Wednesday, December 09, 2015

அபிமன்யுவைத் தவிர்த்த பீஷ்மர் - பீஷ்ம பர்வம் பகுதி - 060

Fourth day battle commenced! | Bhishma-Parva-Section-060 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 18)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரின் தலைமையில் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்ட கௌரவ வீரர்கள்; இருதரப்பும் அமைத்துக் கொண்ட வியூகங்கள்; இருதரப்பு படையணிகளுக்கு இடையில் ஏற்பட்ட கடும் போர்; இடையில் புகுந்த அபிமன்யு; அபிமன்யுவைத் தவிர்த்த பீஷ்மர்; பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இரவு கடந்ததும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபம் தூண்டப்பட்டவரும், பெரும்படையால் ஆதரிக்கப்பட்டவரும், பாரதப் படையின் தலைமையில் நின்றிருந்தவருமான உயர் ஆன்ம பீஷ்மர் எதிரியை {அர்ஜுனனை} நோக்கி முன்னேறினார். துரோணர், துரியோதனன், பாஹ்லீகன், துர்மர்ஷணன், சித்திரசேனன், வலிமைமிக்க ஜெயத்ரதன் மற்றும் பிற அரச வீரர்கள் ஆகியோர் பெரும்படைப்பிரிவுகளால் ஆதரிக்கப்பட்டு அனைத்துப் புறங்களிலும் அவனைச் {அர்ஜுனனை} சூழ்ந்து கொண்டார்கள்.


பெரும் ஆற்றலும், சக்தியும் படைத்தவனும், வலிமைமிக்க அந்தப் பெரும் தேர்வீரர்களால் சூழப்பட்டவனுமான அவன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போல, அந்த அரசவீரர்களில் முதன்மையானோருக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான். படையணிகளுக்கு முன்னணியில் நின்ற யானைகளின் முதுகில் இருந்தவையும், சிவப்பு, மஞ்சள், கருப்பு, பளுப்பு போன்ற பல்வேறு நிறங்களில் இருந்தவையுமான பிரம்மாண்டக் கொடிகள் மிக அழகாகக் காற்றில் அசைவது தெரிந்தது.

பிற வலிமைமிக்கத் தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்ட சந்தனுவின் அரச மகனுடைய {பீஷ்மருடைய} படை, மின்னல் நிறைந்த மேகக் குவியல் போலவோ, மழைக்கால மேகங்களுடன் கூடிய ஆகாயம் போலவோ இருந்தது. போரை நோக்கமாகக் கொண்டதும், சந்தனுவின் மகனால் {பீஷ்மரால்} பாதுகாக்கப்பட்டதுமான குருக்களின் அந்தக் கடும் படை, கடலை நோக்கிப் பாயும் கங்கையின் கடும் ஊற்றைப் போல அர்ஜுனனை நோக்கி வேகமாக விரைந்தது.

குரங்குகளின் இளவரசனைத் {அனுமனைத்} தன் கொடியில் கொண்ட அந்த உயரான்மா (அர்ஜுனன்), பல்வேறு வகைகளிலான படைகளைக் கொண்டதும், எண்ணிலடங்கா யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், தேர்கள் ஆகியவற்றைத் தன் சிறகில் கொண்டதும், பெரும் மேகத்திரளுக்கு ஒப்பானதுமான அந்த {கௌரவ} அணிவகுப்பை [1] {வியூகத்தைத்} {அதே கருட வியூகமாக இருக்க வேண்டும்} தூரத்தில் இருந்தே கண்டான். மனிதர்களில் காளையான அந்த உயர் ஆன்ம வீரன் {அர்ஜுனன்}, உயர்ந்த கொடியைக் கொண்டதும், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதுமானத் தன் தேரில், தனது (தனிப்பட்ட) படைப்பிரிவின் தலைமையில் நின்று, வலிமைமிக்க {பிற} படை சூழ, எதிரிப்படை முழுவதையும் எதிர்த்து முன்னேறினான்.

[1] மூன்றாம் நாள் போரில் கண்ட கருட மற்றும் அர்த்தச்சந்திர வியூகங்களையே கௌரவர்களும் பாண்டவர்களும் நான்காம் நாளிலும் தொடர்ந்திருக்க வேண்டும்.

