Monday, March 21, 2016

திடீரென விழுந்த துரோணர்! - பீஷ்ம பர்வம் பகுதி – 121

Drona fell suddenly! | Bhishma-Parva-Section-121 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 79)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் அடைந்த வேதனை; கௌரவர்களின் துயரமும், பீமசேனனின் மகிழ்ச்சியும்; பீஷ்மர் கொல்லப்பட்டதைத் துரோணரிடம் தெரிவித்த துச்சாசனன்; அதிர்ச்சியில் மயங்கி விழுந்த துரோணர்; பீஷ்மரிடம் சென்ற பாண்டவர்களும், கௌரவர்களும்; அர்ஜுனனிடம் தலையணை கேட்ட பீஷ்மர்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம் சொன்னார்}, “ஐயோ, ஓ! சஞ்சயா, தன் மரியாதைக்குரிய தந்தைக்காக {சந்தனுவிற்காகப்} பிரம்மச்சாரியானவரும், தேவர்களைப் போன்றவருமான பீஷ்மரை இழந்த போது (என்) வீரர்களின் நிலை எவ்வாறு இருந்தது? பீஷ்மர், துருபதன் மகனை {சிகண்டியை} இழிவாகக் கருதி அவனைத் தாக்காதிருந்தபோதே பாண்டவர்களால் குருக்களும் மற்றவர் அனைவரும் கொல்லப்பட்டதாகவே நான் கருதினேன். இழிந்த நிலையில் இருக்கும் நான், இன்று என் தந்தை {பீஷ்மர்} கொல்லப்பட்டதையும் கேட்டேன்.


இதைவிடக் கனமான துன்பம் வேறென்ன இருக்க முடியும்? ஓ! சஞ்சயா, பீஷ்மரின் மரணத்தைக் கேட்டும் நூறு துண்டுகளாக உடையாமல் இருக்கும் என் இதயம் நிச்சயம் உருக்காலானதே. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே {சஞ்சயா}, குரு குலச் சிங்கமான வெற்றியை விரும்பும் பீஷ்மர் போரில் கொல்லப்பட்ட போது, என்ன செய்தார் என்பதை எனக்குச் சொல்வாயாக. தேவவிரதர் {பீஷ்மர்} போரில் கொல்லப்பட்டார் என்பதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஐயோ, பழங்காலத்தில் ஜமதக்னி மகனின் {பரசுராமரின்} தெய்வீக ஆயுதங்களாலும் கொல்லப்படாத அவர் {பீஷ்மர்}, ஐயோ துருபதன் மகனான பாஞ்சால இளவரசன் சிகண்டியால் இப்போது கொல்லப்பட்டாரே” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மாலையில் கொல்லப்பட்ட குரு பாட்டன் பீஷ்மர் {தன் மறைவால்} தார்தராஷ்டிரர்களைக் கவலை கொள்ளச் செய்து, பாஞ்சாலர்களை மகிழ்வித்தார். அவர் {பீஷ்மர்} பூமியில் விழுந்தாலும், அவரது உடலானது பூமியைத் தொடாதவகையில், கணைகளின் படுக்கையில் கிடந்தார். உண்மையில், பீஷ்மர் தன் தேரில் இருந்து வீசப்பட்டுப் பூமியின் பரப்பில் விழுந்த போது, அனைத்து உயிரினங்களும், “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் கதறின.

குருக்களின் எல்லை மரமானவரும் {வேலியானவரும்}, எப்போதும் வெல்பவருமான பீஷ்மர் விழுந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரு படை க்ஷத்திரியர்களின் இதயங்களில் அச்சம் நுழைந்தது. கொடிமரம் வீழ்த்தப்பட்டு, கவசம் பிளக்கப்பட்ட சந்தனுவின் மகன் பீஷ்மரைக் கண்டு, குருக்களும், பாண்டவர்களும் மகிழ்ச்சியற்ற மனநிலைக்கு உந்தப்பட்டார்கள். ஆகாயம் இருளால் மூடப்பட்டது, சூரியனும் {ஒளியிழந்து} மங்கினான். சந்தனுவின் மகன் {பீஷ்மர்} கொல்லப்பட்டபோது, பூமி உரக்க அலறுவதாகத் தெரிந்தது.

