Thursday, October 13, 2016

ஓடுபவர்களை அணிதிரட்ட முடியாத துரியோதனன்! - துரோண பர்வம் பகுதி – 160

Duryodhana unable to rally those who fly away! | Drona-Parva-Section-160 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 08)

பதிவின் சுருக்கம் : அஸ்வத்தாமனுடன் மோதிய பாண்டவத் தலைவர்கள்; அஸ்வத்தாமனைக் காக்க துரியோதனனும், துரோணரும் விரைவது; இரு படைகளுக்கும் இடையில் நடைபெற்ற கடும்போர்; பின்வாங்கி ஓடிய தங்கள் துருப்புகளை ஒன்றுதிரட்டிய பீமனும் அர்ஜுனனும்; அர்ஜுனனுக்கு எதிரில் தப்பி ஓடிய கௌரவர்கள்; தங்கள் துருப்புகளைத் தடுக்க முடியாத துரியோதனனும் துரோணரும்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் யுதிஷ்டிரனும், பாண்டுவின் மகனான பீமசேனனும் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்தனர்.(1) இதைக் கண்ட மன்னன் துரியோதனன், பரத்வாஜர் மகனின் {துரோணரின்} துணையுடன் அம்மோதலில் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான். அப்போது, கடுமையானதும், பயங்கரமானதும், மருண்டோரின் அச்சங்களை அதிகப்படுத்துவதுமான போரொன்று தொடங்கியது.(2) கோபத்துடன் கூடிய யுதிஷ்டிரன், பெரும் எண்ணிக்கையிலான அம்பஷ்டர்கள், மாலவர்கள், வங்கர்கள், சிபிக்கள் மற்றும் திரிகர்த்தர்களை இறந்தோரின் ஆட்சிப்பகுதிகளுக்கு அனுப்பத் தொடங்கினான். பீமனும், அபிஷாஹர்கள், சூரசேனர்கள், போரில் வீழ்த்தக் கடினமான மற்றும் பிற க்ஷத்திரியர்களைச் சிதைத்து, பூமியை இரத்தச் சகதியாக்கினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும் ஆனவன் (அர்ஜுனன்), யௌதேயர்கள், மலையகத்தார், மத்ரகர்கள் மற்றும் மாலவர்களையும் இறந்தோரின் உலகங்களுக்கு அனுப்பினான்.


வேகமாகச் செல்லக்கூடிய கணைகளால் பலமாகத் தாக்கப்பட்ட யானைகள், இரு சிகரங்களைக் கொண்ட மலைகளைப் போலப் பூமியில் கீழே விழத் தொடங்கின.(3-6) நடுக்கத்துடன் நகர்ந்து கொண்டேயிருந்த வெட்டப்பட்ட யானைகளின் துதிக்கைகளால் விரவிக்கிடந்த பூமியானது, நெளியும் பாம்புகளால் மறைக்கப்பட்டதைப் போல அழகாகத் தெரிந்தது.(7) தங்கத்தில் அலங்கரிக்கப்பட்டவையும், விழுந்து கிடந்தவையுமான மன்னர்களின் குடைகளால் மறைக்கப்பட்ட பூமியானது, சூரியன்கள், சந்திரன்கள், நட்சத்திரங்களால் மின்னிக்கொண்டிருக்கும் ஆகாயத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(8)

அதே நேரத்தில், துரோணரின் தேரருகே கடும் ஆரவாரம் எழுந்து, “கொல்வீராக”, “அச்சமற்றுத் தாக்குவீராக”, “துளைப்பீராக”, “துண்டுகளாக வெட்டுவீராக” என்ற இந்த வார்த்தைகள் கேட்கப்பட்டன. எனினும் சினத்தால் நிறைந்த துரோணர், வலிமைமிக்கச் சூறாவளியானது, திரண்டு வரும் மேகத்திரள்களை அழிப்பதைப் போலத் தம்மை நோக்கி வந்த எதிரிகளை, வாயவ்ய ஆயுதத்தின் மூலம் அழிக்கத் தொடங்கினார். இப்படித் துரோணரால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், பீமசேனனும், உயர் ஆன்ம பார்த்தனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அச்சத்தால் தப்பி ஓடினர்.(9-11)

அப்போது, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும் (அர்ஜுனனும்), பீமசேனனும், ஓடிக் கொண்டிருக்கும் தங்கள் துருப்புகளைத் தடுத்து, பெரும் தேர்ப்படையின் துணையுடன் துரோணரின் பரந்தப் படையைத் தாக்கினர்.(12) பீபத்சு {அர்ஜுனன்} வலதையும், விருகோதரன் {பீமன்} இடதையும் எனத் தாக்கிய அவர்கள் இருவரும் [1], பரத்வாஜரின் மகன் {துரோணர்} மீது இரு கணைமாரிகளைப் பொழிந்தனர்.(13) சிருஞ்சயர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோரில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மத்ஸ்யர்களுடனும், சோமகர்களுடனும் கூடி, (துரோணருடனான மோதலில்) ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த இரு சகோதரர்களையும் பின்தொடர்ந்து சென்றனர். அதே போல, உமது மகனை {துரியோதனனைச்} சேர்ந்தவர்களும், தாக்குவதில் திறம்பெற்றவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானோருமான பலர், பெரும் படையின் துணையுடன், (துரோணரை ஆதரிப்பதற்காக) துரோணரின் தேரை நோக்கிச் சென்றனர்.(14,15)

[1] வேறொரு பதிப்பில், “அவர்கள் பாரத்வாஜர் மீது தென்பக்கத்திலும் வடபக்கத்திலும் இரண்டு பெரிய அம்பு வெள்ளத்தால் வர்ஷித்தார்கள்” என்றிருக்கிறது.

அப்போது, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) கொல்லப்பட்ட அந்தப் பாரதப் படையானது, உறக்கத்தால் வெல்லப்பட்டும், அந்த இருளால் பீடிக்கப்பட்டும் பிளக்கத் தொடங்கியது.(16) உமது மகன் {துரியோதனன்} மற்றும் துரோணர் ஆகிய இருவரும் அவர்களை அணிதிரட்ட பெருமுயற்சி செய்தனர்.(17) எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தத் துருப்புகள் ஓடுவதைத் தடுக்க முடியவில்லை. உண்மையில், அந்தப் பரந்த படையானது, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} கணைகளால் கொல்லப்பட்டு, உலகமே இருளில் மூழ்கியிருந்த அந்த நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடத் தொடங்கியது.(18) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விலங்குகளையும், தாங்கள் ஏறிச் சென்ற வாகனங்களையும் கைவிட்ட மன்னர்கள் பலர், அச்சத்தால் வெல்லப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.19
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 160-ல் வரும் மொத்த சுலோகங்கள்-19


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்