Saturday, November 19, 2016

"அர்ஜுனன் களைத்தான் என நினைத்தாயோ?" என்ற துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 185

"Thou thinkest Arjuna was worn out?" said Drona! | Drona-Parva-Section-185 | Mahabharata In Tamil

(துரோணவத பர்வம் – 02)

பதிவின் சுருக்கம் : துரோணரை அணுகிய துரியோதனன், தகாத நேரத்தில் பாண்டவப் படையிடம் அவர் காட்டும் கருணையைக் கோபத்துடன் கண்டிப்பது; பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாகத் துரோணர் உறுதி கூறுவது; அர்ஜுனனின் வலிமையையும், ஆற்றலின் அளவையும் துரியோதனனுக்கு விளக்கிய துரோணர்; கோபமுற்ற துரியோதனன் அர்ஜுனனைத் தானே கொல்லப்போவதாகச் சொல்வது; துரியோதனனைப் பரிகசித்து, சகுனியைக் கேலி செய்த துரோணர், அஞ்சாமல் அர்ஜுனனுடன் மோதி அவனால் கொல்லப்பட்டுப் புகழை அடையும்படி துரியோதனனிடம் சொன்னது…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த நேரத்தில், கோபத்தின் ஆதிக்கத்தில் இருந்த துரியோதனன், துரோணரை அணுகி அவரது மகிழ்ச்சியை அதிகரித்து ஊக்கப்படுத்தவும், அவரது கோபத்தைத் தூண்டவும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(1) துரியோதனன், "இலக்கில் துல்லியமான நம் எதிரிகள் உற்சாகமற்றவர்களாக, கடுமையான உழைப்பால் களைத்தவர்களாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு எந்தக் கருணையும் காட்டப்பட்டிருக்கக்கூடாது.(2) உமக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பியதால், அவர்களை அப்படியே விட்டு நாம் அவர்களுக்குக் கருணை காட்டினோம். எனினும், களைத்துப் போயிருந்த பாண்டவர்கள் (ஓய்வெடுத்த பிறகு) இப்போது வலிமையடைந்திருக்கின்றனர்.(3) நம்மைப் பொறுத்தவரை, அனைத்து வகையிலும் நம் சக்தியையும், பலத்தையும் தற்போது நாம் இழந்து வருகிறோம். பாண்டவர்களோ, உம்மால் பாதுகாக்கப்பட்டு இடையூறின்றிச் செழிப்பை ஈட்டுகிறார்கள்.(4) தெய்வீகமான ஆயுதங்கள் அனைத்தும், பிரம்மனுக்கு உரியவை {ஆயுதங்கள்} அனைத்தும் உம்மிடம் இருக்கின்றன.(5) பாண்டவர்களோ, நாங்களோ, உலகின் வேறு எந்த வில்லாளியோ போரில் ஈடுபடும் உமக்கு ஈடாகமாட்டார்கள் என்று நான் உண்மையாகச் சொல்கிறேன்.(6) ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {துரோணரே}, நீர் அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவராவீர். உமது தெய்வீக ஆயுதங்களின் மூலம் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள் அடங்கிய (மூன்று) உலகங்களையும் அழிக்கும் வல்லமை கொண்டவர் நீர் என்பதில் ஐயமில்லை.(7) பாண்டவர்கள் அனைவரும் உம்மைக் கண்டு அஞ்சுகின்றனர். எனினும், அவர்களை உமது சீடர்களாக நினைவுகூர்ந்தோ, ஒரு வேளை என் தீப்பேற்றாலோ அவர்களை நீர் மன்னிக்கிறீர் {பொறுத்துக் கொள்கிறீர்}" என்றான் {துரியோதனன்}.(8)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இப்படி உமது மகனால் {துரியோதனனால்} கண்டிக்கப்பட்டுக் கோபப்படுத்தப்பட்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனிடம் கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(9) "கிழவனே என்றாலும், ஓ! துரியோதனா, நான் என் முழு வலிமையைப் பயன்படுத்தி இன்னும் போரில் முயன்று கொண்டே இருக்கிறேன். இம்மனிதர்கள் அனைவரும் ஆயுதங்களை அறியாதவர்களாக இருக்கிறார்கள். நானோ அவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறேன். வெற்றி மீது கொண்ட விருப்பத்தால், இம்மனிதர்களை நான் கொன்றேன் என்றால், {அதைவிட} நான் செய்வதற்கு வேறு எந்த இழிசெயலும் இருக்காது. எனினும், என் மனத்தில் எது இருக்கிறதோ, ஓ! கௌரவ்யா {துரியோதனா}, அது நல்லதோ, அல்லதோ உன் ஆணையின் பேரில் அதை நான் சாதிப்பேன்.(10,11) அது வேறுவகையாகாது. போரில் என் ஆற்றலை வெளிப்படுத்தி, ஓ! மன்னா {துரியோதனா}, பாஞ்சாலர்கள் அனைவரையும் கொன்றபிறகே நான் என் கவசத்தைக் களைவேன். இதை நான் உனக்கு உண்மையாகவே உறுதியளிக்கிறேன்.

