Wednesday, January 27, 2016

ஊர்மி சிருங்காடக வியூகங்கள்! - பீஷ்ம பர்வம் பகுதி - 088

Kurma and Sringataka vyuhas! | Bhishma-Parva-Section-088 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 46)

பதிவின் சுருக்கம் : எட்டாம் நாள் போர் தொடங்கியது; கௌரவர்கள் அமைத்துக் கொண்ட வியூகம்; கௌரவவீரர்கள் வியூகத்துக்குள் நின்ற நிலைகள்; பாண்டவர்கள் அமைத்த எதிர்வியூகம்; பாண்டவர்களை எதிர்த்து விரைந்த பீஷ்மர்; தொடர்ந்து நடந்த பயங்கரப் போர்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த இரவை நல்ல உறக்கத்தில் கழித்த மனிதர்களின் ஆட்சியாளர்களான கௌரவர்களும், பாண்டவர்களும் மீண்டும் போரிடச் சென்றனர். இரு படைகளின் துருப்புகளும், களத்திற்குச் செல்ல முற்பட்ட போது கேட்கப்பட்ட பெரும் ஆரவாரமானது கடலின் பேரிரைச்சலுக்கு ஒப்பானதாக இருந்தது.


பிறகு, மன்னன் துரியோதனன், சித்திரசேனன், விவிம்சதி, தேர்வீரர்களின் முதன்மையான பீஷ்மர், பெரும் ஆற்றலைக் கொண்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்} ஆகிய கவசம் பூண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்று சேர்ந்து பாண்டவர்களுக்கு எதிரான கௌரவ வியூகத்தைப் பெருங்கவனத்துடன் அமைத்தனர். குதிரைகளையும், யானைகளையும் அலைகளாகவும், நீராகவும் கொண்ட கடுமையானக் கடலைப் போன்ற அந்த வலிமைமிக்க {ஊர்மி} வியூகத்தை [1] அமைத்த பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மாளவர்கள், தென்னாட்டில் குடியிருப்பவர்கள், அவந்திகள் ஆகியோர் துணையுடன், முழுப் படையின் முன்னணியில் சந்தனுவின் மகனான உமது தந்தை பீஷ்மர் சென்றார்.

[1] கூர்ம வியூகம் என்கிறது வேறொரு பதிப்பு. மற்றொரு பதிப்பில் ஊர்மி வியூகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஊர்மி வியூகம் என்றால் கடலலைகளை ஒத்த வியூகம் என்று பொருளாம்.

அவருக்கு {பீஷ்மருக்கு} அடுத்துப் புளிந்தர்கள், பாரடர்கள் [2], க்ஷூத்திரகமாலவர்கள் ஆகியோருடன் பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, இருந்தார். துரோணருக்கு அடுத்ததாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரிடும் உறுதியான தீர்மானத்துடன் மகதர்கள், கலிங்கர்கள் மற்றும் பிசாசர்களோடு [3] வீர பகதத்தன் இருந்தான். பகதத்தனுக்குப் பின்னே மேகலர்கள், திரிபுரர்கள், சிசிலர்கள் {குருவிந்தர்கள்} ஆகியோருடன் கோசலர்களின் மன்னனான பிருஹத்பலன் இருந்தான். பிருஹத்பலனுக்கு அடுத்ததாகப் பெரும் எண்ணிக்கையிலான காம்போஜர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான யவனர்களுடன் [4], துணிவுமிக்கப் பிரஸ்தல ஆட்சியாளனான மன்னன் திரிகர்த்தன் இருந்தான்.

[2] இவர்கள் பரதவம்சத்தவர் அல்ல; வேறு இனத்தவர் என்று வேறொரு பதிப்பில் சுட்டப்படுகிறது. இன்றைய பலுச்சிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று புரானிக் என்சைக்ளோபீடியா சொல்கிறது.

[3] வேறு சில நாட்டவர்கள் என்று வேறொரு பதிப்பில் சுட்டப்பட்டுள்ளது.

[4] பூருவின் மகனான துர்வசுவின் வம்சத்தினரே யவனர்கள் என்று அழைக்கப்பட்டதாக ஆதிபர்வம் பகுதி 85ல் குறிப்பு ஒன்று இருக்கிறது. பாண்டுவால் கூட வீழ்த்த முடியாத யவனர்களின் மன்னனையே அர்ஜுனன் வீழ்த்தினான் என்ற குறிப்பு ஆதிபர்வம் பகுதி 141ல் இருக்கிறது. யவன மன்னனின் பெயர் சானுர் என்பது சபாபர்வம் பகுதி 4ல் காணக்கிடைக்கிறது.

