Monday, January 04, 2016

மகரக்கிரௌஞ்ச வியூகத்துடன் ஆறாம் நாள் போர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 075

Sixth day war with Makara and Krauncha vyuha ! | Bhishma-Parva-Section-075 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 33)

பதிவின் சுருக்கம் : படைகள் இரண்டிலும் எழுந்த பேராரவாரம்; பாண்டவர்கள் மகர வியூகம் அமைத்தது; கௌரவர்கள் கிரௌஞ்ச வியூகம் அமைத்தது; இருதரப்பிலும் ஒவ்வொரும் ஏற்ற நிலைகள்; ஆறாம் நாள் போர் தொடங்கியது; துரோணரின் தேரோட்டியைக் கொன்ற பீமசேனன்; பீஷ்மராலும், துரோணராலும் பாண்டவர்களுக்கு ஏற்பட்ட அழிவு; பீமனாலும், அர்ஜுனனாலும் கௌரவர்களுக்கு ஏற்பட்ட அழிவு...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சிறிது ஓய்வுக்குப் பிறகு அந்த இரவு கடந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்கள், பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பும் மீண்டும் போருக்குப் புறப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் யானைகளையும், குதிரைகளையும் மோதலுக்குத் தயார்ப்படுத்தும்போதும், காலாட்படை வீரர்கள் தங்கள் கவசங்களைத் தரிக்கும்போதும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போருக்குத் தயாரான வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில் பேராரவாரம் எழுந்தது. களத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சங்குகள் மற்றும் துந்துபிகளின் முழக்கங்கள் {அங்கிருந்தவர்களைச்} செவிடாக்குவதாக இருந்தன.


அப்போது, மன்னன் யுதிஷ்டிரன், திருஷ்டத்யும்னனிடம், "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, எதிரியைச் சுடுவதும், மகரம் என்று அழைக்கப்படுவதுமான வியூகத்தில் துருப்புகளை அணிவகுப்பாயாக" என்றான். பிருதையின் மகனால் {குந்தியின் மகன் யுதிஷ்டிரனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், தேர்ப்போராளிகளில் முதன்மையானவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (மகர வியூகத்தில் அணிவகுக்கும்படி) தேர்வீரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தான்.

துருபதனும், பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அந்த அணிவகுப்பின் தலையில் அமைந்தார்கள். சகாதேவனும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலனும் அதன் கண்களாக அமைந்தார்கள். வலிமைமிக்கவனான பீமசேனன் அதன் வாயாக {முகமாக} அமைந்தான். சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன், சாத்யகி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர் அதன் கழுத்தில் நின்றனர். பெரும்படைப்பிரிவின் தலைவனான மன்னன் விராடன், திருஷ்டத்யும்னனாலும், ஒரு பெரும் படையினாலும் ஆதரிக்கப்பட்டு அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறமாக அமைந்தான்.

கேகயச் சகோதரர்கள் ஐவரும் அதன் இடது விலாவானார்கள். மனிதர்களில் புலியான திருஷ்டகேது, பெரும் ஆற்றலைக் கொண்ட சேகிதானன் ஆகியோர் வலது விலாவில் அந்த அணிவகுப்பைப் பாதுகாக்க நின்றார்கள். அதன் இரண்டு பாதங்களில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், அருளப்பட்டவனுமான குந்திபோஜனும், சதானீகனும் ஒரு பெரும்படையால் ஆதரிக்கப்பட்டு நின்றார்கள். சோமகர்களால் சூழப்பட்ட பெரும் வில்லாளியான வலிமைமிக்கச் சிகண்டியும், இராவத்தும் {இராவானும் [அ] அரவானும்} அந்த மகர வியூகத்தின் வால் பகுதியில் நின்றார்கள்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் பெரும் அணிவகுப்பை அமைத்துக் கொண்ட பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கவசம் தரித்தப்படி அதிகாலையிலேயே மீண்டும் போருக்காக நின்றார்கள். யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படையுடனும், உயர்த்திப் பிடிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், குடைகள் ஆகியவற்றுடனும், கூர் தீட்டப்படு பிரகாசமாக இருந்த ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு கௌரவர்களை எதிர்த்து விரைவாகச் சென்றனர்.

பிறகு உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, இப்படி அணிவகுப்பட்ட (பாண்டவப்) படையைக் கண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு பெரும் நாரையின் வடிவத்திலான {கிரௌஞ்ச வியூகத்தை} [1] எதிரணியாக வகுத்தார். அதன் அலகாகப் பரத்வாஜரின் மகன் (துரோணர்) இருந்தார். அஸ்வத்தாமன், கிருபர் ஆகியோர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அதன் கண்களாயிருந்தனர். வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான கிருதரவர்மன், அங்கே நின்ற காம்போஜர்களின் ஆட்சியாளனோடும் {சுதக்ஷிணனோடும்}, பாஹ்லீகர்களோடும் அதன் தலையாக அமைந்தான். அதன் கழுத்தாக, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூரசேனன் மற்றும் உமது மகன் துரியோதனன் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல மன்னர்களால் சூழப்பட்டபடி நின்றார்கள்.

