Sunday, January 24, 2016

பீமனிடம் தப்பிய சித்திரசேனன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 086

Chitrasena escaped from Bhima! | Bhishma-Parva-Section-086 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 44)

பதிவின் சுருக்கம் : அபிமன்யுவுக்குத் துணையாக வந்த அர்ஜுனன்; பீஷ்மரைக் கொன்று சபதத்தை நிறைவேற்றும்படி சிகண்டியிடம் சொன்ன யுதிஷ்டிரன்; சிகண்டியின் ஆற்றல்; ஜெயத்ரதனுக்கும் பீமனுக்கும் இடையில் நடந்த போர்; பீமனின் கதாயுதத்துக்குத் தப்பி ஓடிய சித்திரசேனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "{சுசர்மன் மற்றும் அவனுக்குத் துணையாக நின்ற பிற மன்னர்களின்} அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட வலிமைமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, மிதிபட்ட பாம்பைப் போல நீண்ட பெருமூச்சுகளை விட்டபடி, தன் தொடர்ச்சியான கணைகளின் பெரும் சக்தியால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களின் விற்களை வெட்டினான். அந்தப் போரில் பலம் நிறைந்த ஏகாதிபதிகளின் விற்களை ஒருக்கணத்தில் வெட்டிப் போட்ட உயர் ஆன்ம அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களை அழிக்க விரும்பி, ஒரே நேரத்தில் தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்தான்.


இப்படி இந்திரனின் மகனால் {அர்ஜுனனால்} தாக்கப்பட்ட அவர்களில் சிலர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரத்தத்தில் மூழ்கி களத்தில் விழுந்தனர். சிலர் தங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டனர், மேலும் சிலர் தலை அறுபட்டனர். இன்னும் சிலர் கவசங்கள் பிளந்து, உடல்கள் சிதைந்து மாண்டனர். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட அவர்களில் பலர், பூமியில் விழுந்து ஒன்றாக அழிந்தனர்.

போரில் கொல்லப்பட்ட அந்த இளவரசர்களைக் கண்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, {அந்த இடத்தை நோக்கித்} தன் தேரில் முன்னேறி வந்தான். கொல்லப்பட்ட போராளிகளின் பின் பக்கத்தைப் பாதுகாத்த தேர்வீரர்களில் முப்பத்திரண்டு {32} பேரும் பார்த்தன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தனர். பார்த்தனை {அர்ஜுனனைச்} சூழ்ந்த அவர்கள் அனைவரும், உரத்த நாணொலி கொண்ட தங்கள் விற்களை வளைத்து, மலைச்சாரலில் நீரை பெருமளவில் பொழியும் மேகங்களைப் போல, அடர்த்தியான கணை மழையை அவன் {அர்ஜுனன்} மீது பொழிந்தனர்.

அந்தப் போரில், கணைமாரியால் பீடிக்கப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, எண்ணெயில் தோய்த்த {தோய்த்துக் கூராக்கப்பட்ட} அறுபது {60} கணைகளால் பின்புறத்தைப் பாதுகாத்தவர்களான அவர்கள் அனைவரையும் {யமனுலகு} அனுப்பி வைத்தான். அந்த அறுபது தேர்வீரர்களையும் வீழ்த்திய ஒப்பற்ற தனஞ்சயன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சியால் இதயம் நிறைந்தான் {மனக்களிப்படைந்தான்}. அம்மன்னர்களின் படைகளையும் கொன்ற ஜிஷ்ணு {அர்ஜுனன்}, {அடுத்து} பீஷ்மரைக் கொல்ல விரைந்தான்.

வலிமைமிக்கத் தேர்வீரர்களான தன் நண்பர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, தனக்கு முன்னணியில் பல (பிற) மன்னர்களையும் கொண்டு பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காக அவனிடம் விரைந்து வந்தான். ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையான தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கி முன்னேறும் அந்தப் போராளிகளைக் கண்ட, சிகண்டியின் தலைமையிலான பாண்டவ வீரர்கள், அர்ஜுனனின் தேரைப் பாதுகாக்க விரும்பி, கூர் தீட்டப்பட்ட ஆயுதங்களைக் கைகளில் கொண்டு முன்னேறினர்.

