Friday, January 29, 2016

கௌரவர்கள் எண்மரைக் கொன்ற பீமன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 089

Bhima killed eight Kauravas! | Bhishma-Parva-Section-089 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 47)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரை எதிர்த்த பாண்டவத் துருப்புகள்; பாஞ்சாலர்களை வீழ்த்திய பீஷ்மர்; பாண்டவர்களில் பீமன் மட்டுமே பீஷ்மரை எதிர்த்தது; தன் தம்பிகள் சூழப் பீஷ்மரைப் பாதுகாத்த துரியோதனன்; துரியோதனன் தம்பிகள் எண்மரைக் கொன்ற பீமன்; திருதராஷ்டிரனின் மற்ற மகன்கள் அஞ்சி ஓடியது; தன் தம்பிகளின் மறைவால் துயருற்ற துரியோதனன் பீஷ்மரிடம் புலம்பியது; துரியோதனனுக்குப் பழையதை நினைவூட்டி உறுதி அளித்த பீஷ்மர்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "போரில் கோபத்தால் தூண்டப்பட்டவரும், சுட்டெரிக்கும் வெம்மை கொண்ட சூரியனைப் போல அனைத்துப் புறங்களையும் எரிப்பவருமான பீஷ்மரைப் பார்ப்பதற்கும் சக்தியற்றவர்களாகப் பாண்டவர்கள் இருந்தார்கள். கூர்மையான கணைகளால் அனைத்தையும் கலங்கடித்துக் கொண்டிருந்த கங்கையின் மைந்தரை {பீஷ்மரைத்} தாக்க, தர்மனுடைய மகனின் {யுதிஷ்டிரனின்} கட்டளைக்கிணங்க (பாண்டவத்) துருப்புகள் அனைத்தும் விரைந்தன. எனினும் {அப்படியிருந்தாலும்}, போரில் மகிழ்ந்த பீஷ்மர், சிருசஞ்சயர்கள் மற்றும் பாஞ்சாலர்களில் வலிமைமிக்க வில்லாளிகளை வீழ்த்தினார். பீஷ்மரால் இப்படிக் கொல்லப்பட்டாலும், மரணபயத்தைக் கைவிட்ட பாஞ்சாலர்கள், சோமகர்களுடன் கூடி அவரை {பீஷ்மரை} நோக்கி மூர்க்கமாக விரைந்தனர்.


எனினும், சந்தனுவின் மகனான வீர பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போரில் அவர்களுடைய {பாஞ்சாலத்} தேர்வீரர்களின் தலைகளையும் கரங்களையும் துண்டித்தார். உமது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்}, அவர்களது {பாஞ்சாலர்களின்} தேர்வீரர்கள், தங்கள் தேர்களை இழக்கச் செய்தார். குதிரைகளில் இருந்த அவர்களது குதிரைப்படை வீரர்களின் தலைகள் விரைவாக விழுந்தன. மலைகளைப் போன்ற பெரும் யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் பாகன்களை இழந்து, பீஷ்மரின் ஆயுதங்களால் முடக்கப்பட்டு, சுற்றி அனைத்துப் பக்கங்களிலும் விழுந்து கிடப்பதை நாங்கள் கண்டோம்.

பாண்டவர்களில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பீஷ்மரைத் தடுப்பதற்கு) தேர்வீரர்களில் முதன்மையான, வலிமைமிக்கப் பீமசேனனைத் தவிர வேறு ஒரு மனிதனும் இல்லை. உண்மையில், பீமன் மட்டுமே பீஷ்மரை அணுகி, அவருடன் போரில் மோதினான் {போரிட்டான்}. பீமனுக்கும், பீஷ்மருக்கும் இடையிலான அம்மோதலில், (கௌரவத்) துருப்புகள் அனைத்தின் மத்தியிலும், கடும் ஆரவாரம் பயங்கரமாக எழுந்தது. மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவர்கள் சிங்க முழக்கமிட்டார்கள். அழிவை ஏற்படுத்திய அந்தப் படுகொலையின் போது, தன் உடன் பிறந்த தம்பிகள் சூழ இருந்த மன்னன் துரியோதனன், அந்தப் போரில் பீஷ்மரைப் பாதுகாத்து வந்தான். 

அப்போது, தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீமன், பீஷ்மரின் தேரோட்டியைக் கொன்றான். அதன் பேரில், கட்டுப்பாட்டினை இழந்த {பீஷ்மரின்} அந்தக் குதிரைகள், தேருடன் களத்தைவிட்டு ஓடின. பிறகு எதிரிகளைக் கொல்லும் அந்தப் பீமன், ஒரு கூரிய க்ஷுரப்ரத்தால் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட ஒரு கணையால்} சுநாபனின் [1] தலையைக் கொய்தான். (இப்படிக்) கொல்லப்பட்ட பின்னவன் {சுநாபன்} கீழே பூமியில் விழுந்தான்.

