Sunday, February 28, 2016

யுதிஷ்டிரனுக்குப் பீஷ்மர் சொன்ன உபாயம்! - பீஷ்ம பர்வம் பகுதி – 108ஆ

The means told by Bhishma to Yudhishthira! | Bhishma-Parva-Section-108b | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 66)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனுடன் சேர்ந்து பீஷ்மரைச் சந்தித்த பாண்டவர்கள்; வெற்றி அடையவும், பீஷ்மரைக் கொல்லவும் பீஷ்மரிடமே வழி கேட்ட யுதிஷ்டிரன்; தன்னை வீழ்த்த பீஷ்மர் சொன்ன வழிமுறை...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வார்த்தைகளைக் கேட்ட விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனிடம், “ஓ! பெரும் ஞானங்கொண்டவரே {யுதிஷ்டிரரே}, உமது வார்த்தைகள் என் சுவைக்கேற்ற வகையில் {நான் விரும்பும் வண்ணம்} இருக்கின்றன. தேவவிரதர் என்றும் அழைக்கப்படும் பீஷ்மர் ஆயுதங்களில் திறம்பெற்றவராவார். அவர் தன் பார்வையிலேயே எதிரியை எரித்துவிடக் கூடியவராவார்.

கடலுக்குச் செல்பவளின் (கங்கையின்) மகனிடமே {பீஷ்மரிடமே}, அவரது மரணத்திற்கான வழிகளைக் கேட்கச் செல்லலாம். குறிப்பாக உம்மால் கேட்கப்பட்டால், அவர் {பீஷ்மர்} நிச்சயம் உண்மையைச் சொல்வார். எனவே, குரு பாட்டனை {பீஷ்மரைக்} கேட்க நாம் செல்வோம். சந்தனுவின் மதிப்புக்குரிய மகனிடம் {பீஷ்மரிடம்} சென்று, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவரது ஆலோசனைகளைப் பெறும் நாம், அவர் {பீஷ்மர்} நமக்கு அளிக்கும் அறிவுரையின்படியே எதிரியுடன் போரிடுவோம்” என்றான் {கிருஷ்ணன்}.


ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் வீரமகன்களும், வீர வாசுதவேனும் {கிருஷ்ணனும்} இப்படித் தீர்மானித்துக் கொண்டு, அனைவருமாகச் சேர்ந்து, தங்கள் கவசங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைத் துறந்து, பீஷ்மரின் இருப்பிடத்திற்குச் சென்று, அவரது பாசறைக்குள் நுழைந்து, அனைவரும் தங்கள் சிரங்களைத் தாழ்த்தி அவரை {பீஷ்மரை} வணங்கினார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாரதர்களின் குலக்காளையை {பீஷ்மரை} வழிபட்ட பாண்டுவின் மகன்கள், தங்கள் சிரங்களால் அவரை {பீஷ்மரை} வணங்கி, அவரது பாதுகாப்பை நாடினார்கள்.

பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குரு பாட்டன் பீஷ்மர் அவர்களிடம், “ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, உனக்கு நல்வரவு. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} உனக்கு நல்வரவு. ஓ! நீதிமானான மன்னன் யுதிஷ்டிரா உனக்கும், ஓ! பீமா உனக்கும் நல்வரவு. அசுவினிகளே {நகுல, சகாதேவர்களே} உங்களுக்கும் நல்வரவு. உங்கள் மகிழ்ச்சியைப் பெருக்க இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? அடைவதற்கு மிகக் கடினமானதாக அஃது இருப்பினும், என் முழு ஆன்மாவுடன் அதை நான் செய்வேன்” என்றார் {பீஷ்மர்}.

மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், இத்தகு பாசத்துடன் அவர்களிடம் இப்படி மீண்டும் மீண்டும் பேசிய கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்} அன்பாக இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! அனைத்தையும் அறிந்தவரே, நாங்கள் எவ்வாறு வெற்றியை அடைவோம்? நாங்கள் எவ்வாறு அரசுரிமையை அடைவோம்? இந்த உயிரினங்களின் அழிவை எவ்வாறு நிறுத்த முடியும்? ஓ! தலைவா {பீஷ்மரே}, இவை அனைத்தையும் எனக்குச் சொல்லும். உமது மரணத்திற்கான வழியையும் எங்களுக்குச் சொல்லும்.

ஓ! வீரரே {பீஷ்மரே}, போரில் உம்மை நாங்கள் எவ்வாறு தாங்கிக் கொள்ள இயலும்? ஓ! குருக்களின் பாட்டா {பீஷ்மரே}, உமது எதிரிகள் உம்மைத் தேர்ந்தெடுக்க {குறிவைக்க}, நுண்ணியத் துளையையும் கொடுக்கவில்லை [1]. நீர் போரில் எப்போதும் வட்டமாக வளைக்கப்பட்ட வில்லுடனே காணப்படுகிறீர். நீர் எப்போது உமது கணைகளை எடுக்கிறீர், எப்போது அவற்றைக் குறிபார்க்கிறீர், (அவற்றை ஏவ) எப்போது வில்லை வளைக்கிறீர் என்பதை ஒருவராலும் குறிக்க முடியவில்லை.