திரிகர்த்தர்களின் ஆட்சியாளனுடன் {சுசர்மனுடன்} தன்னை நோக்கி முன்னேறிவரும் அந்தத் துணிச்சல்மிக்கவர்களைக் கண்ட பார்த்தனும் {அர்ஜுனனும்}, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளின் மூலம் அந்தப் போரில் அவர்களைச் சிதைத்தான். பிறகு, பீஷ்மரை அணுக விரும்பிய அந்தப் புகழ் பெற்ற வில்லாளி {அர்ஜுனன்}, துரியோதனனையும், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} தலைமையிலான பிற மன்னர்களையும் கண்டான். பெரும் சக்தியுடன் போரிட்டு, பீஷ்மரைப் பாதுகாக்க விரும்பிய அவ்வீரர்களை ஒரு கணத்தில் தடுத்தவனும், பெரும் வீரம் கொண்டவனும், அளவிலா ஆற்றல், மிகுந்த பலம், பெரும் மனவுறுதி ஆகியவற்றைக் கொண்டவனுமான வீர அர்ஜுனன், துரியோதனன், ஜெயத்ரதன் மற்றும் பிறரை தவிர்த்துவிட்டு, கையில் வில் மற்றும் அம்புடன் அந்தப் போரில் கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி இறுதியில் முன்னேறினான்.

கடும் ஆற்றல், அளவிலா புகழ் ஆகியவற்றைக் கொண்ட உயர் ஆன்ம யுதிஷ்டிரனும், கோபத்தால் தூண்டப்பட்டு, தனது பங்காக ஒதுக்கப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளனைப் {சல்லியனைப்} [1] போரில் தவிர்த்துவிட்டு, பீமன் மற்றும் மாத்ரி மகன்களின் {நகுலன் மற்றும் சகாதேவனின்} துணையுடன், சந்தனுவின் மகனான பீஷ்மரை நோக்கிப் போரிடுவதற்காக விரைவாகச் சென்றான். ஒன்றாகக் கூடியிருந்த பாண்டு மகன்கள் அனைவராலும் போரில் தாக்கப்பட்டாலும், போர்க்கலையின் அனைத்து வழிமுறைகளையும் அறிந்தவரும், கங்கை மற்றும் சந்தனுவின் உயர் ஆன்ம மகனுமான அவர் {பீஷ்மர்}, சற்றேனும் நடுங்கவில்லை.

[1] பீஷ்ம பர்வம் பகுதி 84ல் சகாதேவனால் வீழ்த்தப்பட்ட சல்லியன் மூர்ச்சை தெளிந்து யுதிஷ்டிரனைப் போரில் சந்திக்கிறான். எனினும் யுதிஷ்டிரன், சல்லியனைத் தவிர்த்துச் செல்கிறான் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம்.

கடும்பலமும், பெரும் சக்தியும், இலக்கில் உறுதியும் கொண்ட மன்னன் ஜெயத்ரதன், போரில் முன்னேறி, தன் சிறந்த வில்லைக் கொண்டு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரின் விற்களையும் [2] பலத்துடன் வெட்டி வீழ்த்தினான். கோபம் தூண்டப்பட்டவனும், ஒப்பற்றவனுமான துரியோதனன், தன் நிலை குறித்த கோபத்தில், நெருப்பின் சுடர்களுக்கு ஒப்பான கணைகளால் யுதிஷ்டிரன், பீமசேனன், இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்}, பார்த்தன் {அர்ஜுனன்} ஆகியோரைத் தாக்கினான். மேலும், கிருபர், சலன், சித்திரசேனன் ஆகியோரின் கணைகளாலும் துளைக்கப்பட்ட பாண்டவர்கள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) ஒன்று சேர்ந்திருந்த தைத்தியர்களின் கணைகளால் துளைக்கப்பட்ட தேவர்களைப் போலக் கோபத்தால் எரிந்து கொண்டிருந்தனர்.

[2] இங்கே அர்ஜுனன் இல்லை முந்தைய பத்திகளிலேயே அர்ஜுனன் ஜெயத்ரதனையும், துரியோதனனையும் தவிர்த்துவிட்டுச் செல்கிறான் என்பதை நினைவில் கொள்க. காண்டீவம் இங்கே வீழவில்லை.

