர்}, மற்றொரு வில்லைக் கண் இமைக்கும் நேரத்திற்குள் எடுத்து நாணேற்றினார். மேகங்களின் முழக்கத்தை ஒத்திருக்கும் நாணொலி கொண்ட அந்த வில்லைத் தன் இரு கைகளாலும் வளைத்தார். ஆனால், கோபம் தூண்டப்பட்ட நிலையில் இருந்த அர்ஜுனன், அந்த வில்லையும் அறுத்தான். அப்போது, சந்தனுவின் மகன் {பீஷ்மர் அர்ஜுனனிடம்}, "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அற்புதம். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அற்புதம். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உண்மையில், இத்தகு வல்லமைமிக்கக் காரியம் உனக்குத் தகுந்ததே. நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். ஓ! மகனே {அர்ஜுனா}, என்னோடு கடினமாக நீ போரிடுவாயாக" என்று (அர்ஜுனன் வெளிப்படுத்திய) கரவேகத்தை மெச்சினார்.

இப்படிப் பார்த்தனை {அர்ஜுனனை} மெச்சி, மற்றொரு பெரிய வில்லை எடுத்த அந்த வீரர் {பீஷ்மர்}, தனது கணைகளைப் பார்த்தனின் {அர்ஜுனனின்} தேர் மீது பொழிந்தார். அந்தக் கணைகளைக் கலங்கடிக்கும் வகையில், தனது தேரை வட்டமாக விரைந்து சுழற்றிய வாசுதேவன் {கிருஷ்ணன்}, தேரை வழிநடத்துவதில் தான் கொண்ட பெருந்திறனை வெளிப்படுத்தினான்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
கோவில் உற்சவர் [1]
பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீஷ்மர், பெரும்பலத்துடன் தனது கூர்முனைக் கணைகளால் வாசுதேவன் {கிருஷ்ணன்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும்,   உடல் முழுவதும் துளைத்தார். பீஷ்மரின் அந்தக் கணைகளால் சிதைந்த அந்த இரு மனிதப்புலிகளும், கொம்புகளால் கீறப்பட்ட உடல்களுடன் முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போல அப்போது தோன்றினார்கள். மீண்டும் கோபம் தூண்டப்பட்ட பீஷ்மர், அந்த இரு கிருஷ்ணர்களையும் {கருப்பர்களான கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரையும்} நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான கணைகளால் அனைத்துப் புறங்களிலும் மறைத்தார். கோபம் தூண்டப்பட்ட அந்தப் பீஷ்மர், தனது கூரிய கணைகளால், அந்த விருஷ்ணி குலத்தவனை {கிருஷ்ணனை} நடுங்கச் செய்தார் [1]. உரக்கச் சிரித்த அவர் {பீஷ்மர்} கிருஷ்ணனை வியப்படையச் செய்தார்.

[1] சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள உற்சவர் முகத்தில் வடுக்கள் இருக்கும். பார்த்தசாரதி என்றால் பார்த்தனின் சாரதி, அதாவது அர்ஜுனனின் தேரோட்டி என்பது பொருளாகும். குருக்ஷேத்திரப் போரில் கிருஷ்ணன் பெற்ற வடுக்களை நினைவுகூரவே இங்குள்ள உற்சவர் முகத்தில் வடுக்களைச் சுமந்திருக்கிறார். இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள http://tamil.thehindu.com/society/spirituality/பார்த்தசாரதி-தரிசனம்/article7304896.ece என்ற லிங்குக்குச் செல்லுங்கள்.

இரு படைகளுக்கு மத்தியில் இருந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன், அந்தப் போரில் பீஷ்மரின் ஆற்றலையும், அர்ஜுனனின் மென்மையையும், அதனால் பீஷ்மர் போரில் பொழிந்த தொடர்ச்சியான கணைமாரிகளையும் கண்டு, அனைத்தையும் எரிக்கும் சூரியனைப் போல ஆனான். யுதிஷ்டிரப்படையில் உள்ள முதன்மையான போராளிகளை அவ்வீரர் {பீஷ்மர்} கொல்வதையும், அண்ட அழிவுக்கான நேரம் வந்துவிட்டதைப் போல அப்படையை அவர் {பீஷ்மர்} சூறையாடுவதையும் கண்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனும், படைக்கூட்டங்களைக் கொல்பவனும், புகழத்தக்கவனுமான கேசவனால் {கிருஷ்ணனால்} தான் கண்டதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. யுதிஷ்டிரனின் படையால் அந்தப் படுகொலையில் இருந்து மீள முடியாது என்றே நினைத்தான்.

