Tuesday, January 05, 2016

படை திறன் சொன்ன திருதராஷ்டிரன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 076

Army's skill said by Dhritarashtra! | Bhishma-Parva-Section-076 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 34)

பதிவின் சுருக்கம் : தன் படையின் திறனை சஞ்சயனுக்கு எடுத்துரைக்கும் திருதராஷ்டிரன்; இப்படிப்பட்ட வலுவான படையும் பாண்டவர்களால் கொல்லப்படுவது விதிவசத்தாலேயே என்று புலம்புவது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "பல மகத்துவங்களைக் கொண்டதும், பல்வேறு சக்திகளைக் கொண்டதுமான நமது படையின் திறன் பெரிதாகும். அறிவியல் {சாத்திர} விதிகளின் படி அணிவகுக்கப்படுவதால் அது தடுக்கப்பட முடியாததாகும். நம்மிடம் எப்போதும் பற்றுதலையும், அர்ப்பணிப்பையும் அது {நமது படை} கொண்டிருக்கிறது. ஒழுக்கக்கேடுகள் மற்றும் குடிவெறி ஆகிய களங்கங்களில் இருந்து விடுபட்ட அஃது {கௌரவப்படை} ஒழுக்கமானதாக இருக்கிறது.


அதன் ஆற்றல் ஏற்கனவே சோதிக்கப்பட்டுள்ளது. படைவீரர்கள், மிக முதிர்ந்தவர்களாகவோ, மிக இளமையானவர்களாகவோ இல்லை. அவர்கள் மெலிந்தோ, பருத்தோ இல்லை. சுறுசுறுப்பான பழக்கவழக்கம், நன்கு வளர்க்கப்பட்ட, பலமான உடற்கட்டுகளைக் கொண்ட அவர்கள் நோயில்லாதவர்களாவர். கவசம் தரித்த அவர்கள், நல்ல தயாரிப்புடன் ஆயுதங்களோடு இருக்கிறார்கள். அனைத்து வகை ஆயுதங்களையும் பயின்றவர்கள் அவர்கள். வாள்கள், வெறுங்கைகள், கதாயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டு போரிடுவதில் அவர்கள் திறன்வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். வேல்கள் {lances}, ரிஷ்டிகள் {பட்டாக்கத்திகள் Sabres}, தோமரங்கள் {darts}, இரும்புமயமான பரிகங்கள் {iron clubs}, பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள் Short arrows}, ஈட்டிகள் {Javelins}, உலக்கைகள் {mallets} ஆகியவற்றை அவர்கள் நன்கு பயின்றவர்களாவர்,

{கம்பனங்கள், விற்கள், கணபங்கள், க்ஷேபணீயங்கள் உள்ளிட்ட} அனைத்து வகை ஆயுதப் பயிற்சிகளிலும் அவர்கள் அர்ப்பணிப்புள்ளவர்கள். யானைகளின் முதுகில் ஏறுதல் மற்றும் இறங்குதல், முன்னேறுதல், திரும்புதல், சிறப்பாக அடித்தல், அணிவகுத்தல், பின்வாங்குதல் ஆகியவற்றில் அவர்கள் திறமைமிக்கவர்களாவர். யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை நிர்வகிப்பதில் அவர்கள் பல முறை சோதிக்கப்பட்டவர்கள். முறையாகச் சோதிக்கப்பட்ட அவர்கள், குலவழிக்காக, உறவு நிலைக்காக, பற்றுறுதிக்காக அல்லாமல், பிறப்பு மற்றும் குருதியின் அடிப்படையில் அல்லாமல் ஊதியங்களால் உற்சாகப்படுத்தப்படுகின்றனர் [1].

[1] அதாவது, யானையேற்றம், குதிரையேற்றம், தேர்பவனி ஆகியவற்றில் பலவாறாக நன்றாகச் சோதிக்கப்படும் நமது படையினர், முறைப்படி சோதிக்கப்பட்டு, தகுந்த ஊதியத்தால் உற்சாகப்படுத்தப்படுகின்றனரே அன்றி, குலத்தாலோ, பற்றாலோ, உறவின்முறையாலோ, நட்பினாலோ, பிறப்பாலோ, இரத்தத்தாலோ இல்லை என்பது இங்கே பொருள்.

அவர்கள் அனைவரும் மரியாதைக்கு உரியவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது உறவினர்கள் நம்மால் நன்றாக நடத்தப்பட்டு, மனநிறைவு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு நாங்கள் பல நன்மைகளைப் புரிகின்றோம். இது தவிர, அவர்கள் புகழ்பெற்ற மனிதர்களாகவும், பெரும் மன ஆற்றல் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். மேலும், ஓ! மகனே {சஞ்சயா}, பெரும் சுறுசுறுப்பு கொண்டவர்களும், சாதனைகளால் புகழ்வாய்ந்தவர்களும், லோகபாலர்களைப் போன்றவர்களும், உலகம் முழுவதும் அறியப்பட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான பலரால் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர்களும், தங்கள் விருப்பத்தால் தங்கள் படையுடன் நம் தரப்பை அடைந்தவர்களுமான எண்ணிலா க்ஷத்திரியர்களும், அவர்களது தொண்டர்களும் அவர்களைப் {நமது படையினரைப்} பாதுகாக்கின்றனர்.