சந்தனு மகனால் {பீஷ்மரால்} ஆயுதம் வெட்டப்பட்டு ஓடிக்கொண்டிருந்த சிகண்டியைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன் கோபத்தால் நிறைந்தான் [3]. அப்போரில் சிகண்டியிடம் கோபத்துடன் பேசிய அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, "உன் தந்தையின் முன்னிலையில் என்னிடம், "உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் பிரகாசமிக்கச் சூரியனின் நிறத்தைக் கொண்ட என் கணைகளால் நான் கொல்வேன். உண்மையாகவே நான் இதைச் சொல்கிறேன்" என்று அப்போது நீ சொன்னாய். அஃதே உனது உறுதிமொழியாகும். தேவவிரதரை {பீஷ்மரை} நீ போரில் கொல்லாத வரை, உனது உறுதிமொழியை நிறைவேற்றாதவனாகவே நீ இருப்பாய். ஓ! வீரா {சிகண்டியே}, நிறைவேறா உறுதிமொழியைக் கொண்டவனாக இராதே.

[3] சிகண்டியின் ஆயுதத்தைப் பீஷ்மர் வெட்டியிருக்கிறார் என்றால், அவனுடன் போரிட்டாரா? அல்லது அவன் ஏவிய ஆயுதத்தை மட்டும் வெட்டினாரா? என்பது தெரியவில்லை.

உனது அறம், குலம், புகழ் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்வாயாக. பயங்கர மூர்க்கம் கொண்ட பீஷ்மர், கடும் சக்தி கொண்ட தனது எண்ணற்ற கணைகளால் எனது படைகளை எரித்து, காலனைப் போல ஒரு கணத்தில் அனைத்தையும் அழிப்பதைப் பார். உனது வில்லறுபட்டு, போரைத் தவிர்த்துவிட்டு, சந்தனுவின் அரசமகனால் {பீஷ்மரால்} வீழ்த்தப்பட்டு, உனது சொந்தங்களையும் சகோதரர்களையும் கைவிட்டுவிட்டு நீ எங்கே செல்லப் போகிறாய்? இஃது உனக்குத் தகாது. அளவற்ற ஆற்றலைக் கொண்ட பீஷ்மரையும், முறியடிக்கப்பட்டு ஓடும் நமது படையையும் கண்டு, ஓ துருபதன் மகனே {சிகண்டியே}, நீ அச்சப்படுகிறாய் என்பது உறுதியே. அதனாலேயே உன் முகத்தின் நிறம் மங்கியிருக்கிறது. ஓ! வீரா {சிகண்டியே}, இந்தப் பயங்கரப் போரில் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஈடுபட்டிருக்கிறான் என்பது உனக்குத் தெரியவில்லையே.  ஓ! வீரா {சிகண்டியே}, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நீ, பீஷ்மரைக் கண்டு இன்று ஏன் அஞ்சுகிறாய்? [4]" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

[4] இந்த இடத்தில் தான் ஏற்றிருக்கும் பம்பாய் உரை ajnayamanas cha என்று சொல்வதாகவும், வங்காள உரை தவறானதாகத் தெரிகிறது என்றும் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறு ஒரு பதிப்பில் இந்த இடத்தில்: "நன்றாகத் தொடங்கப்பட்டிருக்கிற பெரும் போரில் வீரத் தனஞ்சயன் {அர்ஜுனன்} பின்புறம் நிற்கையிலே, பூமியில் பீஷ்மரை விடப் புகழ் பெற்றவனான நீ எப்படிப் பயத்தை இப்பொழுது பாராட்டலாம்?" என்று இருக்கிறது. இந்தத் தென்னகப் பதிப்பும் தவறானதாவே இருக்கக்கூடும்.

