Tuesday, October 18, 2016

துரியோதனனின் ஆணை! - துரோண பர்வம் பகுதி – 163

The command of Duryodhana! | Drona-Parva-Section-163 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 11)

பதிவின் சுருக்கம் : கௌரவப் படையை அழிக்கத் தொடங்கிய அர்ஜுனன்; திருதராஷ்டிரன் விசாரணை; துரோணரைப் பாதுகாக்கத் தன் தம்பிகளைப் பணித்துத் தன் வீரர்களுக்கு ஆணையிட்ட துரியோதனன்; பயங்கரப் போர் தொடங்கியது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இருளிலும், புழுதியிலும் மறைக்கப்பட்டிருந்த அந்தப் போர்க்களம் இப்படி ஒளியூட்டப்பட்ட போது, ஒருவரையொருவர் உயிரை எடுக்க விரும்பிய வீரமான போர்வீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர்.(1) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் மோதிக் கொண்டவர்களும், வேல்கள், வாள்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கொண்டவர்களுமான அந்தப் போராளிகள், சினத்தின் ஆளுகையால் ஒருவரையொருவர் {முறைத்துப்} பார்த்துக் கொண்டனர்.(2) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எங்கும் சுடர்விட்டுக் கொண்டிருந்த அந்த ஆயிரக்கணக்கான விளக்குகளுடனும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கக் கொடிமரங்களில் நிறுவப்பட்டவையும், நறுமணமிக்க எண்ணெய் ஊற்றப்பட்டவையுமான தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரின் கண்கவரும் விளக்குகளுடனும் கூடிய அந்தப் போர்க்களமானது, நட்சத்திரங்களால் மினுமினுக்கும் ஆகாயத்தைப்போல இருந்தது.(3,4)


பூமியானது, நூற்றுக்கணக்கான சுடர்மிக்கப் பந்தங்களால் மிக அழகாகத் தெரிந்தது. உண்மையில், அண்ட அழிவின் போது ஏற்படும் காட்டுத்தீயுடன் கூடியதாகவே அந்தப் பூமி தெரிந்தது.(5) சுற்றிலும் இருந்த அந்த விளக்குகளால் திசைப்புள்ளிகள் அனைத்தும் சுடர்விட்டெரிந்து, மழைக்காலத்தின் மாலை வேளையில் விட்டிற்பூச்சிகளால் மறைக்கப்பட்ட மரங்களைப் போலத் தெரிந்தன.(6) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரப்போராளிகள் வீரப்பகைவர்களுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் கடும் இரவில், உமது மகனின் {துரியோதனனின்} உத்தரவுக்கிணங்க யானைகள் யானைகளோடும், குதிரைவீரர்கள் குதிரைவீரர்களோடும், தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும் மகிழ்ச்சியால் நிறைந்து போரில் ஈடுபட்டனர்.(7,8) நால்வகைப் படைப்பிரிவுகளையும் கொண்டவையான அந்த இரண்டு படைகளுக்கும் இடையில் நடந்த மோதல் பயங்கரமடைந்தது. அப்போது அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவரையும் பலவீனமடையச் செய்தபடியே பெரும் வேகத்துடன் கௌரவப் படைப்பிரிவுகளை அழிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(9)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வெல்லப்பட இயலாதவனான அந்த அர்ஜுனன், கோபத்தால் தூண்டப்பட்டு, (குருக்களின் சாதனைகளைப்) பொறுத்துக் கொள்ள இயலாமல் என் மகனின் {துரியோதனனின்} படைக்குள் ஊடுருவியபோது, உங்கள் மனநிலைகள் எப்படி இருந்தன?(10) உண்மையில், அந்த எதிரிகளை அழிப்பவன் {அர்ஜுனன்} தங்களுக்கு மத்தியில் நுழைந்ததும், {என்} படைவீரர்கள் என்ன நினைத்தனர்? அப்போது பின்பற்றத் தகுந்த நடவடிக்கைகள் எனத் துரியோதனன் எவற்றை நினைத்தான்?(11) அந்த வீரனை {அர்ஜுனனை} எதிர்த்துப் போரிடச் சென்ற அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள் யாவர்? உண்மையில், வெண்குதிரைகளைக் கொண்ட அந்த அர்ஜுனன் (நமது படைக்குள்) நுழைந்த போது, துரோணரைப் பாதுகாத்தவர்கள் யாவர்?(12) துரோணரின் வலது சக்கரத்தையும், இடது சக்கரத்தையும் பாதுகாத்தவர்கள் யாவர்? போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரரின் {துரோணரின்} பின்புறத்தைப் பாதுகாத்த வீரர்கள் யாவர்?(13)

