Tuesday, March 22, 2016

பீஷ்மருக்குத் தலையணை அமைத்த அர்ஜுனன்! - பீஷ்ம பர்வம் பகுதி – 122

Arjuna made a pillow for Bhishma! | Bhishma-Parva-Section-122 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 80)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் தான் அவரது அடிமை என்று சொன்ன அர்ஜுனன்; அர்ஜுனனிடம் தலையணை கேட்ட பீஷ்மரும், அதை அமைத்துக் கொடுத்த அர்ஜுனனும்; அர்ஜுனனைப் பாராட்டிய பீஷ்மர்; மருத்துவர்களைத் திருப்பிய அனுப்பிய துரியோதனன்; கிருஷ்ணன், யுதிஷ்டிரன் பேச்சு...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் பெரிய வில்லில் நாணேற்றி, பாட்டனை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கிய அர்ஜுனன், கண்ணீரால் நிறைந்த கண்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! குருக்களில் முதன்மையானவரே, ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதலானவரே, ஓ! வெல்லப்படமுடியாதவரே {பீஷ்மரே}, நான் உமது அடிமை, எனக்குக் கட்டளையிடுவீராக. ஓ! பாட்டா {பீஷ்மரே}, நான் என்ன செய்ய வேண்டும்?” {என்றான் அர்ஜுனன்}.

அதற்குச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! ஐயா {அர்ஜுனா}, என் தலை தொங்குகிறது. ஓ! குருக்களில் முதன்மையானவனே, ஓ! பல்குனா {அர்ஜுனா}, எனக்குத் தலையணை தருவாயாக. உண்மையில், ஓ! வீரா {அர்ஜுனா}, எனக்குப் படுக்கையாகத் தகுந்ததைத் தாமதமில்லாமல் எனக்குத் தருவாயாக. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, விற்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான நீயே அதற்குத் தகுந்தவன். க்ஷத்திரியர்களின் கடமைகளை அறிந்தவன் நீயே, மேலும், புத்திக்கூர்மையையும், நற்குணத்தையும் கொண்டவன் நீயே” என்றார் {பீஷ்மர்}.


பிறகு, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன பல்குனன் {அர்ஜுனன்} பீஷ்மர் சொன்னதைச் செய்ய விரும்பினான். காண்டீவத்தையும், நேரான கணைகள் சிலவற்றையும் எடுத்து, மந்திரங்களால் அவற்றைத் தூண்டி, பாரதக் குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரரான அந்த ஒப்பற்றவரிடம் அனுமதி பெற்ற அர்ஜுனன், பிறகு, பெரும் சக்தியுடன் கூடிய மூன்று கூரிய கணைகளைக் கொண்டு பீஷ்மரின் தலையைத் தாங்கினான் {தூக்கி நிறுத்தினான்}.

பிறகு, பாரதர்களின் தலைவரும், அறத்தின் உண்மைகளை அறிந்தவரும், அற ஆன்மா கொண்டவருமான பீஷ்மர், தமது எண்ணத்தை அறிந்து, அந்தச் சாதனையை அடைந்த அர்ஜுனனைக் கண்டு மிகவும் மனம் நிறைந்தார். இப்படி அவருக்கு {பீஷ்மருக்கு} அந்தத் தலையணை கொடுக்கப்பட்டதும், அவர் {பீஷ்மர்} தனஞ்சயனை {அர்ஜுனனைப்} புகழ்ந்தார்.

அங்கிருந்த பாரதர்கள் அனைவரின் மீதும் தன் கண்களைச் செலுத்திய அவர் {பீஷ்மர்}, போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், தன் நண்பர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான குந்தியின் மகன் அர்ஜுனனிடம், “ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, எனக்குப் படுக்கையாகக் கூடிய ஒரு தலையணையை நீ எனக்குக் கொடுத்துவிட்டாய். நீ வேறுவகையில் செயல்பட்டிருந்தாயானால், கோபத்தால் நான் உன்னைச் சபித்திருப்பேன். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, தன் கடமைகளை நோற்ற க்ஷத்திரியன் ஒருவன், கணைகளாலான தன் படுக்கையில், போர்க்களத்தில் இப்படியே உறங்க வேண்டும்”, என்றார்.

பீபத்சுவிடம் {அர்ஜுனனிடம்} இப்படிப் பேசிய அவர் {பீஷ்மர்}, பிறகு அப்போது அங்கிருந்த மன்னர்கள் மற்றும் இளவரசர்களிடம், “பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} எனக்குக் கொடுத்திருக்கும் தலையணையைக் காண்பீராக. சூரியன் வடகோட்டிற்கு {உத்தர அயனத்திற்குத்} திரும்பும் வரை நான் இந்தப் படுக்கையிலேயே உறங்குவேன் {கிடப்பேன்}. அப்போது என்னிடம் வரும் மன்னர்கள் என்னைக் காண்பார்கள் (உயிரை விடும் என்னைக் காண்பார்கள்). சூரியன் ,பெரும் வேகம் கொண்டதும், ஏழு குதிரைகள் பூட்டப்பட்டதுமான தன் தேரில் வைஸ்ரவணன் {குபேரன்} இருக்கும் திசையை நோக்கிச் செல்லும்போது, அன்புக்குரிய நண்பனை விட்டுப் பிரியும் அன்பு நண்பனைப் போல நான் என் உயிரை விடுவேன். மன்னர்களே {நான் இருக்கும் இந்த} என் இடத்தைச் சுற்றி அகழ் ஒன்று தோண்டப்பட வேண்டும். இப்படி நூறு கணைகளால் துளைக்கப்பட்ட நான் சூரியனுக்கு என் துதிகளைச் செலுத்தப் போகிறேன். உங்களைப் பொறுத்தவரை, மன்னர்களே, பகையைக் கைவிட்டு, போரிடுவதை நிறுத்துவீராக” என்றார் {பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு, கணைகளைப் பிடுங்குவதில் திறம்பெற்றவர்களும், (தங்கள் தொழிலுக்குத்) தேவையான அனைத்து உபகரணங்களுடன் கூடியவர்களும், (தங்கள் அறிவியலில்) நன்கு பயிற்சி கொண்டவர்களுமான அறுவைசிகிச்சை நிபுணர்கள் சிலர் அவரிடம் {பீஷ்மரிடம்} அங்கே வந்தனர்.

