Thursday, April 07, 2016

வரமளித்த துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 012

Drona granted boon! | Drona-Parva-Section-012 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 12)

பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்கு வரமொன்றை அளிப்பதாகச் சொன்ன துரோணர்; யுதிஷ்டிரனை உயிரோடு பிடிக்க வேண்டிய துரியோதனன்; வரமளித்த துரோணர்; துரோணரின் உறுதியை படையினரிடம் வெளிப்படுத்திய துரியோதனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சரி, என் கண்களால் அனைத்தையும் கண்டவாறே, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களால் கொல்லப்பட்ட துரோணர் எப்படி வீழ்ந்தார் என்பதை நான் உமக்கு விவரிப்பேன்.


துருப்புகளின் தலைமைப் பொறுப்பை அடைந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்}, உமது மகனிடம் {துரியோதனனிடம்} துருப்புகள் அனைத்தின் மத்தியில் இவ்வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! மன்னா {துரியோதனா}, கௌரவர்களில் காளையான கடலுக்குச்செல்பவள் (கங்கையின்) மகனுக்கு {பீஷ்மருக்குப்} பிறகு, துருப்புகளின் தலைமைப் பொறுப்பில் உடனே நிறுவி என்னை மதித்த உனது செயலுக்குத் தகுந்த கனியை {பயனை} நீ அடைவாய். உனது எந்தக் காரியத்தை நான் இப்போது அடைய வேண்டும்? நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக” {என்றார் துரோணர்}.

பிறகு, கர்ணன், துச்சாசனன் மற்றும் பிறரிடம் ஆலோசித்த மன்னன் துரியோதனன், வெல்லப்பட முடியாத வீரரும், வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான ஆசானிடம் {துரோணரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “நீர் எனக்கு ஒரு வரத்தை அளிப்பதாக இருந்தால், தேர்வீரர்களில் முதன்மையான யுதிஷ்டிரனை உயிருடன் பிடித்து, இங்கே என்னிடம் கொண்டு வருவீராக” {என்றான் துரியோதனன்}.

பிறகு, அந்தக் குருக்களின் ஆசான், உமது மகனின் {துரியோதனனின்} அவ்வார்த்தைகளைக் கேட்டுத் துருப்புகள் அனைத்தையும் மகிழ்விக்கும் வண்ணம் அவனுக்கு {துரியோதனனுக்குப்} பின்வரும் பதிலைச் சொன்னார், “எவனைக் கைப்பற்றுவதை நீ விரும்புகிறாயோ, அந்தக் குந்தியின் மகன் (யுதிஷ்டிரன்) பாராட்டுக்குரியவன். ஓ! வீழ்த்தப்படக் கடினமானவனே {துரியோதனா}, வேறு எந்த வரத்தையோ, (உதராணமாக) அவனது கொலையையோ நீ கேட்கவில்லை. ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, எக்காரணத்திற்காக நீ அவனது மரணத்தை விரும்பவில்லை? ஓ! துரியோதனா, கொள்கையில் அறியாமை கொண்டவனல்ல நீ என்பதில் ஐயமில்லை. எனவே, யுதிஷ்டிரனின் மரணத்தை ஏன் நீ வேண்டவில்லை? நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அவனது மரணத்தை விரும்பும் எந்த எதிரியையும் கொண்டிருக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியமானதாகும். அவன் உயிரோடிருக்க நீ விரும்புகிறாயானால், (ஒன்று) உன் குலத்தை அழிவிலிருந்து பாதுகாக்க முயல்கிறாய், அல்லது, ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, போரில் பாண்டவர்களை வீழ்த்தி அவர்கள் நாட்டை அவர்களுக்கே கொடுத்து (அவர்களுடன்) சகோதர உறவை நிறுவ விரும்புகிறாய். அந்தப் புத்திசாலி இளவரசனின் {யுதிஷ்டிரனின்} பிறப்பு மங்கலகரமானது. நீயே கூட அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பாசம் கொண்டிருப்பதால், அவன் அஜாதசத்ரு (எதிரிகளற்றவன்) என்று உண்மையாகவே அழைக்கப்படுகிறான்” {என்றார் துரோணர்}.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரால் இப்படிச் சொல்லப்பட்டதும், உமது மகனின் {துரியோதனனின்} நெஞ்சில் எப்போதும் இருக்கும் உணர்ச்சியானது திடீரெனத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பிருஹஸ்பதியைப் போன்றோராலும் கூடத் தங்கள் முக உணர்ச்சிகளை மூடிமறைக்க முடியாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதனால், மகிழ்ச்சியால் நிறைந்த உமது மகன் {துரியோதனன்}, இந்த வார்த்தைகளைச் சொன்னான்,

