Tuesday, January 03, 2017

கொல்லப்பட்ட பாண்டவ வீரர்கள்! - கர்ண பர்வம் பகுதி – 06

Pandava heroes slain! | Karna-Parva-Section-06 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கொல்லப்பட்ட பாண்டவ வீரர்களைக் குறித்துத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! மகனே {சஞ்சயா}, போரில் பாண்டவர்களால் என்தரப்பில் கொல்லப்பட்டோரின் பெயர்களை நீ குறிப்பிட்டாய். ஓ! சஞ்சயா, இப்போது என் தரப்பு மக்களால் பாண்டவர்களுக்கு மத்தியில் கொல்லப்பட்டோரின் பெயர்களை எனக்கு இப்போது சொல்வாயாக" என்று கேட்டான்.(1)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "போரில் பெரும் ஆற்றலையும், சக்தியையும், வலிமையையும் கொண்ட குந்திகள் {பாண்டவவீரர்கள்}, தங்கள் சொந்தங்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவருடன் சேர்த்துப் போரில் பீஷ்மரால் கொல்லப்பட்டனர்.(2) நாராயணர்கள், பலபத்திரர்கள், நூற்றுக்கணக்கான பிற வீரர்கள் ஆகிய (பாண்டவர்களுக்கு அர்ப்பணிப்புள்ள அனைவரும் வீர பீஷ்மரால் கொல்லப்பட்டனர்.(3) சக்தியிலும், வலிமையிலும் போரில் கிரீடம் தரித்தவனான அர்ஜுனனுக்கு இணையான சத்யஜித், துல்லிய இலக்கைக் கொண்ட துரோணரால் போரில் கொல்லப்பட்டான்.(4) வலிமைமிக்க வில்லாளிகளும், போரில் திறம்பெற்றவர்களுமான பாஞ்சாலர்களில் பலர் துரோணரோட மோதி, யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(5) அதே போல வயதால் மதிப்பிற்குரியவர்களும், தங்கள் கூட்டாளிக்காகப் பெரும் ஆற்றலுடன் முயன்றவர்களுமான விராடன் மற்றும் துருபதன் ஆகிய இரு மன்னர்களும், தங்கள் மகன்களோடு சேர்த்துப் போரில் துரோணரால் கொல்லப்பட்டனர்.(6)

பாலனாக இருப்பினும், அர்ஜுனனுக்கோ, கேசவனுக்கோ {கிருஷ்ணனுக்கோ}, பலதேவனுக்கோ {பலராமனுக்கோ} போரில் இணையானவனும், போரில் உயர்ந்த சாதனைகளைச் செய்தவனும், வெல்லப்பட முடியாத வீரனுமான அபிமன்யு, எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொன்ற பிறகு, இறுதியாக ஆறு முதன்மையான தேர்வீரர்களால் சூழப்பட்டு அவர்களால் கொல்லப்பட்டான். அர்ஜுனனைத் தடுக்க முடியாத அவர்கள் அர்ஜுனனின் மகனை {அபிமன்யுவைக்} கொன்றனர். வீரனான அந்தச் சுபத்ரையின் மகன் {அபிமன்} தன் தேரை இழந்தாலும், க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்து போரில் நிலைத்திருந்தான். இறுதியாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, துச்சாசனன் மகன் அவனை {அபிமன்யுவைக்) களத்தில் கொன்றான்.(7-9) படச்சரர்களைக் கொன்றவனும், பெரும் படையால் சூழப்பட்டவனும், அழகனுமான அம்பஷ்டன் மகன், தன் கூட்டாளிகளுக்காகத் தன் ஆற்றல் முழுவதையும் வெளிப்படுத்தினான்.(10) எதிரிகளுக்கு மத்தியில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, அவன் துரியோதனன் மகனான துணிச்சல்மிக்க லக்ஷ்மணனால் போரில் எதிர்கொள்ளப்பட்டு யமனின் வசிப்பிடத்துக்கு அனுப்பப்பட்டான்.(11)

வலிமைமிக்க வில்லாளியும், போரில் வெல்லப்பட முடியாதவனும், ஆயுதங்களில் சாதித்தவனுமான பிருஹந்தன், பெரும் ஆற்றலுடன் முயன்ற துச்சாசனனால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(12) போரில் வெல்லப்பட முடியாதவர்களும், தங்கள் கூட்டாளிகளாக்காகத் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியவர்களும், மன்னர்களுமான மணிமான் மற்றும் தண்டதாரன் ஆகிய இருவரும் துரோணரால் கொல்லப்பட்டனர்.(13) போஜர்களின் ஆட்சியாளனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், தன் படைகளின் முகப்பில் நின்றவனுமான அம்சுமான், பெரும் ஆற்றலுடன் முயன்ற துரோணரால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(14) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடற்கரையின் ஆட்சியாளனான சித்திரசேனன், தன் மகனோடு சேர்த்து, சமுத்ரசேனனால் பலவந்தமாக யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(15) கடல்வழி நாட்டின் {அநூப நாட்டின்} மற்றொரு ஆட்சியாளனான நீலன், பெரும் சக்தி கொண்ட வியாக்ரதத்தன் ஆகிய இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, அஸ்வத்தாமனால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டனர்.(16) சித்திராயுதன், சித்திரயோதி ஆகிய இருவரும் பெரும் படுகொலைகளைச் செய்து, தன் தேரின் பல்வேறு நகர்வுகளை வெளிப்படுத்திய பிறகு, பெரும் ஆற்றலுடன் முயன்ற விகர்ணனால் போரில் கொல்லப்பட்டான்.(17)