அவர்களைக் கண்ட கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, உமது மகனிடம் {துரியோதனனிடம்}, “இந்த மருத்துவர்களுக்கு உரிய மரியாதைகளை வழங்கி, செல்வங்களைப் பரிசளித்து அனுப்புவாயாக. இந்நிலையை அடைந்தும் எனக்கு மருத்துவர்களால் என்ன தேவை இருக்கிறது? க்ஷத்திய செயல்பாடுகளில் மிகவும் மெச்சத்தகுந்த மிக உயர்ந்த நிலையை நான் வென்றிருக்கிறேன் {அடைந்திருக்கிறேன்}. மன்னர்களே, கணைகளின் படுக்கையில் கிடக்கும் நான் மருத்துவர்களின் சிகிச்சையை ஏற்பது எனக்குத் தகாது. மனிதர்களின் ஆட்சியாளர்களே, என் உடலில் உள்ள இந்தக் கணைகளுடனே நான் எரிக்கப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.

அவரது {பீஷ்மரின்} வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துரியோதனன், மருத்துவர்களுக்குத் தகுந்த மரியாதைகளைச் செலுத்தி அவர்களை அனுப்பி வைத்தான். பல்வேறு ஆட்சிப்பகுதிகளின் மன்னர்களான அவர்கள், அளவிலா சக்தி கொண்ட பீஷ்மர், அறத்தில் நிலையான உறுதியை வெளிப்படுத்தியதைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தனர். இப்படி உமது தந்தைக்குத் தலையணை கொடுத்தவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும் அந்த மனிதர்களின் ஆட்சியாளர்களுமான பாண்டவர்களும், கௌரவர்களும், அந்தச் சிறந்த படுக்கையில் கிடந்த உயர் ஆன்ம பீஷ்மரை மீண்டும் ஒன்றுசேர்ந்து அணுகினர். உயர் ஆன்மா கொண்ட அவரை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கி, அவரை மும்முறை வலம் வந்து, அவரது பாதுகாப்புக்காகச் சுற்றிலும் காவலர்களை நிறுத்தி அவ்வீரர்கள் {பாண்டவர்களும், கௌரவர்களும்}, மேனியெங்கும் குருதியால் நனைந்து, தங்கள் இதயங்கள் துயரத்தில் மூழ்கி, தாங்கள் கண்டவற்றை நினைத்துக் கொண்டே, மாலை வேளையில் ஓய்வுக்காகத் பாசறைகளுக்குச் சென்றனர்.

பிறகு, வலிமைமிக்க மாதவன் {கிருஷ்ணன்}, பீஷ்மரின் வீழ்ச்சியால் இன்பத்தில் நிறைந்து, ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக அமர்ந்திருந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்களைச் சரியான நேரத்தில் அணுகி, தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! குருகுலத்தவரே {யுதிஷ்டிரரே}, நற்பேறாலேயே வெற்றி உமதானது. நற்பேறாலேயே மனிதர்களால் கொல்லப்பட இயலாதவரும், கலங்கடிக்கப்பட இயலாத வலிமைமிக்கத் தேர்வீரருமான பீஷ்மர் வீழ்த்தப்பட்டார். அல்லது, ஒருவேளை, விதிவசத்தால், அனைத்து ஆயுதங்களிலும் கரைகண்டவரான அந்தப் போர்வீரர் {பீஷ்மரை}, உமது கண்களால் மட்டுமே கொல்ல முடிந்தவரான உம்மை எதிரியாக அடைந்து, கோபம் நிறைந்த உமது பார்வையால் எரிக்கப்பட்டார்” {என்றான் கிருஷ்ணன்}.

கிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அந்த ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்}, “உன் அருளாலேயே வெற்றி {கிடைக்கும்}, உன் கோபத்தாலேயே தோல்வியும் {கிடைக்கும்}! உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரின் அச்சங்களை விலக்குபவன் நீயே! எங்கள் புகலிடம் நீயே! ஓ! கேசவா {கிருஷ்ணா} யாரை போரில் எப்போதும் நீ காக்கிறாயோ, யாருடைய நன்மைக்காக எப்போதும் நீ ஈடுபடுகிறாயோ, அவர்கள் வெற்றியை அடைவது அச்சரியமில்லை. எங்கள் புகலிடமாக உன்னை அடைந்த நான் எதையுமே ஆச்சரியமானதாகக் கருதவில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}. இப்படி அவனால் {யுதிஷ்டிரனால்} சொல்லப்பட்டதும், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} புன்னகைத்தவாறே, “ஓ! மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உம்மிடம் இருந்து மட்டுமே இவ்வார்த்தைகள் வர முடியும்” என்று பதிலுரைத்தான்” {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்