Saturday, April 02, 2016

துரோணர் கொல்லப்பட்டார்! - துரோண பர்வம் பகுதி – 008

Drona was slained! | Drona-Parva-Section-008 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 08)

பதிவின் சுருக்கம் : துரோணர் உண்டாக்கிய அழிவு; துரோணரைத் தடுக்கும்படி பாண்டவர்களைத் தூண்டிய யுதிஷ்டிரன்; பாண்டவப்படையைக் கலங்கடித்த துரோணர் திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “குதிரைகள், {அவற்றைச்} செலுத்துபவர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியவற்றை இப்படிக் கொல்லும் துரோணரைக் கண்ட பாண்டவர்கள், கவலைக்குள்ளாகாமல் அவரை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர் [1]. பிறகு, திருஷ்டத்யும்னன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரிடம் பேசிய மன்னன் யுதிஷ்டிரன், அவர்களிடம், “அந்தக் குடத்தில் பிறந்தவர் (துரோணர்), நம் ஆட்களால் அனைத்துப் பக்கங்களிலும் கவனமாகச் சூழப்பட்டுத் தடுக்கப்படட்டும்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான அர்ஜுனனும், பிருஷதன் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, தங்கள் தொண்டர்களுடன் சேர்ந்து, துரோணர் வந்ததும் அவர்கள் அனைவரும் பின்னவரை {துரோணரை} வரவேற்றனர் {எதிர்த்தனர்}.


[1] வேறொரு பதிப்பில், “பாண்டவர்கள் மன வருத்தத்தை அடைந்து அவரை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து நின்று தடுக்கவில்லை” என்றிருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பிலும், “பாண்டவர்கள் பெரிதும் பீடிக்கப்பட்டு, அவரது முன்னேற்றத்தைத் தடுக்க முடியாதவர்களாக இருந்தனர்” என்றே இருக்கிறது.

மகிழ்ச்சியால் நிறைந்திருந்த கேகய இளவரசர்கள், பீமசேனன், சுபத்ரையின் மகன் {அபிமன்யு}, கடோத்கசன், யுதிஷ்டிரன், இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்), மத்ஸ்யர்களின் ஆட்சியாளன் {விராடன்}, துருபதன் மகன், திரௌபதியின் மகன்கள் (ஐவர்), திருஷ்டகேது, சாத்யகி, கோபம் நிறைந்த சித்திரசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுத்சு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டு மகன்களை {பாண்டவர்களைப்} பின்தொடர்ந்த பிற மன்னர்கள் ஆகியோர் அனைவரும் தங்கள் குலத்துக்கும் {குலப்பெருமைக்கும்} ஆற்றலுக்கும் தக்கபடி பல்வேறு சாதனைகளை அடைந்தனர். அந்தப் பாண்டவ வீரர்களால் அந்தப் போரில் காக்கப்படும் படையைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, கோபத்தால் தன் கண்களைத் திருப்பி, அதன் மீது தன் பார்வையைச் செலுத்தினார்.

சினத்தால் தூண்டப்பட்டவரும், போரில் வெல்லப்பட முடியாதவருமான அந்த வீரர் {துரோணர்}, தன் தேரில் நின்றபடியே, பெரும் மேகத்திரள்களை அழிக்கும் சூறாவளியைப் போல அந்தப் பாண்டவப் படையை எரித்தார். தேர்வீரர்கள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், யானைகள் ஆகியவற்றின் மீது அனைத்துப் பக்கங்களிலும் விரைந்த துரோணர், வயதில் கனம் கொண்டிருந்தாலும் ஓர் இளைஞனைப் போலக் களத்தில் மூர்க்கமாகத் திரிந்தார். காற்றைப் போல வேகமானவையும், அற்புத இனத்தைச் சேர்ந்தவையும், இரத்தத்தால் நனைந்தவையுமான அவரது {துரோணரது} சிவந்த குதிரைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அழகான தோற்றத்தை அடைந்தது.