உண்மையில், அனைத்துத் திசைகளில் இருந்தும் ஓடிவரும் எண்ணற்ற நதிகளின் நீரால் நிறையும் பரந்த கடலைப் போன்றதே நமது படையாகும். சிறகில்லாவிட்டாலும், காற்றில் பறக்கும் பறவைகளைப் போன்ற யானைகள் மற்றும் தேர்கள் அதில் நிறைந்திருக்கின்றன. பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் அந்தக் கடலின் நீராக இருக்கின்றர். குதிரைகள், பிற விலங்குகள் ஆகியன அதன் பயங்கர அலைகளாக இருக்கின்றன. (அந்தக் கடலில் குவிந்துள்ள) எண்ணிலா வாள்கள், கதாயுதங்கள், ஈட்டிகள், கணைகள், வேல்கள் ஆகியவை துடுப்புகளாக இருக்கின்றன. கொடிமரங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றால் நிறைந்து, தங்கம் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட துணிகளால் அலங்கரிக்கப்பட்டு விரைந்து வரும் குதிரைகளும், யானைகளும், அதை {கடலை} மூர்க்கமாகக் கலங்கடிக்கும் காற்றாக இருக்கின்றன.

துரோணர், பீஷ்மர், கிருதவர்மன், கிருபர், துச்சாசனன் ஆகியோராலும், ஜெயத்ரதன் தலைமையிலான பிறராலும் அந்தப் படை பாதுகாக்கப்படுகிறது. பகதத்தன், விகர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலனின் மகன் {சகுனி}, பாஹ்லீகன், மற்றும் உலகத்தின் உயர்ஆன்ம வலிமைமிக்க வீரர்கள் பலராலும் அது பாதுகாக்கப்படுகிறது.

அப்படிப்பட்ட நமது படை, ஓ! சஞ்சயா, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதியின் காரணமாகவே போரில் இப்படிக் கொல்லப்படுகிறது. மனிதர்களோ, பழங்காலத்தின் உயர் ஆன்ம முனிவர்களோகூட (போருக்கான) இத்தகு தயாரிப்புகளை இதற்கு முன் பூமியில் கண்டிருக்க மாட்டார்கள். செல்வத்தால் (நம்மிடம்) பற்றுதல் கொண்டவையும், அறிவியலின் {சாத்திரங்களின்} படி திரட்டப்பட்டவையுமான இப்படிப்பட்ட பெரும்படையே போரில் கொல்லப்படுகிறது என்றால், ஐயோ, இது விதியின் விளைவு என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? ஓ! சஞ்சயா, இவை யாவும் இயற்கைக்கு மாறானதாகவே தெரிகிறது [2].

[2] வேறு ஒரு பதிப்பில் இன்னும் அதிகமாகச் சொல்லப்பட்டுள்ளது. அது பின்வருமாறு: "இப்படிக் கடுமையானதாக இருக்கும் இந்தப் படை, போரில் பாண்டவர்களைக் கொல்லாமல் இருப்பதால், இது முழுமையும் எனக்கு இயற்கைக்கு மாறானதாகத் தோன்றுகிறது. நமது படை கொல்லப்படுவதால், பாண்டவர்களுக்காகத் தேவர்களே இங்கு ஒன்று சேர்ந்து போர்புரிகிறார்கள் என்பது நிச்சயம்" என்று திருதராஷ்டிரன் சொல்வதாக வருகிறது.

உண்மையில் நன்மையானது, ஏற்கத்தக்கது ஆகிய இரண்டையும் அடிக்கடி விதுரன் சொன்னான். ஆனால், என் தீய மகன் துரியோதனனோ, அஃதை ஏற்கவில்லை. உயர் ஆன்மா கொண்டவனும், நல்லறிவு கொண்டவனுமான அவன் {விதுரன்}, இப்போது நடப்பவற்றை முன்னரே அறிந்தே எங்களுக்கு ஆலோசனை வழங்கினான் என நான் நம்புகிறேன். அல்லது, ஓ! சஞ்சயா, இவை யாவும், அதன் முழுமையுடன், படைப்பவனால் முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவனால் {படைத்தவனால்} விதிக்கப்பட்டவை விதிக்கப்பட்டபடியே நடந்தே தீரும், வேறுவிதமாகாது" {என்றான் திருதராஷ்டிரன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்