{துரியோதனன் துரோணரிடம்}, “போரில் குந்தியின் மகனை {யுதிஷ்டிரனைக்} கொல்வதால், ஓ! ஆசானே {துரோணரே}, வெற்றி எனதாகாது. யுதிஷ்டிரன் கொல்லப்பட்டால், பிறகு நம் அனைவரையும் பார்த்தன் {அர்ஜுனன்} கொன்றுவிடுவான் என்பதில் ஐயமில்லை. மேலும், அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் தேவர்களாலும் கொல்ல முடியாது. அவ்வழக்கில், அவர்களில் பிழைக்கும் ஒருவனும் கூட நம் அனைவரையும் அழித்துவிடுவான் [1]. எனினும், யுதிஷ்டிரன் தன் உறுதிமொழிகளில் உண்மைநிறைந்தவனாவான். அவனை {யுதிஷ்டிரனை} இங்கே (உயிருடன்) கொண்டு வந்து, மீண்டும் ஒருமுறை பகடையில் வீழ்த்தினால், பாண்டவர்கள் அனைவரும் யுதிஷ்டிரனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்கள் ஆகையால், அவர்கள் மீண்டும் ஒருமுறை காட்டுக்குச் செல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு வெற்றியே நீடித்த ஒன்று எனத் தெளிவாகத் தெரிகிறது. இதற்காகவே நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் கொலையை எவ்வழியிலும் நான் விரும்பவில்லை” {என்றான் துரியோதனன்}.

[1] வேறொரு பதிப்பில் இந்த இடம் வேறு மாதிரியாக இருக்கிறது, “பாண்டவர்கள் அனைவரும், தங்கள் மகன்களோடு போரில் கொல்லப்படுவார்களாகில், அப்போது அரசர்கள் அனைவரையும் மிச்சமின்றித் தன் வசப்படுத்திக் கொண்டு, சமுத்திரங்கள், அரண்யங்கள் ஆகியவற்றைக் கொண்டதும், செழிப்புள்ளதுமான அந்தப் பூமியை வென்று புருஷோத்தமான கிருஷ்ணன் திரௌபதிக்காவது, குந்திக்காவது கொடுத்து விடுவான். அந்தப் பாண்டவர்களுள் இந்தக் கிருஷ்ணன் மிச்சமாக இருப்பானாகில் இவனே நம்மை மிஞ்சும்படி செய்யமாட்டான்” என்று இருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

பொருளாதாய அறிவியலின் {அர்த்த தத்துவங்களின்} உண்மைகளை அறிந்தவரும், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவருமான துரோணர், துரியோதனனின் இந்தக் குறுக்குப் புத்தியை உறுதிசெய்து கொண்டு, சிறிது நேரம் சிந்தித்துப் பின்வரும் வழியில் அந்த வரத்தைக் கட்டுப்படுத்தி அவனுக்கு அளித்தார்.

