Monday, March 21, 2016

“நான் உயிரோடிருக்கிறேன்” என்ற பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி – 120இ

“I am alive” said Bhishma! | Bhishma-Parva-Section-120c | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 78)

பதிவின் சுருக்கம் : உத்தர அயனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பீஷ்மரிடம், அன்னப்பறவைகளை அனுப்பிய கங்கை; அன்னங்களிடம் தன் உறுதியைச் சொன்ன பீஷ்மர்; துக்கத்தில் ஆழ்ந்த கௌரவர்கள்; பாண்டவப் படையினரின் மகிழ்ச்சி; யோகத்தில் ஆழ்ந்த பீஷ்மர்...

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அவர் {பீஷ்மர்} விழுந்து கொண்டிருந்தபோது, சூரியன் தென் கோட்டில் {தக்ஷிணாயனத்தில்} இருப்பதைக் கவனித்தார். எனவே, அவ்வீரர் {பீஷ்மர்}, (மரணத்திற்கான) காலத்தை (காலம் மங்கலமற்றதாக இருப்பதை) நினைத்து, தன் புலன் உணர்வுகளைப் போக அனுமதிக்கவில்லை {நினைவு தப்பாமல் இருந்தார்} [1]. “ஏன், ஆயுதப் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, {சூரியனின்} தெற்குச் சரிவின் போது, ஓ! ஏன் தன் உயிரை விட வேண்டும்?” என்ற தேவக் குரல்களை வானமெங்கும் அவர் {பீஷ்மர்} கேட்டார். இவ்வார்த்தைகளைக் கேட்ட கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, “நான் உயிரோடிருக்கிறேன்” என்று பதிலளித்தார். குரு பாட்டனான பீஷ்மர் பூமியில் விழுந்தாலும், {சூரியனின்} வடக்குச் சரிவை {உத்தர அயனத்தை} எதிர்பார்த்து தன் உயிரை விடவில்லை [2].


[1] வேறு பதிப்பில் “வீரரான பீஷ்மர் காலத்தை ஆலோசித்துப் பிரஜ்ஞையையடைந்தார்” என்றிருக்கிறது.

[2] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, “”மகாத்மாவும், கங்கையின் மைந்தரும், வில்லாளிகள் அனைவரிலும் சிறந்தவரும், மனிதர்களில் சிறந்தவருமான பீஷ்மர் தக்ஷிணாயனம் நேர்ந்திருக்குங்காலத்தில் எவ்வாறு உயிரை விட்டார்?” என்ற திவ்ய வாக்குகளை ஆகாயத்தின் அனைத்துப் பக்கங்களிலும் கேட்டார். காங்கேயர், அவைகளைக் கேட்டு நல்ல கதியை அடைய வேண்டுமென்ற விருப்பத்தோடு, “உத்தராயணத்தை விரும்பியவனான நான் இதோ உயிரோடிருக்கிறேன். பூமியில் விழுந்தாலும் நான் உயிரைத் தரிப்பேன்” என்று தேவர்களைப் பார்த்து மறுமொழி கூறினார்” என்று இருக்கிறது.

ஹிமவத்தின் {ஹிமவானின் - இமயத்தின்} மகளான கங்கை, இதையே அவரது {பீஷ்மரின்} தீர்மானமாகக் கொண்டு, அவரிடத்தில் {பீஷ்மரிடத்தில்} அன்னத்தின் வடிவத்தில் இருந்த பெருமுனிவர்களை அனுப்பினாள். மானஸத் {மானசரோவர்} தடாகவாசிகளும், அன்னத்தைப் போன்ற வடிவம் கொண்டவர்களுமான அந்த முனிவர்கள் விரைவாக எழுந்து, குரு பாட்டனான பீஷ்மரைக் காண்பதற்காக, அந்த மனிதர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்} கணைகளின் படுக்கையில் கிடந்த அந்த இடத்திற்கு ஒன்றாக வந்தனர்.

அன்னங்களைப் போன்ற வடிவங்களில் இருந்த அந்த முனிவர்கள், பீஷ்மரிடம் வந்து, கணைகளின் படுக்கையில் கிடந்த அந்தக் குரு குலக் கொழுந்தை {பீஷ்மரைக்} கண்டனர். பாரதர்களின் தலைவரான உயர் ஆன்ம கங்கையின் மைந்தரை {பீஷ்மரைக்} கண்டு, அவரை வலம் வந்து, சூரியன் தென்கோட்டில் இருந்ததால், அவர்கள் தங்களுக்குள், “உயர் ஆன்ம மனிதனான பீஷ்மர் {சூரியனின்} தென் சரிவின்போது ஏன் (இவ்வுலகத்தை விட்டு) செல்ல வேண்டும்?” என்ற வார்த்தைகளைச் சொன்னார்கள். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த அன்னங்கள் தென் திசையை நோக்கிச் சென்றன.

அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் புத்திக் கூர்மை கொண்ட பீஷ்மர், அவற்றைக் கண்டு ஒருக்கணம் சிந்தித்தார். பிறகு அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} அவர்களிடம், “சூரியன் தென்கோட்டில் உள்ள வரை நான் (இவ்வுலகத்தைவிட்டு) செல்ல மாட்டேன். இதுவே என் தீர்மானமாகும். சூரியன் வடகோட்டை அடையும்போதே, நான் என் புராதன வசிப்பிடத்திற்குச் செல்வேன். அன்னங்களே, இதை நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன். {சூரியனின்} வடக்குச் சரிவை எதிர்பார்த்து நான் என் உயிரைப் பிடித்துக் கொள்ளப் போகிறேன். உயிரை விடுவதில் முழுக் கட்டுப்பாடும் என்னிடம் உள்ளதால், வடக்குச் சரிவின் போதான மரணத்தை எதிர்பார்த்து நான் அதை {உயிரைப்} பிடித்துக் கொள்வேன்.

என் மரணம் என் விருப்பதைப் பொறுத்தே அமையும் என்று என் ஒப்பற்ற தந்தையால் {சந்தனுவால்} எனக்குக் கொடுக்கப்பட்ட வரமானது, ஓ! உண்மையாகட்டும். என் உயிரை விடுவதில் நான் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதால் என் உயிரைப் பிடித்துக் கொள்வேன்” என்றார். அன்னங்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அவர் {பீஷ்மர்}, கணைகளின் படுக்கையிலேயே தொடர்ந்து கிடந்தார்.

குரு குலச் சிகரமான பெரும் சக்தி படைத்த பீஷ்மர் விழுந்தபோது, பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் சிங்க முழக்கம் செய்தனர். குருக்கள் அனைவரும் முழுமையாகத் தங்கள் புலனுணர்வுகளை இழந்தனர். கிருபர் மற்றும் துரியோதனனின் தலைமையிலான குருக்கள் பெருமூச்சுவிட்ட படியே அழுதனர். துக்கத்தால் அவர்கள் நீண்ட நேரத்திற்கு உணர்விழந்தபடியே இருந்தனர். அவர்கள், ஓ! ஏகாதிபதி, போரில் தங்கள் இதயங்களைச் செலுத்தாமல் முற்றிலும் அசையாதிருந்தனர். பாண்டவர்களை எதிர்த்துச் செல்லாத அவர்கள், ஏதோ தொடை பிடிப்பு ஏற்பட்டவர்களைப் போல அசைவற்றிருந்தனர்.

கொல்லப்பட இயலாதவரான (என்று கருதப்பட்ட) வலிமைமிக்க சக்தி கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மர் கொல்லப்பட்டபோது, குரு மன்னனின் {துரியோதனனின்} அழிவு அருகிலேயே இருக்கிறது என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம். சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டும், எங்கள் முதன்மையான வீரர்கள் கொல்லப்பட்டும், கூரிய கணைகளால் சிதைக்கப்பட்டும் இருந்த எங்களுக்கு {மேற்கொண்டு} என்ன செய்வது என்பது தெரியவில்லை. பரிகாயுதங்களைப் போன்று தெரியும் பெரிய கரங்களைக் கொண்ட வீரப் பாண்டவர்கள் அனைவரும், வெற்றியை அடைந்தும், அடுத்த உலகத்தின் உயர்ந்த அருள்நிலையை வென்றும் தங்கள் பெரும் சங்குகளை முழங்கினர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சோமகர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான பேரிகைகள் முழங்கிய போது, வலிமைமிக்கப் பீமசேனன் தன் கக்கங்களை {தோள்களைத்} தட்டிக் கொண்டு உரத்த கூச்சலிட்டான். மிகவும் சக்திவாய்ந்தவரான கங்கையின் மகன் {பீஷ்மர்} கொல்லப்பட்ட போது, வீரமான இரு படைகளின் போர்வீரர்களும், தங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, சிந்தனையில் மூழ்கத் தொடங்கினர்.

சிலர் உரக்க அலறினர், சில தப்பி ஓடினர், சிலர் தங்கள் உணர்வுகளை இழந்தனர் {மயக்கமடைந்தனர்}. சிலர் க்ஷத்திரிய வகையினரின் நடைமுறைகளை நிந்தித்தனர், சிலர் பீஷ்மரைப் போற்றினர். முனிவர்களும், பித்ருக்கள் அனைவரும் உயர் நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் போற்றினர். பாரதர்களின் {இறந்து போன} மூதாதையர்களும் பீஷ்மரைப் புகழ்ந்தனர். அதே வேளையில், புத்திக்கூர்மையுள்ளவரும், சந்தனுவின் மகனுமான வீர பீஷ்மர், பெரும் உபநிஷத்துகளில் சொல்லப்பட்டுள்ள யோகத்தை அடைந்து, மனத்துதிகளில் ஈடுபட்டுத் தன் நேரத்தை எதிர்பார்த்து அமைதியில் நீடித்தார்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்