உண்மையில் அந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, (தன் பாதையில்) எதிரிகளைக் கொன்றபடி செல்கையில், அவருக்கு முன்னணியில் சென்றவர்கள் யாவர்? வலிமைமிக்கவரும், வெல்லப்படமுடியாத வில்லாளியும், பாஞ்சாலர்களுக்கு மத்தியில் ஊடுருவியவரும்,(14) மனிதர்களில் புலியும், பெரும் வீரம் கொண்டவரும், நர்த்தனம் செய்பவரைப் போலத் தன் தேரின் பாதையில் செல்பவரும், சீற்றமிக்கக் காட்டு நெருப்பைப் போலத் தன் கணைகளின் மூலம் பாஞ்சாலத் தேர்க்கூட்டங்களைப் பெருமளவில் எரித்தவருமான துரோணர்,(15) ஐயோ, தன் மரணத்தை எவ்வாறு சந்தித்தார்? நிதானமானவர்களாகவும், வெல்லப்படாதவர்களாகவும், உற்சாகம் நிறைந்தவர்களாகவும், போரில் வலிமையில் பெருகுபவர்களாகவும் என் எதிரிகளை நீ எப்போதும் சொல்லி வருகிறாய். எனினும், என்னுடையவர்களைக் குறித்து நீ அத்தகு வார்த்தைகளில் சொல்வதில்லை. மறுபுறம், கொல்லப்படுபவர்களாகவும், ஒளி இழந்தவர்களாகவும், முறியடிக்கப்பட்டவர்களாகவும் விவரித்து, எப்போதும் தாங்கள் போரிடும் போர்களில் என் தேர்வீரர்கள் தங்கள் தேர்களை இழப்பதாகச் சொல்கிறாய்” என்றான் {திருதராஷ்டிரன்}.(16,17)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “போரில் முனைப்போடிருந்த துரோணரின் விருப்பங்களைப் புரிந்து கொண்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனக்குக் கீழ்ப்படியும் தம்பிகளான(18) விகர்ணன், சித்திரசேனன், [1] சுபார்சன், துத்தர்ஷமன், தீர்க்கபாகு ஆகியோரிடமும், அவர்களைப் பின் தொடர்ந்து வந்தோரிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(19) “பெரும் வீரமிக்கவர்களே, வீரர்களே, உறுதியான தீர்மானத்தோடு போராடும் நீங்கள் அனைவரும் துரோணரைப் பின்புறத்தில் இருந்து அவரைப் பாதுகாக்க வேண்டும். ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} அவரது வலது சக்கரத்தையும், சலன் அவரது இடதையும் பாதுகாப்பார்கள்” என்றான்.(20) இதைச் சொன்ன உமது மகன் {துரியோதனன்}, முன்னோக்கி நகர்ந்து, எஞ்சியிருந்தவர்களும், துணிவும், வலிமையும் மிக்கவர்களுமான திரிகர்த்த தேர்வீரர்களை முன்னணியில் நிறுத்தியபடி, அவர்களிடம்,(21) “ஆசான் {துரோணர்} கருணைநிறைந்தவராக இருக்கிறார். பாண்டவர்களோ உறுதிமிக்கப் பெரும் தீர்மானத்தோடு போரிடுகின்றனர். போரில் எதிரிகளைக் கொல்லும்போது, ஒன்றாகச் சேர்ந்து அவரை {துரோணரை} நன்கு பாதுகாப்பீராக.(22) துரோணர் போரில் வலிமைமிக்கவராகவும், பெரும் கரநளினமும், பெரும் வீரமும் கொண்டவராக இருக்கிறார். போரில் தேவர்களையே அவரால் வெல்ல முடியும் எனும்போது, பாண்டவர்களையும், சோமகர்களையும் குறித்து என்ன சொல்வது?(23)

