Friday, April 08, 2016

அர்ஜுனனின் உறுதிமொழி! - துரோண பர்வம் பகுதி – 013

Arjuna’s assurance! | Drona-Parva-Section-013 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 13)

பதிவின் சுருக்கம் : துரோணரின் உறுதிமொழியை அறிந்த யுதிஷ்டிரன்; பாண்டவர்கள் ஆலோசனை; யுதிஷ்டிரனைத் தேற்றிய அர்ஜுனன்; போரின் தொடக்கமும், துரோணரின் ஆற்றலும்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த வரம்புகளுக்கு உட்பட்டு மன்னனை {யுதிஷ்டிரனைப்} பிடிக்கத் துரோணர் உறுதியளித்த பிறகு, உமது துருப்பினர், யுதிஷ்டிரன் பிடிபடபோவதைக் ({துரோணரின் அந்த உறுதிமொழியைக்) கேட்டுச் சங்கொலிகள் மற்றும் தங்கள் கணைகளின் “விஸ்” ஒலிகள் ஆகியவற்றுடன் கலந்து தங்கள் சிங்க முழக்கங்களைப் பலவாறு வெளியிட்டனர். எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} நோக்கம் குறித்த அனைத்தையும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் ஒற்றர்கள் மூலம் விரைவில் விரிவாக அறிந்தான்.


பிறகு தன் சகோதரர்கள் அனைவரையும், தன் படையின் பிற மன்னர்கள் அனைவரையும் அழைத்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, துரோணரின் நோக்கத்தைக் குறித்துக் கேட்டாய். எனவே, அக்காரியம் சாதிக்கப்படுவதைத் தடுக்கத் தக்க நடவடிக்கைகளைப் பின்பற்றுவோமாக. எதிரிகளைக் கலங்கடிப்பவரான துரோணர் தன் உறுதிமொழியை வரம்புகளுக்குட்பட்டுச் செய்திருக்கிறார் என்பது உண்மையே, எனினும், ஓ! பெரும் வில்லாளியே {அர்ஜுனனே}, அவை {அந்த வரம்புகள்} உன்னைச் சார்ந்தவையே. எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, துரியோதனன், தன் விருப்பத்தின் கனியை {பலனை} துரோணரிடம் அடையாதவாறு நீ இன்று என் அருகிலேயே நின்று போரிடுவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “எப்படி ஒருபோதும் என்னால் எனது ஆசானை {துரோணரைக்} கொல்ல முடியாதோ, அப்பட்டியே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மையும் என்னால் விட இயலாது. ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, என் ஆசானை {துரோணரை} எதிர்த்துப் போரிடுவதைக் காட்டிலும் நான் போரில் என் உயிரையே விட்டுவிடுவேன் [1]. இந்தத் திருதராஷ்டிர மகன் {துரியோதனன்}, போரில் உம்மைக் கைப்பற்றி, அரசுரிமையை அடைய விரும்புகிறான். இவ்வுலகில் அவன் அந்த விருப்பத்தின் கனியை {பலனை} ஒருபோதும் அடையப் போவதில்லை. நட்சத்திரங்களுடன் கூடிய ஆகாயம் விழலாம், பூமி துண்டுகளாகச் சிதறிப் போகலாம், எனினும், நிச்சயம் நான் உயிரோடுள்ளவரை உம்மைப் பிடிப்பதில் துரோணரால் வெல்லவே முடியாது.

[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, “நான் போரில் உயிரை இழந்தாலுமிழப்பேன்; ஆசாரியரை எதிர்ப்பேன்; எவ்விதத்தாலும் உம்மைக் கைவிடேன்” என்று இருக்கிறது.

வஜ்ரதாரி {இந்திரன்}, அல்லது விஷ்ணுவின் தலைமையிலான தேவர்களே அவருக்கு {துரோணருக்குப்} போரில் உதவினாலும், களத்தில் உம்மைக் கைப்பற்றுவதில் அவரால் {துரோணரால்} வெல்லவே முடியாது. நான் உயிரோடுள்ளவரை, ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, அவர் {துரோணர்} ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவரே ஆனாலும், அந்தத் துரோணரிடம் நீர் அச்சங்கொள்வது உமக்குத் தகாது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, என் உறுதிமொழிகள் ஒருபோதும் நிறைவடையாமல் இருந்ததில்லை என்பதையும் நான் உமக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

எப்போதும் நான் பொய்மை ஏதும் பேசியிருப்பதாக எனக்கு நினைவில்லை.

