Tuesday, August 23, 2016

மீண்டும் பீமனிடம் தோற்ற கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 130

Karna defeated again by Bhima! | Drona-Parva-Section-130 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 46)

பதிவின் சுருக்கம் : கர்ணனுக்கு அஞ்சி உறங்காமல் தவித்த யுதிஷ்டிரன்; அர்ஜுனனிடம் சென்ற பீமனை மீண்டும் தடுத்து, அவனுக்கு அறைகூவல் விடுத்த கர்ணன்; கர்ணனின் அலட்சியம்; மூர்க்கத்துடன் போரிட்ட பீமன்; கர்ணனின் வில்லை மீண்டும் அறுத்தது; கர்ணனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்று அவனையும் மார்பில் துளைத்தது; மற்றொரு தேரை அடைந்த கர்ணன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதான அந்தப் போரில் போராளிகள் அனைவரும் கவலையில் நிறைந்து, பெரிதும் பீடிக்கப்பட்டிருந்த போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த ராதையின் மகன் {கர்ணன்}, காட்டில் மதங்கொண்ட யானையை எதிர்த்துச் செல்லும் மற்றொரு யானையைப் போலப் பீமனை எதிர்த்துச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "பெரும்பலம் கொண்டவர்களான பீமன் மற்றும் கர்ணன் ஆகிய வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவருக்கிடையில் அர்ஜுனனின் தேருக்கு அருகில் நடந்த அந்தப் போர் எவ்வாறு நடந்தது? இதற்கு முன்பு ஒரு முறை கர்ணன் போரில் பீமசேனனால் வெல்லப்பட்டான். எனவே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனால் மீண்டும் பீமனை எதிர்த்து எவ்வாறு செல்ல முடிந்தது? பூமியின் தேர்வீரர்களில் மிகப் பெரியவனாக அறியப்படும் வலிமைமிக்கப் போர் வீரனான சூதனின் மகனை {கர்ணனை} எதிர்த்து பீமனாலும் எவ்வாறு செல்ல முடியும்? தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பீஷ்மரையும், துரோணரையும் வெற்றிகொண்ட நிலையில், வில்லாளியான கர்ணனிடம் கொண்ட அச்சத்தினளவிற்கு வேறு எவரிடமும் அச்சம்கொள்ளவில்லை. உண்மையில், அவன் {யுதிஷ்டிரன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனை நினைத்துக் கொண்டே, அச்சத்தால் தன் இரவுகளை உறக்கமில்லாமல் கழிக்கிறான். பிறகு, போரில் அந்தச் சூதனின் மகனிடம் {கர்ணனிடம்} பீமனால் எவ்வாறு மோத முடியும்? உண்மையில், ஓ! சஞ்சயா, போரில் பின்வாங்காதவனும், சக்தியுடன் கூடிய பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ள வீரனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்தக் கர்ணனோடு பீமனால் எவ்வாறு போரிட முடியும்?