திரிகர்த்தர்களின் ஆட்சியாளனுக்கு அடுத்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்க வீரனான துரோண மகன் {அஸ்வத்தாமன்} சிங்கமுழக்கமிட்டபடி பூமியை எதிரொலிக்கச் செய்தான். துரோணரின் மகனுக்கு {அஸ்வத்தாமனுக்கு} அடுத்ததாகத் தன்னுடன் தம்பிகளால் சூழப்பட்டபடிருந்த மொத்தப் படையுடன் மன்னன் துரியோதனன் சென்றான். துரியோதனனுக்குப் பின்பு சரத்வானின் மகனான கிருபர் சென்றார். இப்படியே கடலை ஒத்த அந்த வலிமைமிக்கப் படை (போரிடச்} சென்றது. ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, கொடிமரங்கள், வெண்குடைகள், அழகிய தோள்வளைகள், விலையுயர்ந்த விற்கள் ஆகியன ஆங்கே தங்கள் ஒளியைப் பொழிந்தன.

உமது படைகளின் அந்த வலிமைமிக்க வியூகத்தைக் கண்டப் பெரும் தேர்வீரனான யுதிஷ்டிரன், (தன் படையின்) தலைவனான பிருஷதன் மகனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} வேகமாக, "ஓ! பெரும் வில்லாளியே {திருஷ்டத்யும்னா}, கடல் போன்று ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் அந்த {கூர்ம} வியூகத்தைப் பார். ஓ! பிருஷதனின் மகனே {திருஷ்டத்யும்னா}, தாமதமில்லாமல் நீயும் எதிர்வியூகத்தை அமைப்பாயாக" என்றான்.

(இப்படிச் சொல்லப்பட்டதும்), ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதனின் அந்த வீர மகன் {திருஷ்டத்யும்னன்}, பகைவியூகங்கள் அனைத்தையும் அழிப்பதும், சிருங்காடகம் [5] என்று அழைக்கப்படுவதுமான அந்தப் பயங்கர வியூகத்தை அமைத்தான். பல்லாயிரம் தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படைகளுடன் கூடியவர்களான பீமசேனனும், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகியும் அதன் {அந்த சிருங்காட வியூகத்தின்} கொம்புகளில் {சிகரங்களில்} இருந்தனர். அவர்களுக்கு அடுத்ததாக, மனிதர்களில் முதன்மையானவனும், வெண்குதிரைகளையும், தன் தேரோட்டியோகக் கிருஷ்ணனையும் கொண்ட அர்ஜுனன் நின்றான். மன்னன் யுதிஷ்டிரனும், மாத்ரியின் மூலமான பாண்டுவின் இரட்டை மகன்களும் {நகுலனும், சகாதேவனும்} {வியூகத்தின்} நடுவில் நின்றனர். வியூகங்களின் அறிவியலை அறிந்த மற்ற அரசவில்லாளிகள் தங்கள் துருப்புகளுடன் அந்த வியூகத்தை நிறைத்தனர். பின்புறத்தில் அபிமன்யு, வலிமிக்கத் தேர்வீரனான விராடன், திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன் ஆகியோர் இருந்தனர்.

[5] மூன்று சிகரங்களைக் கொண்ட மலை என்பது சிருங்காடகம் என்பதன் பொருளாகும். அது நாற்சந்தி தெரு போன்றது என்று வேறொரு பதிப்பில் விளக்கப்பட்டிருக்கிறது.வில்லிபாரதத்தில் கௌரவர்கள் சூசி வியூகமும், பாண்டவர்கள் சகட வியூகமும்,  அமைத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
துன்று கங்கையின் திருமகன் சூசி யூகமும், துளப மால்
வென்றி கூர் பெருஞ் சகடமாம் வெய்ய யூகமும், செய்யவே.   {வில்லி பாரதம் 3:எ.போ.ச.3}

இப்படியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தங்கள் வியூகத்தை அமைத்துக் கொண்ட வீரப் பாண்டவர்கள், வெற்றியை விரும்பி போருக்கான ஏக்கத்துடன் களத்தில் காத்திருந்தனர். சங்கொலிகளுடனும், சிங்க முழக்கங்களுடனும், (போராளிகளின்) முழக்கங்கள் மற்றும் தோள்தட்டும் ஒலிகள் ஆகியவற்றுடன் கலந்த பேரிகைகளின் உரத்த ஒலி, திசைகள் அனைத்தையும் பயங்கரமாக நிறைத்தது. போருக்காக ஒருவரையொருவர் அணுகும் அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} கண்களைச் சிமிட்டாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பிறகு அந்த வீரர்கள், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, முதலில் ஒருவரையொருவர் பெயர் சொல்லி சவாலுக்கழைத்த பிறகு, தங்களுக்குள் மோதிக் கொண்டனர் [6]. பிறகு, உமது துருப்புகளும், எதிரியின் துருப்புகளும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. அவற்றுக்கிடையில் கடுமையானதும் பயங்கரமானதுமான ஒரு போர் தொடங்கியது

