Wednesday, October 19, 2016

யுதிஷ்டிரனை வென்ற கிருதவர்மன்! - துரோண பர்வம் பகுதி – 164

Kritavarma vanquished Yudhishthira! | Drona-Parva-Section-164 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 12)

பதிவின் சுருக்கம் : துரோணரை மட்டுமே எதிர்த்துச் செல்லுமாறு தன் படைவீரர்களுக்கு உத்தரவிட்ட யுதிஷ்டிரன்; அந்தப் போரில் யார் யாரை எதிர்த்தது என்று சஞ்சயன் வர்ணிப்பது; கிருதவர்மனுக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நேர்ந்த மோதல்; யுதிஷ்டிரனை வென்ற கிருதவர்மன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கண்மூடித்தனமான படுகொலைகள் நிறைந்த அந்தப் பயங்கரமான இரவுப்போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் சோமகர்களிடம் தர்மனின் மகனான யுதிஷ்டிரன் பேசினான். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், தேர்கள் மற்றும் யானைகளை அழிப்பதற்காகத் தன் துருப்புகளுக்கு உத்தரவிட்ட யுதிஷ்டிரன், அவர்களிடம், "துரோணரைக் கொல்வதற்காக அவரை மட்டுமே எதிர்த்து  செல்வீராக" என்றான்.(1-3) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில் பாஞ்சாலர்களும், சோமகர்களும், பயங்கரக் கூச்சலிட்டபடியே துரோணரை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.(4) சினத்தால் தூண்டப்பட்ட நாங்கள், பதிலுக்கு முழங்கியவாறே, எங்கள் ஆற்றல், துணிவு, வலிமை ஆகியவற்றில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரில் அவர்களை எதிர்த்து விரைந்தோம்.(5)


ஹிருதிகனின் மகனான கிருதவர்மன், மதங்கொண்ட யானையை எதிர்த்து விரையும் மதங்கொண்ட பகை யானையைப் போலத் துரோணரை எதிர்த்துச் சென்று கொண்டிருந்த யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தான்.(6)

சுற்றிலும் கணைமாரியை இறைத்தபடி சென்று கொண்டிருந்த சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் (எதிரிகளை) கலங்கடிக்கும் குரு போர்வீரனான பூரி விரைந்தான்.(7)

விகர்த்தனன் மகனான கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரை அடைய சென்று கொண்டிருந்தவனும், வலிமைமிக்கப் போர்வீரனும், பாண்டுவின் மகனுமான சகாதேவனைத் தடுத்தான்.(8)

அந்தப் போரில் மன்னன் துரியோதனன், யமனைப் போலத் தன் தேரில் சென்று கொண்டிருந்தவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான பீமசேனனை எதிர்த்துத் தானே விரைந்தான்.(9)

சுபலனின் மகனான சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து வகைப் போர்முறைகளையும் அறிந்தவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான நகுலனை எதிர்த்து வேகமாகச் சென்றான்.(10)

சரத்வானின் மகனான கிருபர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் முதன்மையான சிகண்டி தன் தேரில் சென்று கொண்டிருந்த போது, அந்தப் போரில் பின்னவனை {சிகண்டியைத்} தடுத்தார்.(11)

தீவிரமாகப் போட்டியிடும் துச்சாசனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மயில்களைப் போலத் தெரிந்த குதிரைகளால் இழுக்கப்பட்டு, உறுதியான தீர்மானத்துடன் (தன் தேரில்) சென்று கொண்டிருந்த பிரதிவிந்தியனைத் தடுத்தான்.(12)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அஸ்வத்தாமன், நூற்றுக்கணக்கான மாயைகளை அறிந்தவனான ராட்சசன் (கடோத்கசன்) முன்னேறிவந்த போது, பின்னவனை {கடோத்கசனைத்} தடுத்தான்.(13)

விருஷசேனன், அந்தப் போரில் துரோணரைக் கைப்பற்றச் சென்ற துருபதனை, பின்னவனின் {துருபதனின்} துருப்புகள் மற்றும் அவனைப் பின்தொடர்பவர்களுடன் சேர்த்துத் தடுத்தான்.(14)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட மத்ர மன்னன் {சல்லியன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரைக் கொல்வதற்காக வேகமாகச் சென்ற விராடனைத் தடுத்தான்.(15)

அந்தப் போரில் சித்திரசேனன், துரோணரைக் கொல்வதற்காகச் சென்று கொண்டிருந்த நகுலன் மகனான சதானீகன் மீது பல கணைகளை ஏவியும், பெரும் பலத்தைப் பயன்படுத்தியும் பின்னவனை {சதானீகனைத்} தடுத்தான்.

(16) ராட்சசர்களின் இளவரசனான அலம்புசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனன் முன்னேறிக் கொண்டிருந்த போது, பின்னவனை {அர்ஜுனனைத்} தடுத்தான்.(17)

பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னன், பெரும் வில்லாளியான துரோணர் எதிரியைக் கொல்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பின்னவரை {துரோணரை} மகிழ்ச்சியாகத் தடுத்தான்.(18) பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் அப்படி (துரோணரை எதிர்த்துச்) சென்ற பிறரைப் பொறுத்தவரை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களை உமது படையின் பிற தேர்வீரர்கள் பெரும் பலத்துடன் தடுத்தனர்.(19)

