Sunday, April 17, 2016

சல்லியனை வீழ்த்திய பீமன்! - துரோண பர்வம் பகுதி – 015

Bhima vanquished Salya! | Drona-Parva-Section-015 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 15)

பதிவின் சுருக்கம் : சல்லியனை நோக்கி விரைந்த பீமனும், அபிமன்யுவும்; அபிமன்யுவை விலகி நிற்கச் செய்த பீமன்; பீமனுக்கும் சல்லியனுக்கும் இடையில் நடந்த கடும் கதாயுத்தம்; பீமனின் அடியால் மயக்கமடைந்த சல்லியன்; சல்லியனைத் தூக்கிச் சென்ற கிருதவர்மன்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சிறந்த தனிப்போர்கள் பலவற்றை நீ எனக்கு விவரித்தாய். அவற்றைக் கேட்கும் நான், கண் கொண்டோரிடம் பொறாமை கொள்கிறேன். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் (பழங்காலத்தில்) நடந்ததற்கு ஒப்பாகக் குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடக்கும் இந்தப் போர் மிக அற்புதமானது என மனிதர்கள் அனைவராலும் பேசப்படும். கிளர்ச்சியூட்டும் இந்தப் போரைக் குறித்த உனது விவரிப்பைக் கேட்பதால் நான் நிறைவடையவில்லை. எனவே, அர்தாயனிக்கும் (சல்லியனுக்கும்), சுபத்திரையின் மகனுக்கும் {அபிமன்யுவுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலை எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தனது ஓட்டுனர் {தேரோட்டி} கொல்லப்பட்டதைக் கண்ட சல்லியன், முழுவதும் இரும்பாலான கதாயுதம் ஒன்றை உயர்த்தியபடி, தன் சிறந்த தேரில் இருந்து சினத்துடன் கீழே குதித்தான். பீமன் கனமான தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, யுகநெருப்புக்கோ, தண்டாயுதத்துடன் கூடிய காலனுக்கோ ஒப்பாக இருந்த சல்லியனை நோக்கி வேகமாக விரைந்தான். சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} வானத்தின் இடிக்கு {வஜ்ராயுதத்துக்கு} ஒப்பான தன் மகத்தான கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, சல்லியனிடம், “வாரும், வாரும்!” என்று சொன்னான். எனினும், பீமன் மிகவும் முயன்று அவனை {அபிமன்யுவை} ஒதுங்கி நிற்கச் சொல்லித் தடுத்தான். வீர பீமசேனன், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} ஒதுங்கி நிற்குமாறு தடுத்த பிறகு, போரில் சல்லியனை அணுகி, மலையென அசையாது நின்றான்.

மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளனும் {சல்லியனும்}, பீமசேனனைக் கண்டு, யானையை நோக்கிச் செல்லும் புலியைப் போல அவனை {பீமனை} நோக்கிச் சென்றான். பிறகு, ஆயிரக்கணக்கான எக்காள ஒலிகளும், சங்கு முழக்கங்களும், சிங்க முழக்கங்களும், பேரிகையொலிகளும் அங்கே கேட்டன. ஒருவரையொருவர் நோக்கி விரையும் நூற்றுக்கணக்கான பாண்டவ மற்றும் கௌரவ வீரர்களுக்கு மத்தியில், “நன்று, நன்று” என்ற கூக்குரல்கள் எழுந்தன.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தவிரப் போரில் பீமசேனனின் வலிமையைத் தாங்கத் துணிந்தவன் வேறு எவனும் இல்லை; அவ்வாறே சிறப்புமிக்கச் சல்லியனின் கதாயுத வேகத்தைப் போரில் தாங்கவும், விருகோதரனைத் {பீமனைத்} தவிர இவ்வுலகில் வேறு எவன் துணிவான்? தங்கக் கம்பிகள் கலந்த இழைச்சரங்களால் கட்டப்பட்டதும், தன் அழகால் பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்வூட்டவல்லதுமான பீமனின் மகத்தான கதாயுதம், அவனால் {பீமனால்} ஏந்தப்பட்டுப் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவ்வாறே வட்டமாகச் சுழன்று கொண்டிருந்த சல்லியனின் கதாயுதமும், சுடர்மிகும் மின்னலின் கீற்றைப் போலவே தெரிந்தது.

காளைகளைப் போல முழங்கிய அவ்விருவரும் {பீமனும், சல்லியனும்}, வட்டமாகச் சுழன்று கொண்டிருந்தனர் {மண்டல கதிகளோடு சஞ்சரித்தனர்}. சற்றே சாய்ந்த தங்கள் கதாயுதங்களுடன் நின்று கொண்டிருந்த சல்லியன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் கொம்புகள் கொண்ட காளைகளைப் போலவே தெரிந்தனர். வட்டமாகச் சுழல்வதையோ, தங்கள் கதாயுதங்களால் தாக்குவதையோ பொறுத்தவரை மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கும் இடையில் நடைபெற்ற அந்த மோதல் அனைத்து வழியிலும் சமமானதாகவே இருந்தது.

பீமசேனன் தன் கதாயுதத்தைக் கொண்டு தாக்கியதால், சல்லியனின் மகத்தான கதாயுதம், கடும் நெருப்புப் பொறிகளை வெளியிட்டுக் கொண்டே விரைவில் துண்டுகளாக உடைந்தது. அதே போலவே, பீமசேனனின் கதாயுதமும், எதிரியால் {சல்லியனால்} தாக்கப்பட்டு, மழைக்காலத்தின் மாலைப்பொழுதில் மின்மினிப்பூச்சிகளால் மறைக்கப்பட்ட அழகிய மரம் போலத் தெரிந்தது.

அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} வீசப்பட்ட கதாயுதம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (சுற்றிப் பறக்கையில்) அடிக்கடி நெருப்புப் பொறிகளை வெளியிட்டபடியே ஆகாயத்தில் ஒளிவீசியது. அதே போலவே, எதிரியை நோக்கி பீமசேனன் வீசிய கதாயுதம், (ஆகாயத்தில் இருந்து) கீழே விழும் கடும் எரிக்கோளைப் போல அவனது {பீமனது} எதிரிப் படையை எரித்தது. கதாயுதங்களில் சிறந்தவையான அவை இரண்டும் ஒன்றையொன்று தாக்கியபடி, பெருமூச்சுவிடும் பெண்பாம்புகளுக்கு ஒப்பாக நெருப்பு கீற்றுகளைக் கக்கின.

வட்டமாகச் சுழன்று கொண்டிருந்த வலிமைமிக்க அவ்வீரர்கள் இருவரும், தங்கள் நகங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் பெரும் புலிகள் இரண்டைப் போலவோ, தங்கள் தந்தங்களால் தாக்கிக் கொள்ளும் வலிமைமிக்க யானைகள் இரண்டைப் போலவோ கதாயுதங்களில் முதன்மையான அவை இரண்டாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். விரைவில் இரத்தத்தால் மறைக்கப்பட்ட அந்தச் சிறப்புவாய்ந்த வீரர்கள் இருவரும் மலர்ந்திருக்கும் இரண்டு பலாச மரங்களுக்கு ஒப்பாகத் தெரிந்தனர்.

மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவராலும் தரிக்கப்பட்ட கதாயுதங்களின் அடிகள் {தாக்குதல்களின் ஒலி} இந்திரனின் இடியைப் போன்று அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்பட்டன. கதாயுதத்தைக் கொண்டு மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலும் தாக்கப்பட்ட பீமன், இடியால் பிளக்கப்படும் மலையைப் போலக் கிஞ்சிற்றும் அசையாது {நடுங்காது} நின்றான். அதேபோல, கதாயுதம் கொண்டு பீமனால் தாக்கப்பட்ட மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளனும் {சல்லியனும்} இடியால் தாக்கப்படும் மலையைப் போலப் பொறுமையாக நின்றான்.

பெரும் வேகம் கொண்ட அவ்விருவரும் உயர்த்தப்பட்ட தங்கள் கதாயுதங்களுடன் நெருக்கமான வட்டங்களில் சுழன்று ஒருவரின் மேல் ஒருவர் பாய்ந்தனர். விரைவாக ஒருவரையொருவர் அணுகி, எட்டு எட்டுகள் வைத்து, யானைகள் இரண்டைப் போல ஒருவரின் மேல் ஒருவர் பாய்ந்த அவர்கள் முழுமையாக இரும்பாலான அந்தத் தங்கள் கதாயுதங்களால் திடீரென ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அவ்வீரர்கள் இருவரும், அடுத்தவரின் வேகம் மற்றும் தங்கள் கதாயுதங்களின் தாக்குதல் பலம் ஆகியவற்றின் விளைவால் ஒரே சமயத்தில் இந்திரத்வஜங்கள் இரண்டைப் போலக் கீழே விழுந்தனர்.

பிறகு தன் உணர்வுகளை இழந்து, பெருமூச்சுவிட்டபடி களத்தில் கிடந்த சல்லியனை வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன் விரைவாக அணுகினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கதாயுதத்தால் பலமாகத் தாக்கப்பட்டு, பாம்பு போலப் புரண்டு கொண்டு, உணர்வுகளை இழந்து மயக்கத்தில் இருந்த அவனைக் {சல்லியனைக்} கண்ட வலிமைமிக்கத் தேர்வீரன் கிருதவர்மன், அந்த மத்ர ஆட்சியாளனை {சல்லியனைத்} தன் தேரில் ஏற்றி, களத்தை விட்டு அவனை {சல்லியனை} விரைவாகச் சுமந்து சென்றான். குடிகாரனைப் போலச் சுற்றிக் கொண்டிருந்த வலிய கரங்களைக் கொண்ட வீரப் பீமன், கண் இமைக்கும் நேரத்திற்குள், கையில் கதாயுதத்துடன் எழுந்து நின்றான்.

பிறகு, உமது மகன்கள், போரில் இருந்து விலகிய மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைக்} கண்டு தங்கள் யானைகள், காலாட்படைவீரர்கள், குதிரைப்படை மற்றும் தேர்களுடன் சேர்ந்து நடுங்கத் தொடங்கினர். வெற்றியை விரும்பும் பாண்டவர்களால் கலங்கடிக்கப்பட்ட உமது படையின் வீரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டு, காற்றால் விரட்டப்படும் மேகத் திரள்களைப் போல அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடினர்.

திருதராஷ்டிரர்களை வீழ்த்திய வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுடர்மிகும் நெருப்பைப் போல அந்தப் போரில் பிரகாசமாகத் தெரிந்தனர். மகிழ்ச்சியால் குதூகலித்த அவர்கள் சிங்க முழக்கங்கள் செய்தபடியே தங்கள் சங்குகளை முழக்கினர். மேலும், அவர்கள் தங்கள் மட்டுகங்கள், பேரிகைகள், மிருதங்கங்கள் {பெரிய முரசங்கள், பணவங்கள், ஆனகங்கள், துந்துபிகள், நிர்ஜரிகள்} ஆகியவற்றையும் இன்னும் பிற இசைக்கருவிகளையும் முழக்கினர்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்