Thursday, February 02, 2017

மிலேச்ச மன்னனைக் கொன்ற நகுலன்! - கர்ண பர்வம் பகுதி – 22

Nakula killed the Mlecchha king! | Karna-Parva-Section-22 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : துரியோதனனின் தூண்டுதலின் பேரில் திருஷ்டத்யும்னனை எதிர்த்துச் சென்ற யானைப் படையினர்; யானைகளைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; யானைகளால் கொல்லப்பட்ட படைவீரர்கள்; வங்கர்களின் மன்னனை வீழ்த்திய சாத்யகி; புண்டரனைக் கொன்ற சகாதேவன்; அங்கர்களின் தலைவனான மிலேச்ச மன்னனைக் கொன்ற நகுலன்; யானைப்படையைப் பீடித்த பாண்டவர்கள்; புறமுதுகிட்டோடிய கௌரவப் படையினர்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “யானைகளில் சென்ற போர்வீரர்கள் பலர், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டு, சினத்தால் நிறைந்து, திருஷ்டத்யும்னனுக்கு அழிவை ஏற்படுத்த விரும்பி அவனை எதிர்த்துச் சென்றனர்.(1) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிழக்கத்தியர்கள், தெற்கத்தியர்கள், அங்கர்கள், வங்கர்கள், புண்டரர்கள், மகதர்கள், தாம்ரலிப்தகர்கள், மேகலர்கள், கோசலர்கள், மத்ரர்கள், தாசர்ணர்கள், நிஷாதர்கள் ஆகியோரைச் சார்ந்தவர்களும், யானைப் போரில் திறம்பெற்ற போராளிகளில் முதன்மையானோருமான பலர், கலிங்கர்களுடன் சேர்ந்து கொண்டு, கணைகளையும், வேல்களையும் பொழியும் மேகங்களைப் போல அந்தப் போரில் பாஞ்சாலர்களை நனைத்தனர்.(2-4)


குதிங்கால்கள், கால்விரல் நுனிகள் மற்றும் அங்குசங்களைக் கொண்டு தங்கள் சாரதிகளால் தூண்டப்பட்ட அந்த (எதிரிகளை) நசுக்கும் யானைகளைப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} தன் கணைகளாலும் நாராசங்களாலும் மறைத்தான்.(5) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மலைகளைப் போலப் பெரியவையாக இருந்த அவ்விலங்குகள் ஒவ்வொன்றையும், அந்தப் பாஞ்சால வீரன் {திருஷ்டத்யும்னன்}, பத்து, எட்டு, அல்லது ஆறு கூரிய கணைகளால் துளைத்தான்.(6) மேகங்களால் சூழப்பட்ட சூரியனைப் போலப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அந்த யானைகளால் சூழப்பட்டிருப்பதைக் கண்ட பாண்டுக்களும், பாஞ்சாலர்களும், கூரிய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு உரத்த முழக்கங்களுடன் (அவனை மீட்பதற்காக) அவனை நோக்கிச் சென்றனர்.(7) அந்த யானைகளின் மீது தங்கள் ஆயுதங்களைப் பொழிந்த அந்தப் போர்வீரர்கள், தங்களின் உள்ளங்கையொலிகள் மற்றும் தங்கள் வில்லின் நாணொலிகள் ஆகியவற்றினால் உண்டான இசையின் துணையுடனும், காலத்தை வெல்லும் வீரர்களால் தூண்டப்பட்டும் அவர்கள் வீரர்களின் நடனத்தை ஆடத் தொடங்கினர்.(8)