அந்தப் பயங்கரப் போரில் யானைப்பாகர்களோடு {வீரர்களோடு} மோதிய {வேறு} யானைப் பாகர்கள், ஆயிரக்கணக்கில் போரிடத் தொடங்கி, ஒருவரையொருவர் கலங்கடித்தனர்.(20) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த நள்ளிரவில் குதிரைகள் ஒன்றையொன்று நோக்கி மூர்க்கமாக விரைந்தபோது, சிறகுகளைக் கொண்ட மலைகளைப் போலத் தெரிந்தன.(21) ஓ! ஏகாதிபதி (திருதராஷ்டிரரே}, வேல்கள், ஈட்டிகள், வாள்கள் ஆகியவற்றுடன் கூடிய குதிரைவீரர்கள் உரக்கக் கூச்சலிட்டபடியே {வேறு} குதிரைவீரர்களுடன் மோதினர்.(22) கதாயுதங்கள், குறுந்தண்டங்கள் {உலக்கைகள்} மற்றும் பல்வேறு வகைகளிலான பிற ஆயுதங்களோடு கூடிய பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் ஒருவரையொருவர் கொன்று குவித்தனர்.(23)

ஹிருதிகனின் மகனான கிருதவர்மன் கோபத்தால் தூண்டப்பட்டு, பொங்கும் கடலைத் தடுக்கும் கண்டங்களை {கரைகளைப்} போலத் தர்மனின் மகனான யுதிஷ்டிரனைத் தடுத்தான்.(24) எனினும் யுதிஷ்டிரன், ஐந்து கணைகளால் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனைத்} துளைத்து, மீண்டும் இருபதாலும் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்து, அவனிடம் {கிருதவர்மனிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(25) அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட கிருதவர்மன், ஒரு பல்லத்தைக் கொண்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் வில்லை அறுத்து பின்னவனை {யுதிஷ்டிரனை} ஏழு கணைகளால் துளைத்தான்(26) வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பத்து கணைகளால் ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கரங்களையும், மார்பையும் துளைத்தான்.(27)

அப்போது மதுகுலத்தைச் சேர்ந்த அந்தப் போர்வீரன் {கிருதவர்மன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} அந்தப் போரில் துளைக்கப்பட்டு, சினத்தால் நடுங்கியபடியே ஏழு கணைகளால் யுதிஷ்டிரனைப் பீடித்தான்.(28) பிறகு அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் யுதிஷ்டிரன்}, தன் எதிரியின் வில்லை அறுத்து, அவனது {கிருதவர்மனின்} கரங்களை மறைத்திருந்த தோலுறைகளயும் அறுத்து, கல்லில் கூராக்கப்பட்ட ஐந்து கூரிய கணைகளை அவன் {கிருதவர்மனின்} மீதும் ஏவினான்.(29) அந்தக் கடுங்கணைகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் விலைமதிப்புமிக்கதுமான பின்னவனின் {கிருதவர்மனின்} கவசத்தைத் துளைத்துச் சென்று, எறும்புப்புற்றுக்குள் நுழையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன.(30) கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மற்றொரு வில்லை எடுத்த கிருதவர்மன், பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} அறுபது {60} கணைகளாலும், மீண்டும் பத்தாலும் துளைத்தான்.(31) அளவிலா ஆன்மா கொண்ட பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் பெரிய வில்லைத் தேரில் வைத்துவிட்டு, பாம்புக்கு ஒப்பான ஈட்டி ஒன்றை கிருதவர்மனின் மீது ஏவினான்.(32) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், பாண்டு மகனால் {யுதிஷ்டிரனால்} ஏவப்பட்டதுமான அந்த ஈட்டி, கிருதவர்மனின் வலக்கரத்தைத் துளைத்துச் சென்று பூமிக்குள் நுழைந்தது.(33) அதே வேளையில், பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} உறுதிமிக்கத் தனது வில்லை எடுத்துக் கொண்டு நேரான கணைகளின் மழையால் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} மறைத்தான்.(34)

அப்போது, விருஷ்ணிகளில் பெரும் தேர்வீரனும், துணிவுமிக்கவனுமான கிருதவர்மன் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் யுதிஷ்டிரனைக் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும், தேரற்றவனாகவும் ஆக்கினான்.(35) அதன் பேரில் பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, ஒரு வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். அப்போது அந்த மதுகுலத்தோன் {கிருதவர்மன்}, அந்தப் போரில் அவ்விரு ஆயுதங்களையும் வெட்டினான்.(36) பிறகு யுதிஷ்டிரன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்ட ஒரு கடும் ஈட்டியை எடுத்து, அந்தப் போரில் சிறப்புமிக்க ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} மீது வேகமாக ஏவினான்.(37) எனினும், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} சிரித்துக் கொண்டே தன் பெரும் கரநளினத்தை வெளிக்காட்டியபடி, யுதிஷ்டிரனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட அந்த ஈட்டி தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த போதே அதை இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(38)

பிறகு அவன் {கிருதவர்மன்}, அம்மோதலில் ஒரு நூறு கணைகளால் தர்மனின் மகனை {யுதிஷ்டிரனை} மறைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {கிருதவர்மன்}, கணைமாரிகளைக் கொண்டு, பின்னவனின் {யுதிஷ்டிரனின்} கவசத்தை அறுத்தான்.(39) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யுதிஷ்டிரனின் கவசமானது, ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கணைகளால் வெட்டப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்து விழும் ஒரு நட்சத்திரக் கூட்டத்தைப் போல, அவனது உடலில் இருந்து கீழே விழுந்தது.(40) கவசம் அறுபட்டு, தேரையும் இழந்து, கிருதவர்மனின் கணைகளாலும் பீடிக்கப்பட்டட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, போரில் இருந்து விரைவாகப் பின்வாங்கினான்.(41) வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், தர்மனின் மகனான யுதிஷ்டிரனை வென்ற பிறகு, மீண்டும் துரோணருடைய தேரின் சக்கரத்தைப் பாதுகாக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(42)
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 164-ல் வரும் மொத்த சுலோகங்கள்-42


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்