அற்புதக் கொடியுடன் கூடியவனும், (விலையுயர்ந்த மூடியால்) தேர்க்கால் மறைக்கப்பட்ட தேருடன் கூடியவனும், அந்தப் போரில் தனது தேரோட்டியாக இருந்த யது குலக் காளையின் {கிருஷ்ணனின்} துணையுடன் கூடியவனுமான அந்தக் குரங்குக் கொடியோனை (வீரனை) {அர்ஜுனனைக்} கண்டு, உமது மகன்களுடன் கூடிய கௌரவர்கள் அனைவரும் திகைப்பில் நிறைந்தனர். உலகத்தின் வலிமையான தேர்வீரனால் பாதுகாக்கப்பட்டதும், ஆயுதங்களை உயர்த்தி வைத்திருந்ததும், ஒவ்வொரு மூலையிலும் நாலாயிரம் {4000} யானைகளைக் கொண்டதுமான அந்தச் சிறந்த அணிவகுப்பை {வியூகத்தை} உமது படை கண்டது.

குருக்களில் முதன்மையானவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் முந்தைய நாள் அமைக்கப்பட்டதும், மனிதர்கள் இதற்கு முன் கேள்விப்படாததும், காணாததும் போன்ற அந்த அணிவகுப்பே இன்றும் (பாண்டவர்களால்) அமைக்கப்பட்டது. அப்போது போர்க்களத்தில் ஆயிரம் பேரிகைககள் ஓங்கி அடிக்கப்பட்டன. படைப்பிரிவுகள் அனைத்தில் இருந்தும் எழும்பிய சங்கொலிகள், தூரிய ஒலிகள் மற்றும் சிங்க முழக்கங்கள் அங்கே பேரொலியை ஏற்படுத்தின.

நாண்களில் கணைகளைப் பொருத்திய துணிவுமிக்கப் போர்வீரர்களால் வளைக்கப்பட்ட (எண்ணிலா) விற்களின் உரத்த நாணொலிகளும், சங்குகளின் முழக்கங்களும், பேரிகைகள் மற்றும் பணவங்களின் ஆரவாரத்தை அமைதிப்படுத்தின {மறைத்து ஓங்கி ஒலித்தன}. சங்கொலிகளால் நிறைந்த மொத்த ஆகாயத்திலும் பூமியின் புழுதி பரவிக் காண்பதற்கு அற்புதமாக இருந்தது. புழுதியால் நிறைந்த வானம் தலைக்கு மேல் பெரிய கூடாரம் அமைக்கப்பட்டதைப் போலத்தெரிந்தது. அந்தக் கூடாரத்தைக் கண்ட துணிவுமிக்கப் போர்வீரர்கள் அனைவரும் (போரிடுவதற்காக) வேகமாக விரைந்தனர்.

தேர்வீரர்களால் தாக்கப்பட்ட தேர்வீரர்கள், தங்கள் தேரோட்டிகள், குதிரைகள், தேர்கள், கொடிகளுடன் வீழ்த்தப்பட்டார்கள். யானைகளால் தாக்கப்பட்ட யானைகளும், காலாட்படைவீரர்களால் தாக்கப்பட்ட காலாட்படை வீரர்களும் அப்படியே விழுந்தனர். வேல்கள் மற்றும் வாள்களுடன் விரைந்த குதிரைவீரர்களால் தாக்கப்பட்டவர்களும், விரைந்து வந்தவர்களுமான குதிரைவீரர்கள், அச்சம்நிறைந்த முகங்களுடன் கீழே விழுந்தனர். இவை அனைத்தையும் காண மிக அற்புதமாகத் தெரிந்தது.

தங்க நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சூரியப் பிரகாசத்தைக் கொண்டவையுமான அற்புதக் கேடயங்கள், போர்க்கோடரிகளாலும், வேல்களாலும், வாட்களாலும் (தாக்கப்பட்டு) களத்தில் விழுந்தன. யானைகளின் தந்தங்களாலும், {அவற்றின்} வலிய துதிக்கைகளாலும் தாக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட பல தேர்வீரர்கள், தங்கள் தேரோட்டிகளோடு சேர்ந்து விழுந்தனர். தேர்வீரர்களில் காளைகளால் தாக்கப்பட்ட தேர்வீரர்களில் காளைகளான பலர் தங்கள் கணைகளுடன் தரையில் விழுந்தனர்.