பலமான காரணத்துடன் கூடியதாக {நியாயமானதாக} இருந்தாலும் கடுமையுடன் இருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உயர் ஆன்ம சிகண்டி, அவற்றை நல்ல ஆலோசனையாகக் கருதி, பீஷ்மரைக் கொல்வதில் தன்னை விரைவாக நிலைநிறுத்திக் கொண்டான். பீஷ்மர் மீது பாய்வதற்காக அப்போரில் பெரும் மூர்க்கத்துடன் சிகண்டி முன்னேறிக் கொண்டிருந்தபோது, கலங்கடிப்பதற்குக் கடினமான பயங்கர ஆயுதங்களால் சல்லியன் அவனைத் தடுக்கத் தொடங்கினான். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்ட அந்தத் துருபதன் மகன் {சிகண்டி}, அண்ட அழிவு நேரத்தின்போது சுடர்விட்டெரியும் நெருப்பைப் போன்று பிரகாசத்துடன் (இப்படிக்) காட்சியளித்த அந்த ஆயுதங்களைக் (ஆக்னேயாஸ்திரங்களைக்} கண்டு கிஞ்சிற்றும் குழம்பவில்லை,.

தனது கணைகளால் அந்த அயுதங்களைத் தடுத்த வலிமைமிக்க வில்லாளியான சிகண்டி, அசையாமல் அங்கேயே நின்றான். பிறகு, (சல்லியனின் அந்த நெருப்பு போன்ற ஆயுதங்களை [அந்த ஆக்னேயாஸ்திரங்களைக்]) கலங்கடிப்பதற்காக, மற்றொரு ஆயுதமான கடுமையான வருண ஆயுதத்தை {வருணாஸ்திரத்தை} அவன் {சிகண்டி} எடுத்தான். பின்னர், ஆகாயத்தில் நின்றிருந்த தேவர்களும், பூமியில் இருந்த மன்னர்களும் என அனைவரும், சல்லியனின் ஆயுதங்களைக் கலங்கடிக்கும் சிகண்டியின் வருண ஆயுதத்தைக் கண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதே வேளையில், உயர் ஆன்மா கொண்ட வீர பீஷ்மர்,  பாண்டுவின் மகனும், ஆஜமீட குலத்தவனுமான மன்னன் யுதிஷ்டிரனின் பலவண்ணங்களிலான கொடிமரத்தையும், வில்லையும் அந்தப் போரில் வெட்டி வீழ்த்தினார்.

அதன் பேரில், அச்சத்தில் மூழ்கியிருக்கும் யுதிஷ்டிரனைக் கண்டு, தனது வில்லையும் கணைகளையும் போட்டுவிட்டு, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்ட பீமசேனன், அந்தப் போரில் கால்நடையாகவே ஜெயத்ரதனை நோக்கி விரைந்தான். பிறகு, ஜெயத்ரதன், யமதண்டம் போன்றவையும், கூர் முனை கொண்டவையுமான ஐநூறு {500} பயங்கரக் கணைகளைக் கொண்டு, தன்னை நோக்கிக் கையில் கதாயுதத்துடன் இப்படி மூர்க்கமாக விரைந்து வரும் பீமசேனனை அனைத்துப் புறங்களிலும் இருந்தும் துளைத்தான். அந்தக் கணைகளை அலட்சியம் செய்தவனும், மூர்க்கமானவனுமான விருகோதரன் {பீமன்}, சினத்தால் நிறைந்த இதயத்துடன், ஆரட்டாவில் [5] பிறந்தவையான சிந்துக்கள் மன்னனின் {ஜெயத்ரதனின்} குதிரைகள் அனைத்தையும் அப்போரில் கொன்றான்.

[5] அரேபியாவுக்குச் சற்றே வடக்கே, தென்கிழக்கு ஈராக்கில் உள்ள ஓர் இடமாகும் இந்த ஆரட்டா. கர்ண பர்வம் பகுதி 45லும் குறிப்பிடப்படும் இது கள்வர்களின் இடமாகச் சொல்லப்படுகிறது. இந்த இடம் சுமேரிய இலக்கியங்களில் அதிகம் குறிப்பிடப்படுகிறது. தொன்மங்களுக்கு வெளியே இந்த நகரத்தைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளேதும் கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