முறையாக நோன்புகளை நோற்கும் அந்த வீரர் {துரோணர்}, கோபத்தால் தூண்டப்பட்டு யமனைப் போல அவர்களை அழிப்பதைக் கண்ட யுதிஷ்டிரனின் படைவீரர்கள் அனைத்துப்பக்கங்களிலும் தப்பி ஓடினர். சிலர் தப்பி ஓடினர், சிலர் திரும்பினர், சிலர் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர், மேலும் சிலர் அந்தக் களத்திலேயே நின்றனர், அவர்கள் உண்டாக்கிய ஒலி கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. வீரர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கி, மருண்டவர்களிடம் அச்சத்தை உண்டாக்கிய அவ்வொலி முழு வானத்தையும் பூமியையும் நிறைத்தது.

மீண்டும் அந்தப் போரில் தன் பெயரை அறிவித்துக் கொண்ட துரோணர், எதிரிகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடி தன்னை மிகக் கடுமையானவராக அமைத்துக் கொண்டார். உண்மையில், அந்த வலிமைமிக்கத் துரோணர் முதிர்ந்தவராக இருப்பினும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இளைஞனைப் போலச் செயல்பட்டு, பாண்டுமகனின் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் காலனைப் போலத் திரிந்து கொண்டிருந்தார். தலைகளையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கடங்களையும் துண்டித்த அந்தக் கடும் வீரர் {துரோணர்}, தேர்த்தட்டுகள் பலவற்றை வெறுமையானவை ஆக்கி சிங்க முழக்கமிட்டார்.

அவரது {துரோணரது} மகிழ்ச்சி ஆரவாரத்தின் விளைவாகவும், அவரது கணைகளின் சக்தியாலும், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, குளிரால் பீடிக்கப்பட்ட மாட்டு மந்தையைப் போல (எதிரிப் படையின்) வீரர்கள் நடுங்கினர். அவரது தேரின் சடசடப்பொலியின் விளைவாகவும், அவரது நாண் கயிற்றின் ஒலியாலும், அவரது வில்லின் நாணொலியாலும் மொத்த ஆகாயமே பேரொலியால் எதிரொலித்தது. அந்த வீரரின் {துரோணரின்} கணைகள், அவரது வில்லில் இருந்து ஆயிரக்கணக்கில் ஏவப்பட்டு, {அடிவானின்} திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தபடி, (எதிரியின்) யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படை மீது பொழிந்தன.

பிறகு, பெரும் சக்தி கொண்ட வில்லைத் தரித்திருந்தவரும், தழல்களை ஆயுதங்களாகக் கொண்ட நெருப்புக்கு ஒப்பானவருமான துரோணரைப் பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் துணிவுடன் அணுகினர். அவர் {துரோணர்}, அவர்களது யானைகள், காலாட்படைவீரர்கள் மற்றும் குதிரைகளுடன் அவர்களை யமலோகம் அனுப்பத் தொடங்கினார். அந்தத் துரோணர் பூமியை இரத்தச் சகதியாக்கினார்.

தன் வலிமைமிக்க ஆயுதங்களை இறைத்தபடி, அனைத்துப் பக்கங்களிலும் அடர்த்தியான தன் கணைகளை ஏவியபடி இருந்த துரோணர், விரைவில் தன் கணைமாரியைத் தவிர வேறேதும் தெரியாதவாறு {அடிவானின்} திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தார். காலாட்படைவீரர்கள், தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுக்கிடையே துரோணரின் கணைகளைத் தவிர வேறேதும் காணப்படவில்லை. தேர்களுக்கு மத்தியில் மின்னலின் கீற்றுகள் அசைவதைப் போல அவரது தேரின் கொடிமரம் மட்டுமே காணப்பட்டது [2]. தளர்வுக்கு உட்படுத்த முடியாத ஆன்மா கொண்ட {மனம் தளராத} துரோணர், வில்லையும் கணைகளையும் தரித்துக் கொண்டு, கேகய இளவரசர்கள் ஐவரையும், பாஞ்சாலர்களின் ஆட்சியாளனையும் {துருபதனையும்} பீடித்து, யுதிஷ்டிரனின் படைப்பிரிவை எதிர்த்து விரைந்தார்.

[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, “காலாட்படை, தேர்கள், குதிரைகள், யானைகளுக்கு மத்தியில் திரிந்த அவரது கொடி மேகங்களில் மின்னல் போலக் காணப்பட்டது” என்றிருக்கிறது.