[1]  வில்லிபாரதம் இவ்வியூகத்தைக் கரிஞ்ச வியூகம் என்கிறது.
பெருஞ் சனம்தன்னை, அப் பீடுடை வீடுமன்,
கரிஞ்சம் என்று உள்ள பேர் வியூகமும் கட்டினான்.  {வில்லி பாரதம் 3:ஆ.போ.சு.5

மத்ரர்கள், சௌவீரர்கள், கேகயர்கள் ஆகியோரோடு ஒன்றிணைந்த பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, ஒரு பெரும்படையால் சூழப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதன் மார்பில் நின்றான். கவசம் தரித்துக் கொண்டு, தன் தனிப்பட்ட துருப்புகளின் துணையோடு இருந்த பிரஸ்தலையின் மன்னன் சுசர்மன் இடது சிறகில் நின்றான். துஷாரர்கள், யவனர்கள், சகர்கள் ஆகியோர் சூளிகர்களுடன் {சூசுபர்களுடன்} சேர்ந்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த அணிவகுப்பின் வலது சிறகில் நின்றார்கள். சுருதாயுஷ், சதாயுஷ் {சதாயிஷ்}, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்} ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} அந்த அணிவகுப்பின் பின்பகுதியில் ஒருவரை ஒருவர் பாதுகாத்தபடி நின்றனர் [2].

[2] பெரும் விற்களையுடையவர்களும், காலாட்படையினருடன் கூடியவர்களுமான அவந்தி மன்னர்கள் இருவரும் அந்தக் கிரௌஞ்ச வியூகத்தின் பின்புறத்தில் நின்றார்கள் என்றும், சுருதாயுஷ், சதாயுஷ், பூரிஸ்ரவஸ் ஆகியோர் அதன் இடைப்பக்கத்தில் நின்றதாகவும் வேறு பதிப்பில் காணப்படுகிறது.  கலிங்க மன்னனான சுருதாயுஷ் என்பவன் பீமனால் கொல்லப்பட்டதாக பீஷ்ம பர்வம் பகுதி 54ஆவில் குறிப்பிருக்கிறது. இங்கு குறிப்பிடப்படும் சுருதாயுஷ் வேறு ஒருவனாக இருக்க வேண்டும்.

பிறகு அந்தப் பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போருக்காகக் கௌரவர்களை எதிர்த்து விரைந்தார்கள். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, போர் தொடங்கிய போது சூரியன் எழுந்திருந்தான் {உதயமாகியிருந்தது}. யானைகள், யானைகளை எதிர்த்து விரைந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},  குதிரைவீரர்கள், குதிரைவீரர்களை எதிர்த்தும், தேர்வீரர்கள், தேர்வீரர்களையும், யானைகளையும் அச்சந்தரும் அந்தப் போரில் எதிர்த்தனர். தேர்வீரர்கள் யானைப் பாகன்களை எதிர்த்தும், யானைப் பாகன்கள் குதிரைவீரர்களை எதிர்த்தும் விரைந்தனர். தேர்வீரர்கள், காலாட்படை வீரர்களோடும், காலாட்படை குதிரைப்படையோடும் மோதின. கோபத்தால் தூண்டப்பட்ட வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட விரைந்தனர்.

பீமசேனன், அர்ஜுனன், இரட்டையர்கள் {சகாதேவன் மற்றும் நகுலன்} ஆகியோரால் பாதுகாகப்பட்ட அந்தப் பாண்டவப்படை, விண்மீன்களால் {நட்சத்திரங்களால்} அலங்கரிக்கப்பட்ட இரவைப் போல அழகானதாக இருந்தது. பீஷ்மர், கிருபர், துரோணர், சல்லியன், துரியோதனன் மற்றும் பிறருடன் கூடிய உமது படையும் {கௌரவப்படை}, கோள்களால் {கிரகங்களால்} நிறம்பெற்ற ஆகாயவிரிவைப் போல ஒளிர்ந்தது.

பெரும் ஆற்றலைக் கொண்டவனான குந்தியின் மகன் பீமசேனன், துரோணரைக் கண்டு, பெரும் வேகம் கொண்ட குதிரைகளால் சுமக்கப்பட்ட பரத்வாஜரின் மகனுடைய {துரோணரின்} படைப்பிரிவை எதிர்த்து விரைந்தான். அந்த மோதலில் கோபம் தூண்டப்பட்டவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவருமான துரோணர், பீமனின் முக்கிய உறுப்புகளைக் குறி வைத்து, முழுக்க முழுக்க இரும்பாலான ஒன்பது {9} கணைகளால் அவனைத் {பீமனைத்} துளைத்தார். அந்தப் போரில் பரத்வாஜரின் மகனால் {துரோணரால்} ஆழமாகத் துளைக்கப்பட்ட பீமன், துரோணரின் தேரோட்டியை யமலோகத்திற்கு அனுப்பிவைத்தான். அதன்பேரில் பெரும் ஆற்றலைக் கொண்ட அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, தானே குதிரைகளைக் கட்டுப்படுத்தியபடி, பஞ்சுக் குவியலை எரிக்கும் நெருப்பைப் போல அந்தப் பாண்டவப்படையை எரிக்க ஆரம்பித்தார்.

இப்படித் துரோணராலும், பீஷ்மராலும் கொல்லப்பட்டவர்களான சிருஞ்சயர்கள், கேகயர்களுடன் சேர்ந்து சிதறி ஓடினார்கள். அதேபோல, பீமனாலும், அர்ஜுனனாலும் சிதைக்கப்பட்ட உமது துருப்புகளும், செருக்குடன் நிற்கும் அழகிய பெண் போல, உணர்விழந்து நின்றார்கள். வீரர்களுக்கு அழிவை உண்டாக்கும் அந்த மோதலில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படை மற்றும் அவர்களது படை ஆகிய இரண்டுக்கும் ஏற்பட்ட வேதனை பெரிதாக இருந்தது. தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து, ஓ!பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் போரிடும் துருப்புகளின் அற்புதக் காட்சியை நாங்கள் கண்டோம். அம்மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், கௌரவர்களும், ஒருவரின் ஆயுதங்களுக்கு மற்றவர் பதிலடி கொடுத்தபடி ஒருவரோடொருவர் போரிட்டனர்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்