அதன்பிறகு, பீமசேனன் நடந்து வருவதைக் கண்டவனும், நிகரற்ற ஆற்றலைக் கொண்டவனும், தேவர்கள் தலைவனை {இந்திரனைப்} போன்றவனுமான உமது மகன் (சித்திரசேனன்), அவனுக்கு {பீமனுக்கு} மரணத்தைக் கொடுப்பதற்காக உயர்த்திய ஆயுதங்களுடன் அவனை {பீமனை} நோக்கித் தன் தேரில் விரைந்தான். பீமனும், கையில் கதாயுதத்துடன் முழங்கிக் கொண்டே, உரக்கக் கத்திய படி அவனை {சித்திரசேனனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான். யமதண்டத்தைப் போன்றிருந்த அந்த உயர்த்திப் பிடிக்கப்பட்ட கதாயுதத்தைக் கண்ட கௌரவர்கள் அனைவரும், (தங்களுக்கு மத்தியில்) அது பாய்வதைத் தவிர்க்க விரும்பி, துணிச்சல் மிக்க உமது மகனை {சித்திரசேனனைக்} கைவிட்டுவிட்டு ஓடினார்கள் [6].

[6] வேறு ஒரு பதிப்பில் இந்த இடம் வேறு மாதிரியாக இருக்கிறது. அது பின்வருமாறு: "பீமன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக மயக்கமுற்ற ஜெயத்ரதன், போரிடுவதை நிறுத்தி, குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரைவிட்டுவிட்டுச் சகுனியுடன் சேர்ந்து குருமன்னன் {துரியோதனன் இருக்கும் இடத்திற்குச் சென்றான். பிறகு, பீமனும் விரைவாக முழங்கிக் கொண்டு ஜெயத்ரதனை அச்சுறுத்திக் கதாயுதத்துடன் எதிர்த்தான். யமதண்டம் போன்ற அந்தக் கதாயுதம் பீமனால் தூக்கப்பட்டதைத் கண்ட அந்தக் கௌரவர்கள் அனைவரும், நெருங்கியதும், நன்றாக அடிப்பதும், அதிபயங்கரமானதும், புத்தி மயக்கத்தை ஏற்படுத்துவதுமான அந்தப் போரில் கதாயுதத்தின் உக்கிரப் பாய்ச்சலை விலக்க எண்ணி, உமது மகனை {சித்திரசேனனை} விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள்" என்று இருக்கிறது. கங்குலியை விட இந்த வர்ணனைத் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.

புலனுணர்வைக் குழப்புவதும், கடுமையானதும், அச்சத்தைத் தருவதுமான (மனிதர்களின்) அந்த நொறுங்கலில் {போரில்}, தன்னை நோக்கி வரும் கதாயுதத்தைச் கண்டாலும், சித்திரசேனன் தனது புலனுணர்வுகளை இழக்கவில்லை. பளபளக்கும் ஒரு வாளையும், ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்ட அவன் {சித்திரசேனன்} தனது தேரைக் கைவிட்டுவிட்டு, மலைமுகட்டின் மேல் இருந்து குதிக்கும் சிங்கத்தைப் போல (தன் வாகனத்தில் இருந்து) கீழே தரையில் குதித்துக் காலாட்படை வீரனானான்.

அதே வேளையில் அந்த அழகிய தேரின் மேல் விழுந்த அந்தக் கதாயுதம், குதிரைகள் மற்றும் தேரோட்டியுடன் கூடிய அந்த வாகனத்தையே {தேரையே} அந்தப் போரில் அழித்து, ஆகாயத்தில் இருந்து பூமியில் தளர்ந்து விழும் சுடர்மிக்க ஓர் எரிநட்சத்திரத்தைப் போலப் பூமியில் விழுந்தது {கதாயுதம்}. அற்புதம் நிறைந்த அந்த உயர்ந்த சாதனையை {சித்திரசேனன் தப்பியதைக்} கண்ட உமது துருப்புகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்தன. அவை {அந்தத் துருப்புகள்} அனைத்தும் ஒன்றாகக் கூடி அந்தப் போர்க்களத்தில் பெருமுழக்கம் செய்தன. மேலும் வீரர்கள் அனைவரும் (தாங்கள் என்ன கண்டார்களோ, அதற்காக) உமது மகனை {சித்திரசேனனை}  பாராட்டினார்கள்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்