Monday, October 10, 2016

கோபம்நிறைந்த அஸ்வத்தாமன்! - துரோண பர்வம் பகுதி – 158அ

The wrathful Aswatthama! | Drona-Parva-Section-158a | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 06)

பதிவின் சுருக்கம் : சினம் கொண்ட அஸ்வத்தாமன் கத்தியை ஓங்கி கர்ணனை நிந்திப்பது; அஸ்வத்தாமனைத் தணிவடையச் செய்த துரியோதனன்; கர்ணனைச் சீற்றத்துடன் தாக்கிய பாண்டவர்கள்; தன் எதிரிகளுக்குப் பேரழிவை ஏற்படுத்திய கர்ணன்; கர்ணனுடன் மோத விரைந்து வந்த அர்ஜுனன்; கர்ணனைக் காக்க கௌரவர்களை ஏவிய துரியோதனன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் மாமன் {கிருபர்}, கடுமையான மற்றும் அவமதிக்கும் வகையிலான வார்த்தைளில் சூதனின் மகனால் {கர்ணனால்} இப்படிச் சொல்லப்படுவதைக் கண்ட அஸ்வத்தாமன், தன் கத்தியை உயர்த்திக் கொண்டு, பின்னவனை {கர்ணனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(1) சீற்றத்தால் நிறைந்திருந்த அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, குரு மன்னன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மதங்கொண்ட யானையை நோக்கிச் செல்லும் சிங்கம் ஒன்றைப் போலக் கர்ணனை நோக்கி விரைந்தான்.(2)

அஸ்வத்தாமன் {கர்ணனிடம்}, “ஓ! மனிதர்களில் இழிந்தவனே {கர்ணா}, அர்ஜுனனிடம் உண்மையில் உள்ள குணங்களையே கிருபர் சொல்லிக் கொண்டிருந்தார். எனினும், தீய புரிதல் கொண்டவனான நீ, துணிவுமிக்க என் மாமனை {கிருபரை} வன்மத்துடன் {கெட்ட நோக்கத்துடன்} நிந்திக்கிறாய்.(3) செருக்கும், துடுக்கும் கொண்ட நீ, உலகத்தின் வில்லாளிகள் எவரையும் போரில் கருதிப்பாராமல் {மதிக்காமல்} உன் ஆற்றலை இன்று தற்புகழ்ச்சி செய்கிறாய்.(4) போரில் உன்னை வென்ற அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, நீ பார்த்துக் கொண்டிருந்த போதே ஜெயத்ரதனைக் கொன்றபோது, உன் ஆற்றல் எங்கே சென்றது? உன் ஆயுதங்கள் எங்கே சென்றன?(5) ஓ! சூதர்களில் இழிந்தவனே, முன்னர்ப் போரில் மகாதேவனையே எதிர்த்தவனை {அர்ஜுனனை} வெல்லப்போவதாக உன் மனதில் வீணான நம்பிக்கை கொள்கிறாய்.(6) தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்டு வந்த போதும், கிருஷ்ணனை மட்டுமே தன் கூட்டாளியாகக் கொண்டவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனனை வெல்ல முடியவில்லை.(7) ஓ! சூதா {கர்ணா}, இந்த மன்னர்களுடன் கூடிய நீ, உலக வீரர்களில் முதன்மையானவனும், வெல்லப்படாதவனுமான அர்ஜுனனை போரில் வெல்வாய் என எவ்வாறு நம்பிக்கை கொள்கிறாய்?(8) ஓ! தீய ஆன்மா கொண்ட கர்ணா, இன்று (நான் உன்னை என்ன செய்யப் போகிறேன் என்பதைப்) பார். ஓ! மனிதர்களில் இழிந்தவனே, ஓ! இழிந்த அறிவு கொண்டவனே, நான் இப்போது உன் உடலிலிருந்து உன் தலையை வெட்டப் போகிறேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(9)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிச் சொன்ன அஸ்வத்தாமன் கர்ணனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். அப்போது, பெரும் சக்தி கொண்ட மன்னனும் {துரியோதனனும்}, மனிதர்களில் முதன்மையானவரான கிருபரும் அவனை {அஸ்வத்தாமனைப்} பிடித்துக் கொண்டனர்.(10)

அப்போது கர்ணன் {துரியோதனனிடம்}, “தீய புரிதல் கொண்டவனான இந்த இழிந்த பிராமணன் {அஸ்வத்தாமன்}, தன்னைத் துணிச்சல்மிக்கவனாக நினைத்துக் கொண்டு, போரில் தன் ஆற்றல் குறித்துத் தற்புகழ்ச்சி செய்கிறான். ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, அவனை {அஸ்வத்தாமனை} விடு. அவன் என் வலிமையைச் சந்திக்கட்டும்” என்றான்.(11)

அஸ்வத்தாமன் {கர்ணனிடம்}, “ஓ! சூதன் மகனே {கர்ணா}, ஓ! தீய புரிதல் கொண்டவனே, (உன் குற்றமான) இஃது எங்களால் மன்னிக்கப்படுகிறது. எனினும், உன்னில் எழுந்திருக்கும் இந்தச் செருக்கைப் பல்குனன் {அர்ஜுனன்} தணிப்பான்” என்றான்.(12)