“வேதங்களை அறிந்தோரில் முதன்மையானவர் இவர்! {பீஷ்மர்!} வேதங்களை அறிந்தோரில் சிறந்தவர் இவர் {பீஷ்மர்}” என்றே (கணைகளின் படுக்கையில்) கிடந்த அந்த மனிதர்களில் காளையை {பீஷ்மரைக்} குறித்து உயிரினங்கள் பேசின. [1]“முன்பு, தன் தந்தை {சந்தனு} காமத்தால் பீடிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட இந்த மனிதர்களில் காளை {பீஷ்மர்}, தன் உயிர் வித்தை மேலெழுப்பத் தீர்மானித்தவராவார்” என்றே கணைகளின் படுக்கையில் கிடந்த பாரதர்களில் முதன்மையானவரைக் குறித்துச் சித்தர்கள் மற்றும் சாரணர்களோடு கூடிய முனிவர்கள் பேசினர்.

பாரதர்களின் பாட்டனான சந்தனுவின் மகன் பீஷ்மர் கொல்லப்பட்ட போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, என்ன செய்வது என்பதை உமது மகன்கள் அறியவில்லை. அவர்களது முகங்கள் துன்பக்குறிகளை அணிந்து கொண்டன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களது முகத்தோற்றங்கள் காந்தியை இழந்தன, அவர்கள் அனைவரும் அவமானத்தில் தங்கள் தலைகளைத் தொங்கப்போட்டபடியே நின்றனர். மறுபுறம், வெற்றியடைந்த பாண்டவர்கள் தங்கள் படையணிகளின் தலைமையில் நின்றனர். பிறகு அவர்கள் அனைவரும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் பெரிய சங்குகளை முழங்கினர்.

ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, தங்கள் மகிழ்ச்சியின் விளைவால் ஆயிரக்கணக்கான பேரிகைகள் முழக்கப்பட்ட போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் பலம் படைத்தவனும், குந்தியின் மகனுமான பீமசேனன் பெரும் பலமிக்கப் பகை வீரர்கள் பலரைக் கொன்று, பெரும் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்.

குருக்கள் அனைவரையும் பெரும் மயக்கம் ஆட்கொண்டது. கர்ணனும் [1], துரியோதனனும், அடிக்கடி பெருமூச்சுவிட்டார்கள். குரு பாட்டனான பீஷ்மர் இப்படி விழுந்தபோது சுற்றிலும் துன்பக்குரல்கள் கேட்கப்பட்டன, (குரு படையின் மத்தியில்) பெரும் குழப்பம் நிலவியது.

[1] கர்ணன் களத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. பீஷ்மரின் படுகொலை கேள்விப்பட்டு வருந்தியிருக்க வேண்டும்.

பீஷ்மர் விழுந்ததைக் கண்ட உமது மகன் துச்சாசனன், துரோணரின் தலைமையிலான படைப்பிரிவுக்குள் பெரும் வேகத்தோடு நுழைந்தான். தன் துருப்புகளின் தலைமையில் கவசம் பூண்டவனாக நின்ற அந்த வீரன் {துச்சாசனன்}, (பீஷ்மரின் பாதுகாப்பிற்காகத்) தன் அண்ணனால் நிறுத்தப்பட்டிருந்தான். அந்த மனிதர்களில் புலி {துச்சாசனன்}, தன் தலைமையிலான துருப்புகளைத் துன்பத்தில் ஆழ்த்தியபடி இப்போது அங்கே {துரோணரிடம்} வந்தான். இளவரசன் துச்சாசனன் தங்களை நோக்கி வருவதைக் கண்ட கௌரவர்கள், அவன் {துச்சாசனன்} சொல்வதைக் கேட்க விரும்பி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

குரு குலத்தின் துச்சாசனன் பீஷ்மர் கொல்லப்பட்டதைத் துரோணருக்குத் தெரிவித்தான். அந்தத் தீய செய்திகளைக் கேட்ட துரோணர், தன் தேரில் இருந்து திடீரென விழுந்தார். பிறகு, தன் சுயநினைவை விரைவாக அடைந்த பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தொடர்ந்து போரிடும் குரு படையைத் தடுத்தார். போரில் இருந்து குருக்கள் விலகுவதைக் கண்ட பாண்டவர்களும், வேகமான குதிரைகளில் செல்லும் தூதர்களைக் கொண்டு, போரிடுவதை நிறுத்தினர். இரு படைகளின் மன்னர்கள் அனைவரும் தங்கள் கவசங்களை அகற்றி பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்றனர். போரில் இருந்த விலகிய ஆயிரக்கணக்கான {பிற} வீரர்களும், அனைத்து உயிர்களின் தலைவனை {பிரம்மனை} நோக்கிச் செல்லும் தேவர்களைப் போல உயர் ஆன்ம பீஷ்மரை நோக்கிச் சென்றனர்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, (அப்போது அம்புப் படுக்கையில் கிடந்த) பீஷ்மரை அணுகிய பாண்டவர்களும், குருக்களும், அவருக்குத் தங்கள் வணக்கங்களைத் தெரிவித்தனர். நீதிமிக்க ஆன்மா கொண்டவரான சந்தனுவின் மகன் பீஷ்மர், இப்படித் தன்னை வணங்கித் தன் முன் நின்ற பாண்டவர்களிடமும், குருக்களிடமும் பேசினார்.