குந்தியின் மகனான அர்ஜுனன் போரில் களைப்படைந்துவிட்டான் என்றா நீ நினைக்கிறாய்?(12,13) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கௌரவா {துரியோதனா}, அவனது {அர்ஜுனனது} உண்மையான ஆற்றலை என்னிடம் கேட்பாயாக. சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} கோபம் தூண்டப்பட்டால், கந்தர்வர்களாலோ, யக்ஷர்களாலோ, ராட்சசர்களாலோ கூட அவனை {அவனது சக்தியைத்} தாங்கிக் கொள்ள முடியாது. காண்டவத்தில் {காண்டவன் என்ற காட்டில்} அவன் தேவர்களின் தெய்வீகத் தலைவனிடமே {இந்திரனிடமே} மோதியிருக்கிறான்.(14,15) அந்தச் சிறப்புமிக்க அர்ஜுனன், ஆயுதங்களைப் பொழிந்து கொண்டிருந்தவனான இந்திரனையே தன் கணைகளால் கலங்கடித்திருக்கிறான். யக்ஷர்களும், நாகர்களும், தைத்தியர்களும், தங்கள் வலிமையில் செருக்குமிக்கோர் பிறர் அனைவரும் அந்த மனிதர்களில் முதன்மையானவனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டிருக்கின்றனர்.(16) அதுவும் நீ அறிந்ததே.

பசுக்களைக் கணக்கெடுக்கும் நிகழ்வின் {கோஷ யாத்திரையின்} போது, சித்திரசேனனின் தலைமையிலான கந்தர்வர்களும், பிறரும் அவனால் வெல்லப்பட்டனர்.(17) கந்தர்வர்களால் நீ கடத்தப்பட்ட போதும், அந்த உறுதிமிக்க வில்லாளியே {அர்ஜுனனே} உன்னை மீட்டான். தேவர்களின் எதிரிகளும், போரில் தேவர்களாலேயே கொல்லப்பட முடியாதவர்களுமான நிவாதகவசர்களும், அந்த வீரனால் வெல்லப்பட்டனர். ஹிரண்யபுரத்தில் வசித்த ஆயிரக்கணக்கான தானவர்களும், அந்த மனிதப் புலியால் வெல்லப்பட்டனர். அப்படியிருக்கையில் மனிதர்களால் எவ்வாறு அவனை {அர்ஜுனனை} எதிர்த்து நிற்க முடியும்? ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உன் படைகள் எவ்வளவுதான் வீரமாக முயன்றாலும் அந்தப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} அழிவடைந்ததை உன் கண்களாலேயே நீயும் கண்டிருக்கிறாய்" என்றார் {துரோணர்}.(18-20)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இப்படி அர்ஜுனனைப் புகழ்ந்து கொண்டிருந்த துரோணரிடம் கோபம் கொண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளை மீண்டும் சொன்னான்:(21) "நானும், துச்சாசனன், கர்ணன், என் தாய்மாமன் சகுனி ஆகியோரும் சேர்ந்து இந்தப் பாரதப் படையை இரண்டாகப் பிரித்துக் கொண்டு (அதில் ஒன்றை எங்களுடன் வைத்துக் கொண்டு), இன்றைய போரில் அர்ஜுனனைக் கொல்வோம்" என்றான் {துரியோதனன்}.(22)

அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்} சிரித்துக் கொண்டே அந்த மன்னனின் {துரியோதனனின்} பேச்சை அங்கீகரித்து, "உனக்கு என் ஆசிகள்.(23) க்ஷத்திரியர்களில் காளையும், கொல்லப்பட முடியாதவனும், சக்தியால் சுடர்விட்டெரியும் வீரனுமான அந்தக் காண்டீவதாரியை {அர்ஜுனனைக்} கொல்லவல்ல க்ஷத்திரியன் எவன் இருக்கிறான்?(24) கருவூலங்களின் தலைவனோ {குபேரனோ}, இந்திரனோ, யமனோ, அசுரர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ கூட ஆயுதம்தரித்த அர்ஜுனனைக் கொல்ல முடியாது.(25) ஓ! பாரதா {துரியோதனா}, மூடர்கள் மட்டுமே நீ சொன்னது போன்ற வார்த்தைகளைச் சொல்வார்கள். போரில் அர்ஜுனனுடன் மோதிய பிறகு வீட்டுக்குப் பாதுகாப்பாகத் திரும்பக்கூடியவன் எவன் இருக்கிறான்?(26)