துரியோதனன் {அஸ்வத்தாமனிடம்} , “ஓ! அஸ்வத்தாமரே, உமது கோபத்தைத் தணிப்பீராக. ஓ! கௌரவங்களை அளிப்பவரே, மன்னிப்பதே உமக்குத் தகும். ஓ! பாவமற்றவரே, சூதன் மகனிடம் {கர்ணனிடம்} நீர் கோபங்கொள்ளக் கூடாது.(13) உம் மீதும், கர்ணன், கிருபர், துரோணர், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியர்}, சுபலனின் மகன் {சகனி} ஆகியோர் மீதும் பெரும் சுமை இருக்கிறது. ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {அஸ்வத்தாமரே}, உமது கோபத்தை விடுவீராக.(14) அதோ, ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} போரிட விரும்பி பாண்டவத் துருப்புகள் அனைத்தும் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில், ஓ! பிராமணரே, அதோ நம் அனைவரையும் அறைகூவி அழைத்துக் கொண்டே அவர்கள் வருகின்றனர்” என்றான் {துரியோதனன்}.(15)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கடுஞ்சினம் கொண்டிருந்தவனும், இப்படி மன்னனால் தணிக்கப்பட்டவனுமான அந்த உயர் ஆன்ம துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் கோபத்தை அடக்கிக் கொண்டு (கர்ணனை) மன்னித்தான்.(16) அமைதியான மனநிலையையும், உன்னத இதயத்தையும் கொண்ட கிருபர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மென்தன்மை கொண்டவராததால், மீண்டும் அவனிடம் {கர்ணனிடம்} வந்து இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(17) கிருபர், “ஓ! தீய இதயம் கொண்ட சூதன் மகனே {கர்ணா}, (உன் குற்றமான) இஃது எங்களால் மன்னிக்கப்படுகிறது. எனினும், உன்னில் எழுந்திருக்கும் இந்தச் செருக்கைப் பல்குனன் {அர்ஜுனன்} தணிப்பான்” என்றார்.(18)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது பாண்டவர்களும், ஆற்றலுக்காகக் கொண்டாடப்படுபவர்களான பாஞ்சாலர்களும் ஒன்று சேர்ந்து உரக்கக் கூச்சலிட்டபடியே ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருந்தனர்.(19) தேர்வீரர்களில் முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனும், தேவர்களுக்கு மத்தியில் உள்ள சக்ரனைப் போல முதன்மையான குருவீரர்கள் பலரால் சூழப்பட்டவனுமான கர்ணனும், தன் கரங்களின் வலிமையை நம்பி வில்லை வளைத்துக் கொண்டு காத்திருந்தான். உரத்த சிங்க முழக்கங்களால் வகைப்படுத்தப்படுவதும், மிகப் பயங்கரமானதுமான ஒரு போர் கர்ணனுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் அப்போது தொடங்கியது.(20,21)

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், தங்கள் ஆற்றலுக்காகக் கொண்டாடப்படுபவர்களான பாஞ்சாலர்களும்,(22) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணனைக் கண்டு, “அதோ கர்ணன் இருக்கிறான்”, “இந்தக் கடும் போரில் கர்ணன் எங்குப் போனான்”,(23) “ஓ! தீய புரிதல் கொண்டவனே, ஓ! மனிதர்களில் இழிந்தவனே, எங்களுடன் போரிடுவாயாக” என்று உரத்தக் கூச்சலிட்டனர். ராதையின் மகனை {கர்ணனைக்} கண்ட பிறர், கோபத்தால் தங்கள் கண்களை அகல விரித்துக் கொண்டு,(24) “சிறு மதியும், திமிரும் கொண்ட இழிந்தவனான இந்தச் சூதன் மகன் {கர்ணன்}, கூடியிருக்கும் மன்னர்களால் கொல்லப்பட வேண்டும். இவன் வாழ வேண்டிய அவசியம் இல்லை.(25) பாவம் நிறைந்த இந்த மனிதன், பார்த்தர்களுடன் எப்போதும் மிகுந்த பகையுடன் இருக்கிறான். துரியோதனனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியும் இவனே இந்தத் தீமைகள் அனைத்திற்கும் வேராக இருப்பவன்.(26) இவனைக் கொல்வீராக” என்றனர்.