பிறகு, பீமசேனன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிநியின் பேரன் {சாத்யகி}, துருபதன் மகன்கள், காசியின் ஆட்சியாளனான சைப்யன் மகன் [3], சிபி மகிழ்ச்சியுடனும் உரத்த முழக்கங்களுடனும் தங்கள் கணைகளால் அவரை {துரோணரை} மறைத்தனர். தங்கச் சிறகுகளால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகள் துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்டு, அந்த வீரர்களின் இளம் குதிரைகள் மற்றும் யானைகளின் உடலைத் துளைத்து, தங்கள் சிறகுகளை இரத்தத்தால் பூசிக் கொண்டு பூமிக்குள் நுழைந்தன. கணைகளால் துளைக்கப்பட்டு வீழ்ந்திருக்கும் போர்வீரர்களின் கூட்டங்கள், தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவை விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, கார்மேகத் திரள்களால் மறைக்கப்பட்ட ஆகாயம் போலத் தெரிந்தது.

[3] வேறொரு பதிப்பில் “சைப்யன் மகனும், காசிமன்னனும், சிபியும்” என்று தனித்தனியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் “சைப்யன் மகன், காசிகளின் ஆட்சியாளன், சிபி” என்று தனித்தனியாகவே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கங்குலி தவறியிருக்கிறார் என்றே தெரிகிறது.

பிறகு துரோணர், உமது மகன்களின் செழிப்பை விரும்பி, சாத்யகி, பீமன், தனஞ்சயன், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, துருபதன், காசியின் ஆட்சியாளன் ஆகியோரின் படைப்பிரிவுகளை நசுக்கி, போரில் பல்வேறு வீரர்களைத் தரையில் வீழ்த்தினார். உண்மையில், அந்த உயர் ஆன்ம வீரர் {துரோணர்} இவற்றையும் இன்னும் பல சாதனைகளையும் அடைந்து, ஓ! குருக்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, யுகத்தின் முடிவில் எழும் சூரியனைப் போல உலகத்தை எரித்துவிட்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} சொர்க்கத்திற்குச் சென்றார். பகைக்கூட்டங்களைக் கலங்கடிப்பவரும், தங்கத் தேரைக் கொண்டவருமான அந்த வீரர் {துரோணர்}, பெரும் சாதனைகளை அடைந்து, போரில் பாண்டவ வீரர்களின் கூட்டத்தை ஆயிரக்கணக்கில் கொன்று, இறுதியாகத் திருஷ்டத்யும்னனால் தானே கொல்லப்பட்டார்.

உண்மையில், துணிச்சல் மிக்கவர்களும், புறமுதுகிடாதவர்களுமான இரண்டு {2} அக்ஷௌஹிணிக்கு [4] மேலான படை வீரர்களைக் கொன்றவரும், புத்திக்கூர்மை மிக்கவருமான அந்த வீரர் {துரோணர்}, இறுதியாக உயர்ந்த நிலையை அடைந்தார். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடைவதற்கு அரிதான மிகக் கடினமான சாதனைகளை அடைந்த அவர் {துரோணர்}, இறுதியில் கொடுஞ்செயல்புரிந்த பாஞ்சாலர்களாலும் பாண்டவர்களாலும் கொல்லப்பட்டார்.

[4] வேறு பதிப்பு ஒன்றில் "ஒரு அக்ஷௌஹிணிக்கு மேல்" என்றே சொல்லப்பட்டுள்ளது. மன்மத நாத தத்தர் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே "இரண்டு அக்ஷௌஹிணிக்கு மேல்" என்றே உள்ளது.

போரில் ஆசான் {துரோணர்} கொல்லப்பட்ட போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்து உயிரினங்கள் மற்றும் துருப்புகள் அனைத்தின் உரத்த ஆரவாரம் ஆகாயத்தில் எழுந்தது. “ஓ! இது நிந்திக்கத்தக்கது” என்ற உயிரினங்களின் கதறல் வானத்திலும், பூமியிலும், இவைகளுக்கு இடைப்பட்ட இடைவெளியிலும், திசைகள் மற்றும் துணைத்திசைகளிலும் எதிரொலித்துக் கேட்கப்பட்டது. தேவர்கள், பித்ருக்கள், அவரது {துரோணரின்} நண்பர்கள் ஆகிய அனைவரும் அந்த வலிமைமிக்க வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்} இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்டனர். வெற்றி அடைந்த பாண்டவர்கள் சிங்க முழக்கங்கள் செய்தனர். அவர்களது உரத்த கூச்சலால் பூமியே நடுங்கியது” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்