அப்போது, பெரும்பலத்தைக் கொண்டவர்களான நகுலன், சகாதேவன், திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள், சாத்யகி, சிகண்டி, சேகிதானன் ஆகிய வீரர்கள் அனைவரும், மேகங்கள் தங்கள் மழையால் மலைகளை நனைப்பதைப் போலத் தங்கள் ஆயுதங்களால் அந்த யானைகளை அனைத்துப் பக்கங்களிலும் நனைத்தனர்.(9) மிலேச்சப் போர்வீரர்களால் தூண்டப்பட்ட அந்தச் சீற்றமிகு யானைகள், தங்கள் துதிக்கைகளால் மனிதர்களையும், குதிரைகளையும், தேர்களையும் இழுத்துத் தங்கள் கால்களால் அவற்றை நசுக்கின.(10) தங்கள் தந்தங்களின் முனைகளால் அவை சிலரைத் துளைத்தன, சிலரை உயரத் தூக்கித் தரையில் வீசின; அந்தப் பெரும் விலங்குகளின் தந்தங்களில் உயரத் தூக்கப்பட்ட வேறு சிலர், பார்வையாளர்களை அச்சுறுத்தும் வகையில் கீழே விழுந்தனர்.(11)

அப்போது, சாத்யகி, தன் முன்னே இருந்த வங்கர்களின் மன்னனுடைய யானையின் முக்கிய அங்கங்களைச் சிதைத்துப் பெரும் வேகத்தைக் கொண்ட நீண்ட கணையொன்றால் {நாராசத்தால்} அதைப் போர்க்களத்தில் கீழே வீழ்த்தினான்.(12) பிறகு சாத்யகி, தன்னால் தொட முடியாதவனான சாரதியை, அவன் தன் விலங்கின் முதுகில் இருந்து குதிக்கப் போகும் தருணத்தில், மற்றொரு நீண்ட கணையால் அவனது மார்பைத் துளைத்தான். சாத்வதனால் இவ்வாறு தாக்கப்பட்ட அவன் {வங்கர்களின் மன்னன்} கீழே பூமியில் விழுந்தான்.(13) அதே வேளையில் சகாதேவன், நகரும் மலையெனத் தன்னை எதிர்த்து வந்த புண்டரனின் யானையைப் பெரும் கவனத்துடன் ஏவப்பட்ட மூன்று கணைகளால் தாக்கி,(14) கொடிமரம், சாரதி, கவசம் மற்றும் அதன் {யானையின்} உயிரையும் இழக்கச் செய்தான். இவ்வாறு அந்த யானையை வெட்டி வீழ்த்திய சகாதேவன், அங்கர்களின் தலைவனை [1] எதிர்த்துச் சென்றான்.(15) எனினும், சகாதேவனை விலகச் செய்த நகுலன், யமதண்டத்திற்கு ஒப்பான மூன்று நீண்ட கணைகளால் {நாராசங்களால்} அங்கர்களின் ஆட்சியாளனைப் பீடித்து, ஒரு நூறு கணைகளால் தன் எதிரியின் யானையையும் பீடித்தான்.(16) பிறகு அந்த அங்கர்களின் ஆட்சியாளன், சூரியக் கதிர்களைப் போன்ற பிரகாசம் கொண்ட எண்ணூறு {800} வேல்களை நகுலன் மீது வீசினான். அவை ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக நகுலன் வெட்டினான்.(17) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்} தன் எதிராளியின் தலையைப் பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணையொன்றால் வெட்டி வீழ்த்தினான். இதனால் உயிரையிழந்த அந்த மிலேச்ச மன்னன், தான் செலுத்திய விலங்கிலிருந்து கீழே விழுந்தான்.(18)

[1] அங்கர்களின் ஆட்சியாளனாகத் துரியோதனனால் முடிசூடப்பட்டவன் கர்ணன். ஆனால், இங்கே குறிப்பிடப்படுபவன் கர்ணன் அல்லன். மிலேச்சர்கள் என்று அயல் நாட்டினரே குறிப்பிடப்படுவர். இங்கே குறிப்பிடப்படும் அங்கர்களின் மன்னன் 18ம் சுலோகத்தின் மிலேச்சன் என்றும் சொல்லப்படுகிறான்.