உண்மையில், அர்ஜுனனின் தேரருகே நடந்த அம்மோதலில் சூதனின் மகன் {கர்ணன்} மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய அவ்விரு வீரர்களும், எவ்வாறு ஒருவரோடொருவர் போரிட்டனர்? மேலும், (பாண்டவர்களுடனான) தன் சகோதரநிலை குறித்து முன்பே தெரிவிக்கப்பட்ட அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} கருணையுள்ளவனுமாவான். குந்தியிடம் தான் சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்ந்தால் [1], அவனால் {கர்ணனால்} எவ்வாறு பீமனுடன் போரிட முடியும்? பீமனைப் பொறுத்தவரையும் கூட, முன்பு சூதனின் மகனால் {கர்ணனால்} தன் மீது திணிக்கப்பட்ட தீங்குகள் அனைத்தையும் நினைவுகூர்ந்த அந்த வீரன் {பீமன்}, போரில் கர்ணனுடன் எவ்வாறு போரிட்டான்? ஓ! சூதா {சஞ்சயா}, என் மகன் துரியோதனன், கர்ணன் பாண்டவர்கள் அனைவரையும் போரில் வென்று விடுவான் என நம்புகிறான். இழிந்தவனான என் மகன் போரில் எவனிடம் வெற்றி இருக்கிறது என நம்புகிறானோ அவன் {கர்ணன்}, பயங்கரச் செயல்களைச் செய்யும் பீமசேனனுடன் எவ்வாறு போரிட்டான்? என் மகன்கள் எவனை நம்பி அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் (பாண்டுவின் மகன்களுடன் {பாண்டவர்களுடன்}) பகைமை கொண்டனரோ, அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} பீமன் எவ்வாறு போரிட்டான்? உண்மையில் அவனால் {கர்ணனால்} செய்யப்பட்ட பல்வேறு தீங்குகள் மற்றும் காயங்களை நினைவுகூர்ந்த பீமன் அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} எவ்வாறு போரிட்டான்? உண்மையில், முன்னர் ஒரே தேரில் தனியாகச் சென்று மொத்த உலகை அடக்கியவனும், பெரும் வீரம் கொண்டவனுமான அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} பீமனால் எவ்வாறு போரிட முடிந்தது? (இயற்கையான) இரு காதுகுண்டலங்களுடன் பிறந்தவனான அந்தச் சூதனின் மகனுடன் பீமன் எவ்வாறு போரிட்டான்? ஓ! சஞ்சயா, விவரிப்பதில் நீ திறனுள்ளவனாக இருக்கிறாய். எனவே, அவ்விருவருக்கும் இடையில் நடைபெற்ற போரையும், அவர்களில் வெற்றி அடைந்தவர் யார் என்பதையும் எனக்கு விரிவாகச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீமசேனன், ராதையின் மகனை {கர்ணனை} விட்டுவிட்டு, கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களும் எங்குள்ளனரோ அங்கே செல்ல விரும்பினான். எனினும், ராதையின் மகன் {கர்ணன்}, அவனை {பீமனை} நோக்கி விரைந்து சென்ற போதே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல அடர்த்தியான கணைமாரியால் அவனை {பீமனை} மறைத்தான்.

முழுதும் மலர்ந்த முளரியை {தாமரையைப்} போல அழகிய முகமுடையவனும், முறுவலால் மிளிர்ந்தவனுமான {சிரிப்பால் பிரகாசித்தவனுமான} வலிமைமிக்க அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, பீமசேனன் சென்றபோது பின்னவனை {பீமனை} அறைகூவி அழைத்தான். கர்ணன், "ஓ! பீமா, போரிடுவது எவ்வாறு என்பதை நீ அறிவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லை. பிறகு, அர்ஜுனனைச் சந்திக்கும் விருப்பத்தால் ஏன் எனக்கு நீ முதுகைக் காட்டுகிறாய்? ஓ! பாண்டவர்களை மகிழ்விப்பவனே, குந்தியின் மகன் ஒருவனுக்கு இது சற்றும் பொருந்தாது. எனவே, நீ எங்கிருக்கிறாயோ அங்கேயே நின்று உன் கணைகளால் என்னை மறைப்பாயாக" என்றான் {கர்ணன்}.

கர்ணனின் அந்த அறைகூவலைக் கேட்ட பீமசேனன் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தன் தேரை சற்றே நகர்த்தி, அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} {மீண்டும்} போரிடத் தொடங்கினான். சிறப்புமிக்கப் பீமசேனன் நேரான கணைமேகங்களைப் பொழிந்தான். கர்ணனைக் கொல்வதால் அந்தப் பகைமைகளுக்கு முடிவைக் கொண்டு வர விரும்பிய பீமன், கவசம் பூண்டவனும், அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனும், தனக்கு எதிரில் நின்று தனிப்போரில் ஈடுபடுபவனுமான அந்த வீரனை {கர்ணனை} பலவீனமடையச் செய்யத் தொடங்கினான். எண்ணற்ற கௌரவர்களைக் கொன்ற பிறகு, ஓ! ஐயா, எதிரிகளை எரிப்பவனும், பாண்டுவின் கோபக்கார மகனும், வலிமைமிக்கவனுமான பீமன், கர்ணனின் மீது பல்வேறு கடும் கணைமாரிகளைப் பொழிந்தான். பெரும்பலம் கொண்ட அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, மதயானையின் நடையைக் கொண்ட அந்ந வீரனால் {பீமனால்} தொடுக்கப்பட்ட கணைமாரிகள் அனைத்தையும் தன் ஆயுதங்களின் சக்தியால் விழுங்கினான்.