இத்தகு வார்த்தைகளைச் சொன்ன பெரும் க்ஷத்திரியத் தேர்வீரர்கள், பாண்டுவின் மகனால் தூண்டப்பட்டு, அவனைக் {கர்ணனைக்} கொல்வதற்காக அவனை நோக்கி விரைந்து, அடர்த்தியான கணைமாரியால் அவனை மறைத்தனர். வலிமைமிக்கப் பாண்டவர்கள் அனைவரும் வருவதைக் கண்ட சூதன் மகன் {கர்ணன்} அப்போது நடுங்காதவனாகவும், அச்சங்கொள்ளாதவனுமாக இருந்தான்.(27,28) உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, யமனுக்கு ஒப்பான துருப்புகளின் அற்புதக் கடலைக் கண்டவனும், வலிமைமிக்கவனும், வேகமான கரங்களைக் கொண்டவனும், போரில் வெல்லப்படாதவனும், உமது மகன்களுக்கு நன்மை செய்பவனுமான அந்தக் கர்ணன், கணைகளின் மேகங்களால் அந்தப் படையை அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கத் தொடங்கினான். பாண்டவர்களும், கணைமாரியை ஏவியபடி அந்த எதிரியுடன் போரிட்டனர்.(29-31) நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் தங்கள் விற்களை அசைத்து வந்த அவர்கள், பழங்காலத்தில் சக்ரனுடன் போரிட்ட தைத்தியர்களைப் போலவே அந்த ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} போரிட்டனர்.(32) எனினும், வலிமைமிக்கக் கர்ணன், அனைத்துப் பக்கங்களிலும் பூமியின் தலைவர்களால் பொழியப்பட்ட கணைகளை, அடர்த்தியான தன் கணைமாரியால் விலக்கினான்.(33) ஒவ்வொருவரின் அருஞ்செயல்களுக்கும் எதிர்வினையாற்றிய அந்த இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற பெரும்போரில் சக்ரனுக்கும் தானவர்களுக்கும் இடையிலான மோதலுக்கு ஒப்பாக இருந்தது.(34)

தன் எதிரிகள் அனைவரும் உறுதியுடன் போரிட்டாலும், போரில் அவனைத் {கர்ணனைத்} தாக்க முடியாத அளவுக்குப் போரிட்ட சூதனின் மகனிடம் அப்போது நாங்கள் கண்ட கரநளினம் மிக அற்புதமானதாக இருந்தது.(35) (பகை) மன்னர்களால் ஏவப்பட்ட கணைகளின் மேகங்களைத் தடுத்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, (தன் எதிரிகளின்) நுகத்தடிகள், ஏர்க்கால்கள், குடைகள், கொடிமரங்கள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றின் மீது தன் பெயர் பொறிக்கப்பட்ட பயங்கரக் கணைகளை ஏவினான். பிறகு கர்ணனால் பீடிக்கப்பட்ட அந்த மன்னர்கள் தங்கள் பொறுமையை இழந்து,(36,37) குளிரால் பீடிக்கப்பட்ட பசு மந்தையைப் போலக் களத்தில் திரியத் தொடங்கினர். பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், யானைகள் ஆகியவையும், தேர்வீரர்களும் கர்ணனால் தாக்கப்பட்டு உயிரையிழந்து கீழே விழுவது அங்கே காணப்பட்டது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புறமுதுகிடாத வீரர்களுடைய தலைகள் மற்றும் கரங்களால் அந்த மொத்தக் களமும் விரவி கிடந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இறந்தோர், இறந்து கொண்டிருந்தோர், ஓலமிடும் போர்வீரர்கள் ஆகியோருடன் கூடிய அந்தப் போர்க்களம், யமனின் ஆட்சிப் பகுதிக்குரிய  தன்மையை ஏற்றது.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனின் ஆற்றலைக் கண்ட துரியோதனன்,(39-41) அஸ்வத்தாமனிடம் சென்று அவனிடம், “கவசம் பூண்ட கர்ணன், (பகை) மன்னர்கள் அனைவருடனும் போரில் ஈடுபடுவதைப் பாரும்.(42) கர்ணனின் கணைகளால் பீடிக்கப்படும் பகைவரின் படை, கார்த்திகேயனின் {முருகனின்} சக்தியால் மூழ்கடிக்கப்பட்ட அசுரர்களின் படையைப் போலவே முறியடிக்கப்படுவதைப் பாரும்.(43) நுண்ணறிவு கொண்ட கர்ணனால் போரில் தன் படை வெல்லப்படுவதைக் கண்ட பீபத்சு {அர்ஜுனன்}, சூதன் மகனை {கர்ணனைக்} கொல்லும் விருப்பத்துடன் அதோ வருகிறான்.(44) எனவே, நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான இந்தச் சூதன் மகனை {கர்ணனைக்} கொல்வதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றான் {துரியோதனன்}.(45)

(இப்படிச் சொல்லப்பட்டவர்களான) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சல்லியன், பெரும் தேர்வீரனான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} ஆகியோர் அனைவரும், தைத்திய படையை நோக்கிச் சக்ரன் {இந்திரன்} வருவதைப் போலவே (தங்களை நோக்கி) வரும் குந்தியின் மகனை {அர்ஜுனனைக்} கண்டு, சூதனின் மகனைக் {கர்ணனைக்} காப்பதற்காகப் பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றனர். அதே வேளையில், பாஞ்சாலர்களால் சூழப்பட்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விருத்திராசுரனை எதிர்த்துச் சென்ற புரந்தரனை {இந்திரனைப்} போலவே கர்ணனை எதிர்த்துச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(46,47)
------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 158அ-வில் வரும் மொத்த சுலோகங்கள்-47

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்