துரோணர் {துரியோதனிடம்}, “வீரனான அர்ஜுனன், யுதிஷ்டிரனைப் போரில் பாதுகாக்கவில்லை எனில், அந்த மூத்த பாண்டவன் {யுதிஷ்டிரன்} ஏற்கனவே உன் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டதாக நினைத்துக் கொள்வாயாக. பார்த்தனை {அர்ஜுனனைப்} பொறுத்தவரை, இந்திரனின் தலைமையிலான தேவர்கள் மற்றும் அசுரர்களால் கூடப் போரில் அவனை எதிர்க்க இயலாது. இதன் காரணமாகவே, நீ செய்யச் சொல்லி என்னிடம் கேட்பதை நான் செய்யத் துணியேன்.

அர்ஜுனன் சீடன் என்பதிலும், ஆயுதங்களில் நானே அவனது முதல் ஆசான் என்பதிலும் ஐயமில்லை. எனினும், அவன் இளமையானவன், பெரும் நற்பேறைக் கொண்டவன், மேலும் (தன் நோக்கங்களைச் சாதிக்க) அதிகப்படியாக முனைபவனுமாவான். மேலும், அவன் {அர்ஜுனன்} இந்திரன் மற்றும் ருத்ரனிடமிருந்த பல ஆயுதங்களை அடைந்திருக்கிறான். {இவை} தவிரவும், அவன் உன்னால் {கோபம்} தூண்டப்பட்டவனாகவும் இருக்கிறான். எனவே, நீ என்னிடம் கேட்டதைச் செய்ய நான் துணியேன்.

செயல்படுத்தக்கூடிய எவ்வழியிலாவது அர்ஜுனன் போரில் இருந்து நீக்கப்படட்டும். பார்த்தன் {அர்ஜுனன்} விலக்கப்பட்டதும், மன்னன் யுதிஷ்டிரன் ஏற்கனவே வீழ்ந்துவிட்டதாக நீ கருதலாம். ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனா}, அவனை {யுதிஷ்டிரனைக்} கொல்வதில் அல்ல, அவனைக் கைப்பற்றுவதிலேயே வெற்றி இருக்கிறது. தந்திரத்தால் கூட அவனைக் கைப்பற்றுவது சாதிக்கப்படலாம்.

உண்மையில், மனிதர்களில் புலியான குந்திமகன் தனஞ்சயன் {அர்ஜுனன்} களத்தில் இருந்து விலக்கப்பட்டால், உண்மைக்கும், நீதிக்கும் தன்னை அர்ப்பணித்திருக்கும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்} போரில் என் முன்னிலையில் ஒருக்கணம் நின்றாலும் கூட அவனைக் கைப்பற்றி இன்றே அவனை உன் கட்டுப்பாட்டின் கீழ் நான் கொண்டு வருவேன் என்பதில் ஐயமில்லை. எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, பல்குனனின் {அர்ஜுனனின்} முன்னிலையில் இந்திரனின் தலைமையிலான தேவர்கள் மற்றும் அசுரர்களாலும் கூடப் போரில் யுதிஷ்டிரன் பிடிக்க இயலாதவனாவான்” என்றார் {துரோணர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்த வரம்புகளுக்கு உடன்பட்டு மன்னனை {யுதிஷ்டிரனைக்} கைப்பற்றுவதாகத் துரோணர் உறுதியளித்தாலும், உமது முட்டாள் மகன்கள், யுதிஷ்டிரன் ஏற்கனவே பிடிபட்டதாகவே கருதினர். பாண்டவர்களிடம் துரோணர் கொண்ட சார்பு நிலையை {பாரபட்சத்தை} உமது மகன் (துரியோதனன்) அறிவான். எனவே, துரோணரைத் தன் உறுதிமொழியில் நிலைக்கச் செய்யும் பொருட்டு, அவன் {துரியோதனன்} அந்த ஆலோசனைகளை வெளியிட்டான். பிறகு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, துரோணர் (மூத்த) பாண்டவனை {யுதிஷ்டிரனைக்} கைப்பற்றுவதாக வாக்குறுதி அளித்த அந்தச் செய்தி, துரியோதனனால் அவனது துருப்பினர் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது {பிரகடனப்படுத்தப்பட்டது}” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்