போரில் விருகோதரனுக்கு {பீமனுக்கு} இணையானவனும், கைகேயப் போர்வீரர்களால் சூழப்பட்டவனுமான கைகேயர்கள் தலைவன், சகோதரனால் கொல்லப்பட்ட சகோதரனாக மற்றொரு கைகேயனாலேயே கொல்லப்பாட்டன்.(18) மலைநாட்டைச் சேர்ந்தவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனும, கதாயுதப் போர்களில் சாதித்தவனுமான ஜனமேஜயன், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உமது மகன் துர்முகனால் கொல்லப்பட்டான்.(19) முதன்மையான மனிதர்களும், பிராகசமான கோள்கள் இரண்டைப் போன்றவர்களுமான ரோசமானன் சகோதரர்கள் ஆகிய இருவரையும் துரோணர் தன் கணைகளால் சொர்க்கத்திற்கு ஒன்றாக அனுப்பினார்.(20) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்ட வேறு மன்னர்கள் பலரும் (பாண்டவர்களுக்காகப்) போரிட்டனர். அடைவதற்கரிய சாதனைகளைச் செய்த அவர்கள் அனைவரும் யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(21)

சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} தாய்மாமன்களான புருஜித் மற்றும் குந்திபோஜன் ஆகிய இருவரும், போரில் மரணமடைவதால் கிட்டும் உலகங்களுக்குத் துரோணரின் கணைகளால் அனுப்பப்பட்டனர்.(22) தன்னைப் பின்தொடர்பவர்களுக்குத் தலைமையேற்று வந்த காசிகளின் ஆட்சியாளனான அபிபூ, போரில் வசுதானன் மகனால் தனது உயிரை விடும்படி செய்யப்பட்டான்.(23) அளவற்ற ஆற்றலைக் கொண்ட யுதாமன்யு, பெரும் சக்தியைக் கொண்ட உத்தமௌஜஸ் ஆகியோர் வீரமிக்க நூற்றுக்கணக்கான போர்வீரர்களைக் கொன்ற பிறகு நமது மக்களால் கொல்லப்பட்டனர்.(24) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாஞ்சால இளவரசர்களான மித்ரவர்மன் மற்றும் க்ஷத்ரதர்மன் ஆகிய முதன்மையான வில்லாளிகள் இருவரும் துரோணரால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் முதன்மையானவனும், பெரும் துணிச்சல் கொண்டவனும், சிகண்டியின் மகனுமான க்ஷத்ரதேவன், ஓ! ஐயா, உமது பேரன் லக்ஷ்மணனால் கொல்லப்பட்டான்.(26)

பெரும் வலிமை கொண்டவர்களும், போரில் அச்சமற்றுத் திரிந்தவர்களும், தந்தையும் மகனுமான சுசித்ரன் மற்றும் சித்ரவர்மன் ஆகிய இரு வீரர்களும் துரோணரால் கொல்லப்பட்டனர்.(27) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அலைகள் நிறைந்த பெருங்கடலைப் போன்ற வார்த்தக்ஷேமி, போரில் தன் ஆயுதங்கள் தீர்ந்து, இறுதியாக இடைஞ்சலற்ற அமைதியை அடைந்தான்.(28) சூதர்களில் முதன்மையான சேனாபிந்து, போரில் எதிரிகள் பலரை எரித்த பிறகு, இறுதியாகப் பாஹ்லீகனால் {Bahlika} கொல்லப்பட்டான்.(29) ஓ! ஏகாதிபதி, சேதிகளுக்கு மத்தியில் உள்ள தேர்வீரர்களில் முதன்மையான திருஷ்டகேது, அடைவதற்கரிய சாதனைகளை அடைந்து யமனின் வசிப்பிடத்தை அடைந்தான்.(30) அதேபோல, பெரும் ஆற்றலைக் கொண்டவனான வீர சத்யதிருதி, பாண்டவர்களுக்காகப் போரில் பெரும் கொலைகளைச் செய்த பிறகு, யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(31) பூமியின் தலைவனும், சிசுபாலனின் மகனுமான சுகேது, எதிரிகள் பலரைக் கொன்ற பிறகு, இறுதியில் போரில் துரோணரால் கொல்லப்பட்டான்.(32)

விராடனின் மகன் சங்கனும், பெரும்பலம் கொண்ட உத்தரனும், அடைவதற்கரிய சாதனைகளை அடைந்து யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(33) அதே போல, மத்ஸ்யர்களின் சத்யதிருதி, பெரும் சக்தி கொண்ட மதிராஸ்வன், பெரும் ஆற்றலைக் கொண்ட சூர்யதத்தன் ஆகியோர் அனைவரும் துரோணரின் கணைகளால் கொல்லப்பட்டனர்.(34) ஓ! ஏகாதிபதி, பெரும் ஆற்றலைக் கொண்ட சிரேணிமத் (சிரேணிமான்} அடைவதற்கரிய சாதனைகளை அடைந்து, யமனின் வசிப்பிடத்தை அடைந்தான்.(35) பெரும் ஆற்றலைக் கொண்டவனும், உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான மகதர்களின் தலைவன்[1], பீஷ்மரால் கொல்லப்பட்டுப் போர்க்களத்தில் உறங்குகிறான்.(36) போரில் பேரழிவை ஏற்படுத்திய வசுதானனும், பெரும் ஆற்றலுடன் முயன்ற பரத்வாஜர் மகனால் {துரோணரால்} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(37) இவர்களும், பாண்டவர்களின் இன்னும் பிற வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரும், பெரும் ஆற்றலுடன் முயன்ற துரோணரால் கொல்லப்பட்டனர். நீர் என்னைக் கேட்டது அனைத்தையும் இப்போது நான் சொல்லிவிட்டேன்" {என்றான் சஞ்சயன்}.(38)

[1] இவன் ஜராசந்தரின் மகன் சகதேவனாக இருக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 6-ல் உள்ள சுலோகங்கள் : 38

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்