[1] சுநாபன் துரியோதனனின் தம்பிகளில் ஒருவன்.

வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியுமான அந்த உமது மகன் {சுநாபன்} கொல்லப்பட்ட போது, அவனது வீரச் சகோதரர்கள் எழுவரால், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, (அச்செயலை அமைதியாகத்) தாங்கிக் கொள்ள முடியவில்லை. போரிட விருப்பமுள்ளவர்களும், பலவண்ணங்களிலான அழகிய கவசங்களையும், ஆயுதங்களையும் தரித்தவர்களும், எதிரிகளைக் கலங்கடிப்பவர்களுமான ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், வெல்லப்படமுடியாத விசாலாக்ஷன் ஆகியோர் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்து விரைந்தனர்.

விருத்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, (பெரும் அசுரனான) நமுசியைத் தாக்கியதைப் போல, அந்தப் போரில், வஜ்ரத்திற்கு இணையான சக்தி கொண்டவையும், சிறகு படைத்தவையுமான ஒன்பது {9} கணைகளால் மஹோதரன், பீமசேனனைத் துளைத்தான். ஆதித்யகேது எழுபது  {70}கணைகளாலும், விஷ்ணு {பஹ்வாசி} ஐந்தாலும் {5 கணைகளாலும்} பீமனைத் தாக்கினர். மேலும் குண்டதாரன் தொண்ணூறு {90} கணைகளாலும், விசாலாக்ஷன் ஏழாலும் {7 கணைகளாலும்} அவனை {பீமனைத்} தாக்கினர். எதிரிகளை வெல்பவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அபராஜிதன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும்பலம்படைத்த அந்தப் பீமசேனனைப் பல கணைகளால் பீடித்தான். பண்டிதகனும், அப்போரில் மூன்று {3} கணைகளால் அவனைத் {பீமனைத்} துளைத்தான். எனினும், போரில் தனது எதிரிகளின் இந்தத் தாக்குதலைப் பீமனால் (பொறுமையாகத்) தாங்கிக் கொள்ள இயலவில்லை.

தன் இடக்கையால் வில்லை வலுவாகப் {அழுத்திப்} பிடித்த அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {பீமன்}, நல்ல {அழகிய} மூக்குடன் கூடிய உமது மகன் அபராஜிதனின் தலையை அப்போரில் நேரான கணை ஒன்றால் அறுத்தான். இப்படிப் பீமனால் வீழ்த்தப்பட்ட அவனது தலை தரையில் விழுந்தது.

பிறகு, உமது துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்த போதே, வலிமைமிக்கத் தேர்வீரனான குண்டதாரனை மற்றொரு பல்லத்தால் {அகன்ற தலை கொண்ட கணையால்} காலனின் உலகத்திற்குப் பீமன் அனுப்பிவைத்தான்.

பிறகு அளவிடமுடியாத ஆன்மா கொண்ட அந்த வீரன் {பீமன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அப்போரில் மீண்டும் ஒரு கணையைக் குறிபார்த்து, பண்டிதகன் மீது ஏவினான். காலனால் தூண்டப்பட்ட ஒரு பாம்பு, (தன் காலம் வந்த {முடிந்த} ஒரு) மனிதனைக் கொன்று விரைவாகப் பூமிக்குள் நுழைவதைப் போலவே பண்டிதகனைக் கொன்ற அந்தக் கணையும் பூமிக்குள் நுழைந்தது.

சோர்விலா ஆன்மா {மனம்} கொண்ட அந்த வீரன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது முன்னாள் துயரங்களை நினைவுகூர்த்து, விசாலாக்ஷனின் தலையை மூன்று {3} கணைகளால் வெட்டிவீழ்த்தினான்.

பிறகு அந்தப் போரில், வலிமைமிக்க வில்லாளியான மஹோதரனை ஒரு நாராசத்தால் {நீண்ட கணையால்} நடுமார்பில் பீமன் தாக்கினான். (அதனால்) கொல்லப்பட்ட பின்னவன் {மஹோதரன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமியில் விழுந்தான்.

பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ஆதித்யகேதுவின் குடையை ஓர் அம்பினால் அறுத்த அவன் {பீமன்}, மற்றொரு மிகக்கூரிய பல்லத்தினால் அவனது {ஆதித்யகேதுவின்} தலையையும் அறுத்தான்.

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட பீமன் வேறொரு நாராசத்தால் {நீண்ட கணையால்}, பஹ்வாசினை {பஹ்வாசியை} யமலோகத்தை நோக்கி அனுப்பிவைத்தான் [2].