உன்னைப் பொருத்தவரை, நீயொரு பாவி, கொடூரன் மற்றும் அனைவரையும் சந்தேகப்படுபவன். உன் நன்மையில் ஈடுபடுவோரையும் இது போல நிந்திக்க எப்போதும் நீ தயாராகவே இருக்கிறாய்.(27) உன் பொருட்டுக் குந்தியின் மகனை {அர்ஜுனனை} எதிர்கொள்ள, நீயே அவனை எதிர்த்துச் செல்வாயாக. நீயோ நற்குலத்தில் பிறந்த க்ஷத்திரியன். போரிடவும் முயல்கிறாய்.(28) குற்றமிழைக்காத இந்த க்ஷத்திரியர்கள் அனைவரையும் நீ ஏன் கொல்லச் செய்கிறாய்? இந்தப் பகைமைக்கு நீயே ஆணிவேராவாய். எனவே, நீயே அர்ஜுனனை எதிர்த்துச் செல்வாயாக.(29)

இந்த உனது தாய்மாமனோ {சகுனியோ}, ஞானம் கொண்டவனும், க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனுமாவான். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, சூதுக்கு அடிமையான இவன் {சகுனி} போரில் அர்ஜுனனை எதிர்த்துச் செல்லட்டும்.(30) பகடையில் வல்லவனும், வஞ்சகம் கொண்டவனும், சூதுக்கு அடிமையானவனும், தந்திரம் மற்றும் வஞ்சங்களை நன்கு பழகியவனும், வஞ்சிக்கும் வழிகளை நன்கறிந்தவனுமான இந்தச் சூதாடிதான் {சகுனிதான்} போரில் பாண்டவர்களை வெல்லப் போகிறான்.(31)

கர்ணனை உன் துணையாகக் கொண்ட நீ, மூடத்தனத்தாலும், வெற்று அறிவினாலும் மகிழ்ச்சியாக அடிக்கடி தற்புகழ்ச்சி செய்து கொண்டே, திருதராஷ்டிரன் கேட்டுக் கொண்டிருக்கும்போது, "ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, நான், கர்ணன் மற்றும் என் தம்பி துச்சாசனன் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து போரில் பாண்டுவின் மகன்களைக் கொல்வோம்" என்று சொன்னாய். இந்த உனது தற்புகழ்ச்சி ஒவ்வொரு சபைக்கூட்டத்திலும் கேட்கப்பட்டது. உன் சபதத்துக்கு உண்மையாக இருந்து அதை இப்போது சாதிப்பாயாக.(34)

அதோ உன் மரண எதிரியான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} உன் எதிரிலேயே நிற்கிறான். ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நோற்பாயாக. ஜயனின் {அர்ஜுனனின்} கைகளால் நீ கொல்லப்பட்டால், அனைத்துப் புகழுக்கும் நீ தகுந்தவனாவாய்.(35) நீ ஈகை பயின்றவனாவாய். (நீ விரும்பிய அனைத்தையும் எப்போதும்) உண்ணவும் செய்திருக்கிறாய். நீ விரும்பிய அளவிற்குச் செல்வத்தையும் அடைந்திருக்கிறாய். உனக்குக் கடன்கள் ஏதுமில்லை. ஒருவன் {ஒரு மனிதன்} செய்ய வேண்டிய அனைத்தையும் நீ செய்திருக்கிறாய். அஞ்சாதே. பாண்டு மகனுடன் {அர்ஜுனனுடன்} இப்போதே போரிடுவாயாக"[1] என்றார் {துரோணர்}.(36) அந்தப் போரில் துரோணர் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டார். (பாரதப்) படையானது இரண்டாகப் பகுக்கப்பட்டது, போரும் தொடங்கியது" {என்றான் சஞ்சயன்}.(37)

[1] இங்கே காணப்படும் 35 மற்றும் 36 ஆகிய ஸ்லோகங்களின் பொருள் வேறொரு பதிப்பில் பின்வருமாறு காணக்கிடைக்கிறது, "இதோ உனக்குச் சத்துருவான பாண்டவன் பயமற்று எதிரில் நிற்கிறான். க்ஷத்திரிய தர்மத்தை ஆலோசி. உனக்கு ஜயத்தைக் காட்டிலும் வதமே சிறந்தது. (பொருள்களைக்) கொடுத்தாய்; நீயும் அனுபவித்தாய்; அத்யயனத்தையும் செய்தாய். நீ விரும்பிய அதிகாரம் உன்னால் அடையப்பட்டது. நீ கிருதகிருத்யனாகவும் கடனில்லாதவனாகவும் இருக்கிறாய். பயப்படாதே. பண்டவனைக் குறித்து யுத்தம் செய்" என்று இருக்கிறது. இவ்விரண்டு பதிப்புகளுக்கும் இடையில் ஜயம் என்பதற்குப் பொருள் கொண்ட விதம் மாறுபட்டிருக்கிறது.
--------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 185-ல் உள்ள சுலோகங்கள்: 37

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்