அறிவின் உதவியைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தக் கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (படை அறிவியலின்) ஆசானைப் போல அந்தப் போரில் திரியத் தொடங்கினான். ராதையின் கோபக்கார மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே இருந்தது, பெரும் சீற்றத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த பீமசேனனுக்குத் தன்னைக் கேலி செய்வதைப் போலத் தெரிந்தது. தங்களுக்கிடையிலான அந்தப் போரை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பார்த்துக் கொண்டிருந்த துணிச்சல்மிக்க வீரர்கள் பலருக்கு மத்தியில் குந்தியின் மகனால் {பீமனால்} கர்ணனின் சிரிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பெரும் யானையை அங்குசத்தால் தாக்கும் பாகனைப் போலச் சினத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்கப் பீமன், அடையும் தொலைவுக்குள் தன்னால் கொண்டுவரப்பட்ட கர்ணனின் நடுமார்பை வத்சதந்தங்கள் {கன்றின் பற்களைப் போன்ற தலை கொண்ட கணைகள்} பலவற்றால் துளைத்தான்.

மீண்டும் பீமசேனன், தங்கமயமானவையும், அழகிய சிறகுகளுடையவையும், கூர்முனை கொண்டவையும், நன்கு ஏவப்பட்டவையுமான எழுபத்துமூன்று [?] கணைகளால் சூத மகனின் வண்ணமயமான கவசத்தைத் துளைத்தான். {பிறகு அந்த வீரக் கர்ணன், தங்க விரிப்புகளுடன் கூடியவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான பீமனின் குதிரைகள்} ஒவ்வொன்றையும் ஐந்து கணைகளால் {துளைத்தான்} [2]. விரைவில் கண்ணிமைப்பதற்குள் கர்ணனால் உண்டாக்கப்பட்ட கணைகளின் வலை பீமனின் தேரில் காணப்பட்டது. உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளானவை, கொடிமரம், தேரோட்டி மற்றும் அந்தப் பாண்டவனுடன் {பீமனுடன்} கூடிய அந்தத் தேரை முழுமையாக மறைத்தது. பிறகு கர்ணன், பீமனின் ஊடுருவமுடியாத கவசத்தை அறுபத்துநான்கு கணைகளால் துளைத்தான். சினத்தால் தூண்டப்பட்ட அவன் {கர்ணன்}, உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல நேரான கணைகள் பலவற்றால் பார்த்தனையே {பீமனையே} துளைத்தான்.

[2] இங்கே கங்குலியில் each with five shafts என்று வாக்கியம் முழுமை பெறாமலேயே இருக்கிறது. [?] கணைகளின் எண்ணிக்கையும் தவறாக இருப்பதாகவே தெரிகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "பீமசேனன், சிறகுகளுடன் கூடியவையும், முறையாக ஏவப்பட்டவையுமான இருபத்தோரு கூரிய கணைகளால் சூதன் மகனுடைய வண்ணமயமான கவசத்தைத் துளைத்தான். பிறகு அந்த வீரக் கர்ணன், தங்க விரிப்புகளுடன் கூடியவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான பீமனின் குதிரைகள் ஒவ்வொன்றையும் ஐந்து {ஐந்து ஐந்து} கணைகளால் துளைத்தான்" என்றிருக்கிறது. வேறொரு பதிப்பிலும் மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட விருகோதரன் {பீமன்}, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளை அலட்சியம் செய்தபடியே அச்சமில்லாமல் அந்தச் சூதனின் மகனை {கர்ணனை} தாக்கினான். கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான கணைகளால் துளைக்கப்பட்ட பீமன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் எந்த வலியையும் உணரவில்லை. பிறகு அந்த வீரப் பீமன், அம்மோதலில் கடும் சக்தி கொண்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான முப்பத்திரண்டு பல்லங்களால் கர்ணனைத் துளைத்தான். எனினும், கர்ணன், ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பியவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனனைத் தன் கணைகளால் பதிலுக்குப் பெரும் அலட்சியத்துடனேயே மறைத்தான். உண்மையில் அம்மோதலில், ராதையின் மகன் {கர்ணன்}, பீமனுடன் மென்மையாகவே போரிட்டான், அதே வேளையில் பீமனோ, அவனது {கர்ணனின்} முந்தைய தீங்குகளை நினைவுகூர்ந்து அவனுடன் மூர்க்கமாகப் போரிட்டான்.