[6] தென்னகப் பதிப்பு ஒன்றில், இந்த இடத்தில், "அந்தச் சூரர்கள் ஒருவரையொருவர் நாடி இமை கொட்டடாமல் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அந்தப் போர்வீரர்கள் மனத்தினாலேயே போரிட்டார்கள். பிறகு அவர்கள் பரஸ்பரம் அழைத்து உடலாலும் போரிட்டார்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது. "இந்த இடத்தில் namabhis என்று சொல்லும் பம்பாய் உரையே சரியென்று தான் நினைப்பதாகவும், வங்க உரையில் manobhis என்று இருப்பதாகவும், தங்கள் எதிரிகளைத் தனிமைப்படுத்தினாலும், மனிதர்கள் ஒருவரையொருவர் மனதால் சவாலுக்கழைக்க எப்படி முடியும்? என்று கேள்வி கேட்டும் {இங்கே வங்க உரை தவறாக இருக்கக்கூடும் என்றும்}" இங்கே விளக்குகிறார் கங்குலி.

அந்தப் போரில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, திறந்த வாயுடன் கூடிய பயங்கரப் பாம்புகளைப் போல, கூர்மையான நாராசங்கள் மழையாக விழுந்தன. மூர்க்கமான வேகத்துடன் கூடியவையும், எண்ணெயில் தோய்க்கப்பட்டவையுமான பளபளக்கும் ஈட்டிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேகங்களில் ஒளிரும் மின்னலின் கீற்றுகளைப் போலப் பிரகாசித்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, பளபளக்கும் பட்டைகள் இணைக்கப்பட்டு, களமெங்கும் விழுந்து கிடந்த கதாயுதங்கள், மலைகளின் முகடுகளைப் போலத் தெரிந்தன. தெளிந்த (நீல) வானின் நிறம் கொண்ட கத்திகளும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட காளைத்தோல் கேடயங்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, களமெங்கும் விழுந்தபோது, அவை அழகாகத் தெரிந்தன.

அந்த இரு படைகளும் ஒன்றோடொன்று போரில் ஈடுபட்ட போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளும் தேவர்களும், அசுரர்கூட்டங்களும் ஒளிர்ந்தது போல ஒளிர்வதாகத் தெரிந்தது. எல்லாவகையிலும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட அவர்கள் விரைந்தனர். அரசத் தேர்வீரர்களில் முதன்மையானவர்கள், அந்தப் பயங்கரப் போரில் {எதிரிப்படையின்} தேர்வீரர்களை எதிர்த்து மூர்க்கமாக மோதித் தங்கள் எதிரிகளின் தேர் நுகத்தடி தங்கள் தேர்களில் சிக்கியபடியே போரிட்டனர். மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, போரிடும் யானைகளின் தந்தங்களுடைய உராய்வின் விளைவால், களமெங்கும் புகையுடன் கூடிய நெருப்புப் பொறிகள் உண்டாகின., யானைகளின் முதுகிலிருந்த போராளிகள், வேல்களால் தாக்கப்பட்டுக் கீழே விழுவது, மலைகளின் சிகரங்களில் இருந்து (தளர்ந்து) விழும் பாறைகளைப் [7] போலத் தெரிந்தது. துணிவுமிக்கக் காலாட்படை வீரர்கள், வெறும் கைகளைக் கொண்டோ, வேல்களைக் கொண்டோ போரிட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது மிக அழகாகத் தெரிந்தது.

[7] மூலத்தில் இந்த இடத்தில் Nagas என்று இருக்கிறது. இதற்குக் கற்கள் என்றும் மரங்கள் என்று இரு பொருள்கள் உண்டு. இவ்விரண்டு ஒப்பீடுமே இந்த இடத்திற்குப் பொருந்தும் என இங்கே கங்குலி விளக்குகிறார்.

கௌரவ மற்றும் பாண்டவப் படைகளின் வீரர்கள், அம்மோதலில் ஒருவரையொருவர் அணுகி, பல்வேறுவிதமான கணைகளால் ஒருவரையொருவர் யமனுலகு அனுப்பி வைத்தனர். பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர், தன் தேரின் சடசடப்பொலியை (சுற்றிலும்) நிரப்பி, தனது வில்லின் நாணொலியால் எதிரிகளின் புலனுணர்வை இழக்கச் செய்தபடி, போரில் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தார். திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பாண்டவத் தேர்வீரர்களும், போரிட உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, கடுமுழக்கங்களிட்டபடி அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தனர். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களது {பாண்டவர்களது} மற்றும் உமது காலாட்படைவீரர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியவற்றுக்குள் போர் தொடங்கியது. அதில் போராளிகள் அனைவரும் கலந்து போனார்கள் {சிக்கிக் கொண்டார்கள்}" {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்