எப்போதும் நான் வீழ்த்தப்பட்டதாகவும் எனக்கு நினைவில்லை.

எப்போதும் நான் ஓர் உறுதிமொழியைச் செய்துவிட்டு, அதில் ஒரு பகுதியை நிறைவேற்றாமல் இருந்ததாக எனக்கு நினைவில்லை” என்றான் {அர்ஜுனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு பாண்டவ முகாமில், சங்குகள், பேரிகைகள், படகங்கள், மிருதங்கங்கள் ஆகியன ஒலிக்கப்பட்டு முழங்கின. உயர் ஆன்ம பாண்டவர்கள் சிங்க முழக்கங்களைச் செய்தனர். இவையும், அவர்களது வில்லின் பயங்கர நாணொலிகளும், உள்ளங்கை தட்டல்களும் சொர்க்கத்தையே எட்டின. பாண்டுவின் வலிமைமிக்க மகன்களின் முகாமில் இருந்து எழுந்த உரத்த சங்கொலிகளைக் கேட்டு, உமது படைப்பிரிவுகளிலும் பல்வேறு கருவிகள் இசைக்கப்பட்டன. பிறகு உமது படைப்பிரிவுகளும், அவர்களுடையனவும் போருக்காக அணிவகுக்கப்பட்டன. பிறகு போரை விரும்பிய அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து மெதுவாக முன்னேறினர். பாண்டவர்கள், குருக்கள் {கௌரவர்கள்}, துரோணர் மற்றும் பாஞ்சாலர்களுக்கு இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம் கடுமையான ஒரு போர் தொடங்கியது.

சிருஞ்சயர்கள் கடுமையாகப் போரிட்டாலும், துரோணரால் பாதுகாக்கப்பட்ட அந்தப் படையை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. அதே போல, தாக்குவதில் திறம்பெற்ற உமது மகனின் {துரியோதனனின்} வலிமைமிக்கத் தேர்வீரர்களாலும், கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்பட்ட பாண்டவப் படையை வீழ்த்த முடியவில்லை. துரோணர் மற்றும் அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்ட அவ்விரு படைகளும், இரவின் அமைதியில் பூத்துக் குலுங்கும் இரு காடுகளைப் போலச் செயலற்று நிற்பதாகத் தெரிந்தது.

பிறகு, தங்கத் தேரைக் கொண்டவர் (துரோணர்), சூரியனைப் போன்ற பெரும் காந்தியைக் கொண்டு, பாண்டவர்களின் படையணிகளை நசுக்கியபடி, தான் விரும்பியவாறெல்லாம் அவர்கள் மத்தியில் திரிந்தார். பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், தாங்கள் கொண்ட அச்சத்தால், பெரும் வேகத்தோடு விரைவாக முன்னேறி வந்த அந்தத் தனி வீரரை {துரோணரை} பலராகக் கருதினர். அவரால் ஏவப்பட்ட பயங்கரக் கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களிலும் பாய்ந்து பாண்டு மகனின் படையை அச்சுறுத்தின. உண்மையில் துரோணர், நூற்றுக்கணக்கான கிரணங்களுடன் கூடிய நடுநாள் சூரியனைப் போலவே தெரிந்தார்.

இந்திரனைக் காண இயலாத தானவர்களைப் போல, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கோபம் நிறைந்த பரத்வாஜர் மகனை {துரோணரைக்) காண பாண்டவர்களில் ஒருவராலும் இயலவில்லை. பிறகு பரத்வாஜரின் வீர மகன்{துரோணர்}, (பகைவர்) துருப்புகளைக் குழப்பியபடி, கூரிய கணைகளால் திருஷ்டத்யும்னன் படைப்பிரைவை வேகமாக எரிக்கத் தொடங்கினார். தன் நேரான கணைகளால் திசைகள் அனைத்தையும் மறைத்துத் தடுத்த அவர், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இருந்த பாண்டவப் படையை நசுக்கத் தொடங்கினார்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்