[1] துரோண பர்வம் 136ல் விகர்ணன், சித்திரசேனன் ஆகியோர் பீமனால் கொல்லப்பட்டதாக வருகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இவ்விடத்தில இவர்களது பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால், வேறொரு பதிப்பில் இந்த இடத்தில் வெறும் தம்பியர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர அவர்களது பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

எனினும், ஒன்றாகச் சேரும் நீங்கள் அனைவரும், இந்தப் பயங்கரப் போரில் பெரும் தீர்மானத்துடன் போராடி, வெல்லப்பட முடியாத துரோணரை அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னனிடம் இருந்து பாதுகாப்பீராக.(24) போரில் துரோணரை வெல்ல பாண்டவப் போர்வீரர்கள் அனைவரிலும் திருஷ்டத்யும்னனைத் தவிர, வேறு எவனையும் நான் காணவில்லை.(25) எனவே, நாம் முழு ஆன்மாவோடு பரத்வாஜரின் மகனை {துரோணரைப்} பாதுகாக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். (நம்மால்) பாதுகாக்கப்படும் அவர், ஒருவர் பின் ஒருவராகச் சோமகர்களையும், சிருஞ்சயர்களையும் நிச்சயம் கொல்வார்.(26) (பாண்டவப்) படைக்குத் தலைமையில் நிற்கும் சிருஞ்சயர்கள் அனைவரும் கொல்லப்பட்டதும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, போரில் திருஷ்டத்யும்னனைக் கொல்வார் என்பதில் ஐயமில்லை.(27) அதே போலவே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனும், போரில் அர்ஜுனனை வெல்வான். பீமசேனனையும், கவசம் தரித்த பிறரையும் பொறுத்தவரை, அவர்கள் அனைவரையும் போரில் நானே அடக்குவேன்.(28) சக்தியை இழப்பவர்களான பாண்டவர்களில் எஞ்சியோர், பிற போர்வீரர்களால் எளிதாக வீழ்த்தப்படுவார்கள். அதன்பிறகு என் வெற்றி எப்போதும் நீடித்திருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.(29) இந்தக் காரணங்களுக்காக, வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரைப் போரில் பாதுகாப்பீராக” என்றான் {துரியோதனன்}.

ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன உமது மகன் துரியோதனன்,(30) பயங்கர இருளைக் கொண்ட அந்த இரவில் தன் துருப்புகளைப் போரிடத் தூண்டினான். ஓ! பாரதர்களின் தலைவரே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்போது, வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் இயக்கப்பட்ட அவ்விரு படைகளுக்கும் இடையில் ஒரு போர் தொடங்கியது.(31) பல்வேறு விதங்களிலான ஆயுதங்களால், அர்ஜுனன் கௌரவர்களையும், கௌரவர்கள் அர்ஜுனனையும் பீடிக்கத் தொடங்கினர். அந்தப் போரில் நேரான கணைகளின் மழையால், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பாஞ்சாலர்களின் ஆட்சியாளனையும் {துருபதனையும்}, துரோணர் சிருஞ்சயர்களையும் மறைக்கத் தொடங்கினர். (ஒரு புறத்தில்) பாண்டு மற்றும் பாஞ்சாலத் துருப்புகளும், (மறுபுறத்தில்) கௌரவத் துருப்புகளும் போரில் ஒருவரையொருவர் கொன்ற போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தக் களத்தில் சீற்றமிக்க ஆரவாரம் எழுந்தது. அந்த இரவில் நடைபெற்ற போரானது பயங்கரமானதாகவும், எங்களாலோ, எங்களுக்கு முன் சென்றவர்களாலோ இதற்கு முன் காணப்படாத வகையில் கடுமையானதாகவும் இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(32-35)
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 163-ல் வரும் மொத்த சுலோகங்கள்-35

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்