அவர் {பீஷ்மர்}, “உயர்ந்த அருளைப் பெற்றவர்களே {பெரும்பாக்கியசாலிகளே}, உங்களுக்கு நல்வரவு! வலிமைமிக்கத் தேர்வீரர்களே, உங்களுக்கு நல்வரவு! தேவர்களுக்கு ஒப்பான உங்களைக் கண்டதால் நான் மனநிறைவடைகிறேன்” என்றார். தலையைத் தொங்கப்போட்டபடியே அவர்களிடம் பேசிய அவர் {பீஷ்மர்} மீண்டும் அவர்களிடம், “என் தலை அதிகமாகத் தொங்குகிறது. ஒரு தலையணையை எனக்குக் கொடுப்பீராக” என்றார். பிறகு, (அங்கே நின்று கொண்டிருந்த) மன்னர்கள், மிக மென்மையானவையும், மிக மெல்லிய துணிகளாலான பல அற்புத தலையணைகளைக் கொண்டு வந்தனர். எனினும், பாட்டன் {பீஷ்மர்} அவற்றை விரும்பவில்லை.

பிறகு அந்த மனிதர்களில் புலி {பீஷ்மர்}, சிரித்துக் கொண்டே அந்த மன்னர்களிடம், “மன்னர்களே, இவை வீரனின் படுக்கைக்காகாது” என்றார். பிறகு, அவர்களைக் {அந்த மன்னர்களைக்} கண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்}, உலகங்கள் அனைத்திலும் உள்ள தேர்வீரர்களில் வலிமையானவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! தனஞ்சயா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! ஐயா {அர்ஜுனா}, என் தலை தொங்குகிறது. {அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் எனக்குத்} தகுந்தது என்று நீ கருதும் தலையணையை எனக்குக் கொடுப்பாயாக” என்றார் {பீஷ்மர்}” {என்றான் சஞ்சயன்}.

பத்தாம் நாள் போர் முற்றும்


[1} பீஷ்மர், “ஏற்கனவே நான், அரியணையில் எனக்கு இருக்கும் உரிமையைத் துறந்தேன். இப்போது எனது பிள்ளைகளின் காரியத்திற்கு ஒரு தீர்வைச் சொல்கிறேன். ஓ மீனவரே, இந்த நாள் முதல் நான் பிரம்மச்சரியத்தை மேற்கொள்கிறேன். நான் மகனற்று இறந்தாலும், நித்திய அருளுள்ள சொர்க்கலோக உலகங்களை அடைவேன்." என்றான்.

அங்கே கூடியிருந்த மன்னர்கள் தனியாகவும், கூடியும் இந்த செயற்கரிய செயலைப் பாராட்டி "இவன் {தேவவிரதன்} உண்மையிலேயே பீஷ்மன் (பயங்கரமானவன்) தான்!" என்றனர். சந்தனு தனது மகனின் இயல்புக்குமிக்க சாதனைகளால், பெரிதும் மகிழ்ந்து, அந்த உயர் ஆன்ம இளவரசனுக்கு அவனது விருப்பத்திற்கேற்ப இறக்கும் வரம் கொடுத்து, "நீ வாழ விரும்பும்வரை, இறப்பு உன்னை அணுகாது. ஓ! பாவமற்றவனே {பீஷ்மனே}, நிச்சயமாக இறப்பு உன்னை அணுகும். ஆனால், முதலில் உன்னிடம் அனுமதி பெற்ற பிறகே அப்படி அணுகும்", என்றான் {சந்தனு}.

பயங்கரமானவன் | ஆதிபர்வம் - பகுதி 100

The Terrible one | Adi Parva - Section 100 | Mahabharata In Tamil

- See more at: http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section100.html#sthash.B9j1J7uG.dpuf
http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section100.html



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்