Monday, October 31, 2016

மூர்க்கமாகப் போரிட்ட துரோணரும், கர்ணனும்! - துரோண பர்வம் பகுதி – 172

Drona and Karna fought fiercely! | Drona-Parva-Section-172 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 20)

பதிவின் சுருக்கம் : துரோணர் மற்றும் கர்ணனிடம் கோபத்துடன் பேசிய துரியோதனன்; பாண்டவப் படையை மூர்க்கமாகத் தாக்கிய துரோணரும், கர்ணனும்; ஓடும் துருப்புகளை மீண்டும் அணிதிரட்டிய அர்ஜுனனும், கிருஷ்ணனும்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தச் சிறப்புமிக்க வீரர்களால் கொல்லப்படும் தன் படையானது சிதறடிக்கப்படுவதைக் கண்டவனும், சொற்களை நன்கு அறிந்தவனுமான {பேசத்தெரிந்தவனுமான} உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனிடமும், போரில் வெல்வோர் அனைவரிலும் முதன்மையானவரான துரோணரிடமும் விரைவாகச் சென்று, கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1,2) “சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதைக் கண்டு சினம் கொண்ட உங்கள் இருவராலேயே இந்தப் போர் {இந்த இரவுப் போர்} தொடங்கப்பட்டது.(3) உங்கள் இருவருக்கும் பாண்டவப்படைகளை வெல்லும் சக்தி முழுமையாக இருந்தும், அந்தப் படைகளால் என் படைகள் கொல்லப்படுகையில் நீங்கள் எந்த அக்கறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே.(4) நீங்கள் இருவரும் இப்போது என்னைக் கைவிடுவதாக இருந்தால், அதைத் தொடக்கத்திலே என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். கௌரவங்களை அளிப்பவர்களே, “நாங்கள் இருவரும் போரில் பாண்டு மகன்களை வெல்வோம்” என்ற இந்த வார்த்தைகளையே அப்போது நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். இந்த உங்கள் வார்த்தைகளைக் கேட்டே நான் இந்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தேன். (நீங்கள் வேறு மாதிரியாக என்னிடம் சொல்லியிருந்தால்), வீரப்போராளிகளை இந்த அளவுக்கு அழிக்கவல்லவையான பார்த்தர்களுடனான இந்தப் பகைமைகளை நான் ஒரு போதும் தூண்டியிருக்க மாட்டேன்.(5,6) நான் உங்கள் இருவராலும் கைவிடத் தகாதவன் என்றால், மனிதர்களில் காளையரே, பெரும் ஆற்றலைக் கொண்ட வீரர்களே, நீங்கள் உங்கள் உண்மையான அளவு ஆற்றலுடன் போரிடுவீராக” என்றான் {துரியோதனன்}.(7)


உமது மகனின் {துரியோதனனின்} வார்த்தைக் குறடால் இப்படித் துளைக்கப்பட்ட அந்த வீரர்கள் இருவரும் {துரோணரும், கர்ணனும்}, தடிகளால் விரட்டப்பட்ட இரு பாம்புகளைப் போல மீண்டும் போரில் ஈடுபட்டனர்.(8) தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், உலகின் வில்லாளிகள் அனைவரிலும் மேன்மையானவர்களுமான அவ்விருவரும், சிநியின் பேரனால் {சாத்யகியால்} தலைமை தாங்கப்பட்ட பார்த்தர்களையும், இன்னும் பிறரையும் எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(9) அதே போலப் தங்கள் துருப்புகள் அனைத்துடன் ஒன்றுசேர்ந்த பார்த்தர்களும், தொடர்ந்து முழங்கிக் கொண்டே இருந்த அந்த இரு வீரர்களையும் எதிர்த்து சென்றனர்.(10)

அப்போது, ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவரும், பெரும் வில்லாளியுமான துரோணர், சினத்தால் தூண்டப்பட்டு, பத்து கணைகளால் அந்தச் சிநிக்களில் காளையை {சாத்யகியத்} துளைத்தார்.(11) கர்ணன் அவனைப் {சாத்யகியைப்} பத்து கணைகளாலும், உமது மகன் {துரியோதனன்} ஏழாலும், விருஷசேனன் பத்தாலும், சுபலனின் மகன் {சகுனி} ஏழாலும் {சாத்யகியைத்} துளைத்தனர்.(12) சிநியின் பேரனை {சாத்யகியைச்} சுற்றியிருந்த கௌரவர்களின் ஊடுருவப்பட முடியாத சுவரில், இவர்களும் நிலைகொண்டு அவனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர். அந்தப் போரில் பாண்டவப்படையைக் கொன்றும் வரும் துரோணரைக் கண்ட சோமகர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவரைக் கணை மாரியால் துளைத்தனர்.(13) அப்போது துரோணர், இருளைத் தன் கதிர்களால் அழிக்கும் சூரியனைப் போல க்ஷத்திரியர்களின் உயிரை எடுக்கத் தொடங்கினார்.(14)

அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணரால் கொல்லப்படும்போது ஒருவரையொருவர் அழைத்த பாஞ்சாலர்களுக்கு மத்தியில் உரத்த ஆரவாரத்தை நாங்கள் கேட்டோம். சிலர் தங்கள் மகன்களைக் கைவிட்டும், சிலர் தந்தைகளை, சிலர் சகோதரர்களை, சில மாமன்களை, சிலர் தங்கள் சகோதரியின் மகன்களை, சிலர் நண்பர்களை, சிலர் தங்கள் உற்றார் உறவினரைக் கைவிட்டுவிட்டுத் தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள வேகமாக ஓடினர்.(15-17) மேலும் சிலர் தங்கள் உணர்வுகளை இழந்து துரோணரை எதிர்த்து ஓடினர். உண்மையில், அப்போது பாண்டவப்படையில் வேறு உலகத்திற்கு அனுப்பப்பட்ட போராளிகள் பலராக இருந்தனர்.(18) அந்தச் சிறப்புமிக்க வீரரால் {துரோணரால்} இப்படிப் பீடிக்கப்பட்ட அந்தப் பாண்டவப் படையினர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விரவில் பீமசேனன், அர்ஜுனன், கிருஷ்ணன், இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, யுதிஷ்டிரன், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சுடர்மிக்கத் தங்கள் தீப்பந்தங்களைச் சுற்றிலும் எறிந்துவிட்டுத் தப்பி ஓடினர்.(19,20)

உலகம் இருளில் மூழ்கியிருந்ததால், எதையும் காண முடியவில்லை. கௌரவத் துருப்புகளுக்கு மத்தியில் இருந்த விளக்குகளின் காரணமாக எதிரி ஓடுவதை உறுதிசெய்து கொள்ள முடிந்தது.(21) எண்ணற்ற கணைகளை இறைத்தபடியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணரும், கர்ணனும், ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் படையைப் பின்தொடர்ந்து சென்றனர்.(22) கொல்லப்பட்டு முறியடிக்கப்பட்ட பாஞ்சாலர்களைக் கண்டு உற்சாகத்தை இழந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பல்குனனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(23) “பாஞ்சாலர்களுடன் கூடிய திருஷ்டத்யும்னனும், சாத்யகியும், கணைகள் பலவற்றை ஏவியபடியே பெரும் வில்லாளிகளான துரோணரையும், கர்ணனையும் எதிர்த்து சென்றனர்.(24) இந்த நமது பெரும்படை (அவர்களின்) கணைமாரியால் பிளக்கப்பட்டு முறியடிக்கப்படுகிறது. அவர்கள் ஓடுவது தடுக்கப்பட வேண்டும் என்றாலும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா} அவர்களை மீண்டும் அணிதிரட்டுவது இயலாததாகும்” என்றான் {கிருஷ்ணன்}.(25)

அந்தப் படை ஓடுவதைக் கண்ட கேசவன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் அந்தத் துருப்புகளிடம், “அச்சத்தால் ஓடாதீர். பாண்டவ வீரர்களே உங்கள் அச்சங்களை விலக்குங்கள்.(26) படைகள் அனைத்தையும் நல்ல முறையில் அணிவகுத்துக் கொண்டு, உயர்த்திய ஆயுதங்களுடன் துரோணரையும், சூதனின் மகனையும் {கர்ணனையும்} எதிர்த்து நிற்பதற்காக நாங்கள் இருவரும் இப்போது செல்கிறோம்” என்றனர்.(27) அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, முன்னேறிச் செல்லும் விருகோதரனை {பீமனைக்} கண்டு, மீண்டும் பாண்டுவின் மகனான அர்ஜுனனிடம் அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்வது போல இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(28) “அதோ, போரில் மகிழ்ச்சி கொள்ளும் பீமர், சோமகர்கள் மற்றும் பாண்டவர்களால் சூழபட்டு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணரையும் கர்ணனையும் எதிர்த்து வருகிறார்.(29) உன் துருப்புகள் அனைத்தும் உறுதிகொள்ளும் பொருட்டு, ஓ !பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அவராலும் {பீமராலும்}, பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலராலும் ஆதரிக்கப்பட்டு இப்போது போரிடுவாயாக” என்றான் {கிருஷ்ணன்} [1].30 அப்போது மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, மதுகுலத்தோன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும், துரோணரையும், கர்ணனையும் அடைந்து, போரின் முன்னணியில் தங்கள் நிலையை எடுத்துக் கொண்டனர்.”(31)