[1] வேறொரு பதிப்பில் இந்த வரி, “போரில் பகைவர்கள் உமக்குக் கெடுபெருளை விளைவிக்ககூடிய சிறு காலமும் நேர்வதில்லை” என்று இருக்கிறது.

ஓ! பகைவீரர்களைக் கொல்பவரே {பீஷ்மரே}, தேர்களையும், குதிரைகளையும், மனிதர்களையும், யானைகளையும் (நீர் எப்போதும் அடிப்பது போலவே) தொடர்ந்து அடித்துக் கொண்டு, இரண்டாவது சூரியனைப் போலவே உம்மை உமது தேரில் காண்கிறோம். போரில் கணைமாரியைப் பொழிந்து பெரும் அழிவை ஏற்படுத்தும் உம்மை வீழ்த்தத்தக்க மனிதன் அங்கே {போர்க்களத்தில்} எவன் இருக்கிறான்? ஓ! பாட்டா {பீஷ்மரே}, அரசாட்சி எங்களுடையதாக்குவது எவையோ, இறுதியாக இத்தகு அழிவை எனது படைக்கு நேராமல் தடுப்பது எவையோ, போரில் உம்மை வீழ்த்தக்கூடியவை எவையோ அந்த வழிகளை எனக்குச் சொல்லும்” {என்றான் யுதிஷ்டிரன்}.

ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, இந்த வார்த்தைகள் கேட்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, அந்தப் பாண்டு மகனிடம், “ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நான் உயிரோடு இருக்கும் வரை, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே {யுதிஷ்டிரா}, போரில் வெற்றி உங்களுடையதாக முடியாது. இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். எனினும், பாண்டு மகன்களே, போராட்டத்தில் நான் வீழ்த்தப்பட்ட பிறகு, போரில் நீங்கள் வெற்றி அடையலாம்.

எனவே, போரில் வெற்றியை நீங்கள் விரும்பினால் தாமதமில்லாமல் என்னை அடிப்பீராக. பிருதையின் {குந்தியின்} மகன்களே, நீங்கள் விரும்பியவாறு என்னை அடிக்க நான் உங்களுக்கு அனுமதி அளிக்கிறேன். நற்பேற்றுச் சூழல் {அதிர்ஷ்டவசம்} என்று நான் எதைக் கருதுகிறேனோ, அதில் {அந்தச் சூழலில்} இப்படி {வெல்லப்பட முடியாதவன் என்று} என்னை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் [2]. நான் கொல்லப்பட்டதும், எஞ்சியவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். எனவே, நான் சொன்னதைப் போலச் செய்வீராக” என்றார் {பீஷ்மர்}.

[2] நான் வெல்லப்பட முடியாதவன் என நீங்கள் கருதுவது நற்பேற்றுச் சூழலே {அதிர்ஷ்டவசமே}, ஏனெனில், இஃதை அறியாவிட்டால், நீங்கள் தொடர்ந்து நெடுநாள் போரிட்டிருப்பீர்கள், அஃது உயிரினங்களின் பேரழிவுக்குக் காரணமாக அமைந்திருக்கும். நீங்கள் அறிந்ததால், அந்த அழிவு தடுக்கப்படலாம் எனப் பீஷ்மர் சொல்வதாக இங்கே கங்குலி விளக்குகிறார்.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கதாயுதம் தரித்த அந்தகனைப் போலக் கோபத்தால் தூண்டப்பட்டுப் போரிடும் உம்மைப் போரில் வீழ்த்தச் செய்பவை எவையோ, அந்த வழிகளை எங்களுக்குச் சொல்லும். வஜ்ரதாரியோ {இந்திரனோ}, வருணனோ, யமனோ வீழ்த்தப்படலாம். எனினும், இந்திரனைத் தலைமையில் கொண்டு, ஒன்று சேர்ந்த தேவாசுரர்களாலேயே போரில் நீர் வீழ்த்தப்பட இயலாதவராவீர்” என்றான் {யுதிஷ்டிரன்}.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாண்டுவின் மகனே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ சொல்வது உண்மையே. கையில் ஆயுதங்களுடனும், என் பெரிய வில்லுடனும் போரில் நான் கவனமாகப் போரிட்டால் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவாசுரர்களாலும் நான் வீழ்த்தப்பட முடியாதவனாவேன். எனினும், நான் என் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டால், இந்தத் தேர்வீரர்களாலும் என்னைக் கொல்ல முடியும்.

தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டவர், கீழே விழுந்தவர், கவசம் நழுவியவர், கொடிமரம் விழுந்தவர், தப்பி ஓடுபவர், அச்சமுற்றவர், “நான் உம்மவன்” என்று சொல்பவர், பெண்ணாக இருப்பவர், பெண் பெயரைத் தாங்கியவர், இனிமேலும் தன்னைத் தானே கவனித்துக் {பாதுகாத்துக்} கொள்ளும் திறன் இல்லாதவர், ஒரே மகனைக் கொண்டவர், அருவருப்பான ஒருவர் ஆகிய இவர்களைப் போன்றோருடன் நான் போரிட விரும்புவதில்லை [3].

[3] வேறொரு பதிப்பில் இந்த வரி, “ஆயுதத்தைக் கீழே வைத்தவன், விழுந்தவன், கவசத்தையும் கொடியையும் இழந்தவன், ஓடுகிறவன், பயந்தவன், “உன்னைச் சேர்ந்தவன் நான்” என்று கூறுபவன், பெண்ணால் வெல்லப்பட்டவன், பெண்ணை முக்கியமாகக் கொண்டவன், பெண் என்று பிரபலமாக அறியப்பட்டவன், பெண், பெண் பெயர் கொண்டவன், அங்கம் குறைந்தவன், ஒரே மகன் உள்ளவன், வாரிசு உண்டாக்காதவன், அலியாக இருப்பவன் ஆகியோரிடத்தில் எனக்குப் போரிட மனம் ஒவ்வாது” என்று பீஷ்மர் சொல்வதாக இருக்கிறது.

ஓ! மன்னா, முன்பே நான் கொண்ட தீர்மானத்தையும் கேட்பாயாக. மங்கலமற்ற சகுனத்தைக் கண்டால், நான் போரிடவே மாட்டேன். உன் படையில் இருப்பவனும், சிகண்டி என்ற பெயரில் அறியப்பட்டவனும், போரில் கோபம் நிறைந்தவனும், துணிச்சல் மிக்கவனும், எப்போதும் வெல்பவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துருபதன் மகன் {சிகண்டி}, முன்பு பெண்ணாக இருந்தவன் ஆவான், ஆனால் அதன்பின் ஆண்மையை அடைந்தான் [4]. இவை யாவும் எப்படி நடந்தன என்ற உண்மையை நீங்கள் அறிவீர்கள்.

[4] வேறொரு பதிப்பில் இந்த வரி, “பெரும் வீரன் எனப் பிரபலமாக அறியப்படாத ஒருவனைக் கண்டு, ஒரு போதும் நான் போர் புரியேன். உன் படையில் உள்ள துருபதன் மகன் சிகண்டி போரில் பொறாமையுள்ளவன்; சூரன்; போரில் பகைவரை வெல்பவன்” என்று இருக்கிறது. மேற்கண்ட கங்குலியின் மொழிபெயர்ப்புக்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

போரில் துணிவுள்ளவனான அர்ஜுனன், கவசம் தரித்துக் கொண்டு, சிகண்டியைத் தனக்கு முன்னே நிறுத்திக் கொண்டு, தன் கூரிய கணைகளால் என்னைத் தாக்கட்டும். மங்கலமற்ற அந்தச் சகுனம், அதிலும் குறிப்பாக முன்னர்ப் பெண்ணாக இருந்தவனின் வடிவத்தில் {அந்தச் சகுனம்} அங்கிருக்கும்போது, கையில் வில்லையும், கணையையும் கொண்டிருந்தாலும், நான் அவனைத் தாக்க ஒரு போதும் முயல மாட்டேன். ஓ! பாரதர்களின் குலக்காளையே {யுதிஷ்டிரா}, அந்த வாய்ப்பை அடையும், பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் அனைத்துப் புறங்களிலும் என்னை விரைவாகத் துளைக்கட்டும்.

உயர்ந்த அருளைக் கொண்ட கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரைத் தவிர, போரில் என்னைக் கொல்ல இயன்ற ஒருவனை மூவுலகிலும் நான் காணவில்லை. எனவே, பீபத்சு {அர்ஜுனன்}, ஆயுதங்கள் தரித்துக் கொண்டு, போரில் கவனமாகப் போராடிபடி, தன் முன்னிலையில் (சிகண்டி அல்லது) வேறு எதையும் நிறுத்திக் கொண்டு, கையில் உள்ள தன் சிறந்த வில்லால் (என் தேரில் இருந்து) என்னைக் கீழே வீசி எறியட்டும். பிறகு, வெற்றி உறுதியாகும். ஓ! பெரும் மன்னா, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நான் உன்னிடம் சொல்லும் இதைச் செய்வாயாக. பிறகு, போரில் கூடியிருக்கும் தார்தராஷ்டிரர்கள் அனைவரையும் உன்னால் கொல்ல இயலும்” என்றார் {பீஷ்மர்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்