கோபக்கார பீமனால் கர்ணனின் அலட்சியத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உண்மையில் அந்த எதிரிகளைக் கொல்பவன் {பீமன்}, ராதையின் மகன் மீது கணை மாரிகளை விரைவாக ஏவினான். அம்மோதலில் பீமசேனனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள், கொஞ்சும் பறவைகளைப் போலக் கர்ணனின் அங்கங்கள் யாவிலும் பாய்ந்தன. பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கூர்முனை மற்றும் தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அக்கணைகள், சுடர்மிக்க நெருப்பை மறைக்கும் பூச்சிகளின் கூட்டத்தைப் போல ராதையின் மகனை {கர்ணனை} மறைத்தன. எனினும் கர்ணன், ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பதிலுக்குக் கடுங்கணைகளின் மாரியைப் பொழிந்தான். அப்போது விருகோதரன் {பீமன்}, அந்தப் போர்க்கள ரத்தினத்தால் {கர்ணனால்} ஏவப்பட்டவையும், வஜ்ரத்திற்கு ஒப்பானவையுமான அந்தக் கணைகள் தன்னை அடைவதற்கு முன்பே பல்லங்கள் பலவற்றால் அவற்றை வெட்டினான். எதிரிகளைத் தண்டிப்பவனும், விகர்த்தனன் {சூரியன்} மகனுமான கர்ணன், ஓ! பாரதரே, மீண்டும் பீமசேனனைத் தன் கணைமாரியால் மறைத்தான்.

அப்போது ஓ! பாரதரே, அம்மோதலில் கணைகளால் துளைக்கப்பட்ட பீமனை, தன் உடலில் நிமிர்ந்து நிற்கும் முட்களுடன் கூடிய முள்ளம்பன்றிக்கு ஒப்பாக நாங்கள் கண்டோம். தன் கதிர்களைப் பிடித்திருக்கும் சூரியனைப் போலவே அந்தப் போரில் வீரப் பீமன், கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அக்கணைகளைப் பிடித்திருந்தான். குருதியில் குளித்த அனைத்து அங்கங்களுடன் கூடிய பீமசேனன், வசந்தகாலத்தில் மலர்களின் சுமையால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அசோக மரத்தைப் போலப் பிரகாசத்துடன் தெரிந்தான். அந்தப் போரில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணனின் அந்த நடத்தையை வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

கோபத்தில் சுழன்ற கண்களுடன் கூடிய அவன் {பீமன்} இருபத்தைந்து நாராசங்களால் கர்ணனைத் துளைத்தான். அதன்பேரில் கர்ணன், (தன் பக்கங்களில் தொங்கும்) கடும் நஞ்சுமிக்கப் பாம்புகள் பலவற்றுடன் கூடிய ஒரு வெண்மலையைப் போலத் தெரிந்தான். தெய்வீக ஆற்றலைக் கொண்ட பீமசேனன், அப்போரில் தன் உயிரையும் விடத் தயாராக இருந்த சூதனின் மகனை {கர்ணனை} ஆறு கணைகளாலும், பிறகு எட்டு கணைகளாலும் துளைத்தான். பிறகு வீரப் பீமசேனன் சிரித்துக் கொண்டே மற்றொரு கணையால் கர்ணனின் வில்லை மீண்டும் விரைவாக அறுத்தான். மேலும் அவன் {பீமன்} தன் கணைகளால் கர்ணனின் நான்கு குதிரைகளையும், பிறகு அவனது தேரோட்டியையும் கொன்று, அதன் பிறகு, சூரியப்பிரகாசம் கொண்ட எண்ணற்ற நாராசங்களால் கர்ணனின் மார்பையும் துளைத்தான். சிறகுகள் படைத்த அக்கணைகள் கர்ணனின் உடலினூடாக ஊடுருவி, மேகங்களின் ஊடாகத் துளைத்துச் செல்லும் சூரியனின் கதிர்களைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. தன் ஆண்மையில் செருக்குக் கொண்டிருந்தாலும், கணைகளால் பீடிக்கப்பட்டு, தன் வில்லும் அறுபட்ட கர்ணன் பெரும் வலியை உணர்ந்து மற்றொரு தேருக்குச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்