[1] “கல்கத்தா பதிப்பில் 30வது சுலோகத்தின் இரண்டாவது வரி வேறுமாதிரியாக உரைக்கப்பட்டிருக்கிறது. {இங்கு பம்பாய் பதிப்பையே கையாண்டிருக்கிறேன்}. அந்த இரண்டு அச்சுபதிப்புகளில் உள்ள சில வேறுபாடுகளின் விளைவாக, கல்கத்தா உரையின் 30வது சுலோகம் பாம்பாய் உரையில் 32வது சுலோகமாக உள்ளது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இந்த இடத்தில், “பாண்டு நந்தன, எல்லாச் சைனிகளுக்கும் தேறுதலுண்டாகும்பொருட்டு இந்தப் பீமனோடும், மகாரதர்களான பாஞ்சாலர்களோடும் சேர்ந்து கொண்டு யுத்தம் செய்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் 30வது சுலோகம், “உன் துருப்புகள் உறுதியடையும்பொருட்டு, ஓ பாண்டுவை மகிழச் செய்பவனே {அர்ஜுனா}, இவர்களாலும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாஞ்சாலர்களாலும் ஆதரிக்கப்பட்டுப் போரிடச் செல்வாயாக” என்று இருக்கிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது, யுதிஷ்டிரனின் அந்தப் பரந்த படையானது, போரில் துரோணரும், கர்ணனும் எந்த இடத்தில் தங்கள் எதிரிகளைக் கலங்கடித்துக் கொண்டிருந்தனரோ அங்கே மீண்டும் போரிடுவதற்காகத் திரும்பியது.(32) சந்திரன் உதிக்கும் வேளையில் பொங்கும் இரு கடல்களுக்கிடையில் நடப்பதைப் போல அந்த நள்ளிரவில் ஒரு கடும் மோதல் நடந்தது.(33) பிறகு உமது படையின் போர்வீரர்கள் தங்கள் கைகளில் இருந்த சுடர்மிக்க விளக்குகளை எறிந்துவிட்டு, அச்சமற்ற வகையில் வெறிகொண்டு பாண்டவர்களுடன் போரிட்டனர்.(34) இருட்டாலும், புழுதியாலும் உலகம் மறைக்கப்பட்டிருந்த அந்தப் பயங்கர இரவில், போராளிகள், தாங்கள் சொன்ன பெயர்களால் வழிநடத்தப்பட்டே ஒருவரோடொருவர் போரிட்டனர்.(35) போரிடும் மன்னர்களால் சொல்லப்பட்ட பெயர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒரு சுயம்வரத்தில் நடப்பதைப் போலவே கேட்கப்பட்டன.(36)

திடீரெனப் போர்க்களமெங்கும் அமைதி பரவி, அஃது ஒருக்கணம் நீடித்தது. பிறகு வென்ற, வெல்லப்பட்ட கோபக்கார போராளிகளால் உண்டாக்கப்பட்ட உரத்த ஆரவாரம் மீண்டும் கேட்டது.(37) எங்கே சுடர்மிக்க விளக்குகள் தென்பட்டனவோ, ஓ! குருக்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அங்கே (சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும்) பூச்சிகளைப் போல அந்த வீரர்கள் விரைந்தனர்.(38) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், கௌரவர்களும் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டிருந்த போது, அவர்களைச் சுற்றிலும் இரவின் இருள் அடர்த்தியடைந்திருந்தது” {என்றான் சஞ்சயன்}.(39)
-----------------------------------------------------------------------------------
துரோணப் பர்வம் பகுதி: 172-ல் உள்ள சுலோகங்கள்: 39


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்