யானைகளைச் செலுத்துவதில் திறன்பெற்ற அந்த அங்கர்களின் இளவரசன் வீழ்ந்ததும், சினத்தால் நிறைந்த அங்கர்களின் யானைக்காரர்கள், நகுலனைத் துண்டுகளாக {தூள்தூளாக} நசுக்க விரும்பி, காற்றில் அசையும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சிறந்த வாய்களைக் கொண்டவையும், தங்கத்தாலான அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சுடர்மிக்க மலைகளைப் போலத் தெரிந்தவையுமானத் தங்கள் யானைகளில் வேகமாக அவனை {நகுலனை} எதிர்த்துச் சென்றனர்.(19,20) மேலும், மேகலர்கள், உத்கலர்கள், கலிங்கர்கள், நிஷாதர்கள், தாம்ரலிப்தகர்கள் பலரும், நகுலனைக் கொல்ல விரும்பி தங்கள் கணைகளையும், வேல்களையும் பொழிந்தபடியே அவனை எதிர்த்துச் சென்றனர்.(21) அப்போது சினத்தால் நிறைந்தவர்களான பாண்டுக்கள், பாஞ்சாலர்கள் மற்றும் சோமகர்கள், மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல அந்தப் போர்வீரர்களால் சூழப்பட்ட நகுலனை மீட்பதற்காக வேகமாக விரைந்தனர்.(22) பிறகு தங்கள் கணைகளையும், நாராசங்களையும் பொழிந்த அந்தத் தேர்வீரர்களுக்கும், ஆயிரக்கணக்கான வேல்களைப் பொழிந்த அந்த யானைக்காரர்களுக்கும் இடையே ஒரு கடும்போர் நேர்ந்தது.(23) யானைகளின் மத்தகங்கள், மற்ற அங்கங்கள், துதிக்கைகள் மற்றும் அலங்காரப் பொருட்களும் நாராசங்களால் மிகவும் துளைக்கப்பட்டுப் பிளந்து சிதைந்தன.(24)

அப்போது சகாதேவன், வேகமான அறுபத்துநான்கு கணைகளால், அந்தப் பெரும் யானைகளில் எட்டை விரைவாகக் கொன்று, அதன் சாரதிகளோடு கீழே விழச் செய்தான்.(25) தன் குலத்தை மகிழ்விப்பவனான நகுலனும், பெரும் வீரியத்துடன் தன் அற்புத வில்லை வளைத்து, நேரான கணைகள் {நாராசங்கள்} பலவற்றால் யானைகள் பலவற்றைக் கொன்றான்.(26) பிறகு, பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, சிநியின் பேரன் {சாத்யகி}, திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள், சிகண்டி ஆகியோர் அந்தப் பெரும் யானைகளைக் கணை மழையால் நனைத்தனர்.(27) பாண்டவ வீரர்களாலான அந்த மழைநிறைந்த மேகங்களின் விளைவாக, எதிரியின் யானைகளாலான அந்த மலைகள், இடியுடன் கூடிய புயலால் தாக்கி வீழ்த்தப்பட்ட உண்மையான மலைகளைப் போலவே, அவர்களது எண்ணற்ற கணைகளாலான மழைத்தாரைகளால் தாக்கி வீழ்த்தப்பட்டன.(28) பாண்டவத் தேர்வீரர்களான அந்தத் தலைவர்கள், அந்த உமது யானைகளை இவ்வாறு கொன்று, கரையை உடைத்துச் செல்லும் ஆற்றுக்கு ஒப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பகைவரின் படையின் மீது தங்கள் கண்களைச் செலுத்தினர்.(29) பாண்டு மகனின் அந்தப் போர்வீரர்கள், இவ்வாறு உமது படையைக் கலங்கடித்து, மீண்டும் அதைக் கலங்கடித்த பிறகு கர்ணனை எதிர்த்து விரைந்தனர். {என்றான் சஞ்சயன்}(30)
-----------------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி - 22ல் உள்ள சுலோகங்கள் : 30

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்