மேலும், "ஒரே நாளில் தைத்தியர்கள் மற்றும் தானவர்களோடு கூடிய அனைவரையும் பீஷ்மரால் கொன்றுவிட முடியும் எனும்போது, பாண்டுமகன்களின் துருப்புகள் அனைத்தையும், அவர்களது தொண்டர்களையும் எவ்வளவு எளிதாகக் கொல்ல முடியும்? பாண்டுவின் ஒப்பற்ற மகனுடைய {யுதிஷ்டிரருடைய} பரந்த படை மீண்டும் சிதறி ஓடுகிறது. சோமகர்கள் முறியடிக்கப்பட்டதைக் கண்ட கௌரவர்கள், பாட்டனை {பீஷ்மரை} மகிழ்வூட்டியபடியே உற்சாகமாகப் போரிட விரைகிறார்கள். அர்ஜுனனைப் பொறுத்தவரை, கூரிய கணைகளால் தாக்கப்பட்டாலும், பீஷ்மரின் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருக்கிறான். எனவே, பாண்டவர்களுக்காகக் கவசம் தரித்து பீஷ்மரை இன்று நானே கொல்வேன். இந்த உயர் ஆன்மப் பாண்டவர்களின் சுமையை நான் குறைப்பேன்" என்றும் நினைத்தான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணன் இப்படி ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, கோபம் தூண்டப்பட்ட பாட்டன் {பீஷ்மர்}, மீண்டும் தனது கணைகளைப் பார்த்தனின் {அர்ஜுனனின்} தேர் மீது அடித்தார். அந்தக் கணைகள் பெரும் எண்ணிக்கையிலானவையாக இருந்தமையால், அனைத்துத் திசைகளும் முழுமையாக மறைக்கப்பட்டன. ஆகாயமோ, திசைகளோ, பூமியோ, பிரகாசமான கதிர்களைக் கொண்ட சூரியனோ கூடத் தெரியவில்லை. வீசிய காற்றும் புகை கலந்து இருப்பதாகத் தெரிந்தது; அனைத்துத் திசைகளும் நடுங்குவதைப் போலத் தெரிந்தது.

சந்தனுவின் அரச மகனுடைய {பீஷ்மருடைய} கட்டளையின் கீழ் இருந்த துரோணர், விகர்ணன், ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், கிருதவர்மன், கிருபர், சுருதாயுஸ் [2], அம்பஷ்டர்களின் ஆட்சியாளன், விந்தன் மற்றும் அனுவிந்தன், சுதக்ஷிணன், மேற்கத்தியர்கள், சௌவீரர்களின் பல்வேறு இனங்கள், வசாதிகள், க்ஷுத்ரகர்கள், மாலவர்கள் ஆகியோர் போரிடுவதற்காகக் கிரீடியை {அர்ஜுனனை} விரைந்து அணுகினர்.


[2] இது கலிங்க மன்னன் சுருதாயுசாக இருக்க முடியாது. பீஷ்ம பர்வம் பகுதி 54ஆ வில், அவன் பீமனால் கொல்லப்படுகிறான். இவன் வேறு ஒருவனாகவே இருக்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான குதிரைகள், காலாட்படை, தேர்கள், வலிமைமிக்க யானைகள் ஆகியவற்றால் சூழப்பட்ட கிரீடியைச் {அர்ஜுனனைச்} சிநியின் பேரன் {சாத்யகி} கண்டான். காலாட்படை, யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றால் இப்படிச் சூழப்பட்டவர்களான வாசுதேவனையும், அர்ஜுனனையும் கண்ட சிநிகளின் தலைவன் {சாத்யகி}, அவ்விடத்திற்கு விரைந்து சென்றான். வில்லாளிகளில் முதன்மையான சிநிகளின் தலைவன் {சாத்யகி} அந்தத் துருப்புகளை நோக்கி வேகமாக விரைந்து விருத்திரனைக் கொன்றவனின் {இந்திரனின்} துணைக்கு வந்த விஷ்ணுவைப் போல அர்ஜுனனை அணுகினான்.

பீஷ்மரைக் கண்டு அஞ்சியவர்களும், தங்கள் யானைகள், குதிரைகள், தேர்கள், எண்ணிலடங்கா கொடிமரங்கள் ஆகியன சிதைக்கப்பட்டு, தூள் தூளாக்கப்பட்டவர்களும், களத்தை விட்டுச் சிதறி ஓடியவர்களுமான யுதிஷ்டிரப் படையின் போராளிகள் அனைவரிடமும், போர்வீரர்களில் முதன்மையானவனும் உற்சாகமிக்கவனுமான அந்தச் சிநி குலத்தவன் {சாத்யகி}, "க்ஷத்திரியர்களே, எங்கே செல்வீர்கள்? நீதிமான்களின் கடமையென மூதாதையர்களால் தீர்மானிக்கப்பட்டது இதுவல்ல. வீரர்களில் முதன்மையானவர்களே, உங்கள் உறுதிமொழிகளை மீறாதீர். வீரர்களைப் போல உங்கள் தன்னறங்களை {ஸ்வதர்மத்தை = க்ஷத்ரிய அறங்களை} நோற்பீராக" என்றான் {சாத்யகி}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்