யானைகளின் தந்தங்களாலும், பிற அங்கங்களாலும் தாக்கப்பட்டோ, படையணிகளின் நெருக்கத்தில் விரையும் அந்தப் பெரும் உயிரினங்களின் {யானைகளின்} வேகத்தால் நசுக்கப்பட்டோ ஓலமிடும் குதிரைவீரர்கள் மற்றும் காலாட்படை வீரர்களின் ஓலங்களைக் கேட்டே கூட அந்தப் போர்க்களத்தில் பல மனிதர்கள் விழுந்தனர். குதிரைப்படை மற்றும் காலாட்படைவீரர்கள் வீழ்ந்து, யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியன அச்சத்தால் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்த போது, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் சூழ இருந்த பீஷ்மர், குரங்குகளின் இளவரசனைத் {அனுமனைத்} தனது கொடியில் கொண்டவனைக் {அர்ஜுனனைக்} கண்டார்.

ஐந்து {5} பனைமரங்களுடன் கூடிய கொடிமரத்தைக் கொண்டவரும், பனைமரக் கொடி வீரருமான சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, வேகமான, அற்புத சக்தி கொண்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதும், தன் பலமிக்க ஆயுதங்களின் சக்தியால் மின்னலைப் போல ஒளிர்வதுமான தேரில் இருந்த அந்தக் கிரீடம் தரித்தவனை {கிரீடியை [அ] அர்ஜுனனை} எதிர்த்து விரைந்து சென்றார்.

இந்திரனைப் போன்றே இருந்த அந்த இந்திரனின் மகனை {அர்ஜுனனை} எதிர்த்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர், கிருபர், சல்லியன், விவிம்சதி, துரியோதனன் மற்றும் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்} ஆகியோர் தலைமையிலான (பிற) வீரர்களும் விரைந்தனர். ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவனும், அழகிய தங்கக் கவசம் தரித்தவனும், அர்ஜுனனின் மகனுமான வீர அபிமன்யு, படையணிகளில் இருந்து விரைந்து வெளிப்பட்டு, {அர்ஜுனனை எதிர்த்து வந்த} அவ்வீரர்களை எதிர்த்து விரைந்து முன்னேறினான். தாங்கிக் கொள்ள முடியாத காரியங்களைச் செய்பவனான அந்தக் *கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} மகன் {அபிமன்யு}, பெரும் பலமிக்க அவ்வீரர்களின் ஆயுதங்கள் அனைத்தையும் கலங்கடித்து, வேள்விப்பீடத்தில் இருப்பவனும், மந்திரங்களால் எழுப்பப்படுபவனும், சுடர்விடும் தழல்களைக் கொண்டவனுமான புகழத்தக்க அக்னியைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

எதிரிகளின் இரத்தத்தை நீராகக் கொண்டு பாயும் ஆறை அந்தப் போரில் உண்டாக்கிய வலிய சக்தி கொண்ட பீஷ்மர், அப்போது, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} விரைவாகத் தவிர்த்துவிட்டு, வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனிடமே {அர்ஜுனனிடமே} நேரடியாக மோதினார். கிரீடத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன், அற்புத வடிவத்தையும், இடிமுழக்கம் போன்ற உரத்த நாணொலியையும் கொண்ட தனது காண்டீவத்தைக் கொண்டு கணைமாரியைப் பொழிந்து {பீஷ்மரால் ஏவப்பட்ட} அந்த வலிய ஆயுதமழையைக் கலங்கடித்தான்.

குரங்குகளின் இளவரசனை {அனுமனைத்} தனது கொடியில் கொண்டவனும், தாங்கிக் கொள்ள இயலா காரியங்களைச் செய்பவனுமான அந்த உயர் ஆன்ம வீரன் {அர்ஜுனன்}, வில்லைத்தாங்கும் அனைவரிலும் சிறந்தவரான பீஷ்மர் மீது கூரிய முனை கொண்ட கணைகள் மற்றும் பளபளப்பான நாராசங்களைப் பதிலுக்குப் பொழிந்தான். குரங்குகளின் இளவரசனைத் {அனுமனைத்} தனது கொடியில் கொண்டவனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்டதும், இரவின் இருளைப் போக்கி பகலை உண்டாக்குபவனைப் {சூரியனைப்} போன்ற பீஷ்மரால் எதிர்க்கப்பட்டதும், விடுக்கப்பட்டதுமான வலிமைமிக்க ஆயுத மழையை உமது துருப்புகள் கண்டன. உறுதியாக நடைபெற்றதும், பீஷ்மர் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரின் விற்களுடைய பயங்கர நாணொலிகளால் {அவற்றின் தனித்தன்மையால்} வேறுபட்டுத் தெரிந்ததும், மனிதர்களில் முதன்மையான அவ்விருவருக்கும் இடையில் ஏற்பட்டதுமான அந்தத் தனிப்போரை குருக்கள், சிருஞ்சயர்கள் மற்றும் அங்கே இருந்த அனைவரும் கண்டனர்" {என்றான் சஞ்சயன்}.
_________________________________________________________________________________
கிருஷ்ணாவின்* மகன் {அபிமன்யு},