[2] பீஷ்ம பர்வம் பகுதி 64ல் பீமன் ஏற்கனவே எட்டு பேரைக் கொன்றிருக்கிறான். இப்போது கொன்றவர்களையும் சேர்த்து இதுவரை பதினாறு {16} கௌரவர்களைக் கொன்றிருக்கிறான்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மற்ற உமது மகன்கள், சபையில் (கௌரவர்களுக்கு மத்தியில்) பீமன் சொன்ன வார்த்தைகள் [3] உண்மையே எனக் கருதி ஓடிப்போனார்கள். தனது தம்பிகள் குறித்த துக்கத்தால் பீடிக்கப்பட்ட மன்னன் துரியோதனன், தன் துருப்புகள் அனைத்திடமும், "பீமன் அங்கே இருக்கிறான். அவன் கொல்லப்பட வேண்டும்" என்றான். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் சகோதரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமான உமது மகன்கள், பெரும் அறிஞரான விதுரரால் சொல்லப்பட்டவையும், நன்மை மற்றும் அமைதி தருபவையுமான அந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்தனர்.

[3] அதாவது, திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரையும் போரில் தானே கொல்லப்போவதாகச் சொன்ன அவனது {பீமனின்} உறுதி மொழி என இங்கே விளக்குகிறார் கங்குலி.

உண்மைநிறைந்த விதுரரின் வார்த்தைகள் இப்போதுதான் உண்மையில் உணரப்படுகின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பேராசை மற்றும் மூடத்தனத்தின் தாக்கத்தாலும், உமது மகன்கள் மீது கொண்ட பாசத்தாலும் நன்மை நிறைந்த அந்த வார்த்தைகளை அப்போது உம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த வலிய கரம் கொண்ட வீரன் {பீமன்}, கௌரவர்களைக் கொல்லும் முறையைப் பார்த்தால், உமது மகன்களின் அழிவுக்காகவே அந்த வலிமைமிக்கப் பாண்டு மகன் {பீமன்} தனது பிறப்பை எடுத்திருக்கிறான் என்பது நிச்சயமாகத் தெரிகிறது.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அதே வேளையில் மன்னன் துரியோதனன், பெரும் துயரத்தில் மூழ்கிப் பீஷ்மரிடம் சென்று, துக்கம் மேலிட " என் வீரத் தம்பிகள் போரில் பீமசேனனால் கொல்லப்பட்டனர். என்னதான் நமது துருப்புகள் அனைத்தும் துணிச்சலுடன் போரிட்டாலும், தோல்வியையே அடைகின்றன. ஏதோ அக்கறையேயில்லாத பார்வையாளனைப் போல நடந்து கொண்டு, (நீர் செயல்படுவது போலவே) எங்களை நீர் புறக்கணிப்பதாகவே தெரிகிறது. ஐயோ, என்ன வழியை நான் மேற்கொண்டேன் {அடைந்திருக்கிறேன்}. கொடுமையான என் விதியைப் பாரும்" எனச் சொல்லி அங்கே புலம்பத் தொடங்கினான் {துரியோதனன்}."

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "துரியோதனனின் இந்தக் கொடிய வார்த்தைகளைக் கேட்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, கண்ணீரால் நிறைந்த கண்களுடன் இஃதை அவனிடம் சொன்னார். "நானும், துரோணரும், விதுரனும், புகழ்பெற்ற காந்தாரியும் முன்பே இஃதை உனக்குச் சொன்னோம். ஓ! மகனே {துரியோதனா}, அப்போது அதை நீ புரிந்து கொள்ளவில்லை. ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே {துரியோதனா}, நானோ, துரோணரோ எப்போதும் இந்தப் போரில் இருந்து உயிருடன் தப்ப மாட்டோம் என்ற {எங்கள்} தீர்மானத்தையும் முன்பே நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன் [4]. போரில் பீமன் யார் மீதெல்லாம் தனது கண்களைச் {பார்வையைச்} செலுத்துவானோ, {அவர்களையெல்லாம்} அவன் நிச்சயம் கொல்வான் என்று நான் உண்மையாகவே சொல்கிறேன். எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, உன் பொறுமையனைத்தையும் வரவழைத்துக் கொண்டு, போரை உறுதியாகத் தீர்மானித்து, சொர்க்கத்தை உனது குறிக்கோளாகக் கொண்டு, பிருதையின் மகன்களுடன் {பாண்டவர்களுடன்} போரிடுவாயாக. பாண்டவர்களைப் பொறுத்தவரை, வாசவனைக் (தங்கள் தலைமையில்) கொண்ட தேவர்களாலேயேகூட அவர்கள் {பாண்டவர்கள்} வெல்லப்பட இயலாதவர்களாக இருக்கிறார்கள். எனவே, ஓ! பாரதா {துரியோதனா}, உனது இதயத்தைப் போரில் உறுதியாக நிலைக்கச் செய்து போரிடுவாயாக" என்றார் {பீஷ்மர்}" {என்றான் சஞ்சயன்}.

[4] இங்கே "போரில் நானாவது, ஆசாரியர் துரோணரவாது எவ்விதத்தாலும் ஏவத்தக்கவர்களல்லர்" என்று துரியோதனனிடம் பீஷ்மர் சொல்வதாக வேறொரு பதிப்பில் இருக்கிறது.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்