குறிப்பு:அர்ஜுனனின் பத்து பெயர்களில் கிருஷ்ணன் என்ற பெயரும் உண்டு.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைச் சொடுக்கவும்:
http://mahabharatham.arasan.info/2010/03/Arjuna.html
http://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section44.html

அர்ஜுனன் {Arjuna}

தாய்: குந்தி-Kunti {பிருதை-Pritha}
தந்தை: பாண்டு / {தேவர்களின் தலைவன் இந்திரனின் உயிர்வித்து}

அர்ஜுனனின் பத்து பெயர்கள்:
அர்ஜுனன், பல்குனன், ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹனன், பீபத்சு, விஜயன், கிருஷ்ணன் [1], சவ்யசச்சின், தனஞ்சயன் என்பவையே அவை” என்றான். 

- Seemore at: 

அர்ஜுனன் {உத்தரனிடம்},

“செல்வத்தின் மத்தியில் நான் வாழ்ந்ததாலும், அனைத்து நாடுகளையும் அடக்கி, அவர்களது செல்வங்களைக் கொள்ளை கொண்டதாலும், என்னைத் தனஞ்சயன் என்று அழைக்கிறார்கள்.

ஒப்பற்ற மன்னர்களுடன் போர்புரியச் சென்று, அவர்களை வீழ்த்தாமல் (களத்தைவிட்டு) நான் திரும்பியதில்லை என்பதால், என்னை விஜயன் என்று அழைக்கிறார்கள்.

எதிரிகளுடன் போரிடும்போது, எனது தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே நான் பூட்டுவதால், என்னை ஸ்வேதவாஹனன் என்று அழைக்கிறார்கள்.

அடிவானில் உத்திர நட்சத்திரக்கூட்டம் {உத்தரப் பல்குனி} தோன்றிய நாளில் {உத்திரம் நட்சத்திரம் கொண்ட நாளில்} இமயத்தின் மார்பில் நான் பிறந்ததால், என்னைப் பல்குனன் என்று அழைக்கிறார்கள்.

முன்னர், வலிமைமிக்கத் தானவர்களுடன் நான் மோதும்போது, சூரியப்பிரகாசம் கொண்ட ஒரு மணிமுடியை இந்திரன் எனது தலையில் சூட்டியதால், நான் கிரீடி என்று பெயர் பெற்றேன்.

போர்க்களத்தில் இதுவரை வெறுக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்யாததால், தேவர்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் பீபத்சு என்று நான் அறியப்படுகிறேன்.

காண்டீவத்தை எனது இருகரங்களாலும் இழுக்கவல்லவனாக நான் இருப்பதால், சவ்யசச்சின் {சவ்யசாசி} என்று தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் நான் அறியப்படுகிறேன்.

பூமியின் நான்கு எல்லைகளுக்குள் எனது நிறம் மிக அரிதானதாலும், எனது செயல்கள் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பதாலும் என்னை அர்ஜுனன் என்று அழைக்கிறார்கள்.

அணுகமுடியாதவனாகவும், அடக்கப்பட முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும், பகனைக் கொன்றவனின் {இந்திரனின்} மகனாகவும் இருப்பதால் மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மத்தியில், நான் ஜிஷ்ணு என்ற பெயரால் அறியப்படுகிறேன்.

எனது பத்தாவது பட்டப்பெயரான கிருஷ்ணன் [2] என்பது, கரிய தோலும் {நிறமும்} பெரும் தூய்மையும் கொண்ட சிறுவனான என் மீது பாசம் கொண்ட எனது தந்தையால் {பாண்டுவால்} எனக்கு வழங